Skip to main content

கதையல்ல நிஜம்!


அந்த குழந்தையின் வயது இரண்டு. ஆகஸ்ட் இரண்டாம் தேதி லேசான காய்ச்சல் வந்தது. இரண்டு நாட்கள் கழித்து உடலில் தடிப்புக்கள் தோன்றின. அந்த குழந்தையின் பெற்றோர் முதலில் உள்ளூர் மருத்துவமனையை தொடர்பு கொண்டனர்.

இது பன்றி காய்ச்சலின் அறிகுறியாக இருக்கலாம் என்று அந்த மருத்துவமனையினர் குறிப்பிட்ட சேவை மையத்தின் தொலைபேசி எண்ணை கொடுத்தனர்.

அந்த சேவை மையத்தை தொடர்பு கொண்ட போது குழந்தைக்கு பன்றி காய்ச்சலின் ஒரே ஒரு அறிகுறி மட்டுமே இருக்கின்றது என்று வேறொரு தொலைபேசி எண்ணை அந்த மையத்தினர் கொடுத்தனர்.

அந்த எண்ணில் தொடர்பு கொண்ட போது, குழந்தையின் உடல் வெட்ப நிலை நாற்பது டிகிரி சென்டி கிரேடை தாண்டினால் மீண்டும் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொண்டனர்.

அப்படியே நாற்பது டிகிரி சென்டி கிரேடை தாண்டியது குழந்தையின் பெற்றோர் அந்த மையத்தை மீண்டும் தொடர்பு கொண்டனர். உடனடியாக அங்கு வந்த மருத்துவக் குழுவினர் அந்த குழந்தையை பரிசோதித்த பிறகு தமி ப்ளு மருந்தினை கொடுத்த பிறகு திரும்பி சென்று விட்டனர்.

ஒரு மணி நேரம் கழித்த பிறகு அந்த குழந்தையின் கண்கள் வெளிர்ந்து விட பயந்து போன பெற்றோர் அந்த மையத்திடம் மறுபடியும் தொடர்பு கொண்டனர். மருத்துவ குழுவினர் வருவதற்குள் அந்த குழந்தை காலமாகி விட்டது.

. உயிர் போனதற்கான காரணம் என்ன தெரியுமா? மேனிங்க்டிஸ் (Meningitis) என்று அழைக்கப் படும் ஒரு வித வியாதி (தமிழில் பொன்னுக்கு வீங்கி என்று சொல்வார்கள் என்று நினைக்கிறேன்).இந்த வியாதியையும் பன்றி காய்ச்சலையும் சேர்த்து குழப்பிக் கொள்ள வேண்டாம் என்று மேனிங்க்டிஸ் மையம் இப்போது அறிவுறுத்தியுள்ளது
இது நடந்தது எங்கே தெரியுமா? மருத்துவ வசதிக்கு புகழ் பெற்ற கிரேட் பிரிட்டனில்தான்.

பன்றி காய்ச்சல் கட்டுபடுத்தும் பொறுப்பு அதிகம் பயிற்சி பெறாத "கால் சென்டர்" பணியாளர்களிடம் கொடுக்கப் பட்டதே இந்த உயிர் பலிக்கு காரணம் என்று சொல்லப் படுகிறது.

இந்த வியாதி கண்டவர்களை நேரடியாக பரிசோதிக்காமல் இந்த கால் சென்டர் பணியாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வதன் மூலமே அவர்களுக்கு வியாதி இருக்கிறதா இல்லையா என்று நிர்ணயிக்கப் படுகிறது என்றும் அந்த பணியாளர்களின் அறிவுரையின் படியே தமி ப்ளு மருந்து வழங்கப் படுகிறது என்றும் சொல்லப் படுகிறது.

இந்தியா எவ்வளவோ பரவாயில்லை.

எத்தனையோ இந்திய மருத்துவர்களும் இதர மருத்துவ பணியாளர்களும் தங்கள் சொந்த பாதுகாப்பை பற்றி கவலைப் படாமல் இந்த காய்ச்சலால் பாதிக்கப் பட்ட நோயாளிகளுக்கு இரவு பகலாக வைத்தியம் செய்கிறார்கள்.

அவர்களுக்கு இந்த நேரத்தில் ஒரு சல்யூட் வைப்போம்.

