Skip to main content

Posts

Showing posts from February, 2009

இந்திய ரூபாயின் வீழ்ச்சி

சில மாதங்களுக்கு முன்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 40 க்கும் கீழே இருந்த நிலை மாறி, பின்னர் சில காலம் ஐம்பதிற்கு சற்று கீழேயே தடுமாறிக் கொண்டிருந்து, இப்போது, சரித்திரத்தில் இது வரை இல்லாத அளவாக 51 ரூபாய் அளவையும் தாண்டி உள்ளது. இந்த சரிவிற்கான காரணங்களையும், இதனால் இந்தியாவிற்கு ஏற்பட கூடிய பாதிப்புக்களையும், இந்த சரிவும் இன்னும் தொடருமா என்பதைப் பற்றியும் இங்கு பார்ப்போம். முதலில் ரூபாய் வீழ்ச்சிக்கான காரணங்கள்: உலகமெங்கும் பங்கு சந்தைகள் வீழ்ந்ததன் தொடர்ச்சியாக, இந்திய பங்குச்சந்தையில் வெளிநாட்டு நிறுவனங்கள் தாம் வைத்திருந்த இந்திய நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்தது. மேலும் இந்தியாவில் அந்நிய நாட்டு நிறுவனங்களின் நேரடி முதலீடுகள் குறைந்து போனது. மேற்சொன்ன காரணங்களின் விளைவாக இந்திய அந்நியச் செலவாணி கையிருப்பு பெருமளவில் குறைந்து போனது. இந்திய நிறுவனங்களால், வெளிநாடுகளில் (கடன் சந்தைகளில் நிலவி வரும் அச்சம் காரணமாக) கடன் வாங்க முடியாமல் போனது. அந்த வகையில் இந்தியாவிற்கு பணவரத்து குறைந்து போனது. அரசு மற்றும் தலைமை வங்கி, இந்த விஷயத்தில் இந்திய நிறுவனங்களுக...

கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணுங்க!

நீங்கள் கணிப்பொறி முன்பு பல மணி நேரம் தொடர்ந்து உட்காந்து முயற்சி செய்தும் தீர்க்கமுடியாத மென்பொருள் ரீதியான பிரச்சினைகள் சிறிய இடைவேளை விட்டு மீண்டும் முயற்சி செய்யும் போது, எளிதில் தீர்ந்து விடுவதை அனுபவ ரீதியாக கண்டிருப்பீர்கள். என்ன நடந்தது அந்த சிறிய இடைவெளியில்? நீங்கள் கொஞ்சம் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ரிலாக்ஸ் செய்து கொண்டது, உங்கள் மூளையை (உடலை) சுறுசுறுப்பாக்கி, மென்பொருள் பிரச்சினையை எளிதில் தீர்க்க உதவி இருக்கிறது அல்லவா? இதே போன்ற ஒரு ரிலாக்சான மனநிலை வாழ்நாள் முழுக்க தொடரும் பட்சத்தில், வாழ்கையின் பல பிரச்சினைகளுக்கும் நம்மால் எளிதில் தீர்வு காண முடியும் இல்லையா? மனதை எப்போதும் ரிலாக்சான நிலையில் வைத்துக் கொள்வதற்கு சில யோசனைகள் இங்கே. உடற்பயிற்சி; உடலுக்கும் மனதுக்கும் நெருங்கிய தொடர்பு எப்போதுமே உண்டு. வலுவான உடல் அமைப்பு மன வலிமைக்கு மிகவும் அவசியம். அது மட்டுமல்லாமல், தொடர்ச்சியான சீரான உடற்பயிற்சி மனதை இலகுவாக்குகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். ஒரு வாரத்தில் ஐந்து நாட்கள், ஒரு நாளுக்கு முப்பது நிமிடங்கள் வீதம் உடலுக்கு மிதமான பயிற்சி கொடுப்பது நல்ல...

காப்பீடு எவ்வளவு செய்யலாம்?

உலகம் இன்றிருக்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலையில், தனி மனிதனின் உயிருக்கும் குடும்பத்தின் தலைவருக்குப் பின் அந்த குடும்பத்தின் பொருளாதார பாதுகாப்பிற்கும் எந்த ஒரு உத்திரவாதமும் இல்லை என்றே தோன்றுகிறது. இந்த நிலையில் ஒவ்வொருவரும் தனக்கு பின்னர் குடும்பத்தின் சீரான வாழ்வினை ஓரளவுக்கேனும் உறுதி செய்ய எவ்வளவு காப்பீடு செய்யலாம் என்பது பற்றி இங்கு பார்ப்போம். இந்த கணக்கீடு பற்றி துல்லியமாக தெரிந்து கொள்ள காப்பீட்டு முகவரை தனிப் பட்ட முறையில் அணுகலாம் என்ற போதிலும், ஒரு குத்துமதிப்பான கணக்கீடு இங்கே வழங்கப் பட்டிருக்கிறது. முதலில் ஒருவர் தன் சம்பளத்தில் குடும்பத்திற்காக செலவு செய்யும் சராசரி மாதத் தொகையை (தனது சொந்த அனுபவத்தின் பேரில்) கண்டறிய வேண்டும். அந்தத் தொகையை பன்னிரண்டால் பெருக்க வேண்டும் (வருட செலவினத்தை கண்டறிவதற்காக). இதில் வரும் தொகையை மீண்டுமொரு முறை பதினைந்தால் பெருக்க வேண்டும். (இழப்பீட்டுத் தொகையை வங்கியில் வைப்புத் தொகையாக வைத்தால் சுமார் ஏழு சதவீத வட்டித் தொகை கிடைக்கும் என்ற மதிப்பீட்டின் படி). பிறகு, படிப்பு கல்யாணம் போன்றவற்றுக்காக ஆகக் கூடிய செலவினத் தொகையை மேற் சொன்ன வழிம...

