Skip to main content

கிருஷ்ண விஜயம்!

விதி வலியது

பன்றி காய்ச்சல்
பற்றிக் கொள்ளுமோ
படபடவென்ற மனதுடன்
பைக்கில் அவன்
பயங்கர வேகத்தில்
பஸ் எதிரே!


கிருஷ்ண விஜயம்!

கோகுலாஷ்டமி காலை
கைகளில் கோலமாவு
காதுக்குள் ஓலம்
கண்கள் திரும்பின

தொலைக்காட்சியில் செய்திகள்
பன்றி காய்ச்சல்
பயங்கர வேகத்தில்
பரவுதல் பற்றி

கிருஷ்ணர் பாதம்
வாசலில் இடுமுன்
மனம் கேட்கின்றது
அவருக்கும் இருக்குமோ?


உலக மயமாக்கம்

மெக்சிகோவில் பன்றி பண்ணைகள்
இந்தியாவில் பன்றி காய்ச்சல்
இதுதான் உலக மயமாக்கலோ?


வராகம்

ஏழு மலை
ஏழு கடல்
ஏழு கண்டம்
தாண்டி வரும்
இதுவும் ஒரு
'வராக' அவதாரமோ?

நன்றி!

Comments

Arun said…
Install Add-Kannada button with ur blog. Then u can easily submit ur page to all top Kannada social bookmarking sites & u will get more traffic and visitors.
Install widget from www.findindia.net
Thomas Ruban said…
புது கவிதைகள் ந்ன்றாக உள்ள்து.

பன்றி காய்ச்சல் செய்திகள் உங்களை அதிகம் பாதித்யுல்லொதொ!
Maximum India said…
தகவலுக்கு நன்றி ராம்!
Maximum India said…
நன்றி தாமஸ் ரூபன்!

//பன்றி காய்ச்சல் செய்திகள் உங்களை அதிகம் பாதித்யுல்லொதொ!//

காலை முதல் இரவு வரை எல்லா ஊடகங்களிலும் இதே செய்திதான். எகோநோமிக் டைம்ஸ் போன்ற நிதி செய்தி தாளிலும் கூட மூன்று பக்கங்கள் இதே செய்திதான்.

வசிப்பது வேறு மும்பையில். திரும்பி பார்க்குமிடமெல்லாம் முகமூடி மனிதர்கள்.
பள்ளி மற்றும் தியேட்டர்கள் மூடப் பட்டுள்ளன. எங்களுக்கு முக்கிய பண்டிகைகளான கிருஷ்ண ஜெயந்தி மற்றும் விநாயகர் சதுர்த்தி இரண்டும் பாதிக்கப் பட்டுள்ளன.

கொஞ்சம் வருத்தமாகத்தான் உள்ளது. என்ன செய்ய?
தல எதிர்கவுஜ போடலாமா!?
Maximum India said…
உங்களுக்கில்லாத உரிமையா தல?

தாராளமா போடுங்க!

(என்னைப் போல ஒரு சிறு பதிவருக்கு உங்களைப் போல ஒரு பெரிய பதிவர் எதிர் கவுஜ போட்டா நல்ல விளம்பரம்தானே? :-))

நன்றி.
//(என்னைப் போல ஒரு சிறு பதிவருக்கு உங்களைப் போல ஒரு பெரிய பதிவர் எதிர் கவுஜ போட்டா நல்ல விளம்பரம்தானே? :-))//

யானைக்கு தன் பலம் தெரியாதாம்!
உங்களது ப்ளாக்கின் மூலமாக நான் உட்பட பலர் பயனடைகிறோம்! நானெல்லாம் வெட்டியாக எழுதி கொண்டிருக்கிறேன்!

வரட்டுவாதங்களும், சினிமா விமர்சனக்களும் யாருக்கு பயன்படும் சொல்லுங்க!
தெரிஞ்சும் ஏண்டா மொக்கை போடுறேன்னு கேக்குறிங்களா!?
வேறென்ன செய்ய எனக்கு தெரிஞ்சது அம்புட்டு தானே!
Maximum India said…
அன்புள்ள வால்பையன்!

அட! என்று திரும்பி பார்க்க வைக்கும் யாருமே பெரியவர்தான்.

அந்த வகையில் நீங்கள் பெரியவர்தான்.

அது மட்டுமல்ல சக பதிவர்களுக்கு ஊக்கம் கொடுக்கும் வகையில் ஒவ்வொருவருக்கும் சலிக்காமல் பின்னூட்டம் போடும் வகையில் நீங்கள் ரொம்ப பெரியவர்தான்.

பதிவுலகிலும் கூட எனக்கு நீங்கள் மூத்த பதிவர்தான்.

ஒரு அக்மார்க் தமிழ் எழுத்தாளராக உருவாகிக் கொண்டிருக்கும் உங்களுக்கு (கூடிய சீக்கிரம் நீங்கள் பதிவுலகிற்கு வெளியேயும் ஒரு பிரபல தமிழ் எழுத்தாளராக வருவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது) உங்கள் பதிலையே திருப்பிச் சொல்கிறேன்.

"யானைக்கு தன் பலம் தெரியாதாம்!"

