Skip to main content

வழிப் பிள்ளையாருக்கு கடை தேங்காய்!

அமெரிக்க கணக்கு தணிக்கை அதிகாரி சென்ற வாரம் ஒரு அறிக்கையை அந்த நாட்டு பாராளுமன்றத்திடம் தாக்கல் செய்துள்ளார். அதன்படி நிதி சிக்கலில் மாட்டிக் கொண்டு, அமெரிக்க அரசின் உதவியால் நிமிர்ந்துள்ள அந்நாட்டு வங்கிகள் பத்தில், ஒன்பது வங்கிகள் அவற்றின் ஊழியர்களுக்கு சுமார் 1,50,000 கோடி வரை போனசாக கொடுத்துள்ளன. இந்த நடைமுறையை தவிர்க்க உரிய நடவடிக்கைகள் எடுக்க அந்நாட்டு அதிகாரிகளுக்கு அமெரிக்க காங்கிரஸ் உத்தரவு இட்டுள்ளது.

தவறான நிதி கொள்கையால் தடுமாறிய அமெரிக்காவை மீட்டெடுக்க அந்த தவறான நிதி கொள்கையையே இன்னுமொருமுறை அதுவும் இன்னும் கொஞ்சம் அதிகம் புகட்டும் அமெரிக்க அரசின் இந்த "டாலர் வெளியீட்டு முயற்சி" இன்று உலக சந்தைகளை இன்னுமொரு ஆபத்தான நிலைக்கு அருகே கொண்டு சென்று கொண்டிருக்கிறது.

இதில் முதலில் பாதிக்கப் படப் போகும் சந்தை சீனா என்று பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள். ஷாங்காய் பங்கு சந்தை மிக வேகமான ஏற்றத்தாழ்வுகளை சந்திக்கும் வழக்கம் கொண்டது. (இந்தியாவை விட வேகம் அதிகம்). சென்ற முறை கூட, மிக அதிகமான உள்ளூர் சீனர்கள் புதிய கணக்குகளை துவக்கியதும், அந்நாட்டின் பெரிய பங்கு வெளியீடுகள் பல மடங்கு உயர்ந்ததும் பங்கு சந்தை வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்தது. இப்போதும் கூட அந்த நிலைக்கு வெகு அருகே ஷாங்காய் பங்கு சந்தை வந்து விட்டதாகவே சொல்லப் படுகிறது.

இந்த பங்கு சந்தை உயர்வு ஒருவித பப்புள் என்று சென்ற வாரம் சீனா அரசாங்கம் சொன்ன ஐந்து நிமிடத்திலேயே, ஆசிய பங்கு சந்தைகள் (இந்தியா உட்பட) மற்றும் பொருட் சந்தைகள் பெரிய வீழ்ச்சியை சந்தித்தன. அதே சமயம், தொடர்ந்து வரும் டாலர் முதலீடுகள் பப்புள் பயத்தை மறக்கடிக்கவே , வார இறுதிக்குள் சந்தைகள் மீண்டும் உயர்நிலையை அடைந்தன.

இது போன்ற டாலர் வரவுகள் இந்தியா உட்பட வளரும் நாடுகளின் பொருளாதாரத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஏற்கனவே ஒரு பதிவில் சொன்னபடி, இந்த டாலர் பணம் மீண்டும் அமெரிக்க அரசின் கடன் பத்திரத்திலேயே முதலீடு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இந்த நாடுகளின் மத்திய வங்கிகள் உள்ளன. டாலர் மதிப்பு வீழ்ச்சி, கடன் பத்திரங்கள் மதிப்பு வீழ்ச்சி மற்றும் குறைந்த வட்டி என அனைத்து வகையிலும் டாலர் முதலீடுகள் மதிப்பை இழக்க, ஒரு மிகப்பெரிய தேசிய இழப்பை வளரும் நாடுகள் சந்திக்கின்றன.

ஆனால், குறுகிய கால நோக்கத்தில் (முதலீட்டாளர்களிடையே ஒருவித சந்தோச மனநிலை மற்றும் குறைந்த செலவில் பங்கு முதலீடு கிடைப்பதால்) வளரும் நாடுகளின் தலைமைகள் இந்த டாலர் பாய்ச்சலை தடுக்க உரிய நடவடிக்கை எடுப்பதில்லை.

சீனா கூட தனது வாய் ஜாலங்களை விடுத்து, தனது கரன்சியை (யுவான்) சந்தை நாணயமாக மாற்றினால் பல பிரச்சினைகள் தீரும். இந்திய மத்திய வங்கியும் சந்தைகளில் குறுக்கீடு செய்வதை குறைத்துக் கொள்ள வேண்டும். மத்திய அரசு அந்நிய முதலீடுகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும். அல்லது அவர்களின் லாபத்தின் மீது வரி விதிக்க வேண்டும். இப்படியெல்லாம் செய்ய தவறினால், ஒட்டுமொத்த இந்தியாவே ஒரு பெரிய விலை கொடுக்க வேண்டி இருக்கும் என்பது என் தனிப்பட்ட கருத்து.

