Skip to main content

வெள்ளி கிழமைகளும் அமெரிக்க வங்கிகளும்

வெள்ளிக் கிழமை ராமசாமி கதை கேள்விப் பட்டிருப்பீர்கள். வெள்ளிக் கிழமைக்கும், அமெரிக்க வங்கிகளுக்கும் ஏதோ ஒத்து வருவதில்லை. என்னவென்று பார்ப்போமா?

அமெரிக்காவில் வார இறுதி நாளான வெள்ளிக் கிழமை வங்கிகள் மூடப் பட்டால், திங்கட் கிழமை மீண்டும் திறக்கப் படும் என்ற உத்தரவாதம் இல்லாத நிலை இப்போது காணப் படுகிறது. கடந்த ஆறு வாரங்களாக, தொடர்ச்சியாக ஒவ்வொரு வாரமும் வெள்ளிக் கிழமையானால், அலுவலக நேரம் முடிந்தவுடன், பல அமெரிக்க வங்கிகள் அதிகாரிகளால் கையகப் படுத்தப் பட்டுள்ளன.

கடந்த ஆண்டு (2008) முழுதும் அமெரிக்காவில் மூடப் பட்ட வங்கிகளின் எண்ணிக்கை 25. இந்த ஆண்டில் இன்னும் இரண்டு மாதங்கள் கூட முடிவடையாத நிலையில் மூடப் பட்டுள்ள வங்கிகளின் எண்ணிக்கை 14. இதே வேகத்தில் சென்றால் இந்த ஆண்டு மூடப் படும் அமெரிக்க வங்கிகளின் எண்ணிக்கை செஞ்சுரி அடித்து விடும் என்று பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். சென்ற ஆண்டு 25 வங்கிகள் மூடப் பட்டாலும். அவற்றில் பெரிய வங்கிகள் இரண்டு மட்டுமே.ஆனால் இந்த வருடம் பல பெரிய வங்கிகளே மூடப் படலாம் என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர். ஆக மொத்தத்தில் இந்த வருடம் (பல) வங்கிகளின் (இறுதி) வருடமாகவே இருக்கும் என்று தெரிகிறது.

இவ்வாறு வங்கிகள் மூடப் படுவதின் எதிரொலியை சென்ற வாரம் உலக சந்தைகளில் காண முடிந்தது. அமெரிக்க மற்றும் ஜப்பான் சந்தைகள் பல வருடங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ந்தன. இந்திய சந்தைகள் கூட பெருமளவுக்கு வீழ்ந்தன. குழப்பமான இந்த சூழ்நிலை காரணமாக வரலாறு காணாத அளவிற்கு தங்க விலை உயர்ந்தது.

இது போன்ற வங்கி வீழ்ச்சிகள் அமெரிக்க அரசின் நிதி நிலையில் கடும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. காரணம், ஒரு குறிப்பிட்ட அளவு வரை வைப்பு தொகைகள் அரசு நிறுவனங்களால் உறுதி அளிக்கப் படுகின்றன.இதன் காரணமாக, மூடப் பட்ட வங்கிகளின் வாடிக்கையாளர்களுக்கு அரசு நிறுவனங்களே வைப்புத் தொகையை திருப்பி தர வேண்டியிருக்கிறது. இதனால், டாலர் கரன்சி அச்சடிப்பு அதிகமாகி, உலகம் முழுக்க ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

மொத்தத்தில் உலக பொருளாதார நிலை இப்போதைக்கு திருப்திகரமாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

நன்றி.

Comments

நம் ஊரில் பல அடமான கம்பனிகளும், பைனான்ஸ் கம்பனிகளும் மூடி மூடி மக்களுக்கு பழகி விட்டதால் பிரச்னை இல்லை. அங்கே இது புதுசு. ஐயோ பாவம்.
Maximum India said…
அன்புள்ள பொதுஜனம்

பின்னூட்டத்திற்கு நன்றி

//நம் ஊரில் பல அடமான கம்பனிகளும், பைனான்ஸ் கம்பனிகளும் மூடி மூடி மக்களுக்கு பழகி விட்டதால் பிரச்னை இல்லை. அங்கே இது புதுசு. ஐயோ பாவம்.//

நம்மூர் கோமணாண்டிகளுக்கும் அமெரிக்க "கோட்"டான்களுக்கும் பண விஷயத்தில் அதிக வித்தியாசம் இல்லை என்று இப்போது நிருபனமாகி உள்ளது. :)

நன்றி

மூர்
KARTHIK said…
// இதே வேகத்தில் சென்றால் இந்த ஆண்டு மூடப் படும் அமெரிக்க வங்கிகளின் எண்ணிக்கை செஞ்சுரி அடித்து விடும் என்று பொருளாதார வல்லுனர்கள்.//

அப்போ இதுக்கு முடிவே கிடையாதா.

இவனுங்க இழுத்து சாத்த சாத்த தங்கம் விலை வேற மேல போயிகிட்டே இருக்குமே.டாலர் வேற சகட்டு மேனிக்கு அடிச்சுத்தல்லுவானுங்க.

என்னமோ நடக்குரது நடக்கட்டும்.
Maximum India said…
அன்புள்ள கார்த்திக்

பின்னூட்டத்திற்கு நன்றி

//இவனுங்க இழுத்து சாத்த சாத்த தங்கம் விலை வேற மேல போயிகிட்டே இருக்குமே.டாலர் வேற சகட்டு மேனிக்கு அடிச்சுத்தல்லுவானுங்க.//

நீங்கள் சொல்வது உண்மைதான். இந்த நிலை தொடர்ந்தால் இதுவரை கொஞ்சம் தாக்குப்பிடித்த இதர உலக பொருளாதாரங்களும் (இந்தியா உட்பட) இனிமேல் கடுமையாக பாதிக்கப் படும்.

