Skip to main content

போலீஸ் தொப்பையின் ரகசியம்

பொதுவாகவே இந்திய போலீஸ்காரர்களையும் (குறிப்பாக கீழ்நிலையில் பணிபுரிபவர்களும்) தொப்பையையும் பிரித்துப் பார்க்க முடியாது. இந்த விஷயத்தின் அடிப்படையில் பல ஜோக்குகள், திரைப் பட காமெடிகள் மற்றும் கடுமையான விமர்சனங்கள் வருவதுண்டு. இந்த தொப்பையின் ரகசியம் என்ன என்பதைப் பற்றி இங்கு பார்ப்போம்.

ஒரு மனிதனின் உடலில் தேவையில்லாத அதிகப்படியான கொழுப்பு வயிற்றை சுற்றி படிவதன் காரணமாகவே தொப்பை உருவாகுகிறது. இவ்வாறு அதிக கொழுப்பு உருவாகுவதற்கு காரணங்கள்.


1. அதிகப் படியான கலோரி உணவு.
2. ஜீரண சக்தி பாதிக்கப் படுதல்
3. தேவைக்கு குறைந்த உடல் பயிற்சி
4. அளவு குறைந்த தூக்கம் மற்றும் ஓய்வு
5. அதிகப் படியான மன அழுத்தம்.

இந்த லிஸ்டை படித்தாலே புரிந்து விடும் ஏன் போலீஸ்காரர்களுக்கு அதுவும் கீழ்நிலையில் பணிபுரிபவர்களுக்கு அதிக தொப்பை ஏற்படுகிறது என்று.

சரிவர முறைப் படுத்தப் படாத பணி நேரங்களின் காரணமாக தூக்கமின்மை மற்றும் சரியான உடல் பயிற்சி மேற்கொள்ள முடியாதது, வீட்டு சாப்பாடு சரியான நேரத்தில் உண்ண முடியாமல், வீட்டிற்கு வெளியே ஜங் உணவு எனச் சொல்லப் படும் சத்தில்லாத அதே சமயம் அதிக கலோரி உள்ள உணவுகளை நேரம் தவறிய நேரத்தில் சாப்பிடுவது, மன அழுத்தம் மிக்க பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது போன்றவையே இவர்களுக்கு தொப்பை வர காரணமாக இருக்கிறது.

பொதுவாக பலராலும் கேலிச் செய்யப்படுவது போல அதிக உணவு மற்றும் சோம்பேறித்தனம் இந்த நிலைக்கு முக்கிய காரணம் அல்ல. நல்ல தூக்கம், ஓய்வு எடுத்துக் கொள்ளல் மற்றும் உடற் பயிற்சி செய்ய தேவையான நேர வசதி இருப்பதாலேயே போலீஸ் மேலதிகாரிகளில் பலர் நல்ல உடற்கட்டுடன் இருக்க முடிகிறது என்பது கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.

இந்த தொப்பையினால் ஒருவருக்கு ஏற்படும் தொந்தரவுகள் உயர் ரத்த அழுத்தம், இதய நோய் மற்றும் சாக்கரை வியாதி போன்ற உயிர்கொல்லி வியாதிகள். எனவே, அடுத்த முறை தொப்பையுடன் ஒரு போலீஸ்காரரைப் பார்த்தால், அவருக்காக பரிதாபப் படுவோம்.

நம் நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள இந்த நிலையில், காவலர்களின் உடல்நலனை கருத்தில் கொள்வது அரசின் முக்கிய கடமை ஆகும். காவல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புதல், அதிகப் பணியிடங்களை உருவாக்குதல், பணிகளின் நேரத்தை முறைப் படுத்தல், போதுமான உடல் மற்றும் மனப் பயிற்சி அளித்தல் என காவல்துறையை சீரமைக்கும் பணியை அரசு செய்ய வேண்டும் என்பது என் கருத்து.

நன்றி.