வரி குறைப்பும் தரம் இழப்பும்

பொருளாதார மீட்பு திட்டத்தின் மூன்றாவது பகுதியாக, மத்திய அரசு மிகப் பெரிய அளவில் வரி குறைப்பு செய்துள்ளது. உற்பத்தி வரியில் (Excise Duty) இரண்டு சதவீதமும் சேவை வரியில் (Service Tax) இரண்டு சதவீதமும் குறைக்கப் பட்டுள்ளன. இந்த வரி குறைப்பால் உள்ளூர் விலைவாசிகள் ஓரளவுக்கு குறைய வாய்ப்புள்ளது என்ற போதிலும் சர்வதேச தர வரிசையில் இந்தியா மேலும் கீழிறங்கவும் வாய்ப்புள்ளது. இது பற்றி இங்கு பார்ப்போம். மேலே சொன்னபடி, மத்திய அரசின் உற்பத்தி வரி அனைத்துப் பொருட்களின் மீதும் 10 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாக குறைக்கப் பட்டுள்ளது. இதனால், டெலிவிஷன், கார், சோப் இன்னும் பல "தயாரிக்கப் பட்ட பொருட்களின்" விலை இரண்டு சதவீதம் குறையும். மிக முக்கியமாக, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) அறுபது சதவீதத்திற்கு மேல் இடம் பெற்றுள்ள சேவைப் பணிகளின் கட்டணங்களை குறைக்கும் முயற்சியாக, சேவை வரி 12 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக குறைக்கப் பட்டுள்ளது. இதனால், தொலைபேசி, மின்சார கட்டணங்கள், விமான சேவை கட்டணங்கள் ஆகியவை குறையும். இந்த வரி சலுகைகள் மூலம் ஏற்கனவே பட்ஜெட் பற்றாக்குறையில் தவித்துக் கொண்டிருக்கும் மத்தி...

சரியும் பணவீக்கமும் உயரும் விலைவாசியும் - ஏன் இந்த முரண்பாடு?

சில மாதங்களுக்கு முன்பு 13 சதவீதம் வரை உயர்ந்த பணவீக்கம் இப்போது நான்கு சதவீதத்திற்கும் கீழே வந்துள்ளது. பொதுவாக ஒரு நாட்டின் பணவீக்கம் என்பது அந்நாட்டில் எவ்வளவு விலைவாசி உயர்ந்திருக்கிறது என்பதை பிரதிபலிப்பதே ஆகும். ஆனால், இந்தியாவிலோ பணவீக்கம் நாளுக்கு நாள் குறைந்து வருவதாக அரசு வெளியிடும் தகவல்கள் தெரிவிக்கும் அதே வேளையில், நாம் அன்றாடம் உபயோகிக்கும் அரிசி முதலான மளிகைப் பொருட்கள் மற்றும் பொது சேவைக் கட்டணங்கள் எந்த வகையிலும் குறைய வில்லை என்பதுடன் வெகுவாக உயர்ந்த வண்ணமே உள்ளன. கடந்த காலாண்டு நிதி அறிக்கையில், இந்திய தலைமை வங்கியே, இந்தியாவில் மொத்த விலை பணவீக்கம் குறைந்திருந்தாலும் விலைவாசிகள் குறைய வில்லை என்று குறிப்பிட்டிருந்தது கவனிக்கத் தக்கது.ஏன் இந்த முரண்பாடு? காரணங்கள் என்ன என்று கொஞ்சம் யோசிப்போம். இந்தியாவில் அனைவராலும் அதிகம் பின்பற்றப் படும் பணவீக்க விவரம், மொத்த விலைகளின் (Wholesale Prices)போக்கை அடிப்படையாக கொண்டதாகும். அதே சமயம், மேலை நாடுகளில், நுகர்வோர் விலைவாசியின் அடிப்படையிலேயே பணவீக்கம் கணக்கிடப் படுவது குறிப்பிடத்தக்கது. இதனாலேயே, மேலை நாடுகளில், பொதுமக்களை...

சரிவின் விளிம்பில்?

சென்ற வாரம் வெளியிடப் பட்ட மத்திய அரசின் இடைக்கால நிதி அறிக்கை சந்தைகளுக்கு மிகப் பெரிய ஏமாற்றத்தையே தந்தது. பட்ஜெட்டில் பொருளாதார மீட்சி திட்டங்கள் எதுவும் இல்லாமல் போனது மற்றும் பட்ஜெட்டில் காணப் பட்ட மிக அதிக அளவிலான நிதி பற்றாக்குறை, பட்ஜெட் சலூகைகளுக்காக மிகப் பெரிய எதிர்பார்ப்புக்களுடன் காத்திருந்த சந்தைகளுக்கு அதிர்ச்சியையே தந்தது. இடையில் , தொடர்ந்து இழுத்து மூடப் பட்டு வரும் அமெரிக்க வங்கிகள் மற்றும் பொருளாதார சிக்கல் குறித்த பயங்கள் காரணமாக பல வருடங்களில் இல்லாத அளவிற்கு உலக சந்தைகள் வீழ்ந்தது போன்ற விஷயங்கள் நமது சந்தையில் ஒரு மிகப் பெரிய சரிவுக்கு வழி வகுத்தன. நம்மூர் கரன்சி தொடர்ந்து வீழ்ந்து வந்ததும் தங்கத்தின் விலை சரித்திரம் காணாத அளவிற்கு உயர்ந்ததும், பங்கு சந்தையில் ஒரு நிச்சயமற்ற நிலையை ஏற்படுத்தின. பணவீக்கம் பதின்மூன்று மாதங்களில் இல்லாத அளவிற்கு விழுந்தது, புதிய வட்டி வீதக் குறைப்பு பற்றிய ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தினாலும் சந்தைக்கு பெரிய அளவில் உபயோகமளிக்க வில்லை. அதிகரிக்கக் கூடிய வாராக் கடன்களைப் பற்றிய பயத்தில், சென்ற வாரம் வங்கித் துறையைச் சேர்ந்த பங்குகள் மிக...

ஜெய் ஹோ இந்தியா!

