Skip to main content

மாற்றம் தேவை - ஒரு கழுகின் கதை

இங்கே குறிப்பிட்டுள்ள வகையைச் சேர்ந்த கழுகின் ஆயுள் மற்ற கழுகு இனங்களின் ஆயுளை விட அதிகமாக உள்ளது. இதன் ஆயுள் சுமார் எழுபது ஆண்டுகள். ஆனால் இவ்வளவு நீண்ட ஆயுளைப் பெற அது சில கடுமையான முயற்சிகளைச் செய்ய வேண்டியுள்ளது.


நாற்பது வயதுக்கு மேலே இந்த கழுகு இனத்தின் இறகுகள் தமது மென்மைத் தன்மையை இழந்து விட வேகமாக பறப்பது என்பது கழுகிற்கு இயலாத செயலாகி விடுகிறது. கழுகின் அலகுகளும் விரல் நகங்களும் வலுவிழந்து விட தனக்கான இரையை வேட்டையாடுவது கடினமானதாகி விடுகிறது.


இப்போது கழுகிற்கு உள்ள பிரச்சினையைத் தீர்க்க இரண்டு வழிகள் உண்டு. முதலாவது இரை கிடைக்காமல் வாழ முடியாமல் மடிந்து போவது. இரண்டாவது தனது வாழ்வைப் புதிப்பித்துக் கொள்ள 150 நாட்கள் கடும் முயற்சி செய்வது.

இங்கே இரண்டாவது பாதையை தேர்ந்தெடுக்கும் நமது கழுகு ஒரு மலை உச்சிக்கு செல்கிறது.

அங்கே தனது அலகினால் ஒரு பாறையைக் கடுமையாக மோதி அலகினை தானே உடைத்துக் கொள்கிறது. புதிய அலகு வளர்ந்த பின்னர் தனது நகங்களை பிய்த்து எறிகிறது.

புதிய நகங்கள் முளைத்த பின்னர் தனது இறகுகளை ஒவ்வொன்றாக பிய்த்து எறிகிறது.

சுமார் ஐந்து மாதங்களுக்கு பின்னர் புதிய இறகுகள் முளைத்து விட இந்த கழுகு புனர் ஜென்மம் பெறுகிறது.
அதன் பின்னர் இந்த கழுகு முப்பது ஆண்டுகள் நீண்ட புதிய வாழ்க்கையை வாழ முடிகிறது.

இந்த கதை தரும் பாடம்.

கடினமான சவால்கள் நிறைந்த நமது வாழ்வில் தாக்குப் பிடிக்க நாம் பல முறை புனர் ஜென்மம் எடுத்து நம்மை நாமே புதிப்பித்துக் கொள்ள வேண்டி இருக்கிறது.
மேற்சொன்ன கதையில் உள்ள கழுகைப் போல, தேவைப் படும் போது நமது பழைய பழக்க வழக்கங்கள், சிந்தனைகள் மற்றும் கருத்துக்கள் ஆகியவற்றை நீக்கி காலத்திற்கு ஏற்றாற் போல புதிய பழக்க வழக்கங்கள், சிந்தனைகள் மற்றும் கருத்துக்கள் ஆகியவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டி இருக்கிறது.
பழைய சுமைகள் நீங்கினால் நம்மால் சவால்களை உற்சாகமாக எதிர் கொள்ள முடிவதுடன் புதிய வாய்ப்புகளை செவ்வனே பயன்படுத்திக் கொள்ள முடியும்.

மாற்றத்திற்கான பாதை எப்போதுமே வலிகள் மற்றும் வேதனைகள் நிறைந்ததாகவே இருக்கும். அந்த வழிகளும் வேதனைகளும் நமக்கு மாற்றம் தேவையில்லையோ என்ற மாயையை உருவாக்கும். அப்போதெல்லாம் புனர் ஜென்மம் அடைய இந்த கழுகு அடைந்த வேதனைகளையும் (தனது உறுப்புகளை தானே அழித்துக் கொள்வது எவ்வளவு பெரிய வேதனை?) மாற்றங்களினால் நமக்கு கிடைக்கக் கூடிய பலன்களையும் நம் கண்முன் ஒரு கணம் நிறுத்தினால் நமக்கு ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும்.

மாற்றத்தை ஏற்றுக் கொள்வோம்.

பழையன கழிவோம்.

புதியன புகுவோம்.

நன்றி.

பின்குறிப்பு: மேற்சொன்ன கதைக்கு அறிவியல் ஆதாரங்கள் போதுமான அளவில் இல்லை என்றாலும், இந்த கதை தரும் புதிய உற்சாகத்திற்காக பல உளவியல் நிபுணர்களால் ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது.

Comments

//இங்கே குறிப்பிட்டுள்ள வகையைச் சேர்ந்த கழுகின் ஆயுள் மற்ற கழுகு இனங்களின் ஆயுளை விட அதிகமாக உள்ளது.//

இந்த கழிகு தானே அமெரிக்காவின் தேசிய பறவை!

இது அதை பற்றிய பதிவு தானா?
Maximum India said…
அன்புள்ள வால்பையன்

பின்னூட்டத்திற்கு நன்றி.

கழுகு அமெரிக்கா மட்டுமல்ல பல நாடுகளின் தேசிய பறவையாக உள்ளது. மேலும் பல மத மற்றும் கலாச்சாரத்திலும் கழுகு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த கதை (இதனை கடுமையாக மறுக்கும் அறிவியலார் உண்டு என்று பதிவிலேயே கூறியுள்ளேன்) முதலில் மதப் பிரச்சாரகர்களால் கூறப் பட்டு பின்னர், ஆளுமைத் திறனை வளர்ப்பதற்காக உளவியலாரால் அதிகம் உபயோகிக்கப் படுகிறது.

நன்றி.
கபீஷ் said…
கதையோ, உண்மையோ ஆனா நல்லாருக்கு. தினமும், இன்று புதிதாய் பிறந்தோம் என்ற மனநிலையில் இருந்தால் ரொம்ப நல்லாத்தான் இருக்கும்.
Maximum India said…
அன்புள்ள கபீஷ்

பின்னூட்டத்திற்கு நன்றி

//கதையோ, உண்மையோ ஆனா நல்லாருக்கு. //

என்னுள் பாதிப்பை ஏற்படுத்திய கதை. அதே சமயத்தில் பதிவிடுவதற்கு முன்னர் அறிவியல் ஆதாரம் தேடிய எனக்கு உறுதியான ஆதாரங்கள் கிடைக்க வில்லை. எனவே disclaimer உடன் பதிவிட்டேன்.

//தினமும், இன்று புதிதாய் பிறந்தோம் என்ற மனநிலையில் இருந்தால் ரொம்ப நல்லாத்தான் இருக்கும்./

கண்டிப்பாக. இன்றிலிருந்தே ஆரம்பிப்போம்.

நன்றி.

Popular posts from this blog

நரேந்திர மோடி நாடாளலாமா?

சமீபத்தில் நடைபெற்ற குஜராத் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கார்பொரட் கனவான்களான அனில் அம்பானி மற்றும் சுனில் மிட்டல் ஆகியோர் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர். காரியம் ஆக வேண்டும் என்றால் என்ன வேண்டுமானாலும் பேசக் கூடியவர்கள் நமது தொழில் அதிபர்கள் என்பதனால் அவர்களின் பேச்சுக்கு அவ்வளவு மரியாதை கொடுக்க வேண்டியதில்லை. இவர்களைப் போன்றவர்களால் ஏற்கனவே நாடாள தகுதி பெற்றவர் என்று கூறப் பட்ட சந்திர பாபு நாயுடு அடுத்த சட்ட மன்ற தேர்தலில் தனது முதலமைச்சர் பதவியினையே இழந்தது குறிப்பிடத் தக்கது. தொழில் அதிபர்கள் பேச்சினை பா.ஜ.கவே ஏற்றுக் கொள்ளாத பட்சத்திலும் கூட, தீவிரவாதத்தை ஒடுக்கி குஜராத் மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்து சென்றவர் நரேந்திர மோடி என்றும் அவர் இந்தியாவின் பிரதமர் ஆவது நாட்டுக்கு நல்லது என்றும் பலராலும் கருதப் படுவதால், நரேந்திர மோடியின் செயல்பாடு பற்றியும் அவர் பிரதமர் ஆகலாமா என்பது பற்றியும் பிரதமராக அவர் ஏற்றுக் கொள்ளப் படுவாரா என்பதைப் பற்றியும் இங்கு பார்ப்போம். இன்றைய தேதியில் இந்தியாவிலேயே மிகுந்த முன்னேற்றம் அடைந்த ஒரு மாநிலமாக குஜரா...

இந்தியா தாக்குப் பிடிக்குமா?

இன்றைய உலகப் பொருளாதாரத் தேக்க நிலையில், இந்தியாவால் தாக்குப் பிடிக்க முடியுமா என்பது பற்றி பார்ப்போம். சமீபத்தில் வெளியிடப் பட்ட மத்திய புள்ளியல் (மத்திய அரசு) நிறுவனத்தின் மதிப்பீட்டின் படி இந்தியப் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 7.1 சதவீதம் வளர்ச்சியுறும் என்று தெரிகிறது. இது சரியாக இருக்கும் பட்சத்தில் உலகிலேயே இரண்டாவதாக வேகமாக வளர்ச்சியுறும் நாடு இந்தியாவாகத்தான் இருக்கும் (சீனா முதலாவது). சென்ற ஆண்டில் ஒன்பது சதவீதம் வளர்ச்சி பெற்றிருந்த இந்தியப் பொருளாதாரம் செப்டம்பர் 2008 வரையிலான முதல் அரையாண்டில் 7.80% வளர்ச்சிப் பெற்றிருந்தது. பொதுவாகவே பண்டிகைக் காலமாக கருதப் படுகிற இரண்டாவது அரையாண்டே தொழிற் துறையில் அதிக வளர்ச்சியைக் காட்டும் என்றாலும் இந்த முறை இந்தியத் தொழில் துறை பெரும் தேக்க நிலையில் இருந்து வந்திருக்கிறது என்பது கவனிக்கத் தக்கது. இந்திய தொழிற் வளர்ச்சி கடந்த இரு மாதங்களாக மிகவும் குறைந்து காணப் படுவதாலும் ஏற்றுமதியோ இறங்குமுகத்தில் இருப்பதாலும் இந்திய அரசாங்கம், மார்ச் 2009 வரையிலான நிதி ஆண்டின் இரண்டாவது அரையாண்டில் நமது பொருளாதாரம் குறைந்த வளர்ச்சியே (6.30%) இரு...

இங்கும் அங்கும் பாதை உண்டு. இதில் நீ எந்த பக்கம்?

சென்ற வாரம் 8350 என்ற எதிர்ப்பு நிலையை தாண்டிய போதும், நிப்டியால் முழுமையான வெற்றியை பெற முடிய வில்லை. 8350 என்ற நிலையின் அருகிலேயே இன்னும் நிலை பெற்றுள்ளது. உலக சந்தைகளின் போக்கினையொட்டி இந்த வாரம் 8350 என்ற எதிர்ப்பு நிலையை முழுமையாக முறியடிக்கின்றதா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும். வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். நன்றி.