//என்னமோ நடக்குரது நடக்கட்டும்//

ஆம். இந்த மனநிலை இப்போதைக்கு எல்லாருக்கும் தேவைப் படுகிறது.
அத்ற்குள் கொஞ்சம்தங்கம் விலை இறங்கி எனக்கு கை கொடுத்தால் பரவாயில்லை, அதன் பிறகு அமெரிக்கா எப்படி நாசமாய் போனாலும் பரவாயில்லை, இல்லையேல் என் டவுசர் அவ்வளவு தான்.
Maximum India said…
அன்புள்ள வால்பையன்

பின்னூட்டத்திற்கு நன்றி

//அத்ற்குள் கொஞ்சம்தங்கம் விலை இறங்கி எனக்கு கை கொடுத்தால் பரவாயில்லை, அதன் பிறகு அமெரிக்கா எப்படி நாசமாய் போனாலும் பரவாயில்லை, இல்லையேல் என் டவுசர் அவ்வளவு தான்//

அமெரிக்க பொருளாதாரத்தில் கொஞ்சம் தெளிவு ஏற்பட்டால், கச்சா எண்ணெய்க்கு ஏற்பட்ட கதிதான் தங்கத்திற்கும்.ஆனால், அமெரிக்காதான் சாண் ஏறினால் முழ சறுக்கம் என்ற நிலையில் உள்ளதே? :)

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

நரேந்திர மோடி நாடாளலாமா?

சமீபத்தில் நடைபெற்ற குஜராத் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கார்பொரட் கனவான்களான அனில் அம்பானி மற்றும் சுனில் மிட்டல் ஆகியோர் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர். காரியம் ஆக வேண்டும் என்றால் என்ன வேண்டுமானாலும் பேசக் கூடியவர்கள் நமது தொழில் அதிபர்கள் என்பதனால் அவர்களின் பேச்சுக்கு அவ்வளவு மரியாதை கொடுக்க வேண்டியதில்லை. இவர்களைப் போன்றவர்களால் ஏற்கனவே நாடாள தகுதி பெற்றவர் என்று கூறப் பட்ட சந்திர பாபு நாயுடு அடுத்த சட்ட மன்ற தேர்தலில் தனது முதலமைச்சர் பதவியினையே இழந்தது குறிப்பிடத் தக்கது. தொழில் அதிபர்கள் பேச்சினை பா.ஜ.கவே ஏற்றுக் கொள்ளாத பட்சத்திலும் கூட, தீவிரவாதத்தை ஒடுக்கி குஜராத் மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்து சென்றவர் நரேந்திர மோடி என்றும் அவர் இந்தியாவின் பிரதமர் ஆவது நாட்டுக்கு நல்லது என்றும் பலராலும் கருதப் படுவதால், நரேந்திர மோடியின் செயல்பாடு பற்றியும் அவர் பிரதமர் ஆகலாமா என்பது பற்றியும் பிரதமராக அவர் ஏற்றுக் கொள்ளப் படுவாரா என்பதைப் பற்றியும் இங்கு பார்ப்போம். இன்றைய தேதியில் இந்தியாவிலேயே மிகுந்த முன்னேற்றம் அடைந்த ஒரு மாநிலமாக குஜரா...

NHPC நிறுவன பங்கு வெளியீடு (IPO) - முதலீடு செய்யலாமா?

வெகு நாட்களுக்கு பிறகு ஒரு அரசு நிறுவனத்தின் அதுவும் ஒரு மினி-ரத்னா தகுதி கொண்ட ஒரு பெரிய நிறுவனத்தின் பங்குகள் சந்தையில் புதிதாக வெளியிடப் பட உள்ளன. இந்த நிறுவனத்தைப் பற்றியும் ]பங்கின் விலை நிர்ணயம் பற்றியும் சில தகவல்கள் பகிர்தலுக்காக இங்கே. NHPC அதாவது தேசிய நீர்மின் உற்பத்தி நிறுவனம் 1975 ஆம் ஆண்டு நாட்டின் நீர்சக்தியை திறம்பட உபயோகிப்பதற்கான நோக்கத்துடன் உருவாக்கப் பட்டது. இந்த நிறுவனம் இது வரை 13 மின் உற்பத்தி நிலையங்களை அமைத்து சுமார் 5100 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி திறன் பெற்றுள்ளது. தற்போது 11 மின் உற்பத்தி நிலையங்களை புதிதாக அமைத்து வருவதன் மூலம் இந்த நிறுவனம் இன்னும் சில ஆண்டுகளில் சுமார் 4600 மெகாவாட் அளவுக்கு கூடுதலாக மின் உற்பத்தி திறனை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்க படுகிறது. இந்த பதினொரு மின் நிலையங்களில் ஏழு நிலையங்களின் மூலம் மட்டும் சுமார் 3240 மெகாவாட் அளவுக்கான மின்சாரம் பெப்ரவரி 2011 ஆம் ஆண்டுக்குள் உற்பத்தி செய்ய முடியும் என்றும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிறுவனம் இப்போது சுமார் 168 கோடி பங்குகளை ஏலக்கணக்கில் (BOOK BUILDING) சந்தையில் வெளியிடுகி...