நன்றி!
சுற்றுப்புறத்தை சுத்தமாக வைக்க , இயற்கையை காக்க, கிருஷ்ணர் அடிக்கும் எச்சரிக்கை மணிதான் பன்றி காய்ச்சல். ஹி ஹி. மர்மமாய் முகமூடி போடும் மனித மடையர்களே. திரியுங்கள் உங்கள் அசிங்கமான முகத்தை காட்ட முடியாமல். இனிமேலாவது இயற்கையோடு ஒத்து போங்கள்.இயல்பாய் வாழுங்கள்.
Maximum India said…
//சுற்றுப்புறத்தை சுத்தமாக வைக்க , இயற்கையை காக்க, கிருஷ்ணர் அடிக்கும் எச்சரிக்கை மணிதான் பன்றி காய்ச்சல். ஹி ஹி. மர்மமாய் முகமூடி போடும் மனித மடையர்களே. திரியுங்கள் உங்கள் அசிங்கமான முகத்தை காட்ட முடியாமல். இனிமேலாவது இயற்கையோடு ஒத்து போங்கள்.இயல்பாய் வாழுங்கள்.//

உண்மைதான் பொதுஜனம்!

எனக்குக் கூட அப்படித்தான் தோன்றியது. இப்போதைய மனித ராட்சசர்களிடம் இருந்து பூமியைக் காக்க வந்த புதிய 'வராக' அவதாரமோ என்று.

நன்றி!

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

தீவிரவாதிகளை வென்ற கதை - இந்திய கமாண்டோவின் விளக்கம்

நேற்று ஒரு தீவிரவாதி பிடிப் பட்ட கதை பார்த்தோம். இன்று தாஜ் ஹோட்டலில் எவ்வாறு நான்கு தீவிரவாதிகள் ஒழிக்கப் பட்டனர் என்று விளக்கும் இந்திய கமாண்டோவின் விளக்கத்தை பார்ப்போம். முதலில் இந்தியா கமாண்டோக்கள் தாஜ் ஹோட்டல் வந்த கதை புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் மும்பையை பயங்கரவாதம் தாக்கியது. அப்போது கேரளாவில் இருந்த மகாராஷ்டிர முதல்வர் மும்பை வரவும் இந்த சூழ்நிலையின் பயங்கரத்தையும் முழுமையாக உணர்ந்துக் கொள்ளவும் 90 நிமிடம் பிடித்தது .பின்னர் 11.00 அளவில் மத்திய அரசிற்கு போன் பேசிய முதல்வர் கோரியது 200 கமாண்டோக்களை. உடனே அந்நேரத்தில் தூங்கி கொண்டிருந்த இந்திய கமாண்டோக்கள் எழுப்பப் பட்டனர். அவர்கள் மும்பை வரத் தயாரான போதுதான் புரிந்தது, அவ்வளவு பேரை மும்பை கொண்டுவர தேவையான சிறப்பு விமானம் சண்டிகரில் உள்ளது என்று. உடனே அந்த விமானியையும் தூக்கத்தில் இருந்து எழுப்பி தயார் படுத்தி டெல்லியிலிருந்து கமாண்டோக்கள் மும்பை வந்த போது நேரம் காலை 5.25 மணி. அவர்கள் தாஜ் ஹோட்டலுக்கு கொண்டு வரப்பட்டு திட்டம் தயாரிக்கப் பட்டு அவர்கள் தாஜ் ஹோட்டலுக்குள் நுழைந்த போது நேரம் காலை 7.00 மணி. அதாவது மும்பை தாக்கப் ப...

கம்ப்யூட்டர் கட்சியும் கால்குலேட்டர் கட்சியும்!

மத்திய கல்வி அமைச்சர் கபில் சிபல் இந்தியா முழுவதும் அனைவரும் தாய்மொழியுடன் ஹிந்தியும் படிக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்துள்ளார். இவ்வாறு அனைவரும் ஹிந்தி படிப்பதன் மூலம் நாட்டில் ஒருமைப்பாடு ஏற்படுவதுடன் ஹிந்தியை ஆங்கிலம் போன்று ஒரு "அறிவு மொழியாக (lingua franca)" மாற்ற முடியும் என்றும் கூறியுள்ளார். இந்த கருத்தின் மீது பதிவுலகில் ஏராளமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆங்கிலம் மட்டுமே போதும் என்று ஒரு கட்சியும், ஆங்கிலம் வாசலாக இருக்கும் போது ஹிந்தி ஒரு சன்னலாக இருந்து விட்டு போகட்டுமே என்று இன்னொரு கட்சியும் விவாதித்து வருகின்றன. ஹிந்தி எதிர்ப்பு என்பது எப்போதுமே ஒரு உணர்வு பூர்வமான விஷயமாகவே பலராலும் கருதப் பட்டாலும், அதற்கு அறிவு பூர்வமான, சரித்திர பூர்வமான சில அடிப்படைகள் உண்டு. ஹிந்தி திணிப்பு மற்றும் ஹிந்தி எதிர்ப்பு பற்றி எனக்கு தெரிந்த சில கருத்துக்களை இங்கு ஒரு புனைவு வடிவில் அளிக்க முயற்சிக்கிறேன். இப்போது புனைவு ! ஒரு காலத்தில் பரதம்பட்டி என்ற ஒரு கிராமம் இருந்ததாம். அங்கு பல ஆண்டுகள் வரை ஆட்சி செய்து வந்த துரை மகாராஜா ஒரு காலத்தில், அந்த கிராமத்தை ஜனநாயக ...