Skip to main content

ஆனந்த விகடனில் "சந்தை நிலவரம்"


வலைப்பூ ஆரம்பித்து இரண்டு மாதங்கள் மட்டுமே முடிந்த நிலையில் "சந்தை நிலவரம்" இப்போது பிரபல தமிழ் வார இதழான ஆனந்த விகடன் வரவேற்பறையை அலங்கரிக்கும் பெருமையைப் பெற்றுள்ளது. விவரங்கள் உள்ளே.




இதழ் 10.12.2008 பக்கம் எண் 47.


(தெளிவாக தெரிய இதன் மீது சொடுக்கவும்)

இந்த மகிழ்ச்சியான தருணத்தை தங்களுடன் பகிர்ந்து கொள்ள நான் விரும்புகின்றேன். மேலும் இந்த வலைப்பூ ஆரம்பித்த நாளிலிருந்து இன்று வரை பல வகையிலும் பின்னூட்டம் அளித்து ஊக்கம் அளித்தவர்கள், வருகை புரிந்து உற்சாகம் தந்தவர்கள் மற்றும் அக்கறையோடு அறிவுரை சொன்னவர்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். (தனித்தனியான நன்றிகள் எனது நூறாவது பதிவில்)

புதியவர்களை உற்சாகப் படுத்தும் இந்த சிறந்த சேவையினை புரியும் விகடன் குழுமத்திற்கும் வந்தனம் கலந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ் கூறும் நல்லுலகம் தந்த இந்த அங்கீகாரத்திற்கு என்றும் கடமை பட்டிருப்பதுடன் இந்த அங்கீகாரம் தரும் கூடுதல் பொறுப்புகளையும் உணர்ந்து வருங்காலத்தில் இன்னும் சிறப்புடன் கூடிய பதிவுகளை வழங்க முயற்சி செய்வேன் என்று உறுதி கூறுகிறேன்.

நண்பர்களே, நீங்கள் இது வரை தந்த ஆதரவு மேலும் தொடரவும் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ் தாய்க்கு வந்தனம்

நன்றி.

Comments

கபீஷ் said…
Congrats! u deserve this!!!!
Maximum India said…
Thank you Kabeesh

With all your support and wishes It has happened
KARTHIK said…
இந்த ஆனத்த விகடன் வரவேற்ப்பறை பாத்துத்தான் இப்படி ஒரு உலகம் இருப்பதையே அறிந்துகொண்டம்.

உங்களுக்கு வாழ்த்துக்கள்

ஆவிக்கு நன்றிகள்.
ஏற்கனவே ஒரு முறை வாழ்த்திவிட்டாலும், திரும்ப திரும்ப வாழ்த்துனும் போலிருக்கு,
உண்மையில் உங்களை அறிமுக படுத்தி ஆனந்த விகடன் பெருமை கொள்கிறது.

இதன் பின் உங்களுக்கு மேலும் சிறப்பாக எழுதும் பொறுப்பு கொடுக்க பட்டுள்ளது. மேலும் உங்களிடமிருந்து பல விசயங்கலை தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன்.
நல்ல முயற்சிகளுக்கு மிக விரைவிலேயே அங்கீகாரம் கிடைக்கும் என்று இது பட்டயம் சொல்கிறது. வாழ்த்துக்கள்.
வலைப்பதிவை மிக சரியான முறையில் பயன்படுத்தி நல்ல விஷயங்களை நளினமாக சொல்லிவருகிறீர்கள். நற்பணி தொடரட்டும்.
Maximum India said…
அன்புள்ள கார்த்திக்

வாழ்த்துக்களுக்கும் தொடர்ந்து அளித்து வரும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி :)
Maximum India said…
அன்புள்ள வால்பையன்

வாழ்த்துக்களுக்கும் தொடர்ந்து அளித்து வரும் ஆதரவுக்கும் நன்றிகள் பல.

//இதன் பின் உங்களுக்கு மேலும் சிறப்பாக எழுதும் பொறுப்பு கொடுக்க பட்டுள்ளது.//

நிச்சயமாக.

//மேலும் உங்களிடமிருந்து பல விசயங்கலை தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன்//

நானும் முடிந்த வரை பல விஷயங்களை பற்றி விவாதிக்க ஆர்வமாக உள்ளேன்.

நன்றி
Maximum India said…
அன்புள்ள நெற்குப்பை ஐயா

உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

இந்த அங்கீகாரம் கிடைக்க நீங்கள் கொடுத்த ஊக்கமும் (பல அக்கறை கலந்த) அறிவுரைகளும் மிகவும் உதவியாக இருந்தன.

