Skip to main content

மென்பொருள் நிறுவனங்களின் இப்போதைய நிலை - ஒரு நீதிக் கதை.

ஒரு மாவட்டத்தில் அடிக்கடி திருட்டுப் போய் கொண்டிருந்தது. அந்த மாவட்டத்தில் குறைந்த அளவு போலீசார் இருந்ததால், போலீஸ் தலைவர், மாவட்டத்திலுள்ள ஊர் தலைவர்களை அழைத்து ஒரு கூட்டம் நடத்தி, அந்தந்த ஊரில் உள்ளூர் ஊர்காவல் படையை அமைக்கும் படி கேட்டுக் கொண்டார். அதன் அடிப்படையில் அந்த ஊர் பஞ்சாயத்தார் ஊர் காவலர்களாக ஐந்து பேரை நியமித்தனர். சில நாள் கழிந்தது.

நிர்வாக மேலாண்மை படித்த ஒரு புத்திசாலியின் யோசனையின் படி காவலர்கள் எந்தெந்த பகுதிகளில் எந்தெந்த நேரங்களில் காவல் காக்க வேண்டும் என்று அறிவுரை செய்வதற்காக ஒரு திட்டப் பிரிவு (Planning Department) அமைக்கப் பட்டது. அந்த குழுவில் பணி செய்வதற்காக இரண்டு பேர் (Developers) அமர்த்தப் பட்டனர். மேலும் சில நாள் கழிந்தது. இந்த காவலாளிகள் சரியான நேரத்தில் பணிக்கு வருகிறார்களா என்றும் சரியான நேரத்தில் பணியை முடிக்கிறார்களா என்று கவனிப்பதற்காக ஒரு டைம் கீப்பர் பணியமர்த்தப் பட்டார்.

உள்ளூர் காவலர்களுக்கு காவல் பணியில் பயிற்சி அளிக்க ஒரு ஓய்வு பெற்ற போலீஸ் (Domain Expert) நியமிக்கப் பட்டார். பின்னர், இவர்களின் பணிகளைப் பற்றி உள்ளூர் தலைகளுக்கும் மாவட்ட போலீசுக்கும் தகவல் தெரிவிக்க ஒரு ரிலேசன்ஷிப் மேனேஜர் நியமிக்கப் பட்டார்.

இவர்களுக்கு மாதாமாதம் சம்பளம் தரவேண்டுமே? எனவே ஒரு சம்பள குமாஸ்தா, கணக்குகளை சரிபார்க்க ஒரு தணிக்கையாளர், அலுவலகத்தை மேற்பார்வை இட ஒரு உதவி நிர்வாக அலுவலர் இவர்கள் எல்லாரையும் மேய்க்க ஒரு ப்ராஜெக்ட் ஹெட் ஆகியோரும் நியமிக்கப் பட்டனர்.

இப்படியே கொஞ்ச நாள் போனது. எல்லாருக்கும் சம்பளம் கொடுத்து பஞ்சாயத்திற்கு கட்டுப் படியாக வில்லை. செலவுகளை கட்டுப் படுத்த பக்கத்திலிருக்கும் ஒரு கன்சல்டன்சியின் உதவி கோரப் பட்டது. அவர்கள் "ஊரைக் காவல் காக்கும் இந்த ப்ரொஜெக்ட்டை" ஆய்வு செய்து சில பரிந்துரைகளை அளித்தனர். அதன் படி ஊரைக் காவல் காக்க முதன் முதலாக நியமிக்கப் பட்ட ஐந்து ஊர்காவலர்களும் பணி நீக்கம் செய்யப் பட்டனர்.

இந்த கதையின் நீதி - விளக்க வேண்டியதில்லை என்று நினைக்கிறேன்.

நன்றி.

பின்குறிப்பு: இந்த கதை கடந்த சில வருடங்களில் வெகுவாக ஆட்களை வேலைக்குச் சேர்த்து இப்போது அதே வேகத்தில் நீக்கும் (கிட்டத் தட்ட) அனைத்து வணிக நிறுவனங்களுக்கும் பொருந்தும்.

Comments

இதைவிட புரியறாப்புல வேற எப்படியும் சொல்ல முடியாது. சூப்பர்
Maximum India said…
அன்புள்ள நந்து f/o நிலா

முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.
எனக்கு ஒண்ணு மட்டும் புரியல
ஒருவர் வேலை செய்கிறாரா என்று கவனிக்க இன்னொருவர், அவரை கவனிக்க மற்றொருவர். இந்த உலகில் நேர்மை என்ற வார்த்தை அர்த்தம் தொலைத்து விட்டதா?
Maximum India said…
அன்புள்ள வால்பையன்

கருத்துரைக்கு நன்றி

//எனக்கு ஒண்ணு மட்டும் புரியல
ஒருவர் வேலை செய்கிறாரா என்று கவனிக்க இன்னொருவர், அவரை கவனிக்க மற்றொருவர். இந்த உலகில் நேர்மை என்ற வார்த்தை அர்த்தம் தொலைத்து விட்டதா?//

