Skip to main content

சில்லறை வணிக நிறுவனங்கள் இப்போது சிக்கலில்?

அமெரிக்காவில் வால்மார்ட் நிறுவனம் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து இந்தியாவிலும் பல சங்கிலித் தொடர் சில்லறை வணிக நிறுவனங்கள் உருவாகின. ரிலையன்ஸ், பாரதி, டாட்டா என பெரிய தொழில் குழுமங்கள் கூட இநத தொழிலில் ஆர்வம் காட்டினாலும், பிக் பஜார் (பேண்டலூன் குழுமம்), ஸ்பென்செர் (ஆர்.பி.ஜி குழுமம்) போன்ற சில வணிக நிறுவனங்களே அவற்றில் குறிப்பிடத் தக்க வெற்றியைப் பெற்றவை. கடந்த சில வருடங்களில் இந்தியாவில் ஏற்பட்ட அசுர பொருளாதார வளர்ச்சியின் போதே பெருமளவு லாபம் சம்பாதிக்க முடியாத இநத துறையைச் சார்ந்த நிறுவனங்கள் இப்போதைய தளர்ச்சிக் காலத்தில் தடுமாறி வருகின்றன. இந்த சிக்கலான நிலைக்கு காரணங்கள் யாவை என்று இப்போது பார்ப்போம்.

முதல் காரணம், இப்போது நேரிட்டுள்ள பொருளாதார தளர்ச்சியின் காரணமாக நுகர்வோரின் வாங்கும் திறன் பெருமளவு குறைந்து போனது. அத்தியாவசியப் பொருட்களின் விலையை (தள்ளுபடி என்ற பெயரில்) சற்று குறைத்து, பல அத்தியாவசியமற்ற கவர்ச்சிப் பொருட்களை (பொருந்தாத விலையில்) மக்களின் தலையில் கட்டும் சில்லறை வணிக நிறுவனங்களின் வியாபாரத் தந்திரம் இன்றைய சூழ்நிலையில் பெருமளவில் பலிக்காமல் போகிறது. காரணம், பொருளாதார வளர்ச்சிக் காலத்தில் கண்ணில் படுகின்றவையையெல்லாம் வாங்கும் மக்கள், தளர்ச்சிக் காலத்தில், அத்தியாவசமற்ற பொருட்களை வாங்க சற்று தயங்குகிறார்கள். எனவே இநத நிறுவனங்களின் லாப விகிதம் பெருமளவு குறைந்து போய் விட்டது.

ரியல் எஸ்டேட் விலைகள் (வாடகைகள்) இன்னமும் கூட பெருமளவில் குறையாத நிலையில் நகரின் மையப் பகுதியில் பெரிய இடப் பரப்பில் (வாகனம் நிறுத்தும் வசதியுடன்) வணிக தளங்களை அமைக்க வேண்டியிருப்பது அதிக "முதல்" தேவையை உருவாக்கி பொருளாதார ரீதியாக இநத நிறுவனங்களுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்துகிறது. மேலும், முற்றிலும் குளிர்சாதன வசதி செய்யப் பட்ட அரங்குகள், அதிக எண்ணிக்கையிலான ஊழியர்கள், சேமிப்பு கிடங்கு என இவர்களுடைய அமைப்பு ரீதியான செலவுக் கணக்கு கூடிய அளவுக்கு வருமானம் பெருக வில்லை.

சில்லறை வணிகத்தில் பெரிய நிறுவனங்கள் நுழைந்த போது, சிறு வணிகர்கள் (நமது தெருவோர அண்ணாச்சி கடைகள்) பெருமளவு பயந்தனர். இநத நிறுவனங்களுக்கு எதிராக சில போராட்டங்கள் கூட நடத்தப் பட்டன. ஆனால், உண்மையில் இநத பெரிய நிறுவனங்களால், சிறு வணிகர்களுக்கு எதிராக (சிறிய நகரங்களில் மட்டுமல்ல, பெரிய நகரங்களில் கூட) பெரிய நிறுவனங்களால் போட்டி போட இயல வில்லை என்றுதான் கூற வேண்டும். சிறு வணிகர்களின் தாக்குப் பிடிக்கும் திறனுக்கு முக்கிய காரணங்களில் சில கீழே.

"நுகர்வோருக்கு அருகாமையிலேயே இருத்தல், சிறிய கடன் வசதி அளித்தல், சிறிய அளவில் பொருட்கள் கிடைப்பது, அமைப்பு ரீதியான செலவினங்கள் குறைவு."

இவ்வாறு சிறு வணிகர்கள் கடும் போட்டி அளிப்பதால், பெரிய சில்லறை நிறுவனங்களால் எதிர்பார்த்த அளவுக்கு தனி ஆதிக்கம் செலுத்தவோ, பெரிய அளவுக்கு வாடிக்கையாளர்களை பெறவோ முடிய வில்லை.