நன்றிகள் பல.
கிரி said…
வாழ்த்துக்கள்
geevanathy said…
நல்வாழ்த்துக்கள்...
நல்லதொரு முயற்சி
உங்கள் பணி தொடரட்டும்...
Maximum India said…
அன்புள்ள கிரி

வாழ்த்துக்களுக்கு நன்றி
Maximum India said…
அன்புள்ள தங்கராசா

வாழ்த்துக்களுக்கும் ஊக்கத்திற்கும் நன்றி
வாழ்த்துக்கள்
pothujanam said…
மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
Maximum India said…
அன்புள்ள சங்கர்

வாழ்த்துக்களுக்கு நன்றி
Maximum India said…
அன்புள்ள பொதுஜனம்

வாழ்த்துக்களுக்கு நன்றி
வாழ்த்துகள்.......
கடின உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் இது....
தொடர்க..... வெல்க......
Maximum India said…
அன்புள்ள அட்வகேட் ஜெயராஜன் ஐயா

வாழ்த்துக்களுக்கு நன்றி. சட்டம் போன்ற கடினமான தொழிற் நுட்ப விஷயங்களையும் எளிமையான தமிழில் அருமையாக விளக்க முடியும் என்று நிருபித்த உங்கள் எழுத்துக்களும் எனக்கு முக்கிய முன்னோடியாக இருந்திருக்கின்றன,

தொடர்ந்து தங்களது ஆதரவையும் அக்கறையையும் எதிர்நோக்கும்

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

தீவிரவாதிகளை வென்ற கதை - இந்திய கமாண்டோவின் விளக்கம்

நேற்று ஒரு தீவிரவாதி பிடிப் பட்ட கதை பார்த்தோம். இன்று தாஜ் ஹோட்டலில் எவ்வாறு நான்கு தீவிரவாதிகள் ஒழிக்கப் பட்டனர் என்று விளக்கும் இந்திய கமாண்டோவின் விளக்கத்தை பார்ப்போம். முதலில் இந்தியா கமாண்டோக்கள் தாஜ் ஹோட்டல் வந்த கதை புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் மும்பையை பயங்கரவாதம் தாக்கியது. அப்போது கேரளாவில் இருந்த மகாராஷ்டிர முதல்வர் மும்பை வரவும் இந்த சூழ்நிலையின் பயங்கரத்தையும் முழுமையாக உணர்ந்துக் கொள்ளவும் 90 நிமிடம் பிடித்தது .பின்னர் 11.00 அளவில் மத்திய அரசிற்கு போன் பேசிய முதல்வர் கோரியது 200 கமாண்டோக்களை. உடனே அந்நேரத்தில் தூங்கி கொண்டிருந்த இந்திய கமாண்டோக்கள் எழுப்பப் பட்டனர். அவர்கள் மும்பை வரத் தயாரான போதுதான் புரிந்தது, அவ்வளவு பேரை மும்பை கொண்டுவர தேவையான சிறப்பு விமானம் சண்டிகரில் உள்ளது என்று. உடனே அந்த விமானியையும் தூக்கத்தில் இருந்து எழுப்பி தயார் படுத்தி டெல்லியிலிருந்து கமாண்டோக்கள் மும்பை வந்த போது நேரம் காலை 5.25 மணி. அவர்கள் தாஜ் ஹோட்டலுக்கு கொண்டு வரப்பட்டு திட்டம் தயாரிக்கப் பட்டு அவர்கள் தாஜ் ஹோட்டலுக்குள் நுழைந்த போது நேரம் காலை 7.00 மணி. அதாவது மும்பை தாக்கப் ப...

கம்ப்யூட்டர் கட்சியும் கால்குலேட்டர் கட்சியும்!

மத்திய கல்வி அமைச்சர் கபில் சிபல் இந்தியா முழுவதும் அனைவரும் தாய்மொழியுடன் ஹிந்தியும் படிக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்துள்ளார். இவ்வாறு அனைவரும் ஹிந்தி படிப்பதன் மூலம் நாட்டில் ஒருமைப்பாடு ஏற்படுவதுடன் ஹிந்தியை ஆங்கிலம் போன்று ஒரு "அறிவு மொழியாக (lingua franca)" மாற்ற முடியும் என்றும் கூறியுள்ளார். இந்த கருத்தின் மீது பதிவுலகில் ஏராளமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆங்கிலம் மட்டுமே போதும் என்று ஒரு கட்சியும், ஆங்கிலம் வாசலாக இருக்கும் போது ஹிந்தி ஒரு சன்னலாக இருந்து விட்டு போகட்டுமே என்று இன்னொரு கட்சியும் விவாதித்து வருகின்றன. ஹிந்தி எதிர்ப்பு என்பது எப்போதுமே ஒரு உணர்வு பூர்வமான விஷயமாகவே பலராலும் கருதப் பட்டாலும், அதற்கு அறிவு பூர்வமான, சரித்திர பூர்வமான சில அடிப்படைகள் உண்டு. ஹிந்தி திணிப்பு மற்றும் ஹிந்தி எதிர்ப்பு பற்றி எனக்கு தெரிந்த சில கருத்துக்களை இங்கு ஒரு புனைவு வடிவில் அளிக்க முயற்சிக்கிறேன். இப்போது புனைவு ! ஒரு காலத்தில் பரதம்பட்டி என்ற ஒரு கிராமம் இருந்ததாம். அங்கு பல ஆண்டுகள் வரை ஆட்சி செய்து வந்த துரை மகாராஜா ஒரு காலத்தில், அந்த கிராமத்தை ஜனநாயக ...