கடந்த இரண்டு மூன்று வருடங்களில் வணிக நிறுவனங்கள் அடித்த கூத்து சொல்லி மாளாது. ஒரு கிரிக்கெட் மாட்ச்சை ஒரு நடிகை பார்க்க வேண்டுமென்பதற்காக, ஒரு கம்பெனி (அந்த கம்பெனி தலைவர்) தனி விமானம் அனுப்பி அவரை வரவழைத்தது. இந்த பணம் யாரோடது? அப்பாவி பங்குதாரர்களின் பணம் தண்ணீராய் செலவழிக்கப் பட்டதும் இப்போதைய பொருளாதார வீழ்ச்சிக்கு ஒரு முக்கிய காரணம்.

நன்றி
Maximum India said…
Dear Observer

It will be done
Maximum India said…
Dear Siva

Thanks for the compliments :)

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

நரேந்திர மோடி நாடாளலாமா?

சமீபத்தில் நடைபெற்ற குஜராத் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கார்பொரட் கனவான்களான அனில் அம்பானி மற்றும் சுனில் மிட்டல் ஆகியோர் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர். காரியம் ஆக வேண்டும் என்றால் என்ன வேண்டுமானாலும் பேசக் கூடியவர்கள் நமது தொழில் அதிபர்கள் என்பதனால் அவர்களின் பேச்சுக்கு அவ்வளவு மரியாதை கொடுக்க வேண்டியதில்லை. இவர்களைப் போன்றவர்களால் ஏற்கனவே நாடாள தகுதி பெற்றவர் என்று கூறப் பட்ட சந்திர பாபு நாயுடு அடுத்த சட்ட மன்ற தேர்தலில் தனது முதலமைச்சர் பதவியினையே இழந்தது குறிப்பிடத் தக்கது. தொழில் அதிபர்கள் பேச்சினை பா.ஜ.கவே ஏற்றுக் கொள்ளாத பட்சத்திலும் கூட, தீவிரவாதத்தை ஒடுக்கி குஜராத் மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்து சென்றவர் நரேந்திர மோடி என்றும் அவர் இந்தியாவின் பிரதமர் ஆவது நாட்டுக்கு நல்லது என்றும் பலராலும் கருதப் படுவதால், நரேந்திர மோடியின் செயல்பாடு பற்றியும் அவர் பிரதமர் ஆகலாமா என்பது பற்றியும் பிரதமராக அவர் ஏற்றுக் கொள்ளப் படுவாரா என்பதைப் பற்றியும் இங்கு பார்ப்போம். இன்றைய தேதியில் இந்தியாவிலேயே மிகுந்த முன்னேற்றம் அடைந்த ஒரு மாநிலமாக குஜரா...

நேர்ந்து விடப் பட்டவர்கள் - இவர்களும் இந்தியர்களே!

எனது வங்கியில் புதியதாக கணக்கு துவக்க விண்ணப்பித்த ஒரு நடுத்தர வயது பெண்மணி, தனது விண்ணப்பத்தில் தந்தை/கணவர் பெயரை நிரப்ப வில்லை. ஏன் நிரப்ப வில்லை என்ற என் கேள்விக்கு அந்த பெண்ணிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. பொதுவாகவே கல்வியறிவு மிகவும் குறைந்த வட கர்நாடக பகுதி என்பதால், அவரது விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய உதவி செய்த நபரை அழைத்து, கணவர் பெயரை நிரப்பும் படி அறிவுறுத்தினேன், . அந்த பெண்ணிற்கு இன்னும் திருமணமாக வில்லை என்று அந்த நபர் கூறினார். அதனால் என்ன, அவரது தந்தை பெயரை நிரப்புங்கள் என்று சற்று எரிச்சலுடன் கூறினேன். அவருக்கு தந்தையும் இல்லை என்றார் அவர். மேலும் எரிச்சலான நான் தந்தையை கேட்க வில்லை, தந்தையின் பெயரைத்தான் கேட்கிறேன் என்று கூறினேன். அதற்கு அவர், அந்த பெண்மணியின் பட்டப் பெயரை கவனிக்க வில்லையா என்று கேட்டார். அதற்கென்ன என்று நான் திருப்பிக் கேட்ட போது, அந்த (தேவதாசி) இனத்தை சேர்ந்தவர்கள் கடவுளுக்கு நேர்ந்து விடப் பட்டவர்கள் என்றும் அவர்களுக்கு தந்தையோ கணவரோ கிடையாது என்று கூறினார். இந்த காலத்திலும் இப்படியா என்று ஒரு நிமிடம் திகைப்பின் உச்சிக்கு சென்ற நான் அந்த பெண்ணைப் ப...