நீங்கள் வளைவுகள் நிறைந்த ஒரு கிராமப் புறச்சாலையில் வேகமாக காரை ஒட்டிக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் திறமையான, அதே சமயத்தில் சாலை விதிகளை எப்போதும் மதிக்கும் ஒரு காரோட்டி என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒரு வளைவில் செல்லும் போது தவறான திசையில் வேகமாக ஆனால் தடுமாறியபடி கார் ஒட்டியபடி வரும் ஒரு இளம்பெண் உங்களைப் பார்த்து "எருமை" என்று கத்தியபடி கடந்து சென்றால் என்ன செய்வீர்கள்? உங்கள் மீது எந்த ஒரு தவறும் இல்லை. சாலையின் சரியான பக்கத்திலேயே சென்று கொண்டிருந்தீர்கள். எதிரில் வந்தது அந்த பெண்ணின் தவறு. தவறான பக்கத்தில் வந்த வண்டியில் மோதாமல் தப்பித்தது கூட உங்களுடைய தனித் திறமையால்தான். இந்த நிலையில் நீங்கள் என்ன செய்வீர்கள் என்பதை ஒரு கணம் சிந்தித்து முடிவு செய்து விட்டு மேற்கொண்டு படியுங்கள். இப்படித்தான் ஒரு முறை தவறான பக்கத்தில் வந்து விட்டு தன்னை நோக்கி கத்தி விட்டு சென்ற பெண்மணியின் மீது கடுங்கோபம் கொண்ட ஒரு திறமையான காரோட்டி அவளை விடக் கூடாது என்ற நோக்கத்துடன் மிக வேகமாக அவளைப் பின் துரத்திச் சென்றான். பல கி.மீ. தூரம் துரத்திய பின்னர் அவளை மடக்கிய அவன் அவளை பார்த்துக் கோபமாக கூ...
கொஞ்சம் மாத்தி யோசி!