Skip to main content

வாழ்க்கைக்குள் அடிக்கடி தொலைந்து போய் விடுகிறீர்களா ?

சரியான சாலை வசதி இல்லாத ஒரு அடர்த்தியான காட்டுக்குள் பயணம் செய்யும் நேரிடும் போது, ஒரு சரியான திசைமானி மற்றும வரைபடம் இருந்தால் மட்டுமே நம்மால் நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு சரியாக, சரியான நேரத்திற்குள் செல்ல முடியும். இல்லையென்றால், நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல முடியாதது ஒரு பக்கம், மறு பக்கம் நாம் பெரும் குழப்பத்திலும் அச்சத்திலும் ஆழ்ந்து விட வாய்ப்பு உள்ளது. இதனால், ஒரே இடத்தை சுற்றி சுற்றி வரவோ அல்லது முற்றிலும் மாறுபட்ட திசையில் சென்று விடவோ வாய்ப்பு உள்ளது.

நமது வாழ்க்கையை கூட ஒரு அடர்த்தியான காட்டுடன் ஒப்பிடலாம். வாழ்வின் பல்வேறு தருணங்களில் நாம் அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் சரியான திசை இன்றி வழி தெரியாமல் தடுமாறி விடுகிறோம். அப்போதெல்லாம், சரியான இலக்குகள் மற்றும அவற்றை அடைவதற்கான வழிமுறைகள் இல்லாவிடில் நாம் திருவிழா கூட்டத்தில் தொலைந்து போன ஒரு சிறுவனின் மனநிலையை அடைந்து விட வாய்ப்பு உள்ளது. இதனால் ஏற்படுவது பெரும் அச்சம் மற்றும பரிதவிப்பு. இந்த மாதிரியான தருணங்களில் நமது மூளை சரியாக வேலை மறுத்து விடுகிறது.

இத்தகைய பிரச்சினைகளில் இருந்து நாம் தப்பிக்க மனவியல் வல்லுனர்கள் தரும் யோசனை இது. "தொலை தூர இலக்குகளும் அவற்றை அடைவதற்கான திட்டமும் இருக்கும் பட்சத்தில் நாம் வாழ்க்கையில் தொலைந்து போவதிலிருந்து தப்பிக்க முடியும்."

ஆனால் தொலை தூர இலக்குகளை நிர்ணயிப்பதும் திட்டங்களை தீட்டுவது நம்மில் பலருக்கு மிகக் கடினமான காரியம். காரணம் சாமான்ய மனிதர்களுக்கு அத்தகைய திட்டமிடுதலுக்கு தேவையான தகவல்களும் (Data) எதிர்காலத்தை பற்றிய சரியான முன் கணிப்பும் (Forecasts) முழுமையாக கிடைப்பதில்லை. மேலும், மிகப் பெரிய வல்லுனர்களால், பல காலம் கடினமான உழைப்பில் உருவாக்கப் படும் திட்டங்களே பல சமயங்களில் தோல்வி அடைந்து விடுகின்றன. நம்மை போன்ற சாமான்யர்கள் என்ன செய்ய முடியும்?

நீண்ட கால பெரிய இலக்குகளை நிர்ணயிப்பதற்கு மற்றும் அவற்றை அடைவதற்கான திட்டங்களை தீட்டுவதற்கு முன்னர் நாம் செய்ய வேண்டிய சிறிய பரிசோதனை முயற்சி இது. (இன்றைக்கே தொடங்கி விடுதல் உத்தமம்) குறுகிய கால நோக்கில், சிறிய மற்றும் எளிதில் அடையக் கூடிய இலக்குகளை உங்களுக்கு நீங்களே நிர்ணயித்து கொள்ளுங்கள்.
உதாரணமாக, நாளை காலை 6.00 (முடியாவிட்டால் ஒரு 7.00) மணிக்கு படுக்கையை விட்டு எழுவோம் என்பது கூட ஒரு இலக்குதான். அந்த இலக்கை அடைய திட்டம் தீட்டுங்கள். அதாவது அலாரம் வைக்கலாம். இரவில் சீக்கிரமாக தூங்கலாம். இப்படி தீட்டிய திட்டம் வெற்றி பெறுவது நீங்கள் காலையில் எழுவதை பொறுத்தது.
அப்படி எழுந்து விட்டால், உங்களை நீங்களே பலமாக பாராட்டிக் கொள்ளுங்கள் (வேறு யார் வருவார் இதற்கெல்லாம் பாராட்ட) . எப்படி பாராட்டுவது என்றால், "டே (உங்கள் பெயர்) நீ உண்மையிலேயே பெரிய ஆளுடா. சாதிச்சுட்டடா " பக்கத்தில் யாரும் இல்லையென்றால் வாய் விட்டு சத்தமாக கூட பாராட்டிக் கொள்ளலாம். (பாராட்டி விட்டு மறுபடியும் தூங்க போய் விடக் கூடாது). ஒருவேளை வெற்றி பெறா விட்டால் (அடுத்த நாள்) முயற்சியை தளர விடாதீர்கள். இறுதி வரை போராடுங்கள், அடைவதற்கான புதிய வழிகளை தேடுங்கள். நாள் முழுதும் அதற்காகவே யோசித்துக் கொண்டிருங்கள்.

