Skip to main content

ஈகைப் பெருநாளைக் கொண்டாடுவோம்

உலகின் பல பண்டிகைகள் மனிதன் தானும் தன்னை சார்ந்தவர்களும் மட்டுமே மகிழ்ச்சியாக கொண்டாடும் தினங்களாக மட்டுமே அமைந்திருக்க, இரக்கத்துடன் தம்மை சாராதவர்களுக்கும் கூட மகிழ்ச்சியை ஈந்து அதன் வழியே இன்பம் கொண்டாடும் பண்டிகையே ஈகைப் பெருநாள்.

பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இறைவன், இறைதூதர் இப்ராஹிம் முன்னே தோன்றி உனக்கு மிகவும் பிடித்ததை எனக்கு தருவாயா என்று கேட்க அவர் தனது பிரியமான மகனையே அர்ப்பணிக்க முடிவு செய்த நாளே இந்த திருநாள் என்று கருதப் படுகிறது. மேலோட்டமாக பார்க்கும் போது, இந்த நிகழ்வு இறையாளர் இப்ராகிமின் ஆழமான கடவுள் பக்தியையும் கடவுள் நம்பிக்கையையும் வெளிக்காட்டுவது போல தோன்றலாம். ஆனால், எல்லாம் வல்ல இறைவனுக்கே கூட ஏதாவது ஒன்று தர விரும்பும் அளவுக்கு உயரிய கருணையும் ஈகையும் கொண்டது ஒரு மனித மனம் என்பதை உலகிற்கு உணர்த்தும் உன்னதமான நிகழ்வு இது என்பது எனது கருத்து. இப்படி தம்மைப் படைத்த இறைவனுக்குக் கூட ஏதாவது வழங்க எண்ணும் மனித உள்ளம் தன்னை சுற்றிலும் உள்ளவர்களுக்கும் எளியவர்களுக்கும் கூட கருணை காட்ட வேண்டும் என்பதையே இந்த ஈகைத் திருநாள் அனைவருக்கும் உணர்த்துகிறது என்று நம்புகிறேன்.

பணம் தேவையில்லை. கருணை காட்ட மனம் மட்டுமே போதும். உண்மையான அன்புடன் கொடுக்கப் படும் உணவு சாதாரணமானதாக இருந்தாலும் அது அமிர்தத்திற்கு ஒப்பானது என்பதை எல்லா வேதங்களும் வலியுறுத்துகின்றன.

இஸ்லாம் மார்க்கம் உலகிற்கு ஈந்த உயரிய கருத்துக்களாகிய சகோதரதத்துவத்தையும் மனித நேயத்தையும் உலகத்தினர் அனைவரும் கொண்டாடும் திருநாளாக இந்த ஈகைப் பெருநாள் அமைந்திட எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்வோம்.

அனைவருக்கும் ஈகை பெருநாள் வாழ்த்துக்கள்

Comments

இதே அளவு சகோதர பாசத்தை அவங்களும் நம்ம மேல காட்டினால் சந்தோஷம் தான்.
Maximum India said…
அன்புள்ள வால்பையன்

பின்னூட்டதிற்கு நன்றி

எனது அய்யன் வள்ளுவன் வாக்கு இது

"அன்புஈனும் ஆர்வம் உடைமை; அதுஈனும்
நண்புஎன்னும் நாடாச் சிறப்பு"
//வால்பையன் said...
இதே அளவு சகோதர பாசத்தை அவங்களும் நம்ம மேல காட்டினால் சந்தோஷம் தான்.
//

??????????????????

வால்பையன் நீங்க குறிப்பிட்ட "அவங்களும்" அப்படிங்கற வார்த்தையில யாரைக் குறிப்பிடறீங்க.

இஸ்லாமிய தீவிரவாதிகளையா.. இல்லை இஸ்லாமிய சமூகத்தினரையா..

இஸ்லாமிய தீவிரவாதிகள்ன்னு நீங்க சொன்னீங்கன்னா தீவிரவாதத்துக்கு எந்த மதமும் ஆதரவானது கிடையாது. அது எந்த மதமா இருந்தாலும் சரி.

மற்றபடி எனது ஈகைத் திருநாள் வாழ்த்துக்களையும் இங்கு பதிவு செய்து கொள்கின்றேன்.
Maximum India said…
அன்புள்ள சென்ஷி

பின்னூட்டத்திற்கும் கருத்திற்கும் நன்றி

//தீவிரவாதத்துக்கு எந்த மதமும் ஆதரவானது கிடையாது. அது எந்த மதமா இருந்தாலும் சரி.//

நீங்கள் சொல்வதை வழி மொழிகிறேன்

நன்றி
KARTHIK said…
//தீவிரவாதத்துக்கு எந்த மதமும் ஆதரவானது கிடையாது. அது எந்த மதமா இருந்தாலும் சரி.//

ஆஹா
நவீன இலக்கியவாதி சென்ஷியின் கருத்துக்கு நானும் வழிமொழிகிறேன்.