கடந்த எண்பது ஆண்டு கால ஆஸ்கார் சரித்திரத்தில் இரண்டு இந்தியர்கள் ஆஸ்கார் மட்டுமே விருது பெற்றுள்ளனர். ஆனால் இந்த ஒரு தடவையிலோ மூன்று இந்தியர்கள் ஆஸ்கார் விருதுகள் பெற்றுள்ளனர். கொடுக்கிற (ஆஸ்கார்) தெய்வம் இந்த முறை கூரையை பிய்த்துக் கொண்டு கொடுத்திருக்கிறது. இந்த வெற்றியின் அடிப்படை காரணத்தைப் பற்றியும் இந்திய திரையுலகத்திற்கு இந்த வெற்றியின் முக்கியத்துவத்தைப் பற்றியும் இங்கு பார்ப்போம். "Slumdog millionaire (சேரி நாய் கோடீஸ்வரன் ?)" திரைப் படம் ஒரு இந்தியப் படமா என்பதிலேயே பலமான சர்ச்சை இருந்து வருகிறது. இந்தப் படத்தில் இந்தியாவை தவறாக சித்தரித்துள்ளதாகவும் கூட (குறிப்பாக மும்பை தாராவியை சேர்ந்தவர்களால்) எதிர்ப்பு கிளம்பியது. ஆங்கிலம் பேசும் மக்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனரும் பிரிட்டனைச் சேர்ந்தவர்கள். வெளிநாட்டில் இந்தப் படம் ஓரளவுக்கு வெற்றி பெற்ற பின்னரே இந்தியாவில் மொழி பெயர்க்கப் பட்டது என்பதும் இந்தியாவில் இந்தப் படம் பெரிய தோல்வியை பெற்றதும் குறிப்பிடத் தக்கது. இன்றைக்கு உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் இரண்டு பெரிய நாடுகள் இந்தி...

மனதுகளில் ஒளிந்திருக்கும் கருங்குரங்கு - தில்லி 6 - திரை விமர்சனம்

தில்லி 6 திரைப் படம், வெளி வருவதற்கு முன்பே பலமான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது. காரணங்கள், ரங் தே பசந்தியின் இயக்குனர் (மூன்று வருடங்களுக்கு பின் வெளிக் கொணரும்) படம், திரையில் வெளிவருவதற்கு முன்பே மிகவும் பிரபலமாகிவிட்ட பாடல்கள் (ரஹ்மானின் இசை ) மற்றும் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைக் களம் (தில்லியின் ஜன நெருக்கடி மிகுந்த சாந்தினி சௌக் பகுதி). பொதுவாகவே, பெரிய எதிர்ப்பார்ப்புகளுடன் வெளிவரும் படங்கள் பெரும்பாலும் ஏமாற்றத்தையே தரும். ஆனால், இந்த படம் எதிர்பார்ப்பை ஓரளவுக்கு (ரங் தே பசந்தியை கொஞ்சம் மறந்து விட்டால்) ஈடுகட்டுவதுடன் ஒரு சிறந்த கருத்துருவும் (concept) கொண்டுள்ளது. இந்த திரைப் படத்தின் கதைச் சுருக்கம் இதோ. அமெரிக்காவில் ஒரு கலப்புத் திருமண ஜோடி (இந்து-முஸ்லீம்) குடும்பம் வாழ்கிறது. இதில் குடும்பத் தலைவரின் (இந்து) தாயாருக்கு உடல் நிலை மிகவும் மோசமாகி விடுகிறது. அமெரிக்க மருத்துவர்கள் கைவிரித்து விட, அந்த அம்மையார் தனது இறுதி நாளை இந்தியாவில் கழிக்க விரும்புகிறார். மகனுக்கு இந்தியாவிற்கு குறிப்பாக சாந்தினி சௌக் பகுதிக்கு திரும்ப விருப்பமில்லை. அப்போது, அமெரிக்காவிலேயே பிறந்து...

வெள்ளி கிழமைகளும் அமெரிக்க வங்கிகளும்

வெள்ளிக் கிழமை ராமசாமி கதை கேள்விப் பட்டிருப்பீர்கள். வெள்ளிக் கிழமைக்கும், அமெரிக்க வங்கிகளுக்கும் ஏதோ ஒத்து வருவதில்லை. என்னவென்று பார்ப்போமா? அமெரிக்காவில் வார இறுதி நாளான வெள்ளிக் கிழமை வங்கிகள் மூடப் பட்டால், திங்கட் கிழமை மீண்டும் திறக்கப் படும் என்ற உத்தரவாதம் இல்லாத நிலை இப்போது காணப் படுகிறது. கடந்த ஆறு வாரங்களாக, தொடர்ச்சியாக ஒவ்வொரு வாரமும் வெள்ளிக் கிழமையானால், அலுவலக நேரம் முடிந்தவுடன், பல அமெரிக்க வங்கிகள் அதிகாரிகளால் கையகப் படுத்தப் பட்டுள்ளன. கடந்த ஆண்டு (2008) முழுதும் அமெரிக்காவில் மூடப் பட்ட வங்கிகளின் எண்ணிக்கை 25. இந்த ஆண்டில் இன்னும் இரண்டு மாதங்கள் கூட முடிவடையாத நிலையில் மூடப் பட்டுள்ள வங்கிகளின் எண்ணிக்கை 14. இதே வேகத்தில் சென்றால் இந்த ஆண்டு மூடப் படும் அமெரிக்க வங்கிகளின் எண்ணிக்கை செஞ்சுரி அடித்து விடும் என்று பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். சென்ற ஆண்டு 25 வங்கிகள் மூடப் பட்டாலும். அவற்றில் பெரிய வங்கிகள் இரண்டு மட்டுமே.ஆனால் இந்த வருடம் பல பெரிய வங்கிகளே மூடப் படலாம் என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர். ஆக மொத்தத்தில் இந்த வருடம் (பல) வங்கிகளின் (இறு...