நன்றி

(நன்றி: ஸ்கை டிவி, எகோநோமிக் டைம்ஸ்)

Comments

அடப்பாவிகளா!

வைத்தியத்துக்கும் கால்செண்டரா!?
உருப்பட்டா மாதிரி தான்!

வாந்தி மயக்கம்னா கர்ப்பம்னு சொல்லிருவாய்ங்களே!
Itsdifferent said…
இந்திய பரவயில்லையா? நாங்கள், இந்தியா வந்த பொது, ஒரு form கொடுத்து அதில் உள்ள எல்லா கேள்விகளுக்கும் (5 கேள்விகள் என்று நினைக்கிறேன்) No என்று பதில் சொல்லியிருந்தால், அங்கிருந்த மருத்துவ பணியாளர் பச்சை ரப்பர் ஸ்டாம்ப் குத்தி அனுப்பி விட்டார். இந்த அளவு தான் அரசால் சோதனை செய்ய முடியும், என்றால், இது வரை 12 பேர் மட்டுமே பலியானது நம் அதிர்ஷ்டம் என்பேன்.
கபீஷ் said…
ரொம்ப கிலியா இருக்கு.
உயிர் என்ன வெல்லக்கட்டியா வசனம் எல்லாம் ஞாபகம் வரமாட்டேங்குது.

கால் செண்டர்... ம்ம் என்ன பண்ண? என்னோட வேலை பாக்கற நிறைய மக்கள் கால் செண்டருக்கு கால் பண்ணி ஸ்வைன் ஃப்ளூ அவங்களுக்கு இல்லன்னு முடிவுக்கு வந்திருக்காங்க.
Maximum India said…
நன்றி வால்பையன்!

//வாந்தி மயக்கம்னா கர்ப்பம்னு சொல்லிருவாய்ங்களே//

நல்லாவே யோசிக்கிறீங்க!

:-)

நன்றி.
KARTHIK said…
என்ன இது புதுசு புதுசா நோய் வருதே

//அவர்களுக்கு இந்த நேரத்தில் ஒரு சல்யூட் வைப்போம்.//

கண்டிப்பா அவங்களுக்கு ஒரு சல்யூட் :-))
Maximum India said…
//இந்திய பரவயில்லையா? நாங்கள், இந்தியா வந்த பொது, ஒரு form கொடுத்து அதில் உள்ள எல்லா கேள்விகளுக்கும் (5 கேள்விகள் என்று நினைக்கிறேன்) No என்று பதில் சொல்லியிருந்தால், அங்கிருந்த மருத்துவ பணியாளர் பச்சை ரப்பர் ஸ்டாம்ப் குத்தி அனுப்பி விட்டார். இந்த அளவு தான் அரசால் சோதனை செய்ய முடியும், என்றால், இது வரை 12 பேர் மட்டுமே பலியானது நம் அதிர்ஷ்டம் என்பேன்.//

பிரிட்டன் போன்று இந்தியாவில் மருத்துவ வசதி இல்லாமல் இருக்கலாம். ஆனால், வைத்தியத்தை கால் சென்டெர் மூலம் செய்து கொள்ள சொல்லும் கலாச்சாரம் இன்னும் வர வில்லை என்று என்னால் சொல்ல முடியும். மேலும் வைத்தியம் பார்த்தால் வியாதி தொற்றிக் கொள்ளும் என்ற அபாயம் இருந்தாலும், பணத்திற்காக மட்டுமில்லாமல் சேவை மனப்பான்மையுடன் பணியாற்றும் பல மருத்துவர்கள் (மேலை நாடுகளை விட நிச்சயம் அதிகமாக) இந்தியாவில் இருக்கிறார்கள் என்றும் சொல்ல முடியும்.

நன்றி Itsdifferent!
Maximum India said…
நன்றி கபீஷ்!

//கால் செண்டர்... ம்ம் என்ன பண்ண? என்னோட வேலை பாக்கற நிறைய மக்கள் கால் செண்டருக்கு கால் பண்ணி ஸ்வைன் ஃப்ளூ அவங்களுக்கு இல்லன்னு முடிவுக்கு வந்திருக்காங்க.//

நீங்களும் அங்கேதான் இருக்கீங்க! எதற்கும் ஜாக்கிரதையாகவே இருங்கள்!