முதல் திட்டம் வெற்றி பெற்ற பிறகு புதிய இலக்குகளை நிர்ணயித்து கொள்ளலாம்.உதாரணம், அரை மணி நேர நடை பயிற்சி, உடற்பயிற்சி அல்லது மன பயிற்சி, ஒரு குறிப்பிட்ட புத்தகம் படித்து முடிப்பது, அலுவலகத்திற்கு நேரத்திற்கு செல்வது, பிடித்த ஊருக்கு அல்லது சினிமாவிற்கு செல்வது இப்படி எது வேண்டுமானாலும் இருக்கலாம். ஒரே ஒரு நிபந்தனை. இலக்கு அடையக் கூடியதாகவும் அதனை அடைவதற்கான திட்ட வழி முறைகள் எளிமையானதாகவும் இருக்க வேண்டும். ஒவ்வொரு இலக்கை அடைந்த பிறகும் நீங்கள் அதனை (உங்களுக்கு பிடித்த அல்லது முடிந்த வரை) கொண்டாடுவதும் மிகவும் அவசியம்.

இந்த பயிற்சிகள் முதல் பார்வையில் வேடிக்கையாக தோன்றலாம். ஆனால் இவை உளவியல்ரீதியானவை. இவற்றால் நாம் அடையக் கூடிய பயன்கள் கீழே.
இலக்குகளை நிர்ணயிக்கவும் திட்டங்களை தீட்டவும் மனம் பழகிக் கொள்கிறது. நாம் அடையும் சிறு சிறு வெற்றிகள் மூலம் நமக்கு புதிய தன்னம்பிக்கையும் மகிழ்ச்சியும் கிடைக்கிறது. இந்த வெற்றிகள் நம்மை புதிய மற்றும் பெரிய இலக்குகள் நிர்ணயிப்பதற்கான உற்சாகத்தைக் கொடுக்கிறது. சிறிய திட்டங்களை தீட்ட நாம் மேற்கொண்ட பயிற்சி பெரிய திட்டங்களை சிறப்பாக தீட்ட உதவுகிறது. சில சமயங்களில் இவை நம்முடைய நீண்ட கால நோக்கம் என்ன என்பதைக் கூட நம்மை உணரச் செய்ய உதவுகின்றன. வெற்றிகளை நாம் கொண்டாடுவது மிகவும் அவசியம் என்று சொன்னேன் அல்லவா? ஏனென்றால், நம்முடைய லட்சியங்களின் வெற்றி முதலில் நமக்கு திருப்தி அளிக்க வேண்டும். மற்றவர்களின் பாராட்டையோ அங்கீகாரத்தையோ எதிர்பார்த்திருக்கக் கூடாது. அவ்வாறு எதிர்பார்த்திருந்து ஒரு வேளை பாராட்டு வெளியிலிருந்து கிடைக்காத பட்சத்தில் மனம் தளர்ந்து விடும்.

