Skip to main content

Posts

Showing posts from 2009
அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

தடை ஓட்டம்

கடந்த காலாண்டிற்கான இந்தியாவின் மொத்த பொருளாதார வளர்ச்சி, பல பொருளாதார நிபுணர்களின் கணிப்பையும் வெகுவாக விஞ்சி 7.9% அளவாக உயர்ந்துள்ளது. இந்த உயர்வின் முக்கிய காரணம் அரசு ஊழியர்களுக்கு வழங்கப் பட்ட ஊதிய உயர்வு நிலுவை தொகை உள்ளிட்ட பல்வேறு அரசு செலவினத் தொகைகள்தான் என்றாலும் கூட, சென்ற காலாண்டில் குறிப்பிடத் தக்க அளவு இந்திய தொழிற்துறை வளாச்சி பெற்றதும் குறிப்பிடத் தக்கது. இந்தியாவின் ஏற்றுமதி வீழ்ச்சியின் அளவும் சென்ற மாதம் வெகுவாக குறைந்திருப்பது, கூடிய சீக்கிரமே இந்தியா ஒரு "வேகமான வளர்ச்சிப் பாதைக்கு" திரும்பும் (Return to High Growth Trajectory) என்ற நம்பிக்கையை உருவாக்கி உள்ளது. இந்த வளாச்சி பாதைக்கு பெரிய வில்லனாக அமைந்திருப்பது, கட்டுக்கடங்காமல் உயர்ந்து வரும் "உணவுப் பொருட்களின் விலைவாசிகள்" ஆகும். அமெரிக்காவின் "எளிமையான வட்டியில் கடன் " (Easy Monetary Policy) எனும் பொருளாதார கொள்கை மற்றும் இந்தியாவின் "அதிகரிக்கும் வருவாய் இடைவெளி" சமூக அமைப்பு, தெளிவில்லாத "உணவு கொள்கை" மற்றும் உணவு பதுக்கல்கள் ஆகியவை எல்லாம் ஒருங்கே சேர்ந்து...

ஜாலியாக இருக்கலாம்! ஆனால்?

நவீன இலக்கியத்தின் சிறந்த படைப்புக்களில் ஒன்றாக கருதப் படும் "ஆல்கெமிஸ்ட் (The Alchemist)" புதினத்தில் இருந்து ஒரு சிறிய கதையை பதிவுலக நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப் படுகிறேன். முன்னொரு காலத்தில், ஒரு வியாபாரி தன் மகனை "மகிழ்ச்சியின் ரகசியத்தை" அறிந்து கொள்வதற்காக, ஒரு மகாஞானியிடம் அனுப்பி வைத்தார். அவனும் பல நாட்கள் அலைந்து திரிந்து அந்த மகாஞானியின் இருப்பிடத்தை கண்டறிந்தான். அங்கே துறவியின் எளிமையான கோலத்துடன் மகாஞானி இருப்பார் என்று எதிர்பார்த்த வியாபாரியின் மகனுக்கு ஆச்சரியமே காத்திருந்தது. ஒரு ஆடம்பரமான மாளிகையில் ஏராளமானோர் வந்து சென்று கொண்டிருக்க ஒரு மூலையில் இன்னிசையுடன் மிகப் பெரிய விருந்தும் நடந்து கொண்டிருந்தது. பலருடனும் உரையாடிக் கொண்டிருந்த அந்த ஞானியுடன் பேசுவதற்கான வாய்ப்பே இரண்டு மணி நேரம் கழித்துத்தான் நமது ஹீரோவுக்கு கிடைத்தது. நம் ஹீரோ தன்னை தேடி வந்த காரணத்தை பொறுமையுடன் கேட்டுக் கொண்ட ஞானி, அவனிடத்தில் ஒரு டீ ஸ்பூனைக் கொடுத்து அந்த ஸ்பூனில் இரண்டு சொட்டு எண்ணெய்யை விட்டு விட்டு, "முதலில் இந்த இடத்தை சுற்றிப் பார்த்து விட்டு வா! அதே ச...

மின்னுவதெல்லாம் பொன்னல்ல!