சந்தைகளுக்கு வருவோம்.

சென்ற வாரம் கொடுத்திருந்த எதிர்ப்பு நிலைக்கு கீழேயே சந்தைகள் முடிவடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வரும் வாரம் காளைகள் தமது பாய்ச்சலை தொடர முயற்சிப்பார்கள். அதே சமயம் (நிபிட்டி) 4700 அளவுக்கு அருகே கரடிகள் தமது பிடிகளை இறுக்குவார்கள். மொத்தத்தில் காளை-கரடி துவந்தமாகவே வரும் வாரம் இருக்கும்.

ஏற்கனவே சொன்னதுதான். இருந்தாலும் திரும்ப ஒரு தடவை சொல்வதில் தவறில்லை என்று நினைக்கிறேன்.

நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்ய விரும்புவர் சற்று நிதானித்து செயல்படுவது நல்லது. வதந்திகளின் அடிப்படையில் நீண்ட கால முதலீடு செய்ய வேண்டாம். ஊடகங்களின் பரிந்துரைகளை எச்சரிக்கையாக ஆய்வது நல்லது.

மேற்சொன்ன பரிந்துரைகள் முதலீட்டாளர்களுக்கு மட்டும்தான்.

குறுகிய கால நோக்கில் பங்கு வர்த்தகம் செய்பவர்களுக்கு இது பொற்காலம். அதே சமயம் உரிய நகரும் இழப்பு நிறுத்தத்துடன் (Strict Dynamic Stop Loss Limit) மட்டும் வர்த்தகம் செய்யவும்.

இப்போது தொழிற்நுட்ப நிலைகள்.

சென்செக்ஸ்

எதிர்ப்பு - 15800 & 16200
அரண் - 15200 & 15000

நிபிட்டி

எதிர்ப்பு - 4700 & 4800
அரண் - 4475 & 4425

வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்

நன்றி.

Comments

Thomas Ruban said…
//இந்திய மத்திய வங்கியும் சந்தைகளில் குறுக்கீடு செய்வதை குறைத்துக் கொள்ள வேண்டும். மத்திய அரசு அந்நிய முதலீடுகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும். அல்லது அவர்களின் லாபத்தின் மீது வரி விதிக்க வேண்டும். இப்படியெல்லாம் செய்ய தவறினால், ஒட்டுமொத்த இந்தியாவே ஒரு பெரிய விலை கொடுக்க வேண்டி இருக்கும் என்பது என் தனிப்பட்ட கருத்து.//

பொருளாதார நிபுணர்கள் பலரின் கருத்தும் இதேதான் அய்யா.

இந்த மருந்து இப்போதைக்கு கசப்பாக இருந்தாலும் எதிர் காலத்தில் இனிப்பாக மாறும்.
எனவே விரைந்து அரசாங்கம் ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டும்!!

நாம் எல்லாம் இனி சந்தை சரியவே, சரியாது என்று நினைத்து கொண்டு இருப்போம்.அப்போழ்து,
எல்லாவற்றையும் சுருட்டி கொண்டு போய விடுவார்கள்,பெரும் முதலைகள்.

//குறுகிய கால நோக்கில் பங்கு வர்த்தகம் செய்பவர்களுக்கு இது பொற்காலம். அதே சமயம் உரிய நகரும் இழப்பு நிறுத்தத்துடன் (Strict Dynamic Stop Loss Limit) மட்டும் வர்த்தகம் செய்யவும்.//

உரிய நகரும் இழப்பு நிறுத்தத்துடன் (Strict Dynamic Stop Loss Limit) மட்டும் போட்டு தினவர்த்தகம்
செய்வதற்க்கு சிரமமாக உள்ளது.இரண்டுபக்கமும் தொட்டு செல்வதால் Stop Loss போட்டால்
நான் Loss ஆகி விடுகிறேன்.என்ன செய்வது என்று புரியவில்லை.

உங்கள் பதிவுக்கு நன்றி.
Maximum India said…
//நாம் எல்லாம் இனி சந்தை சரியவே, சரியாது என்று நினைத்து கொண்டு இருப்போம்.அப்போழ்து, எல்லாவற்றையும் சுருட்டி கொண்டு போய விடுவார்கள்,பெரும் முதலைகள்.//

உண்மைதான்.

