
கிளம்புவதற்கு முன்னர் அவர் கீழ்க்கண்ட கேள்விகளுக்கு பதில் அளித்திருக்க வேண்டும்.
எங்கே போகிறீர்கள்?
எதற்காக போகிறீர்கள்?
போய்த்தான் ஆக வேண்டுமா?
அப்படி என்ன அவசியம்?
இரவு சாப்பிட வருவீர்களா?
போய் வர எத்தனை நாளாகும்?
யாருடன் போகிறீர்கள்?
எதற்காக அவர்களுடன் போகிறீர்கள்?
இவற்றுக்கெல்லாம் கூட பதில் அளித்து விடலாம். ஆனால் கடைசி இரண்டு கேள்விகள்;
என்னையும் கூட்டிச் செல்வீர்களா?
ஏன் முடியாது?
இதற்கு பதில் அளித்து விட்டு செல்வதற்கு பதிலாக வீட்டிலேயே இருந்து விடலாம் என்று யோசித்திருப்பார் என்று மின்னஞ்சலில் வந்த ஒரு நகைச்சுவையை என் நண்பருடன் பகிர்ந்து கொண்டேன்.
அதற்கு கூறினார்.
"கொலம்பஸ் ஒருவேளை நம்மூராக இருந்திருந்தால் அமெரிக்காவை கண்டுபிடித்ததை யாரிடமும் சொல்லியிருக்க மாட்டார்"
ஏன் என்று கேட்டேன்.
"யாரிடமும் சொல்லாமல் மனைவியை அமெரிக்காவிற்கு கொண்டு சென்று விட்டு விட்டு வந்திருப்பார்.அமெரிக்காவின் கண்டுபிடிப்பு சாதனையை விட இது பெரிய சாதனையாக இருந்திருக்கும்." என்றார்.
என்ன பண்ண?
அவரவர் கஷ்டம் அவரவருக்குத்தான் தெரியும்.
நன்றி!
Comments
உண்மைதான் சார்.
பதிவுக்கு நன்றி சார்.
எங்கயாவது நண்பர்களுடன் ரெண்டு நாள் டூர் போகனும்னா ரெண்டு மாசத்துக்கு முன்னாடி இருந்தே பொய் ரெடி பண்ணியாகனும், அப்படியும் சமாளிக்கிறதுகுள்ள தாவூ தீந்துரும்!
//உண்மைதான் சார்//
ஆகா, ஒண்ணு கூடிட்டாங்கய்யா, ஒண்ணு கூடிட்டாங்கய்யா!!!!!
நன்றாக இருந்தது.
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்.
வித்யாவின் அம்மா இந்த பதிவை படித்தார்களா.(உண்மை Please)
நன்றி வால்பையன்!
ரொம்பவும் சந்தோசப் படாதீர்கள் நரேஷ்!
கூடிய சீக்கிரமே நீங்களும் இந்த கும்மியில் சேர வேண்டியிருக்கும்.
:)
நன்றி.
உங்கள் பெருந்தன்மைக்கு ரொம்ப நன்றி சின்ன அம்மிணி!
:)
நன்றி கௌதமன்!
இருக்கலாம். அந்த தைரியத்தினால்தான் அவர்களால் துணிச்சலாக ஜோக் அடிக்க முடிகிறது.
என்னுடய பதிவின் டிஸ்கி: இந்த ஜோக் மற்றும் பின்னுரை இரண்டுமே என்னுடையதில்லை. ரசித்து மட்டுமே நான்.
நன்றி.
இல்லை ரஹ்மான்! ஆனால் பின்னுரை என்னுடையது அல்ல என்று சொல்லி எஸ்கேப் ஆக முடியும்.
நன்றி!
பின்னுரை என்னுடையது அல்ல என்று சொல்லி எஸ்கேப் ஆக முடியும்.
நன்றி சிதம்பரராஜன்!
நான் ரெடி! நீங்க?
:)