Skip to main content

எல்லை தாண்டுமா?

எதிர்பார்த்ததை விட மோசமாக அமெரிக்க பொருளாதாரம் வீழ்ந்திருப்பதாக முந்தைய வார இறுதியில் வெளியிடப் பட்ட தகவலின் அடிப்படையில் நமது சந்தைகள் சென்ற வாரத்தை ஒரு பெரிய சரிவுடனேயே துவங்கின.

பெரும்பாலான காலாண்டு நிதி அறிக்கைகள் வெளி வந்து விட்ட நிலையில் சந்தையின் போக்கை நிர்ணயிக்கக் கூடிய புதிய காரணிகள் பெருமளவில் இல்லாத காரணத்தாலும், குறுகிய கால நோக்கில் சந்தையின் போக்கு குறித்து வணிகர்களிடையே நிலவி வரும் சந்தேகங்களினாலும் சென்ற வாரம் நமது பங்கு சந்தையில் வர்த்தகம் மிகவும் குறைந்தே காணப் பட்டது.

முந்தைய வாரத்தில் ஏற்பட்ட முன்னேற்றத்தின் காரணமாக நன்கு உயர்ந்திருந்த பங்குகள் கடந்த வாரத்தில் லாப நோக்குடன் விற்பனை செய்யப் பட்டன. வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய சந்தையில் தமது பங்குகளை (குறைந்த அளவில்) விற்றன. இனி, இந்திய தலைமை வங்கி வட்டி வீதங்களை குறைக்காது என்ற சந்தை யூகங்களின் அடிப்படையில் ரியல் எஸ்டேட், வங்கி, வாகனம், இயந்திர உற்பத்தி துறைகளை சார்ந்த பங்குகள் வீழ்ச்சியை சந்தித்தன.டி.எல்.எப் நிறுவனத்தின் மோசமான காலாண்டு நிதி அறிக்கையும், ரியல் எஸ்டேட் பங்குகளின் வீழ்ச்சிக்கு ஒரு முக்கிய காரணம். சிமெண்ட் துறை சார்ந்த நிறுவன பங்குகள் முன்னேற்றத்தை சந்தித்தன. கிருஷ்ணா-கோதாவரி எரிவாயு விவகாரத்தில் சாதகமான இடைக் கால தீர்ப்பைப் பெற்றதால், சென்செக்ஸ் மற்றும் நிபிட்டி ஆகிய குறியீடுகளின் முக்கிய பங்கான ரிலையன்ஸ் ஏற்றத்தை கண்டது. மொத்தத்தில் நமது சந்தை சென்ற வாரத்தில் பெரும் ஏற்ற இறக்கங்களையே சந்தித்து வந்தது. இறுதியாக, முக்கிய குறியீடுகளான நிபிட்டி மற்றும் சென்செக்ஸ் சிறிய அளவில் சரிவைச் சந்தித்தன. நிபிட்டி 2750 அளவில் நல்ல அரணைக் கொண்டிருந்தது.

வருகிற வாரம், ஒபாமா அவர்களால் அறிவிக்கப் படவிருக்கும் அமெரிக்க பொருளாதார மீட்டெடுப்பு திட்டம் சந்தைகளால் உன்னிப்பாக கவனிக்கப் படும். ஏற்கனவே இந்த திட்டத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள உலக சந்தைகள் கடந்த வெள்ளிக் கிழமை நல்ல முன்னேற்றத்தை கண்டது குறிப்பிடத்தக்கது. மேலும், கடந்த வாரத்தில் நமது நாட்டில் பணவீக்கம் குறைந்திருப்பதும், மைய வங்கியின் தலைவரின் அறிக்கையும், வட்டி வீதங்கள் குறைக்கப் படலாம் என்ற மீண்டும் ஒரு புதிய நம்பிக்கையை சந்தை வர்த்தகர்களுக்கு தந்துள்ளன. மேலும் இந்திய மத்திய அரசால் வரும் வாரத்தில் அறிவிக்கப் படவிருக்கும் இடைக் கால நிதியறிக்கையில் இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க புதிய திட்டங்கள் இருக்கும் என்ற நம்பிக்கையும் வருகின்ற வாரத்தில் சந்தையை ஏற்ற நிலையில் வைக்க உதவும்.