நன்றி.
Maximum India said…
//என்ன இது புதுசு புதுசா நோய் வருதே //

கம்ப்யூட்டர் வைரஸ் போலவே இவையும் திட்டமிட்டே பரப்பப் படுகிறதா என்ற சந்தேகம் கூட எனக்கு உண்டு.

நன்றி கார்த்திக்!
Thomas Ruban said…
//எத்தனையோ இந்திய மருத்துவர்களும் இதர மருத்துவ பணியாளர்களும் தங்கள் சொந்த பாதுகாப்பை பற்றி கவலைப் படாமல் இந்த காய்ச்சலால் பாதிக்கப் பட்ட நோயாளிகளுக்கு இரவு பகலாக வைத்தியம் செய்கிறார்கள்.//

இவற்களை பொல் சிலப்பேர்நாட்டில் இருப்பத்னால் மழை கொஞ்சமாவது பெய்கிற்து.

நன்றி அய்யா
Maximum India said…
நன்றி தாமஸ் ரூபன்!
Btc Guider said…
//எத்தனையோ இந்திய மருத்துவர்களும் இதர மருத்துவ பணியாளர்களும் தங்கள் சொந்த பாதுகாப்பை பற்றி கவலைப் படாமல் இந்த காய்ச்சலால் பாதிக்கப் பட்ட நோயாளிகளுக்கு இரவு பகலாக வைத்தியம் செய்கிறார்கள்.

அவர்களுக்கு இந்த நேரத்தில் ஒரு சல்யூட் வைப்போம்.//

நாம் பொதுவாகவே இந்திய மருத்துவர்களையும் ஊழியர்களையும் பற்றி வேதனைப் படுவதுண்டு.ஆனால் சில சமயம் அவர்களுடைய பணி மெய்சிலிர்க்க வைக்கிறது.
அவர்களுக்கு நாம் அனைவரும் நன்றி சொல்ல கடமைப் பட்டிருக்கிறோம்.
இரண்டு வயது குழைந்தை இழப்பு தாங்க முடியாதது.பெரும்பாலும் நோய்கள் பற்றிய அறிவு இல்லாததே காரணம்.இந்தியாவில் பொது மருத்துவம் பற்றி குறைந்த பட்ச அறிவு கூட யாருக்கும் இல்லை. மெடிக்கல் சீட் கிடைத்தால் மட்டுமே அரைகுறையாக தெரிந்து கொல்ல சாரி கொள்ள வாய்ப்பு உள்ளது. முதல் உதவி, சாதரண மருத்துவம் பற்றி பிள்ளைகளுக்கு போதிக்க வேண்டும். பொது இடங்களில் அச் என்று நம் முகம் மேல் தும்முபவர்கள் எத்தனை பேர். இதற்கு அரசாங்கமோ, ஆசிரியர்களோ ஏதும் செய்ய முடியாது. நம் வீட்டில் இருன்னு துவங்கவேண்டும்.. சரிதானே?
Maximum India said…
நன்றி பொதுஜனம்!

//இந்தியாவில் பொது மருத்துவம் பற்றி குறைந்த பட்ச அறிவு கூட யாருக்கும் இல்லை.//

பொது சுகாதாரம் பற்றிய அக்கறையும் அதிகம் இல்லை

//சாதரண மருத்துவம் பற்றி பிள்ளைகளுக்கு போதிக்க வேண்டும். //

சரியான கருத்து. வாழ்வியல் கல்வியை பள்ளிகளில் புகட்டுவது மிகவும் முக்கியம்.

நன்றி!
Naresh Kumar said…
ஸ்வைன் ஃபுளூவைப் பொறுத்த வரை இந்திய ஊடகங்களின் போக்கு மிகுந்த பயத்தையும், வெறுப்பையும் அளித்தாலும் (வழக்கம் போலவே) நீங்கள் சொல்லியிருக்கும் விதம் மிக புதிது...

உண்மையிலேயே இது மாதிரி மருத்துவர்களுக்கு நாம் கடமைப்பட்டிருக்கிறோம்...
Maximum India said…
நன்றி நரேஷ்!
Selvan said…
Hi,

Are you from UK, I m working in UK and live in Leeds.

