Skip to main content

அம்மா குடித்த ஞானப் பால்

(இன்று வார இறுதி நாளல்லவா? ஒரு கதை எழுத முயற்சி செய்யலாம் என்று ஆசை. படித்துப் பாருங்கள்.)

அவளுக்கு நிறைய கர்வம் உண்டு. அவள் ரொம்ப அழகென்று. அந்த நினைப்பில் ஒரு நியாயம் உண்டு. கடந்து சென்ற பல ஆண்கள் அவளைத் திரும்பி திரும்பி பார்த்திருக்கிறார்கள். அவளுடைய நிறுவனத்தில் அவளுக்கென்று தனி மரியாதை. அவளுடைய நிறுவனம் பரஸ்பர நிதி திட்டங்களை மார்க்கெட்டிங் செய்யும் நிறுவனம் ஆகும். அது சம்பந்தமாக நிறுவனம் நடத்திய பல பொது நிகழ்ச்சிகளில் அவளே முன்னிலைப் படுத்தப் பட்டிருக்கிறாள். பங்கு சந்தைகள் மற்றும் நிதி சந்தைகள் விஷயத்தில் அவள் ஒரு கற்றுக் குட்டியே ஆயினும், சந்தை போக்கு பற்றி அவள் விவரிக்கும் போது, சந்தை விவரம் நன்கு தெரிந்த விற்பன்னர்கள் கூட மது அருந்திய வண்டுகள் போல மயங்கி கிறங்கி போய் கேட்டுக் கொண்டிருந்திருக்கிறார்கள்.

குழந்தை பெற்றுக் கொண்டால் தனது அழகு போய் விடும் என்று பயந்த அவள் பிள்ளை பெறுவதை பல காலம் தள்ளிப் போட்டு வந்தாள். அவளது கணவன் பலவாறு முயற்சி செய்து பிள்ளை பெற்றுக் கொண்டும் அழகை இழக்காத சில உள்நாட்டு வெளிநாட்டு நடிகைகளை உதாரணம் காட்டி ஒரு வழியாக அவளை குழந்தை பெற்றுக் கொள்ள சம்மதிக்கச் செய்தான். அழகான குழந்தையும் பிறந்தாகி விட்டது. இப்போது அவர்கள் இருவருக்கும் ஒரு வாக்குவாதம். (அழகைக் காப்பாற்ற) சில வாரங்கள் வரையே குழந்தைக்கு தாய்ப் பால் கொடுக்க முடியும் என்கிறாள். அவனோ குறைந்தது சில மாதங்களாவது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்கிறான். இந்த முடிவை எடுக்கும் பொறுப்பை அவர்களது குடும்ப மருத்துவருக்கு கொடுக்க முடிவு செய்கிறார்கள் அவர்கள். அவளோ, குடும்ப மருத்துவரிடம் சில வாரங்களில் நிறுத்தப்படும் தாய்ப்பாலுக்கு பதிலாக குழந்தைக்கு கொடுக்க வேண்டிய மாற்று உணவு எது என்று மட்டும் கேட்கும் மறைமுக உள்நோக்கத்துடன் சென்று மருத்துவருக்காக மருத்துவமனையில் தன் குழந்தையுடன் ஒரு மாலை வேளையில் காத்திருக்கிறாள்.

அப்போது, திடீரென்று கீழ் தளத்தில் ஒரே அலறல் சத்தம். ஆம். அன்று அந்த நகரத்திற்கே ஒரு சோக தினம். தீவிரவாதிகள் பயங்கர ஆயுதங்களுடன் குழந்தைகள்/பெண்கள்/பிரசவ மருத்துவமனை என்றும் பாராமல் அந்த மருத்துவமனைக்குள்ளும் நுழைந்து விடுகிறார்கள். கண்ணில் கண்டவரையெல்லாம் குழந்தைகள் என்று கூட பார்க்காமல் துப்பாக்கியால் சுட்டுத் தள்ளுகிறார்கள்.

அச்சத்தில் நடுங்கி போய் மேல்தளத்தில் இருந்தவர்கள் (நமது கதாநாயகியையும் சேர்த்து) எல்லோரும் ஒரு சிறிய அறைக்குள் சென்று தாளிட்டுக் கொள்கிறார்கள். மேலேயும் வந்த அந்த பயங்கரவாதிகள் ஒவ்வொரு பகுதியாக கொலைவெறி வேட்டை நடத்தி வருகிறார்கள். பல தாய்மார்களும் பல குழந்தைகளும் அந்த சிறிய அறைக்குள் ஒளிந்து கொண்டிருக்கிறார்கள். புழுக்கம் தாளாமல் சில குழந்தைகள் சிணுங்க ஆரம்பிக்க ஒரு புத்திசாலி நர்ஸ் ஒரு யோசனை கூறுகிறார். "தீவிரவாதிகள் இங்கிருந்து செல்லும் வரை அனைத்து குழந்தைகளுக்கும் தாய்ப்பால் குடுத்துக் கொண்டே இருங்கள் "

இந்த முறை விரைவில் செயல் பட்ட நம் அதிரடிப் படை வீரர்கள், அந்த தீவிரவாதிகளை உடனடியாக முடித்துக் கட்ட, அறையில் இருந்த அனைவரும் பத்திரமாக வீடு திரும்புகிறார்கள்.

