Skip to main content

வெள்ளி கிழமைகளும் அமெரிக்க வங்கிகளும்

வெள்ளிக் கிழமை ராமசாமி கதை கேள்விப் பட்டிருப்பீர்கள். வெள்ளிக் கிழமைக்கும், அமெரிக்க வங்கிகளுக்கும் ஏதோ ஒத்து வருவதில்லை. என்னவென்று பார்ப்போமா?

அமெரிக்காவில் வார இறுதி நாளான வெள்ளிக் கிழமை வங்கிகள் மூடப் பட்டால், திங்கட் கிழமை மீண்டும் திறக்கப் படும் என்ற உத்தரவாதம் இல்லாத நிலை இப்போது காணப் படுகிறது. கடந்த ஆறு வாரங்களாக, தொடர்ச்சியாக ஒவ்வொரு வாரமும் வெள்ளிக் கிழமையானால், அலுவலக நேரம் முடிந்தவுடன், பல அமெரிக்க வங்கிகள் அதிகாரிகளால் கையகப் படுத்தப் பட்டுள்ளன.

கடந்த ஆண்டு (2008) முழுதும் அமெரிக்காவில் மூடப் பட்ட வங்கிகளின் எண்ணிக்கை 25. இந்த ஆண்டில் இன்னும் இரண்டு மாதங்கள் கூட முடிவடையாத நிலையில் மூடப் பட்டுள்ள வங்கிகளின் எண்ணிக்கை 14. இதே வேகத்தில் சென்றால் இந்த ஆண்டு மூடப் படும் அமெரிக்க வங்கிகளின் எண்ணிக்கை செஞ்சுரி அடித்து விடும் என்று பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். சென்ற ஆண்டு 25 வங்கிகள் மூடப் பட்டாலும். அவற்றில் பெரிய வங்கிகள் இரண்டு மட்டுமே.ஆனால் இந்த வருடம் பல பெரிய வங்கிகளே மூடப் படலாம் என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர். ஆக மொத்தத்தில் இந்த வருடம் (பல) வங்கிகளின் (இறுதி) வருடமாகவே இருக்கும் என்று தெரிகிறது.

இவ்வாறு வங்கிகள் மூடப் படுவதின் எதிரொலியை சென்ற வாரம் உலக சந்தைகளில் காண முடிந்தது. அமெரிக்க மற்றும் ஜப்பான் சந்தைகள் பல வருடங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ந்தன. இந்திய சந்தைகள் கூட பெருமளவுக்கு வீழ்ந்தன. குழப்பமான இந்த சூழ்நிலை காரணமாக வரலாறு காணாத அளவிற்கு தங்க விலை உயர்ந்தது.

இது போன்ற வங்கி வீழ்ச்சிகள் அமெரிக்க அரசின் நிதி நிலையில் கடும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. காரணம், ஒரு குறிப்பிட்ட அளவு வரை வைப்பு தொகைகள் அரசு நிறுவனங்களால் உறுதி அளிக்கப் படுகின்றன.இதன் காரணமாக, மூடப் பட்ட வங்கிகளின் வாடிக்கையாளர்களுக்கு அரசு நிறுவனங்களே வைப்புத் தொகையை திருப்பி தர வேண்டியிருக்கிறது. இதனால், டாலர் கரன்சி அச்சடிப்பு அதிகமாகி, உலகம் முழுக்க ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

மொத்தத்தில் உலக பொருளாதார நிலை இப்போதைக்கு திருப்திகரமாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

நன்றி.

Comments

நம் ஊரில் பல அடமான கம்பனிகளும், பைனான்ஸ் கம்பனிகளும் மூடி மூடி மக்களுக்கு பழகி விட்டதால் பிரச்னை இல்லை. அங்கே இது புதுசு. ஐயோ பாவம்.
Maximum India said…
அன்புள்ள பொதுஜனம்

பின்னூட்டத்திற்கு நன்றி

//நம் ஊரில் பல அடமான கம்பனிகளும், பைனான்ஸ் கம்பனிகளும் மூடி மூடி மக்களுக்கு பழகி விட்டதால் பிரச்னை இல்லை. அங்கே இது புதுசு. ஐயோ பாவம்.//

நம்மூர் கோமணாண்டிகளுக்கும் அமெரிக்க "கோட்"டான்களுக்கும் பண விஷயத்தில் அதிக வித்தியாசம் இல்லை என்று இப்போது நிருபனமாகி உள்ளது. :)

நன்றி

மூர்
KARTHIK said…
// இதே வேகத்தில் சென்றால் இந்த ஆண்டு மூடப் படும் அமெரிக்க வங்கிகளின் எண்ணிக்கை செஞ்சுரி அடித்து விடும் என்று பொருளாதார வல்லுனர்கள்.//

அப்போ இதுக்கு முடிவே கிடையாதா.

இவனுங்க இழுத்து சாத்த சாத்த தங்கம் விலை வேற மேல போயிகிட்டே இருக்குமே.டாலர் வேற சகட்டு மேனிக்கு அடிச்சுத்தல்லுவானுங்க.

என்னமோ நடக்குரது நடக்கட்டும்.
Maximum India said…
அன்புள்ள கார்த்திக்

பின்னூட்டத்திற்கு நன்றி

//இவனுங்க இழுத்து சாத்த சாத்த தங்கம் விலை வேற மேல போயிகிட்டே இருக்குமே.டாலர் வேற சகட்டு மேனிக்கு அடிச்சுத்தல்லுவானுங்க.//

நீங்கள் சொல்வது உண்மைதான். இந்த நிலை தொடர்ந்தால் இதுவரை கொஞ்சம் தாக்குப்பிடித்த இதர உலக பொருளாதாரங்களும் (இந்தியா உட்பட) இனிமேல் கடுமையாக பாதிக்கப் படும்.