//உரிய நகரும் இழப்பு நிறுத்தத்துடன் (Strict Dynamic Stop Loss Limit) மட்டும் போட்டு தினவர்த்தகம் செய்வதற்க்கு சிரமமாக உள்ளது.இரண்டுபக்கமும் தொட்டு செல்வதால் Stop Loss போட்டால் நான் Loss ஆகி விடுகிறேன்.என்ன செய்வது என்று புரியவில்லை.//

தின வர்த்தகம் என்பது கடினமான ஒன்றுதான். அதே சமயம் அதிலேயே கவனமாக இருந்தால் லாபம் ஈட்ட வழியுண்டு. நம்மில் பலர் லாபத்தை உடனடியாக எடுத்துக் கொண்டு நஷ்டத்தை மட்டும்தொடர அனுமதிக்கிறோம். எத்தனை தடவை லாபம் அல்லது நஷ்டம் சந்திக்கிறோம் என்பதை விட, எத்தனை முறை லாபத்தை விருத்தி செய்து நஷ்டத்தை குறைத்துக் கொள்கிறோம் என்பதுதான் சிறந்தது.

நன்றி மற்றும் வாழ்த்துக்கள் தாமஸ் ரூபன்!

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

தீவிரவாதிகளை வென்ற கதை - இந்திய கமாண்டோவின் விளக்கம்

நேற்று ஒரு தீவிரவாதி பிடிப் பட்ட கதை பார்த்தோம். இன்று தாஜ் ஹோட்டலில் எவ்வாறு நான்கு தீவிரவாதிகள் ஒழிக்கப் பட்டனர் என்று விளக்கும் இந்திய கமாண்டோவின் விளக்கத்தை பார்ப்போம். முதலில் இந்தியா கமாண்டோக்கள் தாஜ் ஹோட்டல் வந்த கதை புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் மும்பையை பயங்கரவாதம் தாக்கியது. அப்போது கேரளாவில் இருந்த மகாராஷ்டிர முதல்வர் மும்பை வரவும் இந்த சூழ்நிலையின் பயங்கரத்தையும் முழுமையாக உணர்ந்துக் கொள்ளவும் 90 நிமிடம் பிடித்தது .பின்னர் 11.00 அளவில் மத்திய அரசிற்கு போன் பேசிய முதல்வர் கோரியது 200 கமாண்டோக்களை. உடனே அந்நேரத்தில் தூங்கி கொண்டிருந்த இந்திய கமாண்டோக்கள் எழுப்பப் பட்டனர். அவர்கள் மும்பை வரத் தயாரான போதுதான் புரிந்தது, அவ்வளவு பேரை மும்பை கொண்டுவர தேவையான சிறப்பு விமானம் சண்டிகரில் உள்ளது என்று. உடனே அந்த விமானியையும் தூக்கத்தில் இருந்து எழுப்பி தயார் படுத்தி டெல்லியிலிருந்து கமாண்டோக்கள் மும்பை வந்த போது நேரம் காலை 5.25 மணி. அவர்கள் தாஜ் ஹோட்டலுக்கு கொண்டு வரப்பட்டு திட்டம் தயாரிக்கப் பட்டு அவர்கள் தாஜ் ஹோட்டலுக்குள் நுழைந்த போது நேரம் காலை 7.00 மணி. அதாவது மும்பை தாக்கப் ப...

கம்ப்யூட்டர் கட்சியும் கால்குலேட்டர் கட்சியும்!

மத்திய கல்வி அமைச்சர் கபில் சிபல் இந்தியா முழுவதும் அனைவரும் தாய்மொழியுடன் ஹிந்தியும் படிக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்துள்ளார். இவ்வாறு அனைவரும் ஹிந்தி படிப்பதன் மூலம் நாட்டில் ஒருமைப்பாடு ஏற்படுவதுடன் ஹிந்தியை ஆங்கிலம் போன்று ஒரு "அறிவு மொழியாக (lingua franca)" மாற்ற முடியும் என்றும் கூறியுள்ளார். இந்த கருத்தின் மீது பதிவுலகில் ஏராளமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆங்கிலம் மட்டுமே போதும் என்று ஒரு கட்சியும், ஆங்கிலம் வாசலாக இருக்கும் போது ஹிந்தி ஒரு சன்னலாக இருந்து விட்டு போகட்டுமே என்று இன்னொரு கட்சியும் விவாதித்து வருகின்றன. ஹிந்தி எதிர்ப்பு என்பது எப்போதுமே ஒரு உணர்வு பூர்வமான விஷயமாகவே பலராலும் கருதப் பட்டாலும், அதற்கு அறிவு பூர்வமான, சரித்திர பூர்வமான சில அடிப்படைகள் உண்டு. ஹிந்தி திணிப்பு மற்றும் ஹிந்தி எதிர்ப்பு பற்றி எனக்கு தெரிந்த சில கருத்துக்களை இங்கு ஒரு புனைவு வடிவில் அளிக்க முயற்சிக்கிறேன். இப்போது புனைவு ! ஒரு காலத்தில் பரதம்பட்டி என்ற ஒரு கிராமம் இருந்ததாம். அங்கு பல ஆண்டுகள் வரை ஆட்சி செய்து வந்த துரை மகாராஜா ஒரு காலத்தில், அந்த கிராமத்தை ஜனநாயக ...