சென்ற வார "துபாய் உலகம்" விவகாரம் உலக சந்தைகளை நிலை குலைய செய்திருக்கிறது. இதன் பின்புலத்தைப் பற்றியும், இந்த விவகாரத்தினால் இந்தியாவிற்கு ஏற்படக் கூடிய பாதிப்புக்கள் பற்றியும் இங்கு பார்ப்போம். துபாய் ஐக்கிய அரேபிய கூட்டமைப்பின் ஒரு முக்கிய அங்கமாகும். எண்ணெய் வளம் குறைந்த இந்த நாட்டின் பொருளாதாரம் சுற்றுலா மற்றும் வணிகத்தையே நம்பி உள்ளது. துபாயை ஒரு மிகப் பெரிய வணிக மற்றும் சுற்றுலா மையமாக்க விரும்பிய துபாய் அரசு "துபாய் உலகம்" என்ற ஒரு அரசு நிறுவனத்தின் வாயிலாக பல கட்டுமானப் பணிகளை மேற்கொண்டது. துரதிர்ஷ்டவசமாக, சென்ற ஆண்டின் பொருளாதார சிக்கல் ரியல் எஸ்டேட் துறையை வெகுவாக பாதிக்க, "துபாய் உலகம்" தான் கடனாக பெற்ற தொகையில் சுமார் 59 பில்லியன் டாலர் தொகையை திருப்பி செலுத்த முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. ஐக்கிய அரேபிய கூட்டமைப்பின் முதன்மை நாடான அபுதாபி ஓரளவுக்கு உதவிக் கரம் நீட்டினாலும், அந்த உதவி முழுமையானதாக அமைய வில்லை. எனவே, இந்த கடனை திருப்பி செலுத்த ஆறுமாத கால அதிக அவகாசம் அளிக்கும்படி துபாய் அரசு தற்போது கோரியுள்ளது. இந்த கோரிக்கையின் அடிப்படையி...

ஏன்? எதற்காக?

நமது சாலைப் பயணம் சில சமயங்களில் ரேஸ் பயணமாக மாறி விடுவதுண்டு. நாம் சென்றடைய வேண்டிய இலக்கை நோக்கி சீராக பயணம் செய்து கொண்டிருக்கையில், விருட்டென்று ஒரு வண்டி நம்மை (சற்று முரட்டுத்தனமாக) முந்தினால் நமக்கு ஒருவகையான கோபம் வந்து விடுகிறது. உடனடியாக, "விட்டேனா பார்" என்று அந்த வாகனத்துடன் ஒருவித மானசீக ரேஸ் ஆரம்பித்து விடுகின்றது. சில சமயங்களில் அடைய வேண்டிய இலக்கு, மற்ற பிரச்சினைகள் அனைத்தும் மறந்து போய், அந்த குறிப்பிட்ட வாகனத்தை விஞ்சுவது மட்டுமே நமது ஒரே இலக்காக மாறி விடுகிறது. இந்த "சாலை வழி இலக்கிற்காக" நாம் சில சமயங்களில் உயிரைக் கூட பணயம் வைத்து வண்டியை செலுத்துவதும் உண்டு. இந்த ரேஸ்கள் பல சமயங்களில் ஈடு செய்ய முடியாத நஷ்டத்தையும் ஏற்படுத்துவதுண்டு. இன்று மும்பை-புனே சாலையில் செல்லும் போது நான் சிந்தித்த ஒரு விஷயம், "சில நிமிட ரேஸ் (?) பயணத்திற்கு பின்னே அந்த போட்டி வண்டி (?) தடம் மாறி விடுகிறது. அதற்கப்புறம் அந்த வண்டி நம் கண்ணில் படப் போவதே இல்லை. அந்த வண்டி ஓட்டுனர் யாரென்று கூட நமக்கு தெரியாது. அல்லது அக்கறையும் கொள்வதில்லை. வெற்றி பெற்றதற்காக யாரு...

கடனில் தத்தளிக்கும் துபாய்!

பொதுவாக ஒரு வளம் கொழிக்கும் நாடாக அறியப் படும் ஐக்கிய அரேபிய கூட்டமைப்பின் (UAE) முக்கிய அங்கமான துபாய் இன்றைய தேதியில் பெரிய கடன் சிக்கலில் தத்தளித்து வருகின்றது தெரியுமா? இந்த தகவல் முதலில் எனக்குக் கூட மிகவும் ஆச்சரியமாக இருந்தது. பின்னர் சற்று ஆழமாக ஆய்ந்த போது, கிடைத்த சில தகவல்கள் பகிர்வுக்காக இங்கே. ஐக்கிய அரேபிய கூட்டமைப்பில் மொத்தம் ஏழு நாடுகள் உள்ளன. அவற்றில் துபாய் மிகப் பெரிய "மாநகர" நாடாகும். துபாய் எண்ணெய் வளம் மிக்க அரேபிய பகுதியில் இருந்தாலும் அதனது பொருளாதாரத்தில் எண்ணெய் வருவாய் மிகக் குறைவானதேயாகும். மத்திய கிழக்கு நாடுகளின் முக்கிய வணிக நகரமான துபாயின் பெரும்பாலான வருமானம் வணிக நடவடிக்கைகளின் வாயிலாகவே வருகின்றது. இந்நிலையில் வணிக மற்றும் சுற்றுலா மையமான "துபாய் உலகம்" அமைப்பதற்காக சுமார் 80 பில்லியன் டாலர் (3,60,000 கோடி ருபாய்) கடனாக துபாய் அரசு நிறுவனங்களால் பெறப் பட்டது. கடந்த ஆண்டின் பொருளாதார சிக்கல் ரியல் எஸ்டேட் விலைகளை பாதிக்கும் மேல் குறைத்து விட, "துபாய் உலகம்" தான் பெற்ற கடனில் சுமார் 59 பில்லியன் டாலர் அளவுக்கு இன்று வரை...