//என்னமோ நடக்குரது நடக்கட்டும்//

ஆம். இந்த மனநிலை இப்போதைக்கு எல்லாருக்கும் தேவைப் படுகிறது.
அத்ற்குள் கொஞ்சம்தங்கம் விலை இறங்கி எனக்கு கை கொடுத்தால் பரவாயில்லை, அதன் பிறகு அமெரிக்கா எப்படி நாசமாய் போனாலும் பரவாயில்லை, இல்லையேல் என் டவுசர் அவ்வளவு தான்.
Maximum India said…
அன்புள்ள வால்பையன்

பின்னூட்டத்திற்கு நன்றி

//அத்ற்குள் கொஞ்சம்தங்கம் விலை இறங்கி எனக்கு கை கொடுத்தால் பரவாயில்லை, அதன் பிறகு அமெரிக்கா எப்படி நாசமாய் போனாலும் பரவாயில்லை, இல்லையேல் என் டவுசர் அவ்வளவு தான்//

அமெரிக்க பொருளாதாரத்தில் கொஞ்சம் தெளிவு ஏற்பட்டால், கச்சா எண்ணெய்க்கு ஏற்பட்ட கதிதான் தங்கத்திற்கும்.ஆனால், அமெரிக்காதான் சாண் ஏறினால் முழ சறுக்கம் என்ற நிலையில் உள்ளதே? :)

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

தீவிரவாதிகளை வென்ற கதை - இந்திய கமாண்டோவின் விளக்கம்

நேற்று ஒரு தீவிரவாதி பிடிப் பட்ட கதை பார்த்தோம். இன்று தாஜ் ஹோட்டலில் எவ்வாறு நான்கு தீவிரவாதிகள் ஒழிக்கப் பட்டனர் என்று விளக்கும் இந்திய கமாண்டோவின் விளக்கத்தை பார்ப்போம். முதலில் இந்தியா கமாண்டோக்கள் தாஜ் ஹோட்டல் வந்த கதை புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் மும்பையை பயங்கரவாதம் தாக்கியது. அப்போது கேரளாவில் இருந்த மகாராஷ்டிர முதல்வர் மும்பை வரவும் இந்த சூழ்நிலையின் பயங்கரத்தையும் முழுமையாக உணர்ந்துக் கொள்ளவும் 90 நிமிடம் பிடித்தது .பின்னர் 11.00 அளவில் மத்திய அரசிற்கு போன் பேசிய முதல்வர் கோரியது 200 கமாண்டோக்களை. உடனே அந்நேரத்தில் தூங்கி கொண்டிருந்த இந்திய கமாண்டோக்கள் எழுப்பப் பட்டனர். அவர்கள் மும்பை வரத் தயாரான போதுதான் புரிந்தது, அவ்வளவு பேரை மும்பை கொண்டுவர தேவையான சிறப்பு விமானம் சண்டிகரில் உள்ளது என்று. உடனே அந்த விமானியையும் தூக்கத்தில் இருந்து எழுப்பி தயார் படுத்தி டெல்லியிலிருந்து கமாண்டோக்கள் மும்பை வந்த போது நேரம் காலை 5.25 மணி. அவர்கள் தாஜ் ஹோட்டலுக்கு கொண்டு வரப்பட்டு திட்டம் தயாரிக்கப் பட்டு அவர்கள் தாஜ் ஹோட்டலுக்குள் நுழைந்த போது நேரம் காலை 7.00 மணி. அதாவது மும்பை தாக்கப் ப...

கம்ப்யூட்டர் கட்சியும் கால்குலேட்டர் கட்சியும்!

மத்திய கல்வி அமைச்சர் கபில் சிபல் இந்தியா முழுவதும் அனைவரும் தாய்மொழியுடன் ஹிந்தியும் படிக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்துள்ளார். இவ்வாறு அனைவரும் ஹிந்தி படிப்பதன் மூலம் நாட்டில் ஒருமைப்பாடு ஏற்படுவதுடன் ஹிந்தியை ஆங்கிலம் போன்று ஒரு "அறிவு மொழியாக (lingua franca)" மாற்ற முடியும் என்றும் கூறியுள்ளார். இந்த கருத்தின் மீது பதிவுலகில் ஏராளமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆங்கிலம் மட்டுமே போதும் என்று ஒரு கட்சியும், ஆங்கிலம் வாசலாக இருக்கும் போது ஹிந்தி ஒரு சன்னலாக இருந்து விட்டு போகட்டுமே என்று இன்னொரு கட்சியும் விவாதித்து வருகின்றன. ஹிந்தி எதிர்ப்பு என்பது எப்போதுமே ஒரு உணர்வு பூர்வமான விஷயமாகவே பலராலும் கருதப் பட்டாலும், அதற்கு அறிவு பூர்வமான, சரித்திர பூர்வமான சில அடிப்படைகள் உண்டு. ஹிந்தி திணிப்பு மற்றும் ஹிந்தி எதிர்ப்பு பற்றி எனக்கு தெரிந்த சில கருத்துக்களை இங்கு ஒரு புனைவு வடிவில் அளிக்க முயற்சிக்கிறேன். இப்போது புனைவு ! ஒரு காலத்தில் பரதம்பட்டி என்ற ஒரு கிராமம் இருந்ததாம். அங்கு பல ஆண்டுகள் வரை ஆட்சி செய்து வந்த துரை மகாராஜா ஒரு காலத்தில், அந்த கிராமத்தை ஜனநாயக ...