Skip to main content

சவாலே சமாளி!

அமெரிக்க பாராளுமன்றத்தில் அவர்களது வாகனத் துறைக்கான மீட்டெடுப்பு மசோதா தோல்வி, உலக சந்தைகளின் மந்தமான சூழல் மற்றும் இந்திய தொழிற் உற்பத்தியின் வீழ்ச்சி என்ற பல சவால்களை நமது பங்கு சந்தை மிகத் திறமையாக சந்தித்து (நாம் ஏற்கனவே எதிர்பார்த்தப் படி) முன்னேற்றமும் கண்டுள்ளது. விவரங்கள் கீழே.

ஏற்கனவே நம் பதிவில் குறிப்பிட்ட படி, சென்ற வாரம் நமது பங்கு சந்தை பல ஏற்றத் தாழ்வுகளைச் சந்தித்தாலும் இறுதியில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. நிபிட்டி குறியீடு சுமார் ஏழரை சதவீதமும் சென்செக்ஸ் எட்டு சதவீதமும் அதிகரித்துள்ளன. முந்தைய வார இறுதியில் தலைமை வங்கி அறிவித்த வட்டி வீத குறைப்பு, மத்திய அரசு அறிவித்த கிரியா ஊக்கித் திட்டங்களுமே இந்த முன்னேற்றத்திற்கு அடிப்படை காரணங்கள். அதே சமயம் மேற்சொன்ன சவால்களின் காரணமாக, சந்தை பல ஏற்றத்தாழ்வுகளையும் சந்திக்க நேரிட்டது.

இந்த வார பணவீக்கம் மேலும் குறைந்து எட்டு சதவீதம் ஆனது மற்றும் தொழிற் உற்பத்தி வீழ்ச்சி ஆகியவை வட்டி வீதங்கள் மேலும் குறைக்கப் படலாம் என்ற புதிய நம்பிக்கையை சந்தைக்கு தந்துள்ளது. இதன் காரணமாக, ரியல் எஸ்டேட் துறை பங்குகள் சென்ற வாரம் மிக அதிக முன்னேற்றத்தை கண்டன. இதே காரணத்தின் அடிப்படையில் வங்கிகளின் பங்குகளும் உயர்ந்தன. டாட்டா ஸ்டீல் நிறுவனத்தின் சிறந்த நிதி செயல்பாடு மற்றும் அரசு வெளியிட்ட ஏற்றுமதி சலூகைகளின் அடிப்படையில் உலோகத் துறையை சேர்ந்த பங்குகளும் உயர்ந்தன. அம்பானி சகோதரர்களுக்கு இடையேயான எரிவாயு பிரச்சினை விரைவில் தீரும் என்ற சந்தை யூகங்களின் அடிப்படையில் எண்ணெய் மற்றும் எரிவாயு துறை பங்குகளும் வளர்ச்சியைக் கண்டன.

சென்ற வார பதிவில் சொன்ன படி சென்செக்ஸ் 9350 புள்ளிகளுக்கு வெகுவாக மேலே முடிவடைந்திருப்பது, டெக்னிகல் அனலிசிஸ் படி வரும் வாரத்திற்கு நல்ல நம்பிக்கையைக் கொடுக்கிறது. F&O இல் சாதகமான நிலையில் எதிர்காலங்களுக்கான இருப்பு (Positive Open Interest) அமைந்திருப்பதும் புதிய தெம்பைத் தருகிறது. அமெரிக்க தலைமை வங்கி மேலும் வட்டி வீதங்களைக் குறைக்கும் என்று நிபுணர்கள் கருதுகிறார்கள். மேலும் நமது தலைமை வங்கியின் நிலை மற்றும் அரசின் புதிய சலுகை/கிரியா ஊக்கி திட்டங்கள், உலக சந்தைகள் போக்கு, அமெரிக்க வாகனத்துறைக்கான மீட்டெடுப்பு மசோதாவில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவை இந்திய சந்தைகளின் போக்கை நிர்ணயிக்கும்.

வரும் வாரத்திற்கான எதிர்ப்பு நிலைகள்

சென்செக்ஸ் - 9750-9850, 10200-300,
நிபிட்டி 2980-3030, 3140-60

வரும் வாரத்திற்கான அரண் நிலைகள்
சென்செக்ஸ் - 9350-9450, 8700-8800
நிபிட்டி - 2800-2810, 2675-2700
வர்த்தகர்கள் தகுந்த இழப்பு நிறுத்தத்துடன் (Strict Stop Loss Limits) பெரிய நிறுவனங்களுக்கான பங்குகளை அல்லது குறியீடுகளை வாங்கலாம். சென்செக்ஸ் 10200 புள்ளிகளுக்கு அருகே மற்றும் நிபிட்டி 3150 புள்ளிகளுக்கு அருகே தகுந்த இழப்பு நிறுத்தத்துடன் (Strict Stop Loss Limit) விற்பனை செய்யலாம்.