தோல்வி எமக்கில்லை!

எட்மன்ட் ஹில்லாரி சரித்திரத்தின் ஒரு சிறு நிகழ்வு நமக்கு ஒரு நல்ல வாழ்வியல் பாடத்தை கற்றுக் கொடுக்கிறது. எட்மன்ட் ஹில்லாரி - டென்சிங் இணை எவரெஸ்ட் சிகரத்தை முதன் முதலாக எட்டிப் பிடித்தவர்கள் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும் . ஆனால், பல முறை கண்ட தோல்விக்கு பின்னர்தான் அந்த சாதனை சாத்தியமாயிற்று என்பது எத்தனை பேருக்கு தெரிந்திருக்கும் என்பது கேள்விக் குறியே. எவரெஸ்ட் சிகரத்தை வெற்றி கொள்வதற்காக ஹில்லாரி 1951 மற்றும் 1952 ஆண்டுகளில் செய்த முயற்சிகள் தோல்வி அடைந்தாலும், அவருடைய புகழ் இங்கிலாந்தில் பெருமளவுக்கு பரவி இருந்தது. 1952 முயற்சி தோல்வி அடைந்த சில வாரங்களுக்குள்ளேயே இங்கிலாந்தில் ஒரு கூட்டத்தில் முக்கிய உரையாற்றும்படி ஹில்லாரிக்கு அழைப்பு விடுக்கப் பட்டிருந்தது. மேடையை நோக்கி சென்ற ஹில்லாரிக்கு பலத்த கைத்தட்டலுடன் வரவேற்பு இருந்தது. ஆனால் மைக்கின் முன்னே நிற்காமல் சற்று ஓரமாக நின்ற ஹில்லாரி, எவரெஸ்ட் மலை படத்தை பார்த்துச் சொன்னாராம். " எவரெஸ்ட்! இந்த முறை என்னை தோற்கடித்து விட்டாய். ஆனால் அடுத்த முறை உன்னை நான் தோற்கடிப்பேன். காரணம், நீ வளர முடிந்த வரை வளர்ந்து விட்டாய்....

அந்நிய முதலீடுகளை கட்டுப்படுத்த வேண்டுமா?

பொதுவாக வளரும் நாடுகளில், மனித வளம், கனிம வளம், நீர் ஆதாரங்கள், நிலம் என பல்வேறு இயற்கை ஆதாரங்கள் மிகுதியாக இருக்கும். ஆனால், இவற்றை ஒருங்கிணைத்து, பொருளாதார முன்னேற்றத்தை உருவாக்கும் கிரியா ஊக்கியான "மூலதனம்" (Capital) என்பது அரிதான ஒன்றாகவே இருக்கும். எனவேதான், வளரும் நாடுகள் அந்நிய முதலீட்டாளர்களை ரத்தின கம்பளம் இட்டு வரவேற்கின்றன. அந்நிய முதலீடுகளை அந்நிய நேரடி முதலீடு (FDI) மற்றும் அந்நிய நிறுவன முதலீடு (FII) என இரண்டு வகையாக பிரிக்கலாம். சீனா போன்ற நாடுகள் அந்நிய நேரடி முதலீட்டை அதிகம் ஊக்குவிக்கின்றன. அந்நிய நேரடி முதலீட்டின் வாயிலாக "மூலதனம்" மட்டுமில்லாமல் வேறு சில நன்மைகளும், அதாவது வளரும் நாடுகளுக்கு எட்டாக்கனியாக இருக்கும் "அரிய வகை தொழிற்நுட்பங்கள்", "சீரிய மேலாண்மை முறைகள்", "ஏற்றுமதி வருவாய்" மற்றும் "அதிக வேலை வாய்ப்பு" போன்றவையும் அந்நிய நேரடி முதலீடுகள் வழியாக கிடைக்கின்றன. மேலும், இது போன்ற நேரடி முதலீடுகள் எளிதாக திரும்ப பெற முடியாதவை என்பதால் ஒரு வித "நிதி பாதுகாப்பு"ம் (Long Term Investments) ...

பங்குசந்தை வெற்றிப்பயணம் - தொடர்பதிவு - ஒரு மீள்பார்வை!