You are articles are really good and I m also interested in Stock Markets.

If you are in uk, pass on your contact number or email lets have a chat.

Thanks

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

தீவிரவாதிகளை வென்ற கதை - இந்திய கமாண்டோவின் விளக்கம்

நேற்று ஒரு தீவிரவாதி பிடிப் பட்ட கதை பார்த்தோம். இன்று தாஜ் ஹோட்டலில் எவ்வாறு நான்கு தீவிரவாதிகள் ஒழிக்கப் பட்டனர் என்று விளக்கும் இந்திய கமாண்டோவின் விளக்கத்தை பார்ப்போம். முதலில் இந்தியா கமாண்டோக்கள் தாஜ் ஹோட்டல் வந்த கதை புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் மும்பையை பயங்கரவாதம் தாக்கியது. அப்போது கேரளாவில் இருந்த மகாராஷ்டிர முதல்வர் மும்பை வரவும் இந்த சூழ்நிலையின் பயங்கரத்தையும் முழுமையாக உணர்ந்துக் கொள்ளவும் 90 நிமிடம் பிடித்தது .பின்னர் 11.00 அளவில் மத்திய அரசிற்கு போன் பேசிய முதல்வர் கோரியது 200 கமாண்டோக்களை. உடனே அந்நேரத்தில் தூங்கி கொண்டிருந்த இந்திய கமாண்டோக்கள் எழுப்பப் பட்டனர். அவர்கள் மும்பை வரத் தயாரான போதுதான் புரிந்தது, அவ்வளவு பேரை மும்பை கொண்டுவர தேவையான சிறப்பு விமானம் சண்டிகரில் உள்ளது என்று. உடனே அந்த விமானியையும் தூக்கத்தில் இருந்து எழுப்பி தயார் படுத்தி டெல்லியிலிருந்து கமாண்டோக்கள் மும்பை வந்த போது நேரம் காலை 5.25 மணி. அவர்கள் தாஜ் ஹோட்டலுக்கு கொண்டு வரப்பட்டு திட்டம் தயாரிக்கப் பட்டு அவர்கள் தாஜ் ஹோட்டலுக்குள் நுழைந்த போது நேரம் காலை 7.00 மணி. அதாவது மும்பை தாக்கப் ப...

கம்ப்யூட்டர் கட்சியும் கால்குலேட்டர் கட்சியும்!

மத்திய கல்வி அமைச்சர் கபில் சிபல் இந்தியா முழுவதும் அனைவரும் தாய்மொழியுடன் ஹிந்தியும் படிக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்துள்ளார். இவ்வாறு அனைவரும் ஹிந்தி படிப்பதன் மூலம் நாட்டில் ஒருமைப்பாடு ஏற்படுவதுடன் ஹிந்தியை ஆங்கிலம் போன்று ஒரு "அறிவு மொழியாக (lingua franca)" மாற்ற முடியும் என்றும் கூறியுள்ளார். இந்த கருத்தின் மீது பதிவுலகில் ஏராளமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆங்கிலம் மட்டுமே போதும் என்று ஒரு கட்சியும், ஆங்கிலம் வாசலாக இருக்கும் போது ஹிந்தி ஒரு சன்னலாக இருந்து விட்டு போகட்டுமே என்று இன்னொரு கட்சியும் விவாதித்து வருகின்றன. ஹிந்தி எதிர்ப்பு என்பது எப்போதுமே ஒரு உணர்வு பூர்வமான விஷயமாகவே பலராலும் கருதப் பட்டாலும், அதற்கு அறிவு பூர்வமான, சரித்திர பூர்வமான சில அடிப்படைகள் உண்டு. ஹிந்தி திணிப்பு மற்றும் ஹிந்தி எதிர்ப்பு பற்றி எனக்கு தெரிந்த சில கருத்துக்களை இங்கு ஒரு புனைவு வடிவில் அளிக்க முயற்சிக்கிறேன். இப்போது புனைவு ! ஒரு காலத்தில் பரதம்பட்டி என்ற ஒரு கிராமம் இருந்ததாம். அங்கு பல ஆண்டுகள் வரை ஆட்சி செய்து வந்த துரை மகாராஜா ஒரு காலத்தில், அந்த கிராமத்தை ஜனநாயக ...