Skip to main content

சரிவின் விளிம்பில்?

சென்ற வாரம் வெளியிடப் பட்ட மத்திய அரசின் இடைக்கால நிதி அறிக்கை சந்தைகளுக்கு மிகப் பெரிய ஏமாற்றத்தையே தந்தது. பட்ஜெட்டில் பொருளாதார மீட்சி திட்டங்கள் எதுவும் இல்லாமல் போனது மற்றும் பட்ஜெட்டில் காணப் பட்ட மிக அதிக அளவிலான நிதி பற்றாக்குறை, பட்ஜெட் சலூகைகளுக்காக மிகப் பெரிய எதிர்பார்ப்புக்களுடன் காத்திருந்த சந்தைகளுக்கு அதிர்ச்சியையே தந்தது. இடையில் , தொடர்ந்து இழுத்து மூடப் பட்டு வரும் அமெரிக்க வங்கிகள் மற்றும் பொருளாதார சிக்கல் குறித்த பயங்கள் காரணமாக பல வருடங்களில் இல்லாத அளவிற்கு உலக சந்தைகள் வீழ்ந்தது போன்ற விஷயங்கள் நமது சந்தையில் ஒரு மிகப் பெரிய சரிவுக்கு வழி வகுத்தன.

நம்மூர் கரன்சி தொடர்ந்து வீழ்ந்து வந்ததும் தங்கத்தின் விலை சரித்திரம் காணாத அளவிற்கு உயர்ந்ததும், பங்கு சந்தையில் ஒரு நிச்சயமற்ற நிலையை ஏற்படுத்தின. பணவீக்கம் பதின்மூன்று மாதங்களில் இல்லாத அளவிற்கு விழுந்தது, புதிய வட்டி வீதக் குறைப்பு பற்றிய ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தினாலும் சந்தைக்கு பெரிய அளவில் உபயோகமளிக்க வில்லை.

அதிகரிக்கக் கூடிய வாராக் கடன்களைப் பற்றிய பயத்தில், சென்ற வாரம் வங்கித் துறையைச் சேர்ந்த பங்குகள் மிகப் பெரிய அளவில் வீழ்ச்சி அடைந்தன. உலக பொருளாதார வீழ்ச்சி பற்றிய அச்சத்தினால் உலோகத் துறையைச் சேர்ந்த பங்குகள் அடுத்தபடியாக அதிக அளவில் வீழ்ந்தன. மற்ற துறைகளைச் சேர்ந்த பங்குகளும் சென்ற வாரம் கணிசமான அளவில் சரிந்தன. அதே சமயம் நிபிட்டி குறியீடு முக்கிய அரண் நிலையான 2700 புள்ளிகளுக்கு மேலேயே முடிவடைந்தது ஒருவித நம்பிக்கையை அளிக்கின்றது.