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் வர்த்தகத்தில் ரூபாய் மேலும் முன்னேற்றம் அடைய அதிக வாய்ப்புகள் உண்டு. மேலே சொன்ன சந்தை காரணிகள் ரூபாய் வர்த்தகத்தையும் பாதிக்கும். இந்திய ரூபாய் 47.50 இலிருந்து 49.00 வரை இருக்க வாய்ப்புகள் உண்டு.

வரும் வாரம் சிறப்பான வாரமாக அமைந்திட வாழ்த்துக்கள்.
நன்றி.

Comments

மகிழ்ச்சியூட்டும் செய்தி முதலீட்டார்களுக்கு

கமாடிடியும் நல்ல முறையில் நடந்து கொண்டிருக்கிறது
Maximum India said…
அன்புள்ள வால்பையன்

பின்னூட்டத்திற்கு நன்றி.

நீங்க சொன்னது போல மார்க்கெட் எல்லாம் இப்ப நல்லா இருக்கு. கொஞ்சம் சந்தோசமா இருக்கு. பெடெரல் இண்டரஸ்ட் கம்மி பண்ணுவாங்க போல.

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

தீவிரவாதிகளை வென்ற கதை - இந்திய கமாண்டோவின் விளக்கம்

நேற்று ஒரு தீவிரவாதி பிடிப் பட்ட கதை பார்த்தோம். இன்று தாஜ் ஹோட்டலில் எவ்வாறு நான்கு தீவிரவாதிகள் ஒழிக்கப் பட்டனர் என்று விளக்கும் இந்திய கமாண்டோவின் விளக்கத்தை பார்ப்போம். முதலில் இந்தியா கமாண்டோக்கள் தாஜ் ஹோட்டல் வந்த கதை புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் மும்பையை பயங்கரவாதம் தாக்கியது. அப்போது கேரளாவில் இருந்த மகாராஷ்டிர முதல்வர் மும்பை வரவும் இந்த சூழ்நிலையின் பயங்கரத்தையும் முழுமையாக உணர்ந்துக் கொள்ளவும் 90 நிமிடம் பிடித்தது .பின்னர் 11.00 அளவில் மத்திய அரசிற்கு போன் பேசிய முதல்வர் கோரியது 200 கமாண்டோக்களை. உடனே அந்நேரத்தில் தூங்கி கொண்டிருந்த இந்திய கமாண்டோக்கள் எழுப்பப் பட்டனர். அவர்கள் மும்பை வரத் தயாரான போதுதான் புரிந்தது, அவ்வளவு பேரை மும்பை கொண்டுவர தேவையான சிறப்பு விமானம் சண்டிகரில் உள்ளது என்று. உடனே அந்த விமானியையும் தூக்கத்தில் இருந்து எழுப்பி தயார் படுத்தி டெல்லியிலிருந்து கமாண்டோக்கள் மும்பை வந்த போது நேரம் காலை 5.25 மணி. அவர்கள் தாஜ் ஹோட்டலுக்கு கொண்டு வரப்பட்டு திட்டம் தயாரிக்கப் பட்டு அவர்கள் தாஜ் ஹோட்டலுக்குள் நுழைந்த போது நேரம் காலை 7.00 மணி. அதாவது மும்பை தாக்கப் ப...

கம்ப்யூட்டர் கட்சியும் கால்குலேட்டர் கட்சியும்!

மத்திய கல்வி அமைச்சர் கபில் சிபல் இந்தியா முழுவதும் அனைவரும் தாய்மொழியுடன் ஹிந்தியும் படிக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்துள்ளார். இவ்வாறு அனைவரும் ஹிந்தி படிப்பதன் மூலம் நாட்டில் ஒருமைப்பாடு ஏற்படுவதுடன் ஹிந்தியை ஆங்கிலம் போன்று ஒரு "அறிவு மொழியாக (lingua franca)" மாற்ற முடியும் என்றும் கூறியுள்ளார். இந்த கருத்தின் மீது பதிவுலகில் ஏராளமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆங்கிலம் மட்டுமே போதும் என்று ஒரு கட்சியும், ஆங்கிலம் வாசலாக இருக்கும் போது ஹிந்தி ஒரு சன்னலாக இருந்து விட்டு போகட்டுமே என்று இன்னொரு கட்சியும் விவாதித்து வருகின்றன. ஹிந்தி எதிர்ப்பு என்பது எப்போதுமே ஒரு உணர்வு பூர்வமான விஷயமாகவே பலராலும் கருதப் பட்டாலும், அதற்கு அறிவு பூர்வமான, சரித்திர பூர்வமான சில அடிப்படைகள் உண்டு. ஹிந்தி திணிப்பு மற்றும் ஹிந்தி எதிர்ப்பு பற்றி எனக்கு தெரிந்த சில கருத்துக்களை இங்கு ஒரு புனைவு வடிவில் அளிக்க முயற்சிக்கிறேன். இப்போது புனைவு ! ஒரு காலத்தில் பரதம்பட்டி என்ற ஒரு கிராமம் இருந்ததாம். அங்கு பல ஆண்டுகள் வரை ஆட்சி செய்து வந்த துரை மகாராஜா ஒரு காலத்தில், அந்த கிராமத்தை ஜனநாயக ...