தவறான அணுகுமுறை

தமிழ் நாட்டில் மீண்டும் ஒரு அவலம் நிகழ்ந்தேறி உள்ளது. இந்த முறை மோதியது, போலீசாரும் வழக்கறிஞர்களும். முதலில் தவறு யார் செய்தார்கள் என்பதை விட அரசாங்கமும் போலீசும் பிரச்சினைகளை (தவறுகளை) எப்படி அணுகுகிறார்கள் எனபதைப் பொறுத்தே நல்ல தீர்வுகள் அமைகின்றன. காஷ்மீர் பிரச்சினை முதல் ஸ்ரீ லங்கா பிரச்சினை வரை சில பிரச்சினைகளின் அடிப்படையில் சிறிய அளவில் துவங்கிய மக்கள் இயக்கங்களை கண்மூடித்தனமாக அரசாங்கங்கள் (போலீஸார்) நசுக்க முற்பட்டதே, அந்த இயக்கங்கள் பெரிய அளவிலான போராட்டங்களாக மாறியதற்கு முக்கிய காரணம் ஆகும். துவக்கத்திலேயே சரியான அணுகுமுறை இருந்திருந்தால், பல பிரச்சினைகள் முளையிலேயே கிள்ளப் பட்டிருக்கும். இந்த விஷயத்தில், அரசுக்கும், போலீசாருக்கும் மிகப் பெரிய பொறுப்புக்கள் உண்டு. வழக்கறிஞர்கள் விஷயத்திற்கு வருவோம். சில வழக்கறிஞர்கள் சுப்பிரமணியம் சுவாமியை தாக்கியதை தொடர்ந்து நீதிமன்ற வளாகத்தில் வைத்து அவர்களை கைது செய்ய போலீஸார் முயன்ற போது, வழக்கறிஞர்கள் தடுத்ததால் (அல்லது தாக்கியதால்), அவர்களை திருப்பி தாக்க நேர்ந்ததாக போலீஸ் தரப்பில் கூறப் படுகிறது. என்னுடைய சில சந்தேகங்கள்: குறிப்பிட்ட...

கடவுளும் இப்போது விரக்தியில்!

இன்றைக்கு உலகம் இருக்கும் நிலை இதைப் படைத்த இறைவனையே கூட விரக்தி நிலைக்கு கொண்டு சென்று விடும். அவருடைய சிந்தனை இப்போது எப்படி இருக்கும் என்று ஒரு கற்பனை. "ஒரு உயிரைக் கூட கொல்லாதே என்று அஹிம்சை வழியை போதனை செய்த என்னுடைய தூதரின் வழியைப் பின்பற்றுவதாக சொல்லிக் கொண்டு சிலர் இன்றைக்கு ஒரு இனத்தையே அழித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒருவருக்கொருவர் காட்டும் அன்பேதான் நான் என்பதை உலகிற்கு உணர்த்துவதற்காக எனக்கு வழங்கப் பட்ட பெயரை தமது கட்சியின் பெயராக வைத்துக் கொண்டு சிலர் ஒரே நாட்டில் கூடவே வாழும் மக்களை (மற்ற பகுதியைச் சேர்ந்தவர்களை) துன்புறுத்தி அடித்து விரட்டுகிறார்கள். எளிய விலங்கினமான அணிலிடமும் கூட அன்பு காட்ட வேண்டும் என்று உலகிற்கு உணர்த்திய என்னுடைய பெயரை அமைப்பின் பெயராக வைத்துக் கொண்டு சிலர் வன்முறையில் இறங்கி பெண்களையும் கூட தாக்குகிறார்கள். "ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை காட்டுங்கள்" என்று சொன்ன எனது தூதரின் கொள்கைகளைப் பின்பற்றுவதாக சொல்லிக் கொண்டு சிலர் , இன்றைக்கு ஒரு கன்னத்தில் அடித்தால் கழுத்தையே வெட்டி எறிகிறார்கள். பிற மதத்தவரிடமும் அன்பு காட்டு...

தங்கம் ஜொலிக்குமா?

சில காலம் முன் வரை எல்லாமே சரியாகத்தான் இருந்தது. விண்ணை முட்டும் பங்கு சந்தைகள், வருவாயில் கொழித்த வணிக நிறுவனங்கள், சம்பளத்திற்கு மேல் போனஸ்கள் பெற்ற தொழிலாளிகள் என்று பொருளாதாரத்தின் ஒவ்வொரு பக்கமும் செழிப்பில் இருந்தது. ஆனால், ஒரு வருடத்தில் நிலைமை தலைகீழ் ஆகி, பல விஷயங்கள் மண்ணோடு மண்ணாகி, இன்றைய தேதியில் மின்னுவது பொன் மட்டுமே. இந்த நிலை தொடருமா என்றும் தங்கத்தில் இப்போது முதலீடு செய்யலாமா என்று இங்கு பார்க்கலாம். முதலில் தங்கத்துக்கே உரிய அரிய குணாதிசியங்களைப் பற்றி பார்ப்போம். தங்கம் வசீகர குணங்கள் கொண்ட ஒரு அரிய வகை உலோகம். இதன் மீது மனிதனுக்கு எப்போதுமே ஒரு தனி ஈடுபாடு இருந்திருக்கிறது. இதன் காரணமாகவே, மனிதரின் வரலாறு தொடங்கிய காலத்திலிருந்தே தங்கத்திற்கு என்று ஒரு தனி மதிப்பு இருந்து வந்திருக்கிறது. காகித கரன்சி அறிமுகப் படுத்தப் படுவதற்கு முன்பு பல ஆயிரம் ஆண்டுகள் வரை தங்கமே வணிகத்திற்கான ஒரு நாணயமாக பயன் படுத்தப் பட்டு வந்திருக்கிறது. தங்கத்திற்காகவே பல படையெடுப்புக்கள் கூட நடந்திருக்கின்றன. இந்திய வரலாற்றின் முதல் அன்னியப் படையெடுப்பாகக் கருதப் படும், அலெக்சாண்டர் கூட இந...

அஜ்மல் கசாப் மீதான பாகிஸ்தானின் குற்றப்பத்திரிக்கை எப்படி இருக்கும்?