சில பிரபல பொருளாதார நிபுணர்களிடம் எடுக்கப் பட்ட கருத்துக் கணிப்பின் படி, அமெரிக்க பொருளாதாரம் இந்த ஆண்டு இறுதிக்குள் மேம்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த கருத்துக் கணிப்பின் அடிப்படையில் அமெரிக்காவில் இந்த வார துவக்கம் சற்றே சிறப்பாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. நம்முடைய சந்தையும் கூட இந்த அளவினை (நிபிட்டி 2700 புள்ளிகள்) நல்ல அரணாக வைத்துக் கொண்டு முன்னேற முயற்சிக்கும் (இலக்குகள் 2790, 2880) என்றே தோன்றுகிறது. அதே சமயத்தில் அமெரிக்காவில் இருந்து ஏதேனும் கெட்ட செய்தி வந்து, 2700 அரண் முழுமையான அளவில் முறிக்க பட்டால், அதல பாதாள நிலைக்கு நமது சந்தை பாயும் என்றே தோன்றுகிறது. எனவே வர்த்தகர்கள் கீழே 2700 அளவை ஸ்டாப் லாஸ் லிமிட் ஆக வைத்துக் கொண்டு எச்சரிக்கையான வர்த்தகத்தில் ஈடுபடலாம். வரும் வாரத்தில் F&O நிலைகள் காலாவதி ஆவதினால், சந்தையில் ஏகப் பட்ட ஏற்ற இறக்கங்களை காண முடியும். வரும் வாரம் வெளியிடப் படவுள்ள, இந்திய ஒட்டு மொத்த உற்பத்தி (GDP) பற்றிய விவரங்களும் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஒரு வேளை, வட்டிவீதங்கள் குறைக்கப் பட்டால், வட்டி வீத தொடர்பான பங்குகளில் (வாகனத் துறை, வங்கித் துறை, ரியல் எஸ்டேட் துறை) வர்த்தகம் செய்யலாம். பெட்ரோலிய துறை விநியோகஸ்த நிறுவனங்களில் முதலீடு செய்ய பரிசீலனை செய்யலாம். ஒ.என்.ஜி.சி நிறுவனம் கிருஷ்ணா-கோதாவரி படுகையில் எண்ணெய் கண்டுபிடித்திருப்பதாக உறுதி செய்யப் படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலக சந்தைகளில் மற்ற கரன்சிகளுக்கு எதிராக டாலர் வலிமை பெற்று வருகிறது. நமது பங்கு சந்தை 2700 புள்ளிகளுக்கு கீழே சரியும் பட்சத்தில், ரூபாய்க்கு எதிரான டாலர் மதிப்பு 50அளவை தாண்ட வாய்ப்பு உள்ளது. தங்கத்தின் விலை அமெரிக்க பொருளாதார நிலையில் ஏற்படும் மாற்றங்களைப் பொறுத்து அமையும்.

வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

நன்றி.

Comments

KARTHIK said…
// ரூபாய்க்கு எதிரான டாலர் மதிப்பு 50அளவை தாண்ட வாய்ப்பு உள்ளது.//

அப்படி மேல போச்சுன்ன.இவங்க அதையே சாக்கா வெச்சு மறுபடியும் பெட்ரோல் டீசல் விலைய ஏத்தாம இருந்த சரிதான்.
Maximum India said…
அன்புள்ள கார்த்திக்

//அப்படி மேல போச்சுன்ன.இவங்க அதையே சாக்கா வெச்சு மறுபடியும் பெட்ரோல் டீசல் விலைய ஏத்தாம இருந்த சரிதான்//

ஏற்றமாட்டார்கள் என்றே நினைக்கிறேன். காரணங்கள், வரப் போகிற பொதுத்தேர்தல் மற்றும் உலக சந்தையில் மிகவும் விலை குறைந்துள்ள கச்சா எண்ணெய். இப்போதைய லோக்கல் விலை அளவில் பெட்ரோல் விநியோகஸ்த நிறுவனங்கள் நல்ல லாபத்தை சம்பாதிக்கும் என்று நினைக்கிறேன்.

நன்றி.
அமெரிக்க சந்தியின் குறியீடுகளும் தானே சரிந்து கொண்டே இருக்கிறது.
ஏன் இந்திய பண மதிப்பு மட்டும் குறைகிறது? இதில் எதாவது அரசியல் கலந்திருக்கிறதா?
Maximum India said…
அன்புள்ள வால்பையன்

//அமெரிக்க சந்தியின் குறியீடுகளும் தானே சரிந்து கொண்டே இருக்கிறது.
ஏன் இந்திய பண மதிப்பு மட்டும் குறைகிறது? இதில் எதாவது அரசியல் கலந்திருக்கிறதா?//

இதில் அரசியல் ஏதும் இல்லை. யானை படுத்தாலும் குதிரையின் உயரம் எனும் வழக்கிற்கு ஏற்ப, சரிவான பொருளாதார சூழ்நிலையில் கூட அமெரிக்கா மற்றும் அதன் கரன்சியான டாலர் இந்தியா மற்றும் ரூபாயை விட மிகவும் வலிமை வாய்ந்தது. இன்னும் சில காரணங்கள் உண்டு. கூடிய சீக்கிரம் இதைப் பற்றி ஒரு பதிவே போடலாம் என்று இருக்கிறேன்.

