Friday, August 14, 2009

திருப்பல்லாண்டு


பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு*
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா!* உன்
சேவடி செவ்வித்திருக்காப்பு


அடியோ மோடும் நின்னோடும் பிரிவின்றி
யாயிரம் பல்லாண்டு*
வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற
மங்கையும் பல்லாண்டு*
வடிவார் சோதி வலத்துறையும்
சுடராழியும் பல்லாண்டு*
படைபோர் புக்கு முழங்குமப் பாஞ்ச
சன்னியமும் பல்லாண்டே.

வாழாட்பட்டு நின்றீருள்ளீரேல் வந்து
மண்ணும் மணமும் கொண்மிண்*
கூழாட்பட்டு நின்றீர்களை யெங்கள்
குழுவினில் புகுத லொட்டோம்*
ஏழாட்காலும் பழிபபிலோம் நாங்கள்
இராக்கதர்வாழ் இலங்கை*
பாழாளாகப் படைபொருதானுக்குப்
பல்லாணடு கூறுதுமே.*

ஏடுநிலத்தில் இடுவதன் முன்னம்
வந்து எங்கள் குழாம் புகுந்து*
கூடுமனமுடையீர் வரம்பொழி
வந்தொல்லைக் கூடுமினோ*
நாடுநகரமும் நன்கறிய நமோ
நாராயணா வென்று*
பாடுமனமுடைப் பத்தருள்ளீர்! வந்து
பல்லாணடு கூறுமினே.

அண்டக்குலத்துக் கதிபதியாகி
அசுரர் இராக்கதரை*
இண்டைக்குலத்தை எடுத்துக் களைந்த
இருடிகேசன் றனக்கு*
தொண்டைக்குலத்தில் உள்ளீர்!வந்தடி தொழுது
ஆயிரநாமம் சொல்லி*
பண்டைக்குலத்தைத் தவிர்ந்து பல்லாணடு பல்
லாயிரத்தாண்டென்மினே.

எந்தை தந்தை தந்தை தந்தை தம்மூத்தப்பன்
ஏழ்படிகால் தொடங்கி*
வந்து வழிவழி ஆட்செய்கின்றோம்* திரு
வோணத்திரு விழவில்
அந்தியம் போதில் அரியுருவாகி
அரியை யழித்தவனை*
பந்தனை தீரப் பல்லாணடு பல்லாயிரத்
தாண் டென்று பாடுதுமே.

தீயிற்பொழிகின்ற செஞ்சுடராழி
திகழ்திருச் சக்கரத்தின்*
கோயிற்பொறியாலே ஒற்றுண்டு நின்று
குடிகுடி ஆட்செய்கின்றோம்*
மாயப்பொருபடை வாணனை ஆயிரம்
தோளும் பொழிகுருதி
பாய*சுழற்றிய ஆழிவல்லானுக்குப்
பல்லாண்டு கூறுதுமே.

நெய்யிடை நல்லதோர் சோறும் நியதமும்
அத்தாணிச் சேவகமும்*
கையடைக்காயும் கழுத்துக்குப் பூணொடு
காதுக்குக் குண்டலமும்*
மெய்யிட நல்லதோர் சாந்தமும்தந்து என்னை
வெள்ளுயிராக்க வல்ல*
பையுடை நாகப்பகைக் கொடியானுக்குப்
பல்லாண்டு கூறுவனே

உடுத்துக் களைந்தநின் பீதகவாடை
யுடுத்துக் கலத்ததுண்டு*
தொடுத்த துழாய்மலர் சூடிக்களைந்தன
சூடுமித் தொண்டர்களோம்*
விடுத்த திசைக் கருமம் திருத்தி திரு
வோணத் திருவிழவில்*
படுத்தபைந்நாகணைப் பள்ளி கொண்டானுக்குப்
பல்லாண்டு கூறுதுமே

எந்நாள் எம்பெருமான் உன்றனுக் கடி
யோமென் றெழுத்துப்பட்ட
அந்நாளே* அடியோங்கள் அடிக்குடில்
வீடுபெற் றுய்ந்ததுகாண்*
செந்நாள் தோற்றித் திருமதுரையுட்
சிலைகுனித்து *ஐந்தலைய
பைநாகத்தலைப் பாய்ந்தவனே! உன்னைப்
பல்லாண்டு கூறுதுமே

அல்வழக்கொன்று மில்லா அணிகோட்டியர்
கோன்* அபிமான துங்கன்
செல்வனைபபோலத் திருமாலே! நானும்
உனக்குப் பழவடியேன்*
நல்லவகையால் ந்மோநாராயணா வெனறு
நாமம் பலபரவி*
பல்வகையாலும் பவித்திரனே! உன்னைப்
பல்லாண்டு கூறுவனே.

பல்லாண்டென்று பவித்திரனைப் பர
மேட்டியைச்* சார்ங்கமெனும்
வில்லாண்டான் தன்னை வில்லிபுத்தூர் விட்டு
சித்தன் விருமபியசொல்*
நல்லாண்டென்று நவின்றுரைப்பார் நமோ
நாராயணா வென்று*
பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்திருத்
தேத்துவர் பல்லாண்டே

(பெரியாழ்வார் திருவடிகளே சரணம்)
அனைவருக்கும் கோகுலாஷ்டமி நல்வாழ்த்துக்கள்!
நன்றி!

3 comments:

பொதுஜனம் said...

கேட்டதை கொடுப்பவனேகிருஷ்ணா கிருஷ்ணா.. இப்போதைக்கு ஆரோக்கியமான வாழ்க்கையை கொடு போதும்.

Raghav said...

பிறந்த நாளில் கண்ணனுக்கு கண்ணேறு பட்டு விடாமல் பல்லாண்டு பாடியமை மிகப் பொருத்தமே.

Maximum India said...

நன்றி பொதுஜனம்!

நன்றி ராகவ்!

Blog Widget by LinkWithin