வெகு காலமாகவே, ஒரு குறுகிய எல்லைகளுக்குள்ளேயே (2700 -2900) தடுமாறி வரும் நமது சந்தைகள் இந்த வாரம் மேல் எதிர்ப்பான 2900 அளவை தாண்டும் என்று எதிர்பார்க்கலாம். அமெரிக்க பொருளாதார திட்டம் மற்றும் இந்திய (இடைக்கால) நிதி நிலை அறிக்கை ஆகியவை சந்தைகளுக்கு திருப்தி அளிக்கும் பட்சத்தில் நிபிட்டி 3050 (3200) நோக்கி பயணம் செய்யும் என்று எதிர்பார்க்கலாம். அதே சமயத்தில் சந்தையில் ஏற்ற இறக்கங்கள் மிகுந்தே காணப் படும். வர்த்தகர்கள் 2750 அளவை ஸ்டாப் லாஸ் ஆக வைத்துக் கொண்டு நிபிட்டி குறியீடு மற்றும் பெரிய பங்குகளை வாங்கலாம்.

தொடர்ந்து இரு வாரங்களாக "முன்னேறி வரும் நாடுகளின் சந்தைகள்" முன்னேற்றத்தை கண்டு வருவதை தொடர்ந்து, நாணய சந்தையில் டாலர் விலை குறையும் என்று எதிர்பார்க்கலாம். அமெரிக்க பொருளாதார மீட்டெடுப்பு திட்டத்தின் அடிப்படையில் கட்சா எண்ணெய் மற்றும் அடிப்படை உலோகங்களின் விலை உயர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதே சமயம், பங்கு சந்தைகள் உயரும் பட்சத்தில் தங்கத்தின் விலை குறையவும் வாய்ப்பு உள்ளது.

வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

நன்றி.

Comments

//கட்சா எண்ணெய் மற்றும் அடிப்படை உலோகங்களின் விலை உயர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது.//

மிக்க நன்றி!
அடிப்படை உலோகங்கள் ஐந்து வருடத்திற்கு முந்தைய விலையில் இருந்தாலும் முதலீடு செய்ய சிறு தயக்கம் இருந்தது. இப்போது காப்பர் விலையேற்றம் புது நம்பிக்கையை தருகிறது
Maximum India said…
அன்புள்ள வால்பையன்

பின்னூட்டத்திற்கு நன்றி

//அடிப்படை உலோகங்கள் ஐந்து வருடத்திற்கு முந்தைய விலையில் இருந்தாலும் முதலீடு செய்ய சிறு தயக்கம் இருந்தது. இப்போது காப்பர் விலையேற்றம் புது நம்பிக்கையை தருகிறது//

குறுகிய கால நோக்கில் அடிப்படை உலோககங்களின் விலை ஏறும் (அமெரிக்க பொருளாதார மீட்டெடுப்பு முயற்சியின் அடிப்படையில்) என்றாலும், நீண்ட கால நோக்கில் சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது. (பங்கு சந்தைகளுக்கும் இதே நிலைதான்). பொதுவாகவே சரிவை சந்திக்கும் ஒரு பெரிய பொருளாதாரத்தை சில அரசு நடவடிக்கைகள் மூலம் மட்டுமே உயரச் செய்ய முடியாது. அரசு அடிக்கும் நோட்டுக்களின் எண்ணிக்கை அதிகமாவது அதன் பொருளாதாரத்திற்கு நல்லது அல்ல.

நன்றி.
Maximum India said…
Dear Superlinks

Thanks for the visit.