சில நாட்கள் கழிந்த பிறகு தாய்ப்பால் கொடுக்கும் விவகாரத்தை மீண்டும் எழுப்பிய கணவனிடம் அவள் சொன்னது " சில மாதங்கள் அல்ல சில வருடங்களுக்கு நான் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பேன் என்று" அவளது மனமாற்றத்திற்கு அவனுக்கு காரணம் ஏதும் விளங்க வில்லை. நமக்குத்தானே தெரியும் அவள் ஞானப் பால் குடித்தவளென்று.

நன்றி.

(பின்குறிப்பு: கத பரவால்லேன்னு ஒரு நாலு பேர் பின்னூட்டம் இல்லேன்னா வோட்டு மூலம் சொன்னாப் போதும். இன்னொரு தரம் கத எழுதுவேன். ஐயோ! இப்பயே கண்ண கட்டுதேன்னு சொல்றீங்களா? பயபடாதீங்க அடிக்கடி இல்ல, எப்பயாவது ஒரு தரம்தான் . அப்பாடா தப்பிச்சமுன்னு நிம்மதி பெருமூச்சு விடுறீங்களா? அதுக்குள்ளே இன்னொரு விஷயமும் கேட்டுக்குங்க. ஒரு கவித கூட எழுத முயற்சி பண்ணிக்கிட்டிருக்கேன். முயற்சி திருவினையாக்கும்ன்னு பெரியவங்க சொல்லுவாங்க.)

Comments

கபீஷ் said…
கதை பரவாயில்ல!!!! :-):-):-):-)
சில நாட்கள் கழிந்த பிறகு தாய்ப்பால் கொடுக்கும் விவகாரத்தை மீண்டும் எழுப்பிய கணவனிடம் அவள் சொன்னது "//



சில விஷயங்களை புரிய வைக்க துப்பாக்கி முனை தேவைப் படுகிறது
//அழகை இழக்காத சில உள்நாட்டு வெளிநாட்டு நடிகைகளை உதாரணம் காட்டி ஒரு வழியாக //


பாவம் அந்தக் கணவன்
Unknown said…
முதல் கதையா? நல்லா இருக்குங்க. நல்ல கரு. என்ன கொஞ்சம் "finetune" பண்ண சரி ஆகிவிடும்.

நம்ம வலைக்கு வாங்க. .கருத்து சொல்லுங்கள்.ஸ்பேம் மெயில்/மழை/ஹைகூ/காதல் கவிதைகள் அண்ட் சிறுகதை.எல்லாம் உண்டு.

ஸமீபத்துல ''சிறு கதை எழுதுவது எப்படி?பதிவர்களே படியுங்கள்!" ஒரு பதிவு போட்டிருக்கேன்.
Maximum India said…
அன்புள்ள கபீஷ்

நன்றி.
Maximum India said…
அன்புள்ள சுரேஷ்

பின்னூட்டத்திற்கு நன்றி

//சில விஷயங்களை புரிய வைக்க துப்பாக்கி முனை தேவைப் படுகிறது//

சரியாக சொன்னீர்கள்.
Maximum India said…
அன்புள்ள ரவிசங்கர்

பின்னூட்டத்திற்கு நன்றி

//முதல் கதையா? நல்லா இருக்குங்க. நல்ல கரு. என்ன கொஞ்சம் "finetune" பண்ண சரி ஆகிவிடும். //

இது மூன்றாவது. முதலாவது ஆங்கில பதிவில் (Laymen Brothers Vs Lehman Brothers). இரண்டாவது தமிழ் பதிவில் (ஆரு வீட்டு சொத்துக்கு ஆருங்க அடுச்சுக்கறது?) முதலிரண்டும் உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட நையாண்டி கற்பனைக் கதைகள். இது ஒரு உண்மை சம்பவங்களின் பின்னணியில் ஒரு கற்பனைக் கதை. எப்படி fine tune பண்ணறதுன்னு அப்புறம் எனக்கு மட்டும் சொல்லுங்க ப்ளீஸ் :)

//நம்ம வலைக்கு வாங்க. .கருத்து சொல்லுங்கள்.ஸ்பேம் மெயில்/மழை/ஹைகூ/காதல் கவிதைகள் அண்ட் சிறுகதை.எல்லாம் உண்டு.