இப்படி நீங்கள் இலக்குகளும், அவற்றை அடைவதற்கான முயற்சிகளும், முயற்சிகளில் வெற்றி பெற்றதற்கான மகிழ்ச்சிகளும் கொண்ட மனிதராக இருக்கும் பட்சத்தில், வாழ்க்கைக்குள் நீங்கள் எங்கே தொலைய போகிறீர்கள்? வாழ்க்கையை எப்போதும் துரத்தும் மனிதராக அல்லவா இருப்பீர்கள்?
எங்கே கிளம்பி விட்டீர்கள்? முதல் இலக்கை நிர்ணயிக்கத்தானே?

நன்றி.

Comments

உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்...பாடல் நினைவு வருகிறது.மனதை கட்டுக்குள் கொண்டு வந்தால் எதனையும் வெல்லாம்...கட்டுரை அருமை.

வாழ்க வளமுடன்,
வேலன்.
Unknown said…
சூப்பர்..வழக்கம் போல உபயோகமான பதிவு....நான் இன்றிலிருந்தே ஆரம்பிக்கிறேன்!!!!!
இந்த 6 மணிக்கு எழுந்திருக்கவேண்டும் எல்லாம் சரி.ஆனால் 6 மணிக்கு தூக்கம் கலைந்தவுடனே இன்னும் ஒரு 5 நிமிசம்,இன்னும் ஒரு 5 நிமிசம் சுகமிருக்கிறதே:)
Maximum India said…
பின்னூட்டத்திற்கு நன்றி வேலன்
Maximum India said…
பின்னூட்டத்திற்கு நன்றி கமல்

வாழ்த்துக்கள்
Maximum India said…
பின்னூட்டத்திற்கு நன்றி வேலன்

//உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்...பாடல் நினைவு வருகிறது.மனதை கட்டுக்குள் கொண்டு வந்தால் எதனையும் வெல்லாம்...//

நீங்கள் சொல்வது சரி. எனக்கும் இந்த பாடல் வரிகள் மிகவும் பிடிக்கும்
DG said…
நான் படித்தில் மிகவும் பிடித்த பதிவு இது இதில் குறிப்பிட்ட பகுதியை மட்டும் மேற்கோள்
காட்ட முடியவில்லை பதிவில் உள்ள 518 எழுதுக்களும் சிறப்பானவை எப்படிங்க நம்ம முதல் இலக்கு நான் எழுத்துக்களை எண்ணாமல் மொத்த எழுத்துக்களை கண்டுபிடித்தேன் எப்படி என்று சொல்லுகளேன்
Maximum India said…
அன்புள்ள ராஜ நடராஜன்

பின்னூட்டத்திற்கு நன்றி

//இந்த 6 மணிக்கு எழுந்திருக்கவேண்டும் எல்லாம் சரி.ஆனால் 6 மணிக்கு தூக்கம் கலைந்தவுடனே இன்னும் ஒரு 5 நிமிசம்,இன்னும் ஒரு 5 நிமிசம் சுகமிருக்கிறதே:)//

அபப நீங்க 5.30 மணிக்கே அலாரம் வச்சுட வேண்டியதுதான் :)
Maximum India said…
அன்புள்ள dg

பின்னூட்டத்திற்கு நன்றி

//நான் படித்தில் மிகவும் பிடித்த பதிவு இது இதில் குறிப்பிட்ட பகுதியை மட்டும் மேற்கோள்
காட்ட முடியவில்லை பதிவில் உள்ள 518 எழுதுக்களும் சிறப்பானவை எப்படிங்க நம்ம முதல் இலக்கு நான் எழுத்துக்களை எண்ணாமல் மொத்த எழுத்துக்களை கண்டுபிடித்தேன் எப்படி என்று சொல்லுகளேன் //

நானும் கூட இந்த பதிவை மிகவும் விரும்பி ரசித்தும் கூட சில நாட்களுக்கு முன்னரே எழுதினேன். ஆனால் மும்பை பிரச்சினையினால் பதிவிட கொஞ்சம் காலதாமதம் ஆகி விட்டது.

உங்கள் முதல் இலக்கில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள். மேலும் வெற்றிகள் பல பெறவும் வாழ்த்துக்கள்.

