Skip to main content

கிரியா ஊக்கிகள் பலன் தருமா?

கடந்த சில வருடங்களாக மிக வேகமான வளர்ச்சியைச் சந்தித்த நமது பொருளாதாரம் இப்போது தளர்வுறும் நிலையில் உள்ளது. மீண்டும் பொருளாதாரத்தை செழிப்புற செய்ய இந்திய அரசாங்கம் மற்றும் தலைமை வங்கி சில நடவடிக்கைகளை அறிவித்துள்ளன. அவை பற்றியும் சந்தை போக்குகள் குறித்தும் இங்கு பார்போம்.

இந்திய அரசு சுமார் மூன்று லட்சம் கோடி முதலீடுகள் மற்றும் செலவுகள் செய்யப் படும் என்று அறிவித்துள்ளது. மேலும் நான்கு சதவீத சென்வாட் வரி குறைப்பு, ஏற்றுமதி சலுகைகள் ஆகியவற்றை அறிவித்துள்ளது. (முழு அறிக்கையை படிக்க இங்கே சொடுக்கவும்) இந்திய தலைமை வங்கியும் (RBI) தன் பங்குக்கு வட்டி வீத குறைப்பு, வீட்டு கடன் வழங்குவதில் விதி முறைகளை தளர்த்துதல் போன்ற நடவடிக்கைகள் எடுத்துள்ளது. (முழு அறிக்கையை படிக்க இங்கே சொடுக்கவும்) இந்த நடவடிக்கைகள் இந்திய பொருளாதாரத்தில் மற்றும் சந்தைகளில் ஏற்படுத்தக் கூடிய மாற்றங்கள் குறித்து விரிவான அலசல் விரைவில். இப்போதைக்கு வரும் வார சந்தை மாற்றங்கள் குறித்து மட்டும் அலசுவோம்.

கடந்த வாரம் சிறப்பான துவக்கத்தை சந்தித்த பங்கு சந்தை அதனை தக்க வைத்துக் கொள்ள முடியாமல் போய் விட்டது. காரணம், உலக அளவில் முக்கியமாக அமெரிக்காவில் முன்னெப்போதும் இல்லாத பொருளாதார தேக்க நிலை உறுதிப்படுத்தப் பட்டிருப்பது. இதன் காரணமாக நமது மென்பொருட் துறையை சார்ந்த பங்குகள் பெரும் சரிவை கடந்த வாரம் சந்தித்தன. மாருதி நிறுவனத்தின் வாகன விற்பனை வீழ்ச்சியை சந்தித்தது, வாகன துறை பங்குகளுக்கு கடும் நெருக்கடியைக் கொடுத்தது. அதே சமயத்தில், வட்டி வீதம் குறைக்கப் படும் என்ற நம்பிக்கையில் வங்கி மற்றும் ரியல் எஸ்டேட் துறை பங்குகள் நல்ல முன்னேற்றம் கண்டன. டாட்டா ஸ்டீல் நிறுவனத்தின் சிறப்பான நிதி நிலை அறிக்கையால் உலோக துறையை சார்ந்த பங்குகள் பெரும் முன்னேற்றம் கண்டன. இவ்வாறு மாறுபட்ட பங்குகளின் போக்கினால், பங்கு சந்தை பெரிய ஏற்றத்தாழ்வுகளை சந்திக்க நேர்ந்தது. மேலும், வார அடிப்படையில் முக்கிய குறியீடுகள் சிறிது வீழ்ச்சியைக் கண்டன.

அதே சமயத்தில், கடந்த இருவாரங்களாக நான் குறிப்பிட்ட முக்கிய அரண் நிலையான (Support) 8900 புள்ளிகளுக்கு மேலேயே சென்றவாரமும் சென்செக்ஸ் முடிவடைந்திருப்பது நல்ல நம்பிக்கையை தருகிறது. கடந்த வாரம் பணவீக்கம் 8.40% ஆக குறைந்ததும் கட்சா எண்ணெய் நாற்பது டாலருக்கு கீழே வீழ்ச்சி அடைந்ததும் சந்தைக்கு நல்ல செய்திகளாகும். இந்திய அளவிலும் அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்பு அறிவித்திருப்பதால், பணவீக்கம் மேலும் குறையும் என்று எதிர்பார்க்கலாம். மேலும் அரசும் தலைமை வங்கியும் அறிவித்துள்ள கிரியா ஊக்கி திட்டங்கள் சந்தையின் நம்பிக்கையை அதிகரிக்கும் என்று நம்பலாம்.