ஸமீபத்துல ''சிறு கதை எழுதுவது எப்படி?பதிவர்களே படியுங்கள்!" ஒரு பதிவு போட்டிருக்கேன்.//

பார்த்தேன். கருத்தும் சொல்லி இருக்கேன்.

நன்றி :)
raje said…
இம் நல்ல தொடக்கம் பங்கு சந்தை போல.

ராஜேஷ் கண்ணன்
Maximum India said…
அன்புள்ள ராஜேஷ்கண்ணன்

//இம் நல்ல தொடக்கம் பங்கு சந்தை போல.//

வாழ்த்துக்களுக்கு நன்றி.
KARTHIK said…
// அப்பாடா தப்பிச்சமுன்னு நிம்மதி பெருமூச்சு விடுறீங்களா? அதுக்குள்ளே இன்னொரு விஷயமும் கேட்டுக்குங்க. ஒரு கவித கூட எழுத முயற்சி பண்ணிக்கிட்டிருக்கேன். முயற்சி //

இதுவும் உண்மைசம்பவத்தின் அடிப்படையில் அமைந்த கதையா இருக்கும்னு நெனச்சேன்.
ஆனா அப்படி இல்லை.
கதை நல்லாதான் இருக்கு.
Maximum India said…
அன்புள்ள கார்த்திக்

//கதை நல்லாதான் இருக்கு.//


பின்னூட்டத்திற்கும் பாராட்டுக்கும் நன்றி.

மனதில் இப்படி இருந்தால் எப்படி இருக்கும் என்று தோன்றியது. முடிந்த வரை கதையாக எழுதி விட்டேன்.

கதை பரவால்லேன்னு கபீஷ் சொல்ல நல்லாத்தான் இருக்குன்னு நீங்க சொல்லி இருக்கீங்க. இருந்தாலும் இந்தியர்களுக்கு சகிப்புத் தன்மை கொஞ்சம் அதிகம்தேன்.

ஆனா ஒன்னு (ஆனான்னா ஒன்னு ஆவனான்னா ரெண்டுன்னு சொல்லிடாதீங்க). கதை எழுதுவது நம்ம ஏரியா இல்லேங்கனா. அதுக்குன்னு நெறைய பேர் தனி தெறமசாலிங்க இருக்காங்க (ஒரு வேள லீவு போட்டு யோசிப்பாங்களா?)

ஏதோ ஒரு ஆசைக்கு அப்பப்ப (இது என்ன சின்னப் பிள்ளத்தனமா இல்ல இருக்குன்னு சொன்னாலும் சரி) ஒன்னொன்னு பப்ளிஷ் பண்ணி உடறேன். (பின்ன என்ன ஆனந்த விகடன்லேயா பப்ளிஷ் பண்ணுவாங்கன்னு கேக்காதீங்க) இங்கதேன் நாம்பளே ரைட்டரு நாம்பளே பப்ளிஷரு. :) :) :)
KARTHIK said…
// ஏதோ ஒரு ஆசைக்கு அப்பப்ப (இது என்ன சின்னப் பிள்ளத்தனமா இல்ல இருக்குன்னு சொன்னாலும் சரி) ஒன்னொன்னு பப்ளிஷ் பண்ணி உடறேன்.//

பண்ணுங்க ப்ண்ணுங்க
போக போக நல்லாவரும்.
இதுவும் நல்லகதைதான்.
ஆனா முடிவு கொஞ்சம் யூகிக்கும் படியாக இருந்தது.

கதையின் தலைப்பு அருமை
Maximum India said…
அன்புள்ள கார்த்திக்

வாழ்த்துக்களுக்கு நன்றி.

//ஆனா முடிவு கொஞ்சம் யூகிக்கும் படியாக இருந்தது.//

அடுத்த முறை முடிவு யூகிக்க முடியாத படி முழு நீள சஸ்பென்ஸ் கதை. முடிவு எனக்கே தெரியாதுன்னா பாத்துக்கோங்களேன் :)
கதை அருமையாக இருக்குது

கவிதை எழுதுங்க ஆனா காதல் கவிதை மட்டும் வேண்டாம்
Maximum India said…
நன்றி வால்பையன்

முதல் கமெண்டு பரவால்லேன்னு வந்தது, இரண்டாவது நல்லாதான் இருக்குன்னு வந்தது. இப்ப நீங்க அருமையாக இருக்குதுன்னு வேற சொல்லிரிக்கீங்க. நல்ல முன்னேற்றம்தான்.