எப்படி கண்டுபிடித்தீர்கள்? கொஞ்சம் சொல்லுங்களேன். :)
DG said…
wordpress word count ல சார். இலக்கிலும் குறுக்குவழி என்ன பண்ண நம் ( நாமன்னு சொல்லலாம்ல) மனது அப்படி பழகி விட்டது.
Maximum India said…
அன்புள்ள DG

//இலக்கிலும் குறுக்குவழி என்ன பண்ண நம் ( நாமன்னு சொல்லலாம்ல) மனது அப்படி பழகி விட்டது. //

இது குறுக்கு வழி அல்ல. எளிய வழி. அவ்வளவே. கலக்குங்க. :)
//அபப நீங்க 5.30 மணிக்கே அலாரம் வச்சுட வேண்டியதுதான் :)//

அதைத்தானே செய்கிறேன்!5.30 முதல் 10 நிமிடத்துக்கொரு முறை அலாரத்தின் தலையில் தட்டி கடைசியில் 6.10 க்குப் போனாப் போகுதுன்னு எழுந்திருக்கிறதுதான்.

எப்படியோ இனிமேல் எனக்கு நானே ஒரு சபாஷ் போட்டுக்கொள்ளப் போகிறேன்:)
Maximum India said…
அன்புள்ள ராஜநடராஜன்

//எப்படியோ இனிமேல் எனக்கு நானே ஒரு சபாஷ் போட்டுக்கொள்ளப் போகிறேன்:)//

கவலைப் படாதேங்க. உங்களுக்கு நானும் ஒரு சபாஷ் போடறேன் :)

நன்றி
KARTHIK said…
//(பாராட்டி விட்டு மறுபடியும் தூங்க போய் விடக் கூடாது).//

அதைத்தானே தெனமும் செய்யுறோம் :-))

// ராஜ நடராஜன் said...
இந்த 6 மணிக்கு எழுந்திருக்கவேண்டும் எல்லாம் சரி.ஆனால் 6 மணிக்கு தூக்கம் கலைந்தவுடனே இன்னும் ஒரு 5 நிமிசம்,இன்னும் ஒரு 5 நிமிசம் சுகமிருக்கிறதே:) //

சரியா சொன்னீங்க நட்டு.எனக்கு இப்படி 5 நிமிஷம் கடந்து கடந்து ஒரு வழியா 8 மணிக்கு தான் தூக்கம் தெளியும்.

நல்ல ரசிக்கும்படியான பதிவு
Maximum India said…
அன்புள்ள கார்த்திக்

பின்னூட்டத்திற்கு நன்றி

//நல்ல ரசிக்கும்படியான பதிவு //

ரசித்ததோட நிறுத்திடாதீங்க, கொஞ்சம் முயற்சி பண்ணுங்க :)
ஆதவன் said…
வணக்கம்
நாங்கள் தமிழ் ஸ்டுடியோ.காம் எனும் குறும்படங்களுக்கான இணைய தளம் ஒன்றை நடத்தி வருகிறோம். எங்களுக்கு உங்கள் ப்ளாகில் ஒரு இணைப்பு தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் தளத்தியா பாருங்கள் பயனுள்ளவை எனக் கருதினால் இணைப்பு கொடுங்கள்.

http://www.thamizhstudio.com/

Add a Gadget - ல் இதை பயன்படுத்துக

வழி –> Add a Gadget –> select HTML/JavaScript

Title : தமிழ் ஸ்டுடியோ.காம்

Content : img alt=”தமிழ் ஸ்டுடியோ.காம்” src=”http://thamizhstudio.com/images/home_stud_logo.jpg”/>
DHANS said…
எனக்கு பிடித்த பதிவு

நன்றாக இருந்தது,
Maximum India said…
அன்புள்ள dhans

உங்களது பின்னூட்டத்திற்கு நன்றி. எனக்குக் கூட மிகவும் பிடித்த பதிவு இது. :)
தொலைந்து போகவிருக்கும் வாழ்கையை இக்கட்டுரை மீட்டெடுத்து தரவல்லது ..... நம்பிக்கையை வளர்க்கிறது.... நன்றி....
Maximum India said…
அன்புள்ள அட்வகேட் ஜெயராஜன் ஐயா

//தொலைந்து போகவிருக்கும் வாழ்கையை இக்கட்டுரை மீட்டெடுத்து தரவல்லது ..... நம்பிக்கையை வளர்க்கிறது.... நன்றி....//

பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி
நல்ல பதிவு..ஆரம்பிக்கப்போகிறேன்..
Maximum India said…
// நல்ல பதிவு..ஆரம்பிக்கப்போகிறேன்//

நல்லது கண்ணகி! வாழ்த்துக்கள்!