மும்பை தாக்குதலின் போது பிடிபட்ட பயங்கரவாதி அஜ்மல் கசாப் மீது குற்றப் பத்திரிக்கை பாகிஸ்தானிய நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் படும் என்று சமீபத்தில் அந்நாட்டு அரசு அறிவித்தது. அந்த குற்றப் பத்திரிக்கை மற்றும் அஜ்மலை பாகிஸ்தானிடம் ஒப்படைக்க இந்திய அரசிடம் கோரும் விண்ணப்பம் எப்படி இருக்கும் என்பது பற்றிய ஒரு கற்பனை. "அஜ்மல் கசாப் ஆகிய உங்கள் மீது சாட்டப் பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்கள் கீழே. குற்றச்சாட்டு எண் 1 தலிபான் தீவிரவாத சட்டம், இந்தியத் தாக்குதல் பிரிவின் கீழ் , சம்பவம் நடந்த அன்று, கடமையை சரிவரச் செய்யத் தவறியது, கொலை கணக்கு குறைந்து போனது, கொடுத்த வேலையை சரியாக செய்யாமல், குண்டுக் காயம் பட்டுக் கொண்டு, அதன் காரணமாக கூட்டாளி தாக்கப் பட்ட போது உதவி செய்ய முடியாமல் போனது, இந்திய போலீசிடம் மாட்டிக் கொண்டது போன்ற குற்றங்களுக்காக உங்கள் மீது கடமை தவறியவர் என்ற கடுமையான குற்றச் சாட்டு பதிவு செய்யப் பட்டுள்ளது. குற்றச்சாட்டு எண் 2 லஸ்கர்-தோய்பா பயங்கரவாத சட்டம், ஐ.எஸ்.ஐ, திட்டம் தீட்டும் பிரிவின் கீழ் , இந்தியப் போலீசிடம் மற்றும் மேலை நாட்டு புலனாய்வு அதிகாரிகளிடம் தான் ஒரு பாகி...

மக்களின் மீது மறைமுக வரி விதிப்பு ?

பொருளாதார தேக்கத்திலிருந்து இந்தியா மீள்வதற்காக வரிச் சலுகைகள், வரி விலக்குகள், வரி குறைப்புகள், வரி தள்ளுபடிகள், வரி விடுமுறைகள் என்றெல்லாம் வாரி வழங்கப் படும் என்று ஆவலுடன் எதிர்பார்த்த பொது மக்கள், பொருளாதார நிபுணர்கள், தொழிற் துறையினர் ஆகியோருக்கு மத்திய அரசு அளித்த அதிர்ச்சி வைத்தியம் இந்த "மறைமுக வரி விதிப்பு". இது குறித்து சற்று விரிவாகப் பார்ப்போம். (Courtesy:econjournal.com) ஒரு நாட்டின் அரசின் வரவு செலவில் ஏற்படும் "துண்டு" இறுதியாக அந்த நாட்டின் மக்களின் மீதுதான் மறைமுகமாக சாத்தப் படுகிறது. இந்த "துண்டிற்கு" வெவ்வேறு வடிவங்கள் உண்டு. ஒரு அரசு தனது செலவிற்கு போதிய பணம் கிடைக்காமல் போகும் பட்சத்தில் கடைசியாக கை வைக்கும் இடம் மக்களின் (முக்கியமாக நடுத் தர, எளிய மக்களின்) "பாக்கெட்". காலபோக்கில் மக்களின் உபயோகப் பொருட்களின் மீது அதிகரிக்கப் படும் நேரடி மற்றும் மறைமுக வரிகள், போக்குவரத்து, குடிநீர் போன்ற அரசு நிறுவனங்களின் சேவை கட்டணங்கள் அதிகரிப்பு என்று அரசு தனது நிதிப் பற்றாக்குறையைத் தீர்க்க மக்களிடமிருந்தே பணம் "வசூல்" செய்ய...

பிரச்சினைகளும் தீர்வுகளும்

நம்மில் பலரும் பலவிதமான பிரச்சினைகளை அன்றாட வாழ்வில் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். சமயங்களில், சில பிரச்சினைகளுக்கு எப்படி தீர்வு காண்பது என்று விழி பிதுங்கிப் போகிறோம். ஒரு பிரச்சினைக்கு எப்படி தீர்வு காண்பது என்பது பற்றி ஒரு நடைமுறை அனுபவக் கட்டுரை படித்தேன். அது தமிழில் இங்கே. சில உண்மை பிரச்சினைகளும் அவற்றை தீர்ப்பதற்கு முன்வைக்கப் பட்ட தீர்வுகளும் இங்கே. முதல் பிரச்சினை: பல ஆண்டுகளுக்கு முன்னர், விண்ணில் மனிதன் கால் பதித்த போது எழுந்த பிரச்சினை இது. அதாவது, வான்வெளியில் புவி ஈர்ப்பு விசை (Gravity) என்று ஒன்று இல்லாததால், பேனாவை உபயோகப் படுத்தி எழுத முடிய வில்லை. தீர்வு ஒன்று: நாசா விஞ்ஞானிகள் இதற்காக சுமார் பத்து ஆண்டுகள் தீவிரமான ஆராய்ச்சி செய்து, புவி ஈர்ப்பு விசை இல்லாத இடத்தில் கூட எழுதக் கூடிய பேனா ஒன்றை கண்டுப் பிடித்தனர். இந்த ஆராய்ச்சிக்கு ஆன செலவு சுமார் அறுபது கோடி ரூபாய். தீர்வு இரண்டு: ரஷ்ய விண்வெளி பயணிகள், வான்வெளியில் பேனாவிற்கு பதிலாக பென்சில் உதவி கொண்டு எழுத ஆரம்பித்தனர். இரண்டாவது பிரச்சினை: ஒருமுறை ஜப்பானிய சோப் நிறுவனம் விற்பனை செய்த சோப் உறைக்குள் சோப் கட்ட...

காளையும் கரடியும் சந்தித்தால்?

வருகின்ற வாரம், காளைக்கும் கரடிக்கும் ஏற்படவுள்ள மோதல் ஆக்ரோஷமானதாகவும் பரபரப்பானதாகவும் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது. இப்போதைக்கு காளையின் கை சற்று ஓங்கியிருப்பது போல் தோன்றினாலும், கரடி தனது முழு பலத்தையும் அடுத்த வாரம் காட்டும் என்றே கருதப் படுகிறது. வரப் போகிற இடைக்கால மத்திய பட்ஜெட்டில் சந்தைகளுக்கு உற்சாகமூட்டும் வகையில் புதிய வரி விலக்குகளும், தொழிற் துறைக்கான சில சலுகைகளும் இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் கடந்த வாரம் சந்தைகள் நல்ல முன்னேற்றம் கண்டன. சட்டென்று குறைந்த பணவீக்கமும், மேலும் வட்டி வீத குறைப்புகள் இருக்கும் என்ற புதிய நம்பிக்கையை உருவாக்கியதும் சென்ற வார முன்னேற்றத்திற்கு ஒரு முக்கிய காரணம். உலக சந்தைகள் பலவும் (முக்கியமாக அமெரிக்கா சந்தைகள்) சரிந்த நிலையிலும் நமது சந்தைகள் மேலே சென்றதும், F&O பிரிவில் அதிகமான திறந்தநிலை ஆர்வம் (Open Interest) ஏற்பட்டிருப்பதும் கவனிக்க வேண்டியவை. தொழிற்துறை உற்பத்தி சரிவைக் கண்டு (-2.00%) உள்ளூர் நிலைமை திருப்தி இல்லாத நிலையிலும் கூட நாம் சென்ற வாரம் குறிப்பிட்டது போல நிபிட்டி 2900 புள்ளிகளை விட்டு அதிகம் விலகாமல் ...

