Skip to main content

கடவுளும் இப்போது விரக்தியில்!

இன்றைக்கு உலகம் இருக்கும் நிலை இதைப் படைத்த இறைவனையே கூட விரக்தி நிலைக்கு கொண்டு சென்று விடும். அவருடைய சிந்தனை இப்போது எப்படி இருக்கும் என்று ஒரு கற்பனை.

"ஒரு உயிரைக் கூட கொல்லாதே என்று அஹிம்சை வழியை போதனை செய்த என்னுடைய தூதரின் வழியைப் பின்பற்றுவதாக சொல்லிக் கொண்டு சிலர் இன்றைக்கு ஒரு இனத்தையே அழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒருவருக்கொருவர் காட்டும் அன்பேதான் நான் என்பதை உலகிற்கு உணர்த்துவதற்காக எனக்கு வழங்கப் பட்ட பெயரை தமது கட்சியின் பெயராக வைத்துக் கொண்டு சிலர் ஒரே நாட்டில் கூடவே வாழும் மக்களை (மற்ற பகுதியைச் சேர்ந்தவர்களை) துன்புறுத்தி அடித்து விரட்டுகிறார்கள்.

எளிய விலங்கினமான அணிலிடமும் கூட அன்பு காட்ட வேண்டும் என்று உலகிற்கு உணர்த்திய என்னுடைய பெயரை அமைப்பின் பெயராக வைத்துக் கொண்டு சிலர் வன்முறையில் இறங்கி பெண்களையும் கூட தாக்குகிறார்கள்.

"ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை காட்டுங்கள்" என்று சொன்ன எனது தூதரின் கொள்கைகளைப் பின்பற்றுவதாக சொல்லிக் கொண்டு சிலர் , இன்றைக்கு ஒரு கன்னத்தில் அடித்தால் கழுத்தையே வெட்டி எறிகிறார்கள்.

பிற மதத்தவரிடமும் அன்பு காட்டு என்று சகோதரத்துவத்தின் மகத்துவத்தை உணர்த்த அனுப்பப் பட்டவரின் பெயரைச் சொல்லிக் கொண்டு சிலர் இன்று உலக மக்களையெல்லாம் கொல்லத் துடிக்கிறார்கள்.

உலகின் ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு கலாச்சாரங்களில் வாழும் மக்களுக்கு அவர்கள் எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் இருக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே சற்றே வேறுபட்ட வழிவகைகள் வகுக்கப் பட்டு இருந்தாலும், இலக்கு ஒன்றேதான் என்பதை ஏன் புரிந்து கொள்ள மறுக்குறீர்கள்?

யானையிடம் யானை மொழியில்தான் போதிக்க வேண்டும், எலியிடம் அது புரிந்து கொள்ளும் வகையில்தான் விளக்க வேண்டும் என்ற எளிய தத்துவம் ஏன் விஞ்ஞானத்தில் வெற்றி பெற்ற உங்களால் புரிந்து கொள்ள முடிய வில்லை?

வாழுங்க என்று அனுப்பப் பட்ட நீங்கள் ஏனப்பா இப்படி ஒருவரையொருவர் அடித்துக் கொண்டு சாக நினைக்கிறீர்கள்?

ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதனையும் கடித்த கதையாய், பெண்ணுக்காக போர், மண்ணுக்காக போர், பொன்னுக்காக போர் என்ற நிலையெல்லாம் போய், இன்றைக்கு என் பெயர் சொல்லியும் அடித்துக் கொள்கிறீர்களே?

போதும்பா போதும். எல்லாத்தையும் நிறுத்திக்குங்க. முதல்ல மனசுல இருந்து "மதத்த" விலக்கிடுங்க. தேவைப் பட்டா என்னக் கூட மறந்துடுங்க.

போங்கப்பா! போயி அவங்கவங்க பொழப்ப பாருங்க! குழந்தை குட்டி குடும்பத்த நல்ல நிலைக்கு கொண்டு வர முயற்சி பண்ணுங்க!