மொத்தத்தில் ஒரு கதை ஆசிரியர் உருவாகிறார்.

//கவிதை எழுதுங்க ஆனா காதல் கவிதை மட்டும் வேண்டாம்//

காதல் கவிதைல்லாம் கல்யாணத்துக்கு முன்னமே எழுத வரல. இப்ப எங்க வரப் போகுது?

நன்றி

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

தீவிரவாதிகளை வென்ற கதை - இந்திய கமாண்டோவின் விளக்கம்

நேற்று ஒரு தீவிரவாதி பிடிப் பட்ட கதை பார்த்தோம். இன்று தாஜ் ஹோட்டலில் எவ்வாறு நான்கு தீவிரவாதிகள் ஒழிக்கப் பட்டனர் என்று விளக்கும் இந்திய கமாண்டோவின் விளக்கத்தை பார்ப்போம். முதலில் இந்தியா கமாண்டோக்கள் தாஜ் ஹோட்டல் வந்த கதை புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் மும்பையை பயங்கரவாதம் தாக்கியது. அப்போது கேரளாவில் இருந்த மகாராஷ்டிர முதல்வர் மும்பை வரவும் இந்த சூழ்நிலையின் பயங்கரத்தையும் முழுமையாக உணர்ந்துக் கொள்ளவும் 90 நிமிடம் பிடித்தது .பின்னர் 11.00 அளவில் மத்திய அரசிற்கு போன் பேசிய முதல்வர் கோரியது 200 கமாண்டோக்களை. உடனே அந்நேரத்தில் தூங்கி கொண்டிருந்த இந்திய கமாண்டோக்கள் எழுப்பப் பட்டனர். அவர்கள் மும்பை வரத் தயாரான போதுதான் புரிந்தது, அவ்வளவு பேரை மும்பை கொண்டுவர தேவையான சிறப்பு விமானம் சண்டிகரில் உள்ளது என்று. உடனே அந்த விமானியையும் தூக்கத்தில் இருந்து எழுப்பி தயார் படுத்தி டெல்லியிலிருந்து கமாண்டோக்கள் மும்பை வந்த போது நேரம் காலை 5.25 மணி. அவர்கள் தாஜ் ஹோட்டலுக்கு கொண்டு வரப்பட்டு திட்டம் தயாரிக்கப் பட்டு அவர்கள் தாஜ் ஹோட்டலுக்குள் நுழைந்த போது நேரம் காலை 7.00 மணி. அதாவது மும்பை தாக்கப் ப...

கம்ப்யூட்டர் கட்சியும் கால்குலேட்டர் கட்சியும்!

மத்திய கல்வி அமைச்சர் கபில் சிபல் இந்தியா முழுவதும் அனைவரும் தாய்மொழியுடன் ஹிந்தியும் படிக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்துள்ளார். இவ்வாறு அனைவரும் ஹிந்தி படிப்பதன் மூலம் நாட்டில் ஒருமைப்பாடு ஏற்படுவதுடன் ஹிந்தியை ஆங்கிலம் போன்று ஒரு "அறிவு மொழியாக (lingua franca)" மாற்ற முடியும் என்றும் கூறியுள்ளார். இந்த கருத்தின் மீது பதிவுலகில் ஏராளமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆங்கிலம் மட்டுமே போதும் என்று ஒரு கட்சியும், ஆங்கிலம் வாசலாக இருக்கும் போது ஹிந்தி ஒரு சன்னலாக இருந்து விட்டு போகட்டுமே என்று இன்னொரு கட்சியும் விவாதித்து வருகின்றன. ஹிந்தி எதிர்ப்பு என்பது எப்போதுமே ஒரு உணர்வு பூர்வமான விஷயமாகவே பலராலும் கருதப் பட்டாலும், அதற்கு அறிவு பூர்வமான, சரித்திர பூர்வமான சில அடிப்படைகள் உண்டு. ஹிந்தி திணிப்பு மற்றும் ஹிந்தி எதிர்ப்பு பற்றி எனக்கு தெரிந்த சில கருத்துக்களை இங்கு ஒரு புனைவு வடிவில் அளிக்க முயற்சிக்கிறேன். இப்போது புனைவு ! ஒரு காலத்தில் பரதம்பட்டி என்ற ஒரு கிராமம் இருந்ததாம். அங்கு பல ஆண்டுகள் வரை ஆட்சி செய்து வந்த துரை மகாராஜா ஒரு காலத்தில், அந்த கிராமத்தை ஜனநாயக ...