ஆதலினால் காதல் செய்வோம்

வாலண்டைன் பிறப்பதற்கு முன்பு யாருமே இந்தியாவில் காதல் செய்யவில்லை. அவர்தான் இந்தியாவிற்கு காதலை அறிமுகம் செய்தார். எனவே அவர் காதலுக்காக உயிர் நீத்த நன்னாளில் காதல் செய்யா விட்டால் இந்தியாவில் காதல் மரித்து விடும் என்பது போல ஒரு கோஷ்டி சுற்றி கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம், காதலர் தினத்தை தடுத்து விட்டால் இந்தியாவின் அத்தனை பண்பாட்டு பிரச்சினைகளும் தீர்ந்து விடும் என்பது போல இன்னொரு கோஷ்டி சுற்றி கொண்டிருக்கிறது. இவர்களுக்கிடையே ஊடக வியாபாரிகள் "சந்திலே சிந்து" பாடிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா என்று எனக்கு தெரிய வில்லை. ஒருவனுக்கு ஒருத்தி என்ற உயர்ந்த தத்துவத்தை உணர்த்துவதற்காக ராமாயணம் என்ற காவியம் எழுதப் பட்ட இதே பூமியில்தான் காமசூத்ரா எனும் காதல் இலக்கணமும் இயற்றப் பட்டது. அரசியல், பொருளாதாரம், மேலாண்மை, சமூகவியல் என்று உலகின் அத்தனை தத்துவங்களையும் உள்ளடக்கிய திருக்குறளிலேயே காதலுக்கு என்று ஒரு பகுதியும் ஒதுக்கப் பட்டது. காதலும் வீரமுமாக வாழ்ந்த பண்டைய தமிழர் அகநானூறு என்றும் புறநானூறு என்றும் தனித்தனியே வைத்திருந்தனர். எல்லாவற்றுக்கும் மேலாக ...

இந்தியா தாக்குப் பிடிக்குமா?

இன்றைய உலகப் பொருளாதாரத் தேக்க நிலையில், இந்தியாவால் தாக்குப் பிடிக்க முடியுமா என்பது பற்றி பார்ப்போம். சமீபத்தில் வெளியிடப் பட்ட மத்திய புள்ளியல் (மத்திய அரசு) நிறுவனத்தின் மதிப்பீட்டின் படி இந்தியப் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 7.1 சதவீதம் வளர்ச்சியுறும் என்று தெரிகிறது. இது சரியாக இருக்கும் பட்சத்தில் உலகிலேயே இரண்டாவதாக வேகமாக வளர்ச்சியுறும் நாடு இந்தியாவாகத்தான் இருக்கும் (சீனா முதலாவது). சென்ற ஆண்டில் ஒன்பது சதவீதம் வளர்ச்சி பெற்றிருந்த இந்தியப் பொருளாதாரம் செப்டம்பர் 2008 வரையிலான முதல் அரையாண்டில் 7.80% வளர்ச்சிப் பெற்றிருந்தது. பொதுவாகவே பண்டிகைக் காலமாக கருதப் படுகிற இரண்டாவது அரையாண்டே தொழிற் துறையில் அதிக வளர்ச்சியைக் காட்டும் என்றாலும் இந்த முறை இந்தியத் தொழில் துறை பெரும் தேக்க நிலையில் இருந்து வந்திருக்கிறது என்பது கவனிக்கத் தக்கது. இந்திய தொழிற் வளர்ச்சி கடந்த இரு மாதங்களாக மிகவும் குறைந்து காணப் படுவதாலும் ஏற்றுமதியோ இறங்குமுகத்தில் இருப்பதாலும் இந்திய அரசாங்கம், மார்ச் 2009 வரையிலான நிதி ஆண்டின் இரண்டாவது அரையாண்டில் நமது பொருளாதாரம் குறைந்த வளர்ச்சியே (6.30%) இரு...

உடல்நிலை சரியில்லையா? வோட்கா மற்றும் பீர் சாப்பிடுங்கள்!

என்னடா! இது ஏதோ கேரளாவில் உள்ள ஒரு ஆரிய வைத்தியசாலையில் நடைபெறும் ராஜ வைத்தியம் போல தெரிகிறதே என்று பார்க்கிறீர்களா? இந்த வைத்தியம், மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு தீவிரவாதிக்கு நடைபெறும் சிறைச்சாலை வைத்தியம். சற்று விரிவாக பார்ப்போம். பாகிஸ்தானில் அச்சடிக்கப் படும் இந்திய கரன்சிகளை இந்தியாவில் புழக்கத்தில் விடும் மோசடி கும்பலின் முக்கிய புள்ளி மொஹம்மட் ரஷித் குஞ்சு. இவன் கடந்த வருடம் டிசம்பர் 14 ஆம் தேதி மகாராஷ்டிரா போலீசாரால் கைது செய்யப் பட்டு ராய்காட் சிறைச்சாலையில் அடைக்கப் பட்டான். ஆனால், உடல்நிலை சரியில்லை என்று அவன் தெரிவித்ததை அடுத்து ஜனவரி 30 ஆம் தேதி முதலில் ஒரு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு அதே நாளில் ஒரு தனியார் மருத்துவமனையிலும் சேர்க்கப் பட்டான். அறைக்கு வெளியே இருபத்து நான்கு மணி நேர போலீஸ் காவல். உள்ளேயோ அவனுக்கு ராஜ உபசாரம். தினமும் அவனது மனைவி மற்றும் மகன் அவனை வந்து பார்த்து செல்வதோடு பீர், வோட்கா மற்றும் சிகரெட் போன்றவற்றையும் சப்ளை செய்து வந்தனர். இப்படி ராஜபோகமாக வாழ்ந்தவனின் சந்தோசத்திற்கு வேட்டு (இடைவேளை மட்டுமே?) அவனுடைய இரண்டு கூட்டாளிகள் மூலம் வந்தது....