மத்தவங்களுக்கு தொந்தரவு பண்ணாத மனம்தான் உசந்த மதம்னு சொல்லலாம்னு பாத்தா, அந்த (புது) பேரச் சொல்லிக்கிட்டும் அடிச்சுகுவீங்களே? நான் இப்ப என்ன பண்ணுவேன்?"

நன்றி

Comments

//"ஒரு உயிரைக் கூட கொல்லாதே என்று அஹிம்சை வழியை போதனை செய்த என்னுடைய தூதரின் வழியைப் பின்பற்றுவதாக சொல்லிக் கொண்டு சிலர் இன்றைக்கு ஒரு இனத்தையே அழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
//

"சிலர்" என்று எழுதும் அளவுக்கு அதில் ரகசியமோ, அவர்கள் மாண்புமிக்கவர்களோ இல்லை, வெளிப்படையாக சொல்வதற்கு ஏன் தேவையற்ற பயம் ?

அந்த இனவெறியர்களை சிங்களர்/சிங்களன் என்று சொல்லலாமே !
KARTHIK said…
// மத்தவங்களுக்கு தொந்தரவு பண்ணாத மனம்தான் உசந்த மதம்னு சொல்லலாம்னு பாத்தா, அந்த (புது) பேரச் சொல்லிக்கிட்டும் அடிச்சுகுவீங்களே? நான் இப்ப என்ன பண்ணுவேன்?"//

எல்லாக்காலத்துலையும் மனுசப்பயலுங்க இப்படித்தான் இது நம்ம ஜீன் சம்பந்தமான விசையம் மாத்தமுடியாதுன்னு நெனைக்குரேன்.
வேர ஒன்னும் சொல்ரதுக்கில்லை :-((
Maximum India said…
அன்புள்ள கோவி.கண்ணன்

பின்னூட்டத்திற்கு நன்றி

//சிலர்" என்று எழுதும் அளவுக்கு அதில் ரகசியமோ, அவர்கள் மாண்புமிக்கவர்களோ இல்லை, வெளிப்படையாக சொல்வதற்கு ஏன் தேவையற்ற பயம் ?//

நான் குறிப்பிட்டுள்ள எந்த ஒரு "சிலரும்" அடையாளம் கண்டு பிடிக்க முடியாதவர்களோ அல்லது மரியாதை செலுத்தக் கூடியவர்களோ அல்ல. மேலும் இவர்களை கண்டு பயப் பட எந்த ஒரு காரணமும் தேவையில்லை. படிப்பவர்களே புரிந்து கொள்ளும் வகையில் எழுதப் பட்டது ஒரு பாணி (ஸ்டைல்) மட்டுமே.

//அந்த இனவெறியர்களை சிங்களர்/சிங்களன் என்று சொல்லலாமே !//

சிங்களர்களை மட்டுமல்ல எந்த ஒரு சாதி, மத, இனத்தையும் பொதுப் படுத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை. எல்லா சாதி, மத, இனத்திலும் நல்லவர்களும் கெட்டவர்களும் வெவ்வேறு விகிதத்தில் இருக்கிறார்கள் என்பது எனது நம்பிக்கை.

நன்றி
Maximum India said…
அன்புள்ள கார்த்திக்

பின்னூட்டத்திற்கு நன்றி

//எல்லாக்காலத்துலையும் மனுசப்பயலுங்க இப்படித்தான் இது நம்ம ஜீன் சம்பந்தமான விசையம் மாத்தமுடியாதுன்னு நெனைக்குரேன்.
வேர ஒன்னும் சொல்ரதுக்கில்லை :-((//

இருக்கலாம். அதே சமயத்தில் நம்முடைய சுற்றத்திடம் இன, மத, சாதி வேறுபாடுகள் இல்லாமல் இணக்கமாக பழகி வருவதின் நம்மால் முடிந்த வரை (ஒரு சிறிய வட்டத்திலாவது) ஒரு நல்ல சூழலை உருவாக்கலாம்.