பின்குறிப்பு: மும்பையில் கடந்த இரு மாதங்களாக, பொது மக்களின் பாதுகாப்புக்காக, இரவு பகல் பாராமல், பல மணி நேரம் தொடர்ந்து சாலையில் வாகனத் தணிக்கை மற்றும் இதர பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் நாட்டின் காவலர்களுக்கு ஒரு பணிவான சல்யூட் .

Comments

KARTHIK said…
// சரியான உடல் பயிற்சி மேற்கொள்ள முடியாதது,//

இவங்கள விட அதிகமா ரானுவத்துக்காரங்க உழைக்கறாங்க அவங்களுக்கு ஏன் தொப்ஸ் வரதில்ல .அடுத்தவங்கள சொல்லுறதுக்கு முந்தி நானும் குறைக்கணும்.குறசிட்டு வந்து மீட் பண்ணுறேன்
Maximum India said…
அன்புள்ள செந்தழல் ரவி

பின்னூட்டத்திற்கு நன்றி
Maximum India said…
அன்புள்ள கார்த்திக்

பின்னூட்டத்திற்கு நன்றி

//இவங்கள விட அதிகமா ரானுவத்துக்காரங்க உழைக்கறாங்க அவங்களுக்கு ஏன் தொப்ஸ் வரதில்ல .//

ராணுவத்தினர் நேரவிதி முறைகளை கடுமையாக பின்பற்றுகிறார்கள். மேலும் சிறந்த உடற்பயிற்சி முறைகளை தொடர்ந்து பின்பற்றுகிறார்கள். அதனால்தான் அவர்களுக்கு தொப்பை வருவதில்லை. அவர்களைப் போலவே போலீசாருக்கும் உடல் பயிற்சி வழங்கிட வேண்டும்.

//அடுத்தவங்கள சொல்லுறதுக்கு முந்தி நானும் குறைக்கணும்.குறசிட்டு வந்து மீட் பண்ணுறேன்//

உங்களுக்கு தொப்பையா? கண்ணாலம் கூட இன்னும் ஆகலேயே? பாத்து சீக்கிரம் குறைங்க.:)
தொப்பைக்கு சரியான காரணம் சொல்லி உள்ளீர்கள். அவர்களாக குறைத்தால் தான் உண்டு. இல்லை பிரியாணி பொட்லம் வாங்கி வரும்போது நாய் குரைத்தால் ஓடும் போது குறைக்க சாரி குறைய வைப்பு உண்டு.
Maximum India said…
அன்புள்ள பொதுஜனம்

பின்னூட்டத்திற்கு நன்றி. காவலர்களின் உடல் நலன் அவர்களுக்கு மட்டுமல்ல நாட்டின் பாதுகாப்புக்கும் அவசியம். உடனடியாக காவல் துறை சீர்திருத்தங்களை அமல் படுத்த வேண்டும்.

நன்றி
butterfly Surya said…
சரிதான். ஒ.சி. காபி, டீ, கையேந்தி பவன் டிபன் என்று கண்டபடி சாப்பிடும் பல பேரை சென்னையில் பார்க்கலாம். காசு கொடுத்து சாப்பிட்டால் நிறைய சாப்பிட மாட்டார்கள்.

எந்த கூச்சமும் இல்லாமல் சில பேர் பார்சல் கூட வாங்கி செல்வார்கள்.
Maximum India said…
அன்புள்ள வண்ணத்துப்பூச்சியார்

கருத்துரைக்கு நன்றி. (உங்கள் பெயர் அழகாக உள்ளது)

நீங்கள் சொல்வது போல, ஓசியில் கிடைத்தால் எதை வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்ற மனப் போக்கு மாறவேண்டும்.

நன்றி.
nTamil said…
Hi,

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.ntamil.com ல் சேர்த்துள்ளோம்.