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

தீவிரவாதிகளை வென்ற கதை - இந்திய கமாண்டோவின் விளக்கம்

நேற்று ஒரு தீவிரவாதி பிடிப் பட்ட கதை பார்த்தோம். இன்று தாஜ் ஹோட்டலில் எவ்வாறு நான்கு தீவிரவாதிகள் ஒழிக்கப் பட்டனர் என்று விளக்கும் இந்திய கமாண்டோவின் விளக்கத்தை பார்ப்போம். முதலில் இந்தியா கமாண்டோக்கள் தாஜ் ஹோட்டல் வந்த கதை புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் மும்பையை பயங்கரவாதம் தாக்கியது. அப்போது கேரளாவில் இருந்த மகாராஷ்டிர முதல்வர் மும்பை வரவும் இந்த சூழ்நிலையின் பயங்கரத்தையும் முழுமையாக உணர்ந்துக் கொள்ளவும் 90 நிமிடம் பிடித்தது .பின்னர் 11.00 அளவில் மத்திய அரசிற்கு போன் பேசிய முதல்வர் கோரியது 200 கமாண்டோக்களை. உடனே அந்நேரத்தில் தூங்கி கொண்டிருந்த இந்திய கமாண்டோக்கள் எழுப்பப் பட்டனர். அவர்கள் மும்பை வரத் தயாரான போதுதான் புரிந்தது, அவ்வளவு பேரை மும்பை கொண்டுவர தேவையான சிறப்பு விமானம் சண்டிகரில் உள்ளது என்று. உடனே அந்த விமானியையும் தூக்கத்தில் இருந்து எழுப்பி தயார் படுத்தி டெல்லியிலிருந்து கமாண்டோக்கள் மும்பை வந்த போது நேரம் காலை 5.25 மணி. அவர்கள் தாஜ் ஹோட்டலுக்கு கொண்டு வரப்பட்டு திட்டம் தயாரிக்கப் பட்டு அவர்கள் தாஜ் ஹோட்டலுக்குள் நுழைந்த போது நேரம் காலை 7.00 மணி. அதாவது மும்பை தாக்கப் ப...

கம்ப்யூட்டர் கட்சியும் கால்குலேட்டர் கட்சியும்!

மத்திய கல்வி அமைச்சர் கபில் சிபல் இந்தியா முழுவதும் அனைவரும் தாய்மொழியுடன் ஹிந்தியும் படிக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்துள்ளார். இவ்வாறு அனைவரும் ஹிந்தி படிப்பதன் மூலம் நாட்டில் ஒருமைப்பாடு ஏற்படுவதுடன் ஹிந்தியை ஆங்கிலம் போன்று ஒரு "அறிவு மொழியாக (lingua franca)" மாற்ற முடியும் என்றும் கூறியுள்ளார். இந்த கருத்தின் மீது பதிவுலகில் ஏராளமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆங்கிலம் மட்டுமே போதும் என்று ஒரு கட்சியும், ஆங்கிலம் வாசலாக இருக்கும் போது ஹிந்தி ஒரு சன்னலாக இருந்து விட்டு போகட்டுமே என்று இன்னொரு கட்சியும் விவாதித்து வருகின்றன. ஹிந்தி எதிர்ப்பு என்பது எப்போதுமே ஒரு உணர்வு பூர்வமான விஷயமாகவே பலராலும் கருதப் பட்டாலும், அதற்கு அறிவு பூர்வமான, சரித்திர பூர்வமான சில அடிப்படைகள் உண்டு. ஹிந்தி திணிப்பு மற்றும் ஹிந்தி எதிர்ப்பு பற்றி எனக்கு தெரிந்த சில கருத்துக்களை இங்கு ஒரு புனைவு வடிவில் அளிக்க முயற்சிக்கிறேன். இப்போது புனைவு ! ஒரு காலத்தில் பரதம்பட்டி என்ற ஒரு கிராமம் இருந்ததாம். அங்கு பல ஆண்டுகள் வரை ஆட்சி செய்து வந்த துரை மகாராஜா ஒரு காலத்தில், அந்த கிராமத்தை ஜனநாயக ...