விலை தொழிற்நுட்ப ஆராய்ச்சியின் (Technical Analysis) படி பங்கு சந்தைகள் வரும் வாரம் முன்னேற்றம் காணும் என்று நம்பப் படுகிறது. சென்செக்ஸ் குறியீடுக்கான எதிர்ப்பு நிலைகள் 9350, 9950, மற்றும் 10,200 எனும் நிலைகள். அரண் நிலைகள் 8350 மற்றும் 7600. 9350க்கு மேல் சந்தை முடிவடையும் பட்சத்தில் பங்கு வர்த்தகர்கள் மேல் செல்லும் நிலையை (long position) எடுத்துக் கொள்ளலாம்.

தலைமை வங்கி அறிவித்துள்ள வட்டி வீத குறைப்பால் பயன் பெறும் வங்கி, ரியல் எஸ்டேட் மற்றும் வாகனத் துறை பங்குகளில் முதலீட்டாளர்கள் கவனம் செலுத்தலாம். மேலும் அரசின் கட்டமைப்பு முதலீடுகளினால் பயன் பெறக் கூடிய கட்டுமானத் துறை, இயந்திர தயாரிப்பு துறை போன்றவற்றைச் சார்ந்த பங்குகளும் முன்னேற்றம் காணக் கூடும்.

இந்திய ருபாய் சந்தையும் சென்ற வாரம் மிகுந்த ஏற்றத் தாழ்வுகளை சந்திக்க நேர்ந்தது. மேற்சொன்ன காரணங்களினால், வரும் வாரம் இந்திய ரூபாய் அமெரிக்கா டாலருக்கு எதிராக முன்னேற்றம் காணும் வாய்ப்பு உள்ளது.

சந்தைகளில் சிறப்பாக செயல்படவும் வரும் வாரம் நல்ல வாரமாக அமையவும் வாழ்த்துக்கள்.

நன்றி

Comments

நம்பிக்கை தரும் தகவல்கள் ஆனாலும் மார்ச் வரை சந்தை பெரிதாக ஏற்றம் எதையும் சந்திக்காது என்று கேள்வி பட்டேன்.
ஒபெக் குழுமம் குரூட் ஆயில் உற்பத்தியை குறைக்க போகிறதாம்.
அதனால் மீண்டும் 75$ வரை பேரல் உயர வாய்புள்ளதால் இந்திய அரசு வெறும் 5 ருபாய் மட்டும் பெட்ரோல் விலையை குறைத்தது. ஆனால் இது வெறும் கண் துடைப்பே.

அரசு முதலாளித்துவத்தின் பாக்கெட்டில் தஞ்சம் புகுந்து விட்டது.

இவர்களின் பணவீக்க கணக்கு எதுவும் நம்பும்படியாக இல்லை. எந்த பொருளும் விலை குறைந்ததை போல் தெரியவில்லை.

விமான கட்டணம் குறைந்துள்ளதாமே
:)
Maximum India said…
அன்புள்ள வால்பையன்

பின்னூட்டத்திற்கு நன்றி.

//இவர்களின் பணவீக்க கணக்கு எதுவும் நம்பும்படியாக இல்லை. எந்த பொருளும் விலை குறைந்ததை போல் தெரியவில்லை.//

உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? அதிகமாக அறியப் படும் இந்த பணவீக்கம் மொத்தவிலை பணவீக்கமே (WPI). இது உற்பத்தியாளர்களுக்கும் தொழிற் நிறுவனங்களுக்குமே அதிகம் உபயோகப் படும். உங்களையும் என்னையும் போன்றவர்கள் கவனிக்க வேண்டியது மாதந்தோறும் வெளியாகும் நுகர்வோர் பணவீக்க விகிதம் (CPI). இது இதுவரை குறைந்த பாடில்லை.

மேலும், நம் நாட்டில் பணவீக்கம் கணக்கிடும் முறை அறுத பழசானது. இதில் மாற்றம் தேவை. இதை பற்றி ஒரு பெரிய பதிவே போடும் அளவுக்கு விஷயம் உள்ளது. நன்றி.

//விமான கட்டணம் குறைந்துள்ளதாமே//

முழம் ஏத்தி ஜான் அளவு குறைத்துளார்கள். மத்திய தர வர்க்கத்திற்கு ஏற்ற வகையில் சில வருடங்களுக்கு முன்னர் இருந்த விமானக் கட்டணங்கள் மீண்டும் எட்டாக் கனியாகி விட்டன.