இதுவரை இந்த www.ntamil.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
nTamil குழுவிநர்

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

தீவிரவாதிகளை வென்ற கதை - இந்திய கமாண்டோவின் விளக்கம்

நேற்று ஒரு தீவிரவாதி பிடிப் பட்ட கதை பார்த்தோம். இன்று தாஜ் ஹோட்டலில் எவ்வாறு நான்கு தீவிரவாதிகள் ஒழிக்கப் பட்டனர் என்று விளக்கும் இந்திய கமாண்டோவின் விளக்கத்தை பார்ப்போம். முதலில் இந்தியா கமாண்டோக்கள் தாஜ் ஹோட்டல் வந்த கதை புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் மும்பையை பயங்கரவாதம் தாக்கியது. அப்போது கேரளாவில் இருந்த மகாராஷ்டிர முதல்வர் மும்பை வரவும் இந்த சூழ்நிலையின் பயங்கரத்தையும் முழுமையாக உணர்ந்துக் கொள்ளவும் 90 நிமிடம் பிடித்தது .பின்னர் 11.00 அளவில் மத்திய அரசிற்கு போன் பேசிய முதல்வர் கோரியது 200 கமாண்டோக்களை. உடனே அந்நேரத்தில் தூங்கி கொண்டிருந்த இந்திய கமாண்டோக்கள் எழுப்பப் பட்டனர். அவர்கள் மும்பை வரத் தயாரான போதுதான் புரிந்தது, அவ்வளவு பேரை மும்பை கொண்டுவர தேவையான சிறப்பு விமானம் சண்டிகரில் உள்ளது என்று. உடனே அந்த விமானியையும் தூக்கத்தில் இருந்து எழுப்பி தயார் படுத்தி டெல்லியிலிருந்து கமாண்டோக்கள் மும்பை வந்த போது நேரம் காலை 5.25 மணி. அவர்கள் தாஜ் ஹோட்டலுக்கு கொண்டு வரப்பட்டு திட்டம் தயாரிக்கப் பட்டு அவர்கள் தாஜ் ஹோட்டலுக்குள் நுழைந்த போது நேரம் காலை 7.00 மணி. அதாவது மும்பை தாக்கப் ப...

கம்ப்யூட்டர் கட்சியும் கால்குலேட்டர் கட்சியும்!

மத்திய கல்வி அமைச்சர் கபில் சிபல் இந்தியா முழுவதும் அனைவரும் தாய்மொழியுடன் ஹிந்தியும் படிக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்துள்ளார். இவ்வாறு அனைவரும் ஹிந்தி படிப்பதன் மூலம் நாட்டில் ஒருமைப்பாடு ஏற்படுவதுடன் ஹிந்தியை ஆங்கிலம் போன்று ஒரு "அறிவு மொழியாக (lingua franca)" மாற்ற முடியும் என்றும் கூறியுள்ளார். இந்த கருத்தின் மீது பதிவுலகில் ஏராளமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆங்கிலம் மட்டுமே போதும் என்று ஒரு கட்சியும், ஆங்கிலம் வாசலாக இருக்கும் போது ஹிந்தி ஒரு சன்னலாக இருந்து விட்டு போகட்டுமே என்று இன்னொரு கட்சியும் விவாதித்து வருகின்றன. ஹிந்தி எதிர்ப்பு என்பது எப்போதுமே ஒரு உணர்வு பூர்வமான விஷயமாகவே பலராலும் கருதப் பட்டாலும், அதற்கு அறிவு பூர்வமான, சரித்திர பூர்வமான சில அடிப்படைகள் உண்டு. ஹிந்தி திணிப்பு மற்றும் ஹிந்தி எதிர்ப்பு பற்றி எனக்கு தெரிந்த சில கருத்துக்களை இங்கு ஒரு புனைவு வடிவில் அளிக்க முயற்சிக்கிறேன். இப்போது புனைவு ! ஒரு காலத்தில் பரதம்பட்டி என்ற ஒரு கிராமம் இருந்ததாம். அங்கு பல ஆண்டுகள் வரை ஆட்சி செய்து வந்த துரை மகாராஜா ஒரு காலத்தில், அந்த கிராமத்தை ஜனநாயக ...