நன்றி
நீங்கள் உதாரணம் காட்டிய கடவுளுக்குள் அடித்து கொள்ளாமல் இருந்தால் சரி!

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

நரேந்திர மோடி நாடாளலாமா?

சமீபத்தில் நடைபெற்ற குஜராத் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கார்பொரட் கனவான்களான அனில் அம்பானி மற்றும் சுனில் மிட்டல் ஆகியோர் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர். காரியம் ஆக வேண்டும் என்றால் என்ன வேண்டுமானாலும் பேசக் கூடியவர்கள் நமது தொழில் அதிபர்கள் என்பதனால் அவர்களின் பேச்சுக்கு அவ்வளவு மரியாதை கொடுக்க வேண்டியதில்லை. இவர்களைப் போன்றவர்களால் ஏற்கனவே நாடாள தகுதி பெற்றவர் என்று கூறப் பட்ட சந்திர பாபு நாயுடு அடுத்த சட்ட மன்ற தேர்தலில் தனது முதலமைச்சர் பதவியினையே இழந்தது குறிப்பிடத் தக்கது. தொழில் அதிபர்கள் பேச்சினை பா.ஜ.கவே ஏற்றுக் கொள்ளாத பட்சத்திலும் கூட, தீவிரவாதத்தை ஒடுக்கி குஜராத் மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்து சென்றவர் நரேந்திர மோடி என்றும் அவர் இந்தியாவின் பிரதமர் ஆவது நாட்டுக்கு நல்லது என்றும் பலராலும் கருதப் படுவதால், நரேந்திர மோடியின் செயல்பாடு பற்றியும் அவர் பிரதமர் ஆகலாமா என்பது பற்றியும் பிரதமராக அவர் ஏற்றுக் கொள்ளப் படுவாரா என்பதைப் பற்றியும் இங்கு பார்ப்போம். இன்றைய தேதியில் இந்தியாவிலேயே மிகுந்த முன்னேற்றம் அடைந்த ஒரு மாநிலமாக குஜரா...

இந்தியா தாக்குப் பிடிக்குமா?

இன்றைய உலகப் பொருளாதாரத் தேக்க நிலையில், இந்தியாவால் தாக்குப் பிடிக்க முடியுமா என்பது பற்றி பார்ப்போம். சமீபத்தில் வெளியிடப் பட்ட மத்திய புள்ளியல் (மத்திய அரசு) நிறுவனத்தின் மதிப்பீட்டின் படி இந்தியப் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 7.1 சதவீதம் வளர்ச்சியுறும் என்று தெரிகிறது. இது சரியாக இருக்கும் பட்சத்தில் உலகிலேயே இரண்டாவதாக வேகமாக வளர்ச்சியுறும் நாடு இந்தியாவாகத்தான் இருக்கும் (சீனா முதலாவது). சென்ற ஆண்டில் ஒன்பது சதவீதம் வளர்ச்சி பெற்றிருந்த இந்தியப் பொருளாதாரம் செப்டம்பர் 2008 வரையிலான முதல் அரையாண்டில் 7.80% வளர்ச்சிப் பெற்றிருந்தது. பொதுவாகவே பண்டிகைக் காலமாக கருதப் படுகிற இரண்டாவது அரையாண்டே தொழிற் துறையில் அதிக வளர்ச்சியைக் காட்டும் என்றாலும் இந்த முறை இந்தியத் தொழில் துறை பெரும் தேக்க நிலையில் இருந்து வந்திருக்கிறது என்பது கவனிக்கத் தக்கது. இந்திய தொழிற் வளர்ச்சி கடந்த இரு மாதங்களாக மிகவும் குறைந்து காணப் படுவதாலும் ஏற்றுமதியோ இறங்குமுகத்தில் இருப்பதாலும் இந்திய அரசாங்கம், மார்ச் 2009 வரையிலான நிதி ஆண்டின் இரண்டாவது அரையாண்டில் நமது பொருளாதாரம் குறைந்த வளர்ச்சியே (6.30%) இரு...