பங்குசந்தையில் எப்படி வெற்றி பெறுவது என்பது பற்றிய சில முன்னோட்ட பதிவுகளை இது வரை பார்த்தோம். பங்குகளை பற்றிய இன்னும் ஆழமான விளக்க கட்டுரைகளுக்கு செல்லும் முன்னே, இதுவரை இட்ட பதிவுகளை மீண்டும் ஒரு முறை திரும்பி பார்ப்போம் என்று தோன்றியது. பங்குகளை நேரடியாக பரிந்துரைப்பதை விட பங்குகளை தேர்வு செய்யும் வழிமுறையை நண்பர்களுக்கு அறிமுகப் படுத்தலாமே என்ற ஒரு எண்ணத்தில்தான் இந்த தொடர் பதிவு ஆரம்பிக்கப் பட்டது. இதற்கு முக்கிய காரணம், பங்குகளில் வர்த்தகம் செய்பவர்களுக்கு தாம் முதலீடு செய்யும் நிறுவனங்களைப் பற்றிய நேரடி புரிதல் (ஓரளவேனும்) இருக்கும் போதுதான், எடுக்கப் படும் முடிவுகள் சிறப்பாக இருந்திருக்கின்றன என்பது சரித்திரம் சொல்லும் உண்மை. இந்த உண்மையை ஒரு பங்கு சந்தை மேதை கீழ்க்கண்டவாறு விவரிக்கிறார். F&O வர்த்தகத்தில் ஏராளமாக சம்பாதிக்கலாம் என்ற ஆர்வத்தில் பங்கு சந்தைக்குள் நுழைந்தவர் இவர். இந்த துறையில் ஏற்கனவே மிகப் பெரிய நிபுணத்துவம் பெற்று இருந்த தன்னுடைய நண்பரிடம் ஆலோசனை கேட்கின்றார். அவரும் ஒரு குறிப்பிட்ட பங்கின் "option" வாங்குமாறு அறிவுரைக்கிறார். தன்னிடம் இருக்கும் ...

யானையின் வாலை பிடித்த குருடனின் கதை!

முதல் தடவையாக, சர்தார்ஜி ஜோக்குகளை படிக்கும் போது, பஞ்சாபிகள் உண்மையிலேயே இவ்வளவு பெரிய முட்டாள்களா என்று எண்ணத் தோன்றி இருக்கின்றது. அதுவும், முரட்டுத்தனமான அதே சமயத்தில் மூடத்தனம் சற்றும் குறைவில்லாத பஞ்சாபிகள் சிலருடன் பழக நேர்ந்த போது, சர்தார்ஜி ஜோக்குகள் சரியாகத்தான் எழுதப் பட்டிருக்கின்றது என்று கூட தோன்றி இருக்கின்றது. மன்மோகன் சிங், அலுவாலியா போன்ற பொருளாதார மேதைகள் பஞ்சாபிகள், பஞ்சாபி சமூகத்தினை சேர்ந்த ஒருவர் நோபல் பரிசு வென்று இருக்கின்றார், பலர் மெத்த படித்து மிக உயரத்தில் இருக்கின்றனர் என்றெல்லாம் தெரிய வந்த போது சமூகங்களைப் பற்றிய ஒரு "மாயத்தோற்றம்" மனதிற்குள் ஆழமாக பதிந்து எப்படியெல்லாம் நமது "அறிவுப் பார்வையை" மறைக்கின்றது என்ற உண்மை புரிய வந்தது. எதற்காக சர்தார்ஜிகளை பற்றிய ஒரு தமிழ் பதிவு என்று நினைக்கிறீர்களா? சமீபத்தில் ஒரு சர்தார்ஜி தமிழர்களைப் பற்றி ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார். அதன் பெயர் "2 States: Story of My Marriage" அவர் பெயர் சேத்தன் பகத். பொதுவாக, இந்தியாவின் கலாச்சாரத்தைப் பற்றி ஆங்கிலத்தில் எழுதப் படும் புத்தகங்கள்...

பங்குசந்தையை பாதிக்கும் இரண்டு முக்கிய காரணிகள்!

இந்திய பங்குசந்தையை பொருத்த வரை, இப்போதைக்கு இரண்டு முக்கிய விஷயங்கள் பங்கு வர்த்தகர்களின் மன நிலையை பாதிக்கின்றன. இந்த இரண்டு விஷயங்களில் ஏற்படும் மாற்றங்களைப் பொருத்தே நமது பங்குச்சந்தையில் பெரிய ஏற்றத்தாழ்வுகள் நிகழ்கின்றன. இந்திய பங்கு சந்தைக்குள் நுழையக் கூடிய வெளிநாட்டின் பணத்தின் அளவு மற்றும் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி அளவு ஆகிய இரண்டு காரணிகள் இப்போதைக்கு நாம் கவனிக்க வேண்டிய முக்கிய தகவல்கள் ஆகும். முதல் விஷயத்திற்கு வருவோம். இந்திய பங்கு சந்தைக்குள் அதிக வெளிநாட்டு பணம் வர வேண்டுமென்றால், உலக சந்தைகளில் ஏற்றத்தாழ்வு நிலை குறைவாக இருக்க வேண்டும். ஏனென்றால், சற்று அமைதியான சூழ்நிலையில்தான் இந்தியா போன்ற ஒரு "அதிக அபாயம் நிறைந்த பங்குச்சந்தையில்" முதலீடு செய்ய அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் முன்வரும். ஒருவேளை உலக சந்தைகளில் ஏற்றத்தாழ்வுகள் அதிகம் இருந்தால், டாலர் பணம் அமெரிக்காவிற்கே திரும்பி சென்று தஞ்சமடையும். உலக சந்தைகளின் ஏற்றத்தாழ்வு நிலை எவ்வளவு என்பதை CBOE Vix (Chicago Board Of Exchanges Volatility Indicator) இல் ஏற்படும் மாற்றங்களை பார்த்து நாம் அறிந்து கொ...