மேலும், தமது சங்கிலி தொடர் கிளைகளை அதி வேகமாக விரிவு படுத்திய இநத வணிக நிறுவனங்கள் இப்போது கடும் நிதிச் சிக்கலில் சிக்கி கொண்டன. வட்டி வீத உயர்வு மற்றும் வீழ்ச்சியடைந்த பங்கு சந்தைகள், புதிய முதல் திரட்டுவதற்கு இந்த நிறுவனங்களுக்கு பெரும் தடையாக உள்ளன. பல தொடர் சங்கிலி சில்லறை நிறுவனங்கள் கடந்த காலாண்டில் (அதுவும் பண்டிகை காலத்தில்)பெரும் இழப்பை சந்தித்துள்ளது குறிப்பிடத் தக்கது. பெரிய அளவில் தள்ளுபடி என்று செய்யப் பட்ட வியாபார தந்திரங்கள் பெருமளவிற்கு எடுபடவில்லை

ஆக மொத்தத்தில், கடும் நிதி நெருக்கடியை சந்தித்துள்ள இநத நிறுவனங்கள், தமது கிளைகளை மூடுவது, ஆட்குறைப்பு, வைத்திருக்கும் பொருட்களின் எண்ணிக்கை குறைப்பு, குறிப்பிட்ட பொருட்களின் விலை அதிகரிப்பு என போர்க்கால அடிப்படையில் சில நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

ஆனால் இநத நடவடிக்கைகள் எந்த அளவுக்கு இநத நிறுவனங்களை காப்பாற்றும் என்று இப்போதைக்கு சொல்வது கடினம். இதே பொருளாதார தளர்ச்சி நிலை நீடிக்கும் பட்சத்தில், இன்னும் கூட பல கிளைகள் ஏன் சில பெரிய நிறுவனங்கள் கூட மூடப் படுவதை நாம் பார்க்க முடியும்.

நன்றி.

Comments

நந்து அண்ணாவிடம் குறைந்தவிலையில் ஒரு குளிர்சாதன பெட்டி வேணும்னு சொல்லியிருந்தேன்.

கொஞ்சம் பொறு இன்னும் கொஞ்ச நாள்ல நிறை செகண்ட் கேன்ட் அயிட்டங்கள் மார்கெட்டுக்கு வரும், வேண்டியதை அள்ளி கொள்ளலாம் என்றார்.

:)
Maximum India said…
அன்புள்ள வால்பையன்

//கொஞ்சம் பொறு இன்னும் கொஞ்ச நாள்ல நிறை செகண்ட் கேன்ட் அயிட்டங்கள் மார்கெட்டுக்கு வரும், வேண்டியதை அள்ளி கொள்ளலாம் என்றார்.//

குளிர்சாதன பேட்டிகள் மட்டுமல்ல, இன்னும் பல விஷயங்கள் தள்ளுபடியில் மார்கெட்டுக்கு வரப் போகின்றன. பொறுமையாக இருங்கள். :)
Tech Shankar said…
சுபிக்‌ஷா மூடிட்டாங்களாம்லோ அப்படியா?
Maximum India said…
அன்புள்ள தமிழ்நெஞ்சம்

பின்னூட்டத்திற்கு நன்றி.

சுபிக்ஷா இப்போதைக்கு கடும் நிதி நெருக்கடியில் இருப்பதாக தெரிகிறது. ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க மற்றும் புதிய பொருட்களை வாங்க முடியாத நிலையில் உள்ளது. அதே சமயம் இந்த நிலை தற்காலிகமானதே என்றும் கடன் மற்றும் புதிய மூலதனம் பெற முயற்சித்துக் கொண்டிருப்பதாகவும் அதன் தலைவர் தெரிவித்துள்ளார். விஷால் ரீடைல் எனும் நிறுவனம் கூட இதே போல கடும் நெருக்கடியில் உள்ளதாக தெரிகிறது.

நன்றி.
Anonymous said…
எப்படியோ, சில்லறை வணிக நிறுவனங்களுக்கு நிம்மதியான வாழ்க்கை கிடைத்தால் சரிதான்...
Maximum India said…
அன்புள்ள நரேஷ்

பின்னூட்டத்திற்கு நன்றி

//எப்படியோ, சில்லறை வணிக நிறுவனங்களுக்கு நிம்மதியான வாழ்க்கை கிடைத்தால் சரிதான்...//

பொதுவாகவே இப்போது அனைத்து சில்லறை வணிக நிறுவனங்களுக்கும் போதாத காலம்தான்.

நன்றி

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

நரேந்திர மோடி நாடாளலாமா?

சமீபத்தில் நடைபெற்ற குஜராத் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கார்பொரட் கனவான்களான அனில் அம்பானி மற்றும் சுனில் மிட்டல் ஆகியோர் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர். காரியம் ஆக வேண்டும் என்றால் என்ன வேண்டுமானாலும் பேசக் கூடியவர்கள் நமது தொழில் அதிபர்கள் என்பதