Skip to main content

மாற்றம் தேவை - ஒரு கழுகின் கதை

இங்கே குறிப்பிட்டுள்ள வகையைச் சேர்ந்த கழுகின் ஆயுள் மற்ற கழுகு இனங்களின் ஆயுளை விட அதிகமாக உள்ளது. இதன் ஆயுள் சுமார் எழுபது ஆண்டுகள். ஆனால் இவ்வளவு நீண்ட ஆயுளைப் பெற அது சில கடுமையான முயற்சிகளைச் செய்ய வேண்டியுள்ளது.


நாற்பது வயதுக்கு மேலே இந்த கழுகு இனத்தின் இறகுகள் தமது மென்மைத் தன்மையை இழந்து விட வேகமாக பறப்பது என்பது கழுகிற்கு இயலாத செயலாகி விடுகிறது. கழுகின் அலகுகளும் விரல் நகங்களும் வலுவிழந்து விட தனக்கான இரையை வேட்டையாடுவது கடினமானதாகி விடுகிறது.


இப்போது கழுகிற்கு உள்ள பிரச்சினையைத் தீர்க்க இரண்டு வழிகள் உண்டு. முதலாவது இரை கிடைக்காமல் வாழ முடியாமல் மடிந்து போவது. இரண்டாவது தனது வாழ்வைப் புதிப்பித்துக் கொள்ள 150 நாட்கள் கடும் முயற்சி செய்வது.

இங்கே இரண்டாவது பாதையை தேர்ந்தெடுக்கும் நமது கழுகு ஒரு மலை உச்சிக்கு செல்கிறது.

அங்கே தனது அலகினால் ஒரு பாறையைக் கடுமையாக மோதி அலகினை தானே உடைத்துக் கொள்கிறது. புதிய அலகு வளர்ந்த பின்னர் தனது நகங்களை பிய்த்து எறிகிறது.

புதிய நகங்கள் முளைத்த பின்னர் தனது இறகுகளை ஒவ்வொன்றாக பிய்த்து எறிகிறது.

சுமார் ஐந்து மாதங்களுக்கு பின்னர் புதிய இறகுகள் முளைத்து விட இந்த கழுகு புனர் ஜென்மம் பெறுகிறது.
அதன் பின்னர் இந்த கழுகு முப்பது ஆண்டுகள் நீண்ட புதிய வாழ்க்கையை வாழ முடிகிறது.

இந்த கதை தரும் பாடம்.

கடினமான சவால்கள் நிறைந்த நமது வாழ்வில் தாக்குப் பிடிக்க நாம் பல முறை புனர் ஜென்மம் எடுத்து நம்மை நாமே புதிப்பித்துக் கொள்ள வேண்டி இருக்கிறது.
மேற்சொன்ன கதையில் உள்ள கழுகைப் போல, தேவைப் படும் போது நமது பழைய பழக்க வழக்கங்கள், சிந்தனைகள் மற்றும் கருத்துக்கள் ஆகியவற்றை நீக்கி காலத்திற்கு ஏற்றாற் போல புதிய பழக்க வழக்கங்கள், சிந்தனைகள் மற்றும் கருத்துக்கள் ஆகியவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டி இருக்கிறது.
பழைய சுமைகள் நீங்கினால் நம்மால் சவால்களை உற்சாகமாக எதிர் கொள்ள முடிவதுடன் புதிய வாய்ப்புகளை செவ்வனே பயன்படுத்திக் கொள்ள முடியும்.

மாற்றத்திற்கான பாதை எப்போதுமே வலிகள் மற்றும் வேதனைகள் நிறைந்ததாகவே இருக்கும். அந்த வழிகளும் வேதனைகளும் நமக்கு மாற்றம் தேவையில்லையோ என்ற மாயையை உருவாக்கும். அப்போதெல்லாம் புனர் ஜென்மம் அடைய இந்த கழுகு அடைந்த வேதனைகளையும் (தனது உறுப்புகளை தானே அழித்துக் கொள்வது எவ்வளவு பெரிய வேதனை?) மாற்றங்களினால் நமக்கு கிடைக்கக் கூடிய பலன்களையும் நம் கண்முன் ஒரு கணம் நிறுத்தினால் நமக்கு ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும்.

மாற்றத்தை ஏற்றுக் கொள்வோம்.

பழையன கழிவோம்.

புதியன புகுவோம்.

நன்றி.

பின்குறிப்பு: மேற்சொன்ன கதைக்கு அறிவியல் ஆதாரங்கள் போதுமான அளவில் இல்லை என்றாலும், இந்த கதை தரும் புதிய உற்சாகத்திற்காக பல உளவியல் நிபுணர்களால் ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது.

Comments

//இங்கே குறிப்பிட்டுள்ள வகையைச் சேர்ந்த கழுகின் ஆயுள் மற்ற கழுகு இனங்களின் ஆயுளை விட அதிகமாக உள்ளது.//

இந்த கழிகு தானே அமெரிக்காவின் தேசிய பறவை!

இது அதை பற்றிய பதிவு தானா?
Maximum India said…
அன்புள்ள வால்பையன்

பின்னூட்டத்திற்கு நன்றி.

கழுகு அமெரிக்கா மட்டுமல்ல பல நாடுகளின் தேசிய பறவையாக உள்ளது. மேலும் பல மத மற்றும் கலாச்சாரத்திலும் கழுகு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த கதை (இதனை கடுமையாக மறுக்கும் அறிவியலார் உண்டு என்று பதிவிலேயே கூறியுள்ளேன்) முதலில் மதப் பிரச்சாரகர்களால் கூறப் பட்டு பின்னர், ஆளுமைத் திறனை வளர்ப்பதற்காக உளவியலாரால் அதிகம் உபயோகிக்கப் படுகிறது.