வழியில் மேடு பள்ளம்!

பங்கு சந்தையில் பல வாரங்களுக்குப் பிறகு ஒரு பெரியதொரு வீழ்ச்சி ஏற்பட்டு உள்ளது. சந்தைகளில் ஏராளமான கரன்சிகளை வாரி இறைத்து உலக நாடுகளின் அரசாங்கங்கள் கொண்டு வர விரும்பும் பொருளாதார மீட்சிப் பாதையில் ஏராளமான மேடுபள்ளங்களை சந்திக்க வேண்டியும் இருக்கலாம் என்ற கசப்பான உண்மையை சந்தைகள் புரிந்து கொண்டதே இந்த வீழ்ச்சிக்கான முக்கிய காரணம் என்று நினைக்கிறேன். இன்னும் சற்று விரிவாக இங்கே பார்ப்போம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவில் தொடங்கிய "நிதிச் சிக்கல்" பூகம்பம் பொருளாதார சுனாமியாக மாறி உலகெங்கும் ஆட்டிப் படைத்தது. இந்த சிக்கலில் இருந்து மீள "Keynes" முறையை பின்பற்றலாம் உலக நாடுகளின் அரசாங்கங்கள் முடிவெடுத்தன. அதாவது தனிநபர்கள் செலவு செய்ய தயங்கும் போது, அரசாங்கம் அதிகமாக செலவு செய்து பொருளாதாரத்தில் ஒரு கிளர்ச்சியை உருவாக்குவது. அரசாங்கம் செலவு செய்ய வேண்டுமென்றால், ஒன்று கடன் வாங்க வேண்டும் அல்லது புதியதாக நோட்டுக்களை அச்சடிக்க வேண்டும். இரண்டு வேலைகளையும் அழகாக செய்த அரசாங்கங்கள் அந்த பணத்தை கொண்டு ஏராளமான வரி மற்றும் மான்ய சலூகைகளை வழங்கின. உதாரணத்திற்கு ...

தீபாவளி கஷாயம்!

தீபாவளிக்கு ஏராளமான இனிப்புக்களை சாப்பிட்டு விட்டு பின்னர் வயிறு கெட்டுப் போய் கஷாயத்தை தேடி அலையும் கதை சந்தைக்கும் ஏற்பட்டு உள்ளது. தீபாவளி வரை அதிரடியாக முன்னேறி பல புதிய உயரங்களை தொட்ட பங்கு சந்தை சென்ற வாரம் மிகவும் தடுமாறியது. இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் சந்தைக்கு பல தருணங்களில் மீட்சியை அளித்து வந்த "முக்கிய தடுப்பரண்" (Important Trendline) சென்ற வாரத்தில் முழுமையாக உடைக்கப் பட்டு விட்டது. இந்த தடுமாற்றத்திற்கு என்ன காரணங்கள் என்று முதலில் பார்ப்போம். உலக சந்தையில் மளமளவென உயர்ந்த கச்சா எண்ணெய் விலை இந்திய ரூபாயின் மதிப்பை குறைத்து விடக் கூடிய நிலை உருவாகும் பட்சத்தில் அந்நிய முதலீடு குறையலாம் என்ற ஒரு அச்சம் சந்தையில் உருவானது. இந்த அச்சத்தை உறுதிப் படுத்தும் வகையில், ருபாய் வீழ்ச்சியின் தொடர்ச்சியாக அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் நீண்ட காலத்திற்கு பிறகு இந்திய சந்தையில் பங்குகளை விற்றன. வங்கிகள் கடன் வழங்கும் அடிப்படை வட்டி வீதத்தில் சில மாற்றங்களை மத்திய வங்கி கொண்டு வர விருப்பம் தெரிவித்தது, வங்கிகளின் சுதந்திரத்தை ஒருவகையில் பாதிக்கும் என்ற அச்சத்தை சந்தையில் உ...

தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

இந்த தீபாவளி அனைவரது வாழ்விலும் தீப ஒளி ஏற்றட்டும்! நம்மைச் சுற்றி உள்ள இருள் விலகட்டும்! உலகெங்கும் ஆனந்த ஒளி பரவட்டும்! அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

வாண வேடிக்கையா? வெறும் புஸ்வாணமா?