சில்லறை வணிக நிறுவனங்கள் இப்போது சிக்கலில்?

அமெரிக்காவில் வால்மார்ட் நிறுவனம் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து இந்தியாவிலும் பல சங்கிலித் தொடர் சில்லறை வணிக நிறுவனங்கள் உருவாகின. ரிலையன்ஸ், பாரதி, டாட்டா என பெரிய தொழில் குழுமங்கள் கூட இநத தொழிலில் ஆர்வம் காட்டினாலும், பிக் பஜார் (பேண்டலூன் குழுமம்), ஸ்பென்செர் (ஆர்.பி.ஜி குழுமம்) போன்ற சில வணிக நிறுவனங்களே அவற்றில் குறிப்பிடத் தக்க வெற்றியைப் பெற்றவை. கடந்த சில வருடங்களில் இந்தியாவில் ஏற்பட்ட அசுர பொருளாதார வளர்ச்சியின் போதே பெருமளவு லாபம் சம்பாதிக்க முடியாத இநத துறையைச் சார்ந்த நிறுவனங்கள் இப்போதைய தளர்ச்சிக் காலத்தில் தடுமாறி வருகின்றன. இந்த சிக்கலான நிலைக்கு காரணங்கள் யாவை என்று இப்போது பார்ப்போம். முதல் காரணம், இப்போது நேரிட்டுள்ள பொருளாதார தளர்ச்சியின் காரணமாக நுகர்வோரின் வாங்கும் திறன் பெருமளவு குறைந்து போனது. அத்தியாவசியப் பொருட்களின் விலையை (தள்ளுபடி என்ற பெயரில்) சற்று குறைத்து, பல அத்தியாவசியமற்ற கவர்ச்சிப் பொருட்களை (பொருந்தாத விலையில்) மக்களின் தலையில் கட்டும் சில்லறை வணிக நிறுவனங்களின் வியாபாரத் தந்திரம் இன்றைய சூழ்நிலையில் பெருமளவில் பலிக்காமல் போகிறது. காரணம், பொருளாத...

எல்லை தாண்டுமா?

எதிர்பார்த்ததை விட மோசமாக அமெரிக்க பொருளாதாரம் வீழ்ந்திருப்பதாக முந்தைய வார இறுதியில் வெளியிடப் பட்ட தகவலின் அடிப்படையில் நமது சந்தைகள் சென்ற வாரத்தை ஒரு பெரிய சரிவுடனேயே துவங்கின. பெரும்பாலான காலாண்டு நிதி அறிக்கைகள் வெளி வந்து விட்ட நிலையில் சந்தையின் போக்கை நிர்ணயிக்கக் கூடிய புதிய காரணிகள் பெருமளவில் இல்லாத காரணத்தாலும், குறுகிய கால நோக்கில் சந்தையின் போக்கு குறித்து வணிகர்களிடையே நிலவி வரும் சந்தேகங்களினாலும் சென்ற வாரம் நமது பங்கு சந்தையில் வர்த்தகம் மிகவும் குறைந்தே காணப் பட்டது. முந்தைய வாரத்தில் ஏற்பட்ட முன்னேற்றத்தின் காரணமாக நன்கு உயர்ந்திருந்த பங்குகள் கடந்த வாரத்தில் லாப நோக்குடன் விற்பனை செய்யப் பட்டன. வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய சந்தையில் தமது பங்குகளை (குறைந்த அளவில்) விற்றன. இனி, இந்திய தலைமை வங்கி வட்டி வீதங்களை குறைக்காது என்ற சந்தை யூகங்களின் அடிப்படையில் ரியல் எஸ்டேட், வங்கி, வாகனம், இயந்திர உற்பத்தி துறைகளை சார்ந்த பங்குகள் வீழ்ச்சியை சந்தித்தன.டி.எல்.எப் நிறுவனத்தின் மோசமான காலாண்டு நிதி அறிக்கையும், ரியல் எஸ்டேட் பங்குகளின் வீழ்ச்சிக்கு ஒரு முக்கிய காரணம். சி...

எப்படி இருந்த நாம் இப்படி ஆயிட்டோம்?

ஒரு தாமதித்த மாலை நேரத்தில், இன்னும் எவ்வளவு நேரம் அலுவலகத்தில் இருந்தாலும், வேலை முடியாது என்று ஒரு தெளிவு பிறந்து, சரி வீட்டிற்கு கிளம்பலாம் என்று முடிவு எடுத்தப் பிறகு, அலுவலக இருக்கையை விட்டு எழுவதற்கு முன்னர் இடைப் பட்ட ஒரு சோம்பல் முறிக்கிற நேரத்தில் பிறந்த ஒரு சிந்தனை இது. "எப்படி இருந்த நாம் இப்படி ஆயிட்டோம்? " வெட்டேத்தியாக இருந்த நிலையில் இருந்து மாறி இப்போது ஒரு பொறுப்பான உத்யோகத்தில் அமர்ந்துள்ளோம். அபூர்வமாக பாக்கெட் மணி கொடுக்கும் அப்பா தந்த ஒரு பத்து ரூபாய் நோட்டை பத்திரமாக ஒரு பழைய பர்சில் வைத்து மகிழ்ந்த நம்மால், இன்று பர்ஸ் முழுக்க நோட்டுக்கள், கிரெடிட், டெபிட் கார்டுகள் எல்லாம் இருந்தும் சந்தோஷம் பெற முடிய வில்லையே? அன்றைய ஒரு நூறு ரூபாய் (கல்லூரியில் திருப்பித் தந்த டெபாசிட் பணம்) தந்த மகிழ்ச்சியை விட இன்றைய பல ஆயிரம் சம்பளம் குறைவான மகிழ்ச்சியையே தருகிறதே, ஏன்? தினத்தந்தி பேப்பரின் உதவியுடன் பஜ்ஜியில் உள்ள எண்ணெயை பிழிந்தெடுத்து பின்னர் அதனுடன் கலந்து அடிக்கும் ஒரு நாயர் கடை டீ தரும் திருப்தியை இன்றைய பிஸ்ஸா, பர்ஜர் போன்ற மேற்கத்திய உணவுகள் தருவதில்லையே?...