நன்றி.
கபீஷ் said…
கதையோ, உண்மையோ ஆனா நல்லாருக்கு. தினமும், இன்று புதிதாய் பிறந்தோம் என்ற மனநிலையில் இருந்தால் ரொம்ப நல்லாத்தான் இருக்கும்.
Maximum India said…
அன்புள்ள கபீஷ்

பின்னூட்டத்திற்கு நன்றி

//கதையோ, உண்மையோ ஆனா நல்லாருக்கு. //

என்னுள் பாதிப்பை ஏற்படுத்திய கதை. அதே சமயத்தில் பதிவிடுவதற்கு முன்னர் அறிவியல் ஆதாரம் தேடிய எனக்கு உறுதியான ஆதாரங்கள் கிடைக்க வில்லை. எனவே disclaimer உடன் பதிவிட்டேன்.

//தினமும், இன்று புதிதாய் பிறந்தோம் என்ற மனநிலையில் இருந்தால் ரொம்ப நல்லாத்தான் இருக்கும்./

கண்டிப்பாக. இன்றிலிருந்தே ஆரம்பிப்போம்.

நன்றி.

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

தீவிரவாதிகளை வென்ற கதை - இந்திய கமாண்டோவின் விளக்கம்

நேற்று ஒரு தீவிரவாதி பிடிப் பட்ட கதை பார்த்தோம். இன்று தாஜ் ஹோட்டலில் எவ்வாறு நான்கு தீவிரவாதிகள் ஒழிக்கப் பட்டனர் என்று விளக்கும் இந்திய கமாண்டோவின் விளக்கத்தை பார்ப்போம். முதலில் இந்தியா கமாண்டோக்கள் தாஜ் ஹோட்டல் வந்த கதை புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் மும்பையை பயங்கரவாதம் தாக்கியது. அப்போது கேரளாவில் இருந்த மகாராஷ்டிர முதல்வர் மும்பை வரவும் இந்த சூழ்நிலையின் பயங்கரத்தையும் முழுமையாக உணர்ந்துக் கொள்ளவும் 90 நிமிடம் பிடித்தது .பின்னர் 11.00 அளவில் மத்திய அரசிற்கு போன் பேசிய முதல்வர் கோரியது 200 கமாண்டோக்களை. உடனே அந்நேரத்தில் தூங்கி கொண்டிருந்த இந்திய கமாண்டோக்கள் எழுப்பப் பட்டனர். அவர்கள் மும்பை வரத் தயாரான போதுதான் புரிந்தது, அவ்வளவு பேரை மும்பை கொண்டுவர தேவையான சிறப்பு விமானம் சண்டிகரில் உள்ளது என்று. உடனே அந்த விமானியையும் தூக்கத்தில் இருந்து எழுப்பி தயார் படுத்தி டெல்லியிலிருந்து கமாண்டோக்கள் மும்பை வந்த போது நேரம் காலை 5.25 மணி. அவர்கள் தாஜ் ஹோட்டலுக்கு கொண்டு வரப்பட்டு திட்டம் தயாரிக்கப் பட்டு அவர்கள் தாஜ் ஹோட்டலுக்குள் நுழைந்த போது நேரம் காலை 7.00 மணி. அதாவது மும்பை தாக்கப் ப...

கம்ப்யூட்டர் கட்சியும் கால்குலேட்டர் கட்சியும்!

மத்திய கல்வி அமைச்சர் கபில் சிபல் இந்தியா முழுவதும் அனைவரும் தாய்மொழியுடன் ஹிந்தியும் படிக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்துள்ளார். இவ்வாறு அனைவரும் ஹிந்தி படிப்பதன் மூலம் நாட்டில் ஒருமைப்பாடு ஏற்படுவதுடன் ஹிந்தியை ஆங்கிலம் போன்று ஒரு "அறிவு மொழியாக (lingua franca)" மாற்ற முடியும் என்றும் கூறியுள்ளார். இந்த கருத்தின் மீது பதிவுலகில் ஏராளமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆங்கிலம் மட்டுமே போதும் என்று ஒரு கட்சியும், ஆங்கிலம் வாசலாக இருக்கும் போது ஹிந்தி ஒரு சன்னலாக இருந்து விட்டு போகட்டுமே என்று இன்னொரு கட்சியும் விவாதித்து வருகின்றன. ஹிந்தி எதிர்ப்பு என்பது எப்போதுமே ஒரு உணர்வு பூர்வமான விஷயமாகவே பலராலும் கருதப் பட்டாலும், அதற்கு அறிவு பூர்வமான, சரித்திர பூர்வமான சில அடிப்படைகள் உண்டு. ஹிந்தி திணிப்பு மற்றும் ஹிந்தி எதிர்ப்பு பற்றி எனக்கு தெரிந்த சில கருத்துக்களை இங்கு ஒரு புனைவு வடிவில் அளிக்க முயற்சிக்கிறேன். இப்போது புனைவு ! ஒரு காலத்தில் பரதம்பட்டி என்ற ஒரு கிராமம் இருந்ததாம். அங்கு பல ஆண்டுகள் வரை ஆட்சி செய்து வந்த துரை மகாராஜா ஒரு காலத்தில், அந்த கிராமத்தை ஜனநாயக ...