நன்றி :)
pothujanam said…
இந்திய முதலீட்டாளர்களின் நம்பிக்கை வீண் போகாமல் இருந்தால் சரி. நிறுவனங்களும் சிக்கன நடவடிக்கை மேற்கொண்டு உற்பத்திக்கு தடங்கல் இல்லாத நிலையை தொடர வேண்டும். இந்தியர்கள் சூதாடிகள் அல்ல. கஷ்ப்பட்டு உழைத்த பணம் கண்டிப்பாக திரும்ப கிடைக்கும்.
Maximum India said…
அன்புள்ள பொதுஜனம்

//நிறுவனங்களும் சிக்கன நடவடிக்கை மேற்கொண்டு உற்பத்திக்கு தடங்கல் இல்லாத நிலையை தொடர வேண்டும்//

நீங்கள் சொல்வது போல வீன்செலவுகளை குறைக்க நிறுவனங்கள் முன் வர வேண்டும். உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? மூழ்கி கொண்டிருக்கும் அமெரிக்க வாகன நிறுவனங்களின் தலைவர்கள் அவற்றை மீட்டெடுக்கும் பரிந்துரைகளை அமெரிக்க பாராளுமன்றத்திடம் சமர்ப்பிக்க முதல் முறை தனி விமானத்தில் வந்தனர். கண்டனக் குரல்கள் எழுந்ததுடன் இரண்டாவது முறை சாலை பயணம் செய்து வந்தனர். இந்தியாவிலும் தொழிற் அதிபர்கள் சொந்த வாழ்வில் சிக்கனம் மேற்கொள்ள வேண்டும்.
DG said…
சார் பங்குவர்தகம் சூதாட்டம் என்கிறார்கள் சிலர் ,உண்மை அப்படியா ?
நான் கடந்த ஒரு மாதமாக தின வர்தகம் செய்கிறேன்.பங்குவர்தகம் எனக்கு
சூதாட்டமாக தெரியவில்லை. உங்களுடைய இந்த பதிவு நன்கு பயனுள்ளதாக உள்ளது.
Maximum India said…
அன்புள்ள dg

பின்னூட்டத்திற்கு நன்றி

//சார் பங்குவர்தகம் சூதாட்டம் என்கிறார்கள் சிலர் ,உண்மை அப்படியா ?//

நான் இது பற்றி ஒரு பதிவு போட்டிருக்கிறேன். பாருங்கள்.

(பங்குச் சந்தை குதிரைப் பந்தயக் களமா? ஒரு அலசல்)


//நான் கடந்த ஒரு மாதமாக தின வர்தகம் செய்கிறேன்.பங்குவர்தகம் எனக்கு
சூதாட்டமாக தெரியவில்லை.//

பங்கு சந்தையைப் பற்றி புரிந்து கொள்ள ஒரு மாதம் மிகக் குறைந்த காலமே. இன்னும் உங்களுக்கு நிறைய அனுபவம் கிடைக்க வேண்டும். பங்கு சந்தை இன்றைக்கு பல்வேறு காரணிகளால் பாதிக்கப் படுகிறது. இவை அனைத்தையும் அறிந்து கொண்டு செயல் படுவது மிகவும் கடினம். குறைந்த முதல் கொண்டு அதிக லாபம் விரைவில் சம்பாதிக்க ஆசைப் படும் எந்த தொழிலும் கிட்டத்தட்ட சூதாட்டம் போலவே ஆகும். நீங்கள் தின வர்த்தகம் செய்யும் பட்சத்தில் டெக்னிகல் அனலிசிஸ் துணை கொண்டு தகுந்த ஸ்டாப் லாஸ் லிமிட் வைத்துக் கொண்டு செயல் படுங்கள். தின வர்த்தகத்தில் (நீண்ட கால அடிப்படையில்) வெற்றி பெற்றவர்கள் மிகச் சிலரே. எனவே எச்சரிக்கையாக செயல் படுங்கள்.

உங்களுடைய இந்த பதிவு நன்கு பயனுள்ளதாக உள்ளது.
DG said…
நான் சாய் சார் உதவி உடன் செயல்படுகிறேன்.நான் கடந்த 1 வருடமாக சந்தை இல் உள்ளேன் .தற்பொழுது தான் தின வர்த்தகத்தில் ஈடுபடுகிறேன்.
http://top10shares.wordpress.com/
Maximum India said…
அன்புள்ள dg

நானும் கூட இந்த வலைதளத்தை பார்த்துள்ளேன். சிறப்பாகவே உள்ளது.

என்னுடைய அறிவுரை ஒன்றே மட்டும்தான் உங்களால் எவ்வளவு பணம் இழக்க முடியுமோ (இழந்தாலும் தனிப்பட்ட வாழ்வு பாதிக்காத வகையில்) அவ்வளவு பணம் மட்டும் பங்கு சந்தையில் போடுங்கள்,

பங்கு சந்தையில் பணம் பண்ண வாழ்த்துக்கள்.
DG said…
உங்கள் வாழ்துக்கு நன்றி சார்.
என்றும் அன்புடன் DG

Popular posts from this blog

நரேந்திர மோடி நாடாளலாமா?