பெரிதாக வெடிக்கப் போகிறது அல்லது வண்ண மயமான ஒளிச்சிதறல்கள் பூக்கப் போகின்றன என்றெல்லாம் பெரிதாக நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போது, சில பட்டாசுகள் புஸ்வாணமாக போவதுமுண்டு. தீபாவளி தினத்தன்று நமக்கெல்லாம் சில சமயங்களில் ஏற்பட்டு விடும் இது போன்ற ஒரு அனுபவம் சென்ற வாரம் பங்குசந்தையிலும் ஏற்பட்டது. சென்ற வாரம் நம்மை ஏமாற்றிய புஸ்வாணங்களைப் பற்றி முதலில் பார்ப்போம். முதல் புஸ்வானம் - பாரதி ஏர்டெல் தென் ஆப்பிரிக்க தொலைபேசி நிறுவனமான எம்டிஎன்-னுடான இணைப்பு இல்லையென்றவுடன் முதலில் துள்ளிக் குதித்த பாரதி பங்கு, வெகு சீக்கிரத்திலேயே ஆடி அடங்கி விட்டது. எம்டிஎன்னுடன் இணையாததால் சில அபாயங்கள் நீங்குகின்றன என்று அந்த பங்கினை அதிக விலையில் வாங்கி வைத்து ஆசையுடன் காத்திருந்த பலருக்கு பாரதி ஒரு பெரிய புஸ்வாணமாகவே அமைந்தது. இரண்டாவது புஸ்வானம் - ரிலையன்ஸ் பத்து ஆண்டுகளுக்கு பின்னர் ரிலையன்ஸ் நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு போனஸ் பங்கு கொடுப்பதாக அறிவித்தது. இந்தியாவின் 'நம்பர்-ஒன்' வணிகத் தாளான எகோநோமிக் டைம்ஸ் பத்திரிக்கை, தீபாவளி வாணவேடிக்கை ஆரம்பித்து விட்டதாக முதல் பக்கத்தில் தலைப்ப...

தீபாவளியும் தங்க விதியும்!

பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் தீபாவளியை முன்னிட்டு ஒரு பணிவான கோரிக்கை. 80-20 என்ற தங்க விதியை (The Pareto principle , also known as the 80-20 rule , the law of the vital few, and the principle of factor sparsity) பற்றி பலரும் கேள்விபட்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன். கேள்விபடாதவர்களுக்காக இங்கே ஒரு சிறிய விளக்கம். எண்பது சதவீத விளைவுகள் இருபது சதவீத காரணங்களாலேயே வருகின்றது என்ற இந்த வணிக தத்துவம் பரேடோ என்ற பொருளாதார நிபுணர், 1906 இல் இத்தாலியின் மொத்த நிலப் பரப்பில் எண்பது சதவீத நிலம் இருபது சதவீதத்தினரிடம்தான் உள்ளது என்று கணித்ததின் அடிப்படையில் உருவானது. பரேடோ விதி என்று அழைக்கப் படும் இந்த விதி பல கணித முறைகளிலும் வணிக தத்துவங்களிலும் உதவுகிறது. அதாவது ஒரு நிறுவனத்தின் எண்பது சதவீத விற்பனை இருபது சதவீத வாடிக்கையாளர்களிடம் இருந்துதான் வருகின்றது. ஒருவரது முதலீட்டின் எண்பது சதவீத வருமானம் அவரது இருபது சதவீத பங்குகளில் இருந்துதான் வருகின்றது. சமீபத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனம் கூட இருபது சதவீத முக்கிய பிரச்சினைகள்தான் ஒரு கணினியின் செயல் இழப்புக்கான எண்பது சதவீத காரணங்களாக இருக்கி...

நேற்றொரு தோற்றம் - இன்றொரு மாற்றம்.

நேற்று நாம் பார்த்த சூரியனும் இன்று பார்க்கும் சூரியனும் ஒன்றேதானா என்ற கேள்விக்கு உங்கள் விடை என்னவாக இருக்கும்? ஒன்றுதான் என்று விடை சொல்லும் அதே உறுதியுடன் ஒன்றில்லை வேறு வேறு என்றும் சொல்ல முடியும். ஒவ்வொரு நிமிடமும் அணு சேர்க்கைகளும் அணு பிளவுகளும் தனது நிலப்பரப்பில் நடத்திக் கொண்டிருக்கும் சூரியன் ஒவ்வொரு நிமிடமும் தனது நிலையில் இருந்து மாறிக் கொண்டேதான் இருக்கின்றது. எனவே நேற்றொரு தோற்றம் இன்றொரு மாற்றம் என்ற பாடல் வரிகள் சூரியனுக்கும் பொருந்தும். கங்கை நதியோ காவேரியோ, நதிகள் அவைகளேதான் என்றாலும் நேற்றிருந்த நீர் இன்றிருப்பதில்லை. மாற்றம் மட்டுமே நிரந்தரம் என்ற இந்த அறிவியல் சித்தாந்தம் பொருளாதாரத்திற்கும் வெகுவாகவே பொருந்தும். ஒவ்வொரு நாளும் புதிய நிறங்களை வெளிக்காட்டும் உலக பொருளாதார நிலை பற்றி இங்கு பார்ப்போம். உலகெங்கும் உள்ள அமெரிக்கா உள்ளிட்ட பல அரசாங்கங்கள், சென்ற ஆண்டு துவங்கிய பொருளாதார மந்த நிலையை போக்குவதற்காக ("Trickling Down Economics" எனும் முறையில்) சந்தையில் பெரிய அளவில் பணத்தை இறக்கி விட்டன. பெரிய பணக்காரர்களுக்கு (அல்லது தொழில் நிறுவனங்களுக்கு) அரசா...