ஈகை திருநாள் வாழ்துக்கள்.

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

தீவிரவாதிகளை வென்ற கதை - இந்திய கமாண்டோவின் விளக்கம்

நேற்று ஒரு தீவிரவாதி பிடிப் பட்ட கதை பார்த்தோம். இன்று தாஜ் ஹோட்டலில் எவ்வாறு நான்கு தீவிரவாதிகள் ஒழிக்கப் பட்டனர் என்று விளக்கும் இந்திய கமாண்டோவின் விளக்கத்தை பார்ப்போம். முதலில் இந்தியா கமாண்டோக்கள் தாஜ் ஹோட்டல் வந்த கதை புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் மும்பையை பயங்கரவாதம் தாக்கியது. அப்போது கேரளாவில் இருந்த மகாராஷ்டிர முதல்வர் மும்பை வரவும் இந்த சூழ்நிலையின் பயங்கரத்தையும் முழுமையாக உணர்ந்துக் கொள்ளவும் 90 நிமிடம் பிடித்தது .பின்னர் 11.00 அளவில் மத்திய அரசிற்கு போன் பேசிய முதல்வர் கோரியது 200 கமாண்டோக்களை. உடனே அந்நேரத்தில் தூங்கி கொண்டிருந்த இந்திய கமாண்டோக்கள் எழுப்பப் பட்டனர். அவர்கள் மும்பை வரத் தயாரான போதுதான் புரிந்தது, அவ்வளவு பேரை மும்பை கொண்டுவர தேவையான சிறப்பு விமானம் சண்டிகரில் உள்ளது என்று. உடனே அந்த விமானியையும் தூக்கத்தில் இருந்து எழுப்பி தயார் படுத்தி டெல்லியிலிருந்து கமாண்டோக்கள் மும்பை வந்த போது நேரம் காலை 5.25 மணி. அவர்கள் தாஜ் ஹோட்டலுக்கு கொண்டு வரப்பட்டு திட்டம் தயாரிக்கப் பட்டு அவர்கள் தாஜ் ஹோட்டலுக்குள் நுழைந்த போது நேரம் காலை 7.00 மணி. அதாவது மும்பை தாக்கப் ப...

கம்ப்யூட்டர் கட்சியும் கால்குலேட்டர் கட்சியும்!

மத்திய கல்வி அமைச்சர் கபில் சிபல் இந்தியா முழுவதும் அனைவரும் தாய்மொழியுடன் ஹிந்தியும் படிக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்துள்ளார். இவ்வாறு அனைவரும் ஹிந்தி படிப்பதன் மூலம் நாட்டில் ஒருமைப்பாடு ஏற்படுவதுடன் ஹிந்தியை ஆங்கிலம் போன்று ஒரு "அறிவு மொழியாக (lingua franca)" மாற்ற முடியும் என்றும் கூறியுள்ளார். இந்த கருத்தின் மீது பதிவுலகில் ஏராளமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆங்கிலம் மட்டுமே போதும் என்று ஒரு கட்சியும், ஆங்கிலம் வாசலாக இருக்கும் போது ஹிந்தி ஒரு சன்னலாக இருந்து விட்டு போகட்டுமே என்று இன்னொரு கட்சியும் விவாதித்து வருகின்றன. ஹிந்தி எதிர்ப்பு என்பது எப்போதுமே ஒரு உணர்வு பூர்வமான விஷயமாகவே பலராலும் கருதப் பட்டாலும், அதற்கு அறிவு பூர்வமான, சரித்திர பூர்வமான சில அடிப்படைகள் உண்டு. ஹிந்தி திணிப்பு மற்றும் ஹிந்தி எதிர்ப்பு பற்றி எனக்கு தெரிந்த சில கருத்துக்களை இங்கு ஒரு புனைவு வடிவில் அளிக்க முயற்சிக்கிறேன். இப்போது புனைவு ! ஒரு காலத்தில் பரதம்பட்டி என்ற ஒரு கிராமம் இருந்ததாம். அங்கு பல ஆண்டுகள் வரை ஆட்சி செய்து வந்த துரை மகாராஜா ஒரு காலத்தில், அந்த கிராமத்தை ஜனநாயக ...