சமீபத்தில் நடைபெற்ற குஜராத் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கார்பொரட் கனவான்களான அனில் அம்பானி மற்றும் சுனில் மிட்டல் ஆகியோர் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர். காரியம் ஆக வேண்டும் என்றால் என்ன வேண்டுமானாலும் பேசக் கூடியவர்கள் நமது தொழில் அதிபர்கள் என்பதனால் அவர்களின் பேச்சுக்கு அவ்வளவு மரியாதை கொடுக்க வேண்டியதில்லை. இவர்களைப் போன்றவர்களால் ஏற்கனவே நாடாள தகுதி பெற்றவர் என்று கூறப் பட்ட சந்திர பாபு நாயுடு அடுத்த சட்ட மன்ற தேர்தலில் தனது முதலமைச்சர் பதவியினையே இழந்தது குறிப்பிடத் தக்கது. தொழில் அதிபர்கள் பேச்சினை பா.ஜ.கவே ஏற்றுக் கொள்ளாத பட்சத்திலும் கூட, தீவிரவாதத்தை ஒடுக்கி குஜராத் மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்து சென்றவர் நரேந்திர மோடி என்றும் அவர் இந்தியாவின் பிரதமர் ஆவது நாட்டுக்கு நல்லது என்றும் பலராலும் கருதப் படுவதால், நரேந்திர மோடியின் செயல்பாடு பற்றியும் அவர் பிரதமர் ஆகலாமா என்பது பற்றியும் பிரதமராக அவர் ஏற்றுக் கொள்ளப் படுவாரா என்பதைப் பற்றியும் இங்கு பார்ப்போம். இன்றைய தேதியில் இந்தியாவிலேயே மிகுந்த முன்னேற்றம் அடைந்த ஒரு மாநிலமாக குஜரா...

இந்தியா தாக்குப் பிடிக்குமா?

இன்றைய உலகப் பொருளாதாரத் தேக்க நிலையில், இந்தியாவால் தாக்குப் பிடிக்க முடியுமா என்பது பற்றி பார்ப்போம். சமீபத்தில் வெளியிடப் பட்ட மத்திய புள்ளியல் (மத்திய அரசு) நிறுவனத்தின் மதிப்பீட்டின் படி இந்தியப் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 7.1 சதவீதம் வளர்ச்சியுறும் என்று தெரிகிறது. இது சரியாக இருக்கும் பட்சத்தில் உலகிலேயே இரண்டாவதாக வேகமாக வளர்ச்சியுறும் நாடு இந்தியாவாகத்தான் இருக்கும் (சீனா முதலாவது). சென்ற ஆண்டில் ஒன்பது சதவீதம் வளர்ச்சி பெற்றிருந்த இந்தியப் பொருளாதாரம் செப்டம்பர் 2008 வரையிலான முதல் அரையாண்டில் 7.80% வளர்ச்சிப் பெற்றிருந்தது. பொதுவாகவே பண்டிகைக் காலமாக கருதப் படுகிற இரண்டாவது அரையாண்டே தொழிற் துறையில் அதிக வளர்ச்சியைக் காட்டும் என்றாலும் இந்த முறை இந்தியத் தொழில் துறை பெரும் தேக்க நிலையில் இருந்து வந்திருக்கிறது என்பது கவனிக்கத் தக்கது. இந்திய தொழிற் வளர்ச்சி கடந்த இரு மாதங்களாக மிகவும் குறைந்து காணப் படுவதாலும் ஏற்றுமதியோ இறங்குமுகத்தில் இருப்பதாலும் இந்திய அரசாங்கம், மார்ச் 2009 வரையிலான நிதி ஆண்டின் இரண்டாவது அரையாண்டில் நமது பொருளாதாரம் குறைந்த வளர்ச்சியே (6.30%) இரு...

இங்கும் அங்கும் பாதை உண்டு. இதில் நீ எந்த பக்கம்?

சென்ற வாரம் 8350 என்ற எதிர்ப்பு நிலையை தாண்டிய போதும், நிப்டியால் முழுமையான வெற்றியை பெற முடிய வில்லை. 8350 என்ற நிலையின் அருகிலேயே இன்னும் நிலை பெற்றுள்ளது. உலக சந்தைகளின் போக்கினையொட்டி இந்த வாரம் 8350 என்ற எதிர்ப்பு நிலையை முழுமையாக முறியடிக்கின்றதா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும். வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். நன்றி.