உன்னை போலவே வேற ஒருத்தன்!

செய்யிரதத்தான் நாங்க சொல்லுவோமில்லே? அதுவும் டயட்டிலே இருக்காம். டைம்தானே முக்கியம்? வயித்துக்குள்ளேயே போனாலும் வழி முக்கியமில்லையா? இதத்தான் 'சீக்கிரம் கணக்க முடி'க்கறதுன்னு சொல்றாங்களா? சாரி! டாங் கொஞ்சம் ஸ்லிப்பாயிடுச்சு! உன்னை போலவே வேற ஒருத்தன் கூட இப்படித்தான் முடியாதுன்னு சொன்னான்! நன்றி!

பங்குச்சந்தை வெற்றிப்பயணம் - காளை-கரடி மனநிலைகள்

ஒரு பங்கினை ஒருவர் வாங்க அல்லது விற்க விரும்புவதற்கான காரணங்களின் அடிப்படையிலேயே சந்தையின் போக்கினை அறிந்து கொள்ள முடியும். காளை ஓட்டத்திற்கு (Bull Run) ஐந்து நிலைகளும், கரடி ஓட்டத்திற்கு (Bear Run) மூன்று நிலைகளும் (Phases) உண்டு. இந்த ஓட்டங்களை துவக்கத்திலேயே சரியாக புரிந்து கொண்டால் சந்தையில் பெரிய அளவில் வெற்றி பெற முடியும். இந்த வெற்றி ரகசியத்தை பற்றி இங்கு விவாதிப்போம். முதல் மனநிலை நிறுவனம் சிறந்த அடிப்படைகளை கொண்டுள்ளது. பங்கின் விலை அதன் உள்மதிப்பை விட மிகவும் குறைவாக உள்ளது. ஆனால் பங்கோ தொடர்ந்து வீழ்ந்து கொண்டே இருக்கிறது அல்லது உயராமலேயே உள்ளது. இந்த பங்கினை நாம் வாங்கின பின்னரும் கூட தொடர்ந்து விலை வீழ்ச்சி ஏற்படலாம். இருந்தாலும் பரவாயில்லை, இது போன்ற ஒரு பங்கு நம்மிடம் இருக்க வேண்டும், என்றாவது ஒருநாள் இந்த பங்கு விலையேறும் என்று ஒருவர் பங்கினை வாங்க ஆசைப்பட்டால், அந்த பங்கின் அல்லது பங்கு சந்தையின் காளை ஓட்ட ஆரம்பத்திற்கு அதிக காலம் பிடிக்காது என்று அர்த்தம். இரண்டாவது மனநிலை நிறுவனம் சிறந்த அடிப்படைகளை கொண்டுள்ளது. விலையும் உயர ஆரம்பித்து விட்டது. உள்மதிப்புக்கும் விலைக...

தலைவர்கள் ஜாக்கிரதை!

இன்போசிஸ் முன்னாள் தலைவர் நந்தன் நிலகேனி அவர்கள் எழுதிய இமேஜினிங் இந்தியா என்ற புத்தகத்தில் விவரிக்கப் பட்டிருந்த ஒரு உண்மை சம்பவம், தலைவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியதின் முக்கியத்துவத்தை உணர்த்தியது. அந்த சம்பவம் இங்கே. சென்ற நூற்றாண்டின் தொண்ணுறுகளில் பொதுத் துறை வங்கி ஊழியர்கள், கணினி மயமாக்குதலை கடுமையாக எதிர்த்து வந்தது அனைவரும் அறிந்ததே. அந்த காலகட்டத்தில், கணினி மயமாக்குதல் வங்கித் துறைக்கு எந்த அளவுக்கு பயனளிக்கும் என்பதை விளக்கும் பணி நந்தன் அவர்களிடம் ஒருமுறை கொடுக்கப் பட்டிருந்தது. ஏ.டி.எம் சேவை, இணைய தள சேவை மற்றும் கிரெடிட் கார்டு சேவை போன்றவை வங்கித் துறையை இன்னும் மேலே எடுத்துச் செல்லும் என்று விளக்குவதற்காக, தன்னுடைய திறமை அனைத்தையும் செலவழித்து முன்கூட்டியே தயார் படுத்திக் கொண்ட நந்தன் அவர்களுக்கு ஆச்சரியமே காத்திருந்தது. வங்கி ஊழியர்கள் முன்னே அவரளித்த விளக்க உரைக்கு, ஊழியர்களின் தலைவர்களிடம் இருந்து கடுமையான எதிர்ப்பு இருந்தது. கணினிமயமாக்கம், வங்கித் துறைக்கு எவ்வளவு அவசியம் அல்லது லாபகரமானது என்பதை வலியுறுத்த முயன்ற அவரது ஒவ்வொரு கருத்துக்கும், வலுவான மாற்ற...