காதலர்களுக்கு ஒரு எச்சரிக்கை!

காதலர் தினம் சீக்கிரம் வரட்டும். நமது காதலியை (காதலனை) ஒரு அசத்து அசத்தி விட வேண்டும் என்று காத்துக் கிடக்கும் காதல் கண்மணிகளே! உங்களுக்கு ஒரு எச்சரிக்கை. ஒரு காலத்தில் காதலுக்காக உயிர்துறந்த ஒரு சாமியாரின் (?) நினைவாக ஒவ்வொரு வருடமும் காதலர் தினம் பிப்ரவரி 14 ஆம் தேதி உலகெங்கும் கொண்டாடப் படுகிறது. இந்தியாவிலும் மேற்கத்திய வியாபாரிகளால் புகுத்தப் பட்ட இந்த கொண்டாட்டத்திற்கு நமது உள்ளூர் கலாச்சார காவலர்கள் எப்போதுமே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது வரை சிவன் (சிவ சேனா) பேரை சொல்லி எதிர்ப்பு வந்து கொண்டிருந்தது. இப்போது சிவனுக்கு போட்டியாக ராமரும் (ராம சேனே) கிளம்பி விட்டார். (வருங்காலத்தில் அனுமாரும் கிளம்புவாரோ?) "என்ன செய்து விடுவார்கள் இவர்கள்? மிஞ்சிப் போனால், உருட்டுக் கட்டையால் அடிப்பார்கள், கற்களை வீசுவார்கள். அவ்வளவுதானே? அடிகளையும் தாண்டி புனிதமானது எங்கள் காதல்" என்றெல்லாம் வசனம் பேசும் நண்பர்களே! இதுவரை கலாச்சார காவலர்கள் தந்த இது போன்ற தண்டனைகள் எல்லாவற்றையும் விட கடுமையான ஒரு தண்டனையை தர இப்போது ஸ்ரீ ராம சேனே தலைவர் முடிவெடுத்துள்ளார். அதாவது, காதலர் தினத்த...

மென்பொருள் நிறுவனங்களின் இப்போதைய நிலை - ஒரு நீதிக் கதை.

ஒரு மாவட்டத்தில் அடிக்கடி திருட்டுப் போய் கொண்டிருந்தது. அந்த மாவட்டத்தில் குறைந்த அளவு போலீசார் இருந்ததால், போலீஸ் தலைவர், மாவட்டத்திலுள்ள ஊர் தலைவர்களை அழைத்து ஒரு கூட்டம் நடத்தி, அந்தந்த ஊரில் உள்ளூர் ஊர்காவல் படையை அமைக்கும் படி கேட்டுக் கொண்டார். அதன் அடிப்படையில் அந்த ஊர் பஞ்சாயத்தார் ஊர் காவலர்களாக ஐந்து பேரை நியமித்தனர். சில நாள் கழிந்தது. நிர்வாக மேலாண்மை படித்த ஒரு புத்திசாலியின் யோசனையின் படி காவலர்கள் எந்தெந்த பகுதிகளில் எந்தெந்த நேரங்களில் காவல் காக்க வேண்டும் என்று அறிவுரை செய்வதற்காக ஒரு திட்டப் பிரிவு (Planning Department) அமைக்கப் பட்டது. அந்த குழுவில் பணி செய்வதற்காக இரண்டு பேர் (Developers) அமர்த்தப் பட்டனர். மேலும் சில நாள் கழிந்தது. இந்த காவலாளிகள் சரியான நேரத்தில் பணிக்கு வருகிறார்களா என்றும் சரியான நேரத்தில் பணியை முடிக்கிறார்களா என்று கவனிப்பதற்காக ஒரு டைம் கீப்பர் பணியமர்த்தப் பட்டார். உள்ளூர் காவலர்களுக்கு காவல் பணியில் பயிற்சி அளிக்க ஒரு ஓய்வு பெற்ற போலீஸ் (Domain Expert) நியமிக்கப் பட்டார். பின்னர், இவர்களின் பணிகளைப் பற்றி உள்ளூர் தலைகளுக்கும் மாவட்ட போலீ...

இருக்க இடம் கொடுத்தால்?

ஊர்பக்கம் ஏதோ சொல்வார்கள். இருக்க இடம் கொடுத்தால் படுக்க மடம் கேட்பார்கள் என்று. அது போல, சத்யம் நிறுவனத்திலிருந்து சுமார் 8000 கோடி ரூபாய் கொள்ளையடித்து போதாது என்று அந்த நிறுவனத்திலிருந்து மேலும் 1200 கோடி ரூபாய் கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளனர் ராஜுவின் உறவினர்கள். சத்யம் நிறுவனத்தின் கணக்கு வழக்கில் அதன் முன்னாள் தலைவரான ராஜு ஏகப் பட்ட தில்லுமுல்லுகள் செய்து அதிலிருந்து ஏகப் பட்ட பணத்தை கொள்ளை அடித்து தெரிந்த விஷயம்தான். அதன் பிறகு, அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாகக் குழு அரசால் முற்றிலும் மாற்றியமைக்கப் பட்டு புதிய உறுப்பினர்கள் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர். ராஜுவோ ஆந்திர போலீசாரால் கைது செய்யப் பட்டு காவலில் வைக்கப் பட்டார். இன்னும் குற்ற விசாரணை முடிவடையாத நிலையில் எந்த துணிச்சலில் அவரது உறவினர்கள் மேலும் 1200 கோடி ரூபாய் கோரி புதிய நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பித்தனர் என்பது நமது கேள்வி. ராஜுவாகவே முன்வந்து தனது குற்றத்தை ஒப்புக் கொண்ட பின்னரும் அவரைக் கைது செய்ய ஏகப் பட்ட அவகாசம் எடுத்துக் கொள்ளப் பட்டது. அதுவும் மத்திய புலனாய்வு அமைப்புகள் அவரிடம் விசாரணை செய்ய ஹைதராபாத் சென்ற...