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

தீவிரவாதிகளை வென்ற கதை - இந்திய கமாண்டோவின் விளக்கம்

நேற்று ஒரு தீவிரவாதி பிடிப் பட்ட கதை பார்த்தோம். இன்று தாஜ் ஹோட்டலில் எவ்வாறு நான்கு தீவிரவாதிகள் ஒழிக்கப் பட்டனர் என்று விளக்கும் இந்திய கமாண்டோவின் விளக்கத்தை பார்ப்போம். முதலில் இந்தியா கமாண்டோக்கள் தாஜ் ஹோட்டல் வந்த கதை புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் மும்பையை பயங்கரவாதம் தாக்கியது. அப்போது கேரளாவில் இருந்த மகாராஷ்டிர முதல்வர் மும்பை வரவும் இந்த சூழ்நிலையின் பயங்கரத்தையும் முழுமையாக உணர்ந்துக் கொள்ளவும் 90 நிமிடம் பிடித்தது .பின்னர் 11.00 அளவில் மத்திய அரசிற்கு போன் பேசிய முதல்வர் கோரியது 200 கமாண்டோக்களை. உடனே அந்நேரத்தில் தூங்கி கொண்டிருந்த இந்திய கமாண்டோக்கள் எழுப்பப் பட்டனர். அவர்கள் மும்பை வரத் தயாரான போதுதான் புரிந்தது, அவ்வளவு பேரை மும்பை கொண்டுவர தேவையான சிறப்பு விமானம் சண்டிகரில் உள்ளது என்று. உடனே அந்த விமானியையும் தூக்கத்தில் இருந்து எழுப்பி தயார் படுத்தி டெல்லியிலிருந்து கமாண்டோக்கள் மும்பை வந்த போது நேரம் காலை 5.25 மணி. அவர்கள் தாஜ் ஹோட்டலுக்கு கொண்டு வரப்பட்டு திட்டம் தயாரிக்கப் பட்டு அவர்கள் தாஜ் ஹோட்டலுக்குள் நுழைந்த போது நேரம் காலை 7.00 மணி. அதாவது மும்பை தாக்கப் ப...

கம்ப்யூட்டர் கட்சியும் கால்குலேட்டர் கட்சியும்!

மத்திய கல்வி அமைச்சர் கபில் சிபல் இந்தியா முழுவதும் அனைவரும் தாய்மொழியுடன் ஹிந்தியும் படிக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்துள்ளார். இவ்வாறு அனைவரும் ஹிந்தி படிப்பதன் மூலம் நாட்டில் ஒருமைப்பாடு ஏற்படுவதுடன் ஹிந்தியை ஆங்கிலம் போன்று ஒரு "அறிவு மொழியாக (lingua franca)" மாற்ற முடியும் என்றும் கூறியுள்ளார். இந்த கருத்தின் மீது பதிவுலகில் ஏராளமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆங்கிலம் மட்டுமே போதும் என்று ஒரு கட்சியும், ஆங்கிலம் வாசலாக இருக்கும் போது ஹிந்தி ஒரு சன்னலாக இருந்து விட்டு போகட்டுமே என்று இன்னொரு கட்சியும் விவாதித்து வருகின்றன. ஹிந்தி எதிர்ப்பு என்பது எப்போதுமே ஒரு உணர்வு பூர்வமான விஷயமாகவே பலராலும் கருதப் பட்டாலும், அதற்கு அறிவு பூர்வமான, சரித்திர பூர்வமான சில அடிப்படைகள் உண்டு. ஹிந்தி திணிப்பு மற்றும் ஹிந்தி எதிர்ப்பு பற்றி எனக்கு தெரிந்த சில கருத்துக்களை இங்கு ஒரு புனைவு வடிவில் அளிக்க முயற்சிக்கிறேன். இப்போது புனைவு ! ஒரு காலத்தில் பரதம்பட்டி என்ற ஒரு கிராமம் இருந்ததாம். அங்கு பல ஆண்டுகள் வரை ஆட்சி செய்து வந்த துரை மகாராஜா ஒரு காலத்தில், அந்த கிராமத்தை ஜனநாயக ...