Skip to main content

காளையும் கரடியும் சந்தித்தால்?

வருகின்ற வாரம், காளைக்கும் கரடிக்கும் ஏற்படவுள்ள மோதல் ஆக்ரோஷமானதாகவும் பரபரப்பானதாகவும் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது. இப்போதைக்கு காளையின் கை சற்று ஓங்கியிருப்பது போல் தோன்றினாலும், கரடி தனது முழு பலத்தையும் அடுத்த வாரம் காட்டும் என்றே கருதப் படுகிறது.

வரப் போகிற இடைக்கால மத்திய பட்ஜெட்டில் சந்தைகளுக்கு உற்சாகமூட்டும் வகையில் புதிய வரி விலக்குகளும், தொழிற் துறைக்கான சில சலுகைகளும் இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் கடந்த வாரம் சந்தைகள் நல்ல முன்னேற்றம் கண்டன. சட்டென்று குறைந்த பணவீக்கமும், மேலும் வட்டி வீத குறைப்புகள் இருக்கும் என்ற புதிய நம்பிக்கையை உருவாக்கியதும் சென்ற வார முன்னேற்றத்திற்கு ஒரு முக்கிய காரணம்.

உலக சந்தைகள் பலவும் (முக்கியமாக அமெரிக்கா சந்தைகள்) சரிந்த நிலையிலும் நமது சந்தைகள் மேலே சென்றதும், F&O பிரிவில் அதிகமான திறந்தநிலை ஆர்வம் (Open Interest) ஏற்பட்டிருப்பதும் கவனிக்க வேண்டியவை. தொழிற்துறை உற்பத்தி சரிவைக் கண்டு (-2.00%) உள்ளூர் நிலைமை திருப்தி இல்லாத நிலையிலும் கூட நாம் சென்ற வாரம் குறிப்பிட்டது போல நிபிட்டி 2900 புள்ளிகளை விட்டு அதிகம் விலகாமல் இருந்தது முக்கியமான ஒரு விஷயம். மேலும், சந்தையின் சிறிய மற்றும் இடைநிலை பங்குகள் பெருவாரியாக முன்னேற்றமடைந்தது சந்தையின் வலுவான மனநிலையையே காட்டுகின்றது.

முந்தைய வாரங்களில் கடுமையாக வீழ்ச்சியுற்ற ரியல் எஸ்டேட், வங்கித் துறை, உற்பத்தித் துறை, வாகனத் துறை பங்குகள் தீவிர "விற்ற பின் வாங்குதல்" (Short Covering) காரணமாக மேல் சென்றதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உள்நாட்டு நிதி நிறுவனங்கள் மற்றும் பரஸ்பர நிதிகள் பங்குகளை விற்றாலும், வெளிநாட்டு நிறுவனங்கள் பெருவாரியாக பங்குகளை வாங்கியது குறிப்பிடத் தக்கது.

பங்கு சந்தைகள் தொடர்ந்து முன்னேற்றம் கண்டதின் எதிரொலியாக, கரன்சி வர்த்தகத்தில் இந்திய ரூபாய் அமெரிக்கா டாலருக்கு எதிராக உயர்ந்தது.

வரும் வார நிலவரம்

வரும் வாரம் மத்திய அரசு தனது இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது. இதில், தொழிற் துறை, ஏற்றுமதித் துறை, ரியல் எஸ்டேட் துறை ஆகியவற்றுக்கு சலுகைகள் அறிவிக்கப் படும் என்ற எதிர்பார்ப்பில் வருகின்ற வார துவக்கம் பங்கு சந்தைகளுக்கு ஓரளவுக்கு சிறப்பாக இருக்க வாய்ப்பு உண்டு என்றாலும், சந்தைகள் ஏற்கனவே ஏகப்பட்ட அளவுக்கு முன்னேறி இருப்பதால், சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

ஏற்கனவே நாம் இங்கு தெரிவித்திருந்த படி, நிபிட்டி 3050 புள்ளிகளை நோக்கி முன்னேற முயற்சிக்கும். ஆனால், அதற்கு மிகுந்த எதிர்ப்பும் காணப் படும். எனவே, வர்த்தகர்கள் இந்த அளவில் தமது திறந்த நிலைகளை ஓரளவுக்கு சமன் செய்து கொள்வது நல்லது. மேலும், 2850 ஐ ஸ்டாப் லாஸ் லிமிட் ஆக வைத்துக் கொண்டு மீதமுள்ள நிலையை தொடரலாம். புதிய வர்த்தக நிலை எடுப்பதில் அதிக அபாயங்கள் இருந்தாலும் நிபிட்டி 3200 வரை கூட (3050 ஐ முறிக்கும் பட்சத்தில்), "ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுவது போல" என்பவர்கள் 2850 ஐ ஸ்டாப் லாஸ் ஆக வைத்துக் கொண்டு புதிய வர்த்தக நிலை எடுக்கலாம்.

முதலீட்டாளர்கள், (கச்சா எண்ணெய் விலை உலக சந்தையில் தொடர்ந்து குறைந்து வருவதின் அடிப்படையில்) பெட்ரோலிய பொருட்கள் விநியோகஸ்த நிறுவனங்களின் பங்குகளை வாங்க பரிசீலிக்கலாம். வங்கித் துறை, இரும்புத் துறை, நுகர்வோர் துறை பங்குகளை (பட்ஜெட் திட்டங்கள் சாதகமாக இருக்கும் பட்சத்தில்) வர்த்தகர்கள் கவனிக்கலாம்.

வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

நன்றி

Comments

காளையும் கரடியும் சந்தையின் இரு அச்சுகள். சந்தைபயணம் தொடர்ந்து செல்ல இவை இரண்டுமே தேவை. ஆனால் வண்டியை செலுத்துபவர்கள் மீது உள்ள நம்பிக்கை தான் இப்போது சந்தேகத்திற்கு உரிய தாகிவிட்டது. ராஜு போன்றவர்களை வண்டியில் இருந்து இறக்கி விட்டாலே பாதி பாரம் குறையும் வேகமாக முன்னேறும் நாடு என்ற அந்தஸ்தை தொடர்ந்து தக்க வைத்து கொள்ள புத்திசாலித்தனமான முதலீடுகள் தேவை. அதை செய்ய நமது முதலீட்டாளர்களும் (காளைகள்) அரசியல்வாதிகளும் (கரடிகள்) முன் வரவேண்டும் .
Maximum India said…
அன்புள்ள பொதுஜனம்

கருத்துரைக்கு மிக்க நன்றி

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

தீவிரவாதிகளை வென்ற கதை - இந்திய கமாண்டோவின் விளக்கம்

நேற்று ஒரு தீவிரவாதி பிடிப் பட்ட கதை பார்த்தோம். இன்று தாஜ் ஹோட்டலில் எவ்வாறு நான்கு தீவிரவாதிகள் ஒழிக்கப் பட்டனர் என்று விளக்கும் இந்திய கமாண்டோவின் விளக்கத்தை பார்ப்போம். முதலில் இந்தியா கமாண்டோக்கள் தாஜ் ஹோட்டல் வந்த கதை புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் மும்பையை பயங்கரவாதம் தாக்கியது. அப்போது கேரளாவில் இருந்த மகாராஷ்டிர முதல்வர் மும்பை வரவும் இந்த சூழ்நிலையின் பயங்கரத்தையும் முழுமையாக உணர்ந்துக் கொள்ளவும் 90 நிமிடம் பிடித்தது .பின்னர் 11.00 அளவில் மத்திய அரசிற்கு போன் பேசிய முதல்வர் கோரியது 200 கமாண்டோக்களை. உடனே அந்நேரத்தில் தூங்கி கொண்டிருந்த இந்திய கமாண்டோக்கள் எழுப்பப் பட்டனர். அவர்கள் மும்பை வரத் தயாரான போதுதான் புரிந்தது, அவ்வளவு பேரை மும்பை கொண்டுவர தேவையான சிறப்பு விமானம் சண்டிகரில் உள்ளது என்று. உடனே அந்த விமானியையும் தூக்கத்தில் இருந்து எழுப்பி தயார் படுத்தி டெல்லியிலிருந்து கமாண்டோக்கள் மும்பை வந்த போது நேரம் காலை 5.25 மணி. அவர்கள் தாஜ் ஹோட்டலுக்கு கொண்டு வரப்பட்டு திட்டம் தயாரிக்கப் பட்டு அவர்கள் தாஜ் ஹோட்டலுக்குள் நுழைந்த போது நேரம் காலை 7.00 மணி. அதாவது மும்பை தாக்கப் ப...

கம்ப்யூட்டர் கட்சியும் கால்குலேட்டர் கட்சியும்!

மத்திய கல்வி அமைச்சர் கபில் சிபல் இந்தியா முழுவதும் அனைவரும் தாய்மொழியுடன் ஹிந்தியும் படிக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்துள்ளார். இவ்வாறு அனைவரும் ஹிந்தி படிப்பதன் மூலம் நாட்டில் ஒருமைப்பாடு ஏற்படுவதுடன் ஹிந்தியை ஆங்கிலம் போன்று ஒரு "அறிவு மொழியாக (lingua franca)" மாற்ற முடியும் என்றும் கூறியுள்ளார். இந்த கருத்தின் மீது பதிவுலகில் ஏராளமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆங்கிலம் மட்டுமே போதும் என்று ஒரு கட்சியும், ஆங்கிலம் வாசலாக இருக்கும் போது ஹிந்தி ஒரு சன்னலாக இருந்து விட்டு போகட்டுமே என்று இன்னொரு கட்சியும் விவாதித்து வருகின்றன. ஹிந்தி எதிர்ப்பு என்பது எப்போதுமே ஒரு உணர்வு பூர்வமான விஷயமாகவே பலராலும் கருதப் பட்டாலும், அதற்கு அறிவு பூர்வமான, சரித்திர பூர்வமான சில அடிப்படைகள் உண்டு. ஹிந்தி திணிப்பு மற்றும் ஹிந்தி எதிர்ப்பு பற்றி எனக்கு தெரிந்த சில கருத்துக்களை இங்கு ஒரு புனைவு வடிவில் அளிக்க முயற்சிக்கிறேன். இப்போது புனைவு ! ஒரு காலத்தில் பரதம்பட்டி என்ற ஒரு கிராமம் இருந்ததாம். அங்கு பல ஆண்டுகள் வரை ஆட்சி செய்து வந்த துரை மகாராஜா ஒரு காலத்தில், அந்த கிராமத்தை ஜனநாயக ...