பங்குச்சந்தை வெற்றிப்பயணம் - என்னுடைய வழி எளிய வழி

இப்போது உச்ச வேகத்தில் பயணம் செய்யும் பங்குச்சந்தையில் எப்படி முதலீடு செய்வது, முதலீடு செய்த பிறகு, முன்போல அதல பாதாளத்தில் விழுந்து விட்டால் என்ன செய்வது, அதே சமயம் தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் சந்தை புதிய உயரத்திற்கு சென்று விடுகிறதே என்றெல்லாம் பலருக்கும் குழப்பங்கள் இருக்கும். இது போன்ற ஒரு சிக்கலான நிலையில் என்னுடய பாணி என்னவென்று இங்கு உரைப்பது சிலருக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன். சென்ற பதிவில் அருமை நண்பர்கள் கேட்ட கேள்விகளுக்கு நான் அளித்த பதிலையே இந்த பதிவாக வழங்குகிறேன். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் தயங்காமல் கேளுங்கள். நன்றி. //எனவே பங்குகள் வாங்குபவர்கள் இன்னும் சிறிது காலம் தாழ்த்தலாம் என் நினைக்கின்றேன், தங்கள் பதில் என்ன குரு?// ( கேட்டவர் திரு.ரஹ்மான்) இது போன்று, தவறினால் பறந்து விடும். ஆனால் மாட்டிக் கொண்டால் அதல பாதாளத்திற்கு வீழ்ந்து விடும் என்ற நிலையில் வர்த்தகம் செய்வது மிகவும் கடினமான காரியமே. எனக்கு தெரிந்த வரை இப்போதைய காளை ஓட்டம் நிற்க வேண்டுமென்றால் ஒரு மிகப் பெரிய கெட்ட செய்தி வர வேண்டும். ஒருவேளை அப்படி ஒரு செய்தி வந்து விட்டால் எந்த ஒரு ஸ்டாப்...

பங்குச்சந்தை வெற்றிபயணம் - ஒரு விளையும் பயிர்!

சென்ற வருடம் வங்கிகளுக்கெல்லாம் குறிப்பாக தனியார் வங்கிகளுக்கெல்லாம் போதாத காலமாக இருந்தது அனைவருக்கும் தெரிந்திருக்கும். கடினமான சூழ்நிலையிலும் தனது சிறப்பான செயல்பாட்டை தக்க வைத்துக் கொண்ட ஒரு வங்கியைப் பற்றி இங்கு பார்ப்போம். ஏற்கனவே சொன்னபடி ஒரு பங்கினை ஆராய்வது எப்படி என்பதை ஒரு நடைமுறை பயிற்சி மூலம் நேரடியாக புரிந்து கொள்வது, எளிமையாகவும் அதே சமயத்தில் மனதில் ஆழமாக பதியும் படி இருக்கவும் வாய்ப்புண்டு. அந்த வகையில் இந்த தொடர்பதிவில் இரண்டாவது முறையாக ( முதல் பதிவு இங்கே ) ஒரு நிறுவனத்தைப் பற்றி இங்கு ஆராய்வோம். நாம் பயிற்சிக்கு எடுத்துக் கொள்ளவிருக்கும் இந்த நிறுவனம் ஒரு வங்கி. பெயர் யெஸ் பேங்க் (Yes Bank Ltd) ஒரு நிறுவனத்தைப் பற்றி ஆராய்வதற்கு முன்னர், அந்த நிறுவனம் புவியியல் ரீதியாக அமைந்துள்ள நாட்டை (இங்கே இந்தியா) பற்றியும், சார்ந்துள்ள துறையைப் (இங்கே வங்கித்துறை) பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும். வாய்ப்புக்களையும் அபாயங்களையும் (opportunities and threats), ஆழமாக தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்றாலும் நேரமின்மை காரணமாக இங்கு சில மேலோட்டமான தகவல்களைப் பற்றி மட்டும் பார்ப்...