:)

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

நரேந்திர மோடி நாடாளலாமா?

சமீபத்தில் நடைபெற்ற குஜராத் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கார்பொரட் கனவான்களான அனில் அம்பானி மற்றும் சுனில் மிட்டல் ஆகியோர் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர். காரியம் ஆக வேண்டும் என்றால் என்ன வேண்டுமானாலும் பேசக் கூடியவர்கள் நமது தொழில் அதிபர்கள் என்பதனால் அவர்களின் பேச்சுக்கு அவ்வளவு மரியாதை கொடுக்க வேண்டியதில்லை. இவர்களைப் போன்றவர்களால் ஏற்கனவே நாடாள தகுதி பெற்றவர் என்று கூறப் பட்ட சந்திர பாபு நாயுடு அடுத்த சட்ட மன்ற தேர்தலில் தனது முதலமைச்சர் பதவியினையே இழந்தது குறிப்பிடத் தக்கது. தொழில் அதிபர்கள் பேச்சினை பா.ஜ.கவே ஏற்றுக் கொள்ளாத பட்சத்திலும் கூட, தீவிரவாதத்தை ஒடுக்கி குஜராத் மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்து சென்றவர் நரேந்திர மோடி என்றும் அவர் இந்தியாவின் பிரதமர் ஆவது நாட்டுக்கு நல்லது என்றும் பலராலும் கருதப் படுவதால், நரேந்திர மோடியின் செயல்பாடு பற்றியும் அவர் பிரதமர் ஆகலாமா என்பது பற்றியும் பிரதமராக அவர் ஏற்றுக் கொள்ளப் படுவாரா என்பதைப் பற்றியும் இங்கு பார்ப்போம். இன்றைய தேதியில் இந்தியாவிலேயே மிகுந்த முன்னேற்றம் அடைந்த ஒரு மாநிலமாக குஜரா...

இந்தியா தாக்குப் பிடிக்குமா?

இன்றைய உலகப் பொருளாதாரத் தேக்க நிலையில், இந்தியாவால் தாக்குப் பிடிக்க முடியுமா என்பது பற்றி பார்ப்போம். சமீபத்தில் வெளியிடப் பட்ட மத்திய புள்ளியல் (மத்திய அரசு) நிறுவனத்தின் மதிப்பீட்டின் படி இந்தியப் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 7.1 சதவீதம் வளர்ச்சியுறும் என்று தெரிகிறது. இது சரியாக இருக்கும் பட்சத்தில் உலகிலேயே இரண்டாவதாக வேகமாக வளர்ச்சியுறும் நாடு இந்தியாவாகத்தான் இருக்கும் (சீனா முதலாவது). சென்ற ஆண்டில் ஒன்பது சதவீதம் வளர்ச்சி பெற்றிருந்த இந்தியப் பொருளாதாரம் செப்டம்பர் 2008 வரையிலான முதல் அரையாண்டில் 7.80% வளர்ச்சிப் பெற்றிருந்தது. பொதுவாகவே பண்டிகைக் காலமாக கருதப் படுகிற இரண்டாவது அரையாண்டே தொழிற் துறையில் அதிக வளர்ச்சியைக் காட்டும் என்றாலும் இந்த முறை இந்தியத் தொழில் துறை பெரும் தேக்க நிலையில் இருந்து வந்திருக்கிறது என்பது கவனிக்கத் தக்கது. இந்திய தொழிற் வளர்ச்சி கடந்த இரு மாதங்களாக மிகவும் குறைந்து காணப் படுவதாலும் ஏற்றுமதியோ இறங்குமுகத்தில் இருப்பதாலும் இந்திய அரசாங்கம், மார்ச் 2009 வரையிலான நிதி ஆண்டின் இரண்டாவது அரையாண்டில் நமது பொருளாதாரம் குறைந்த வளர்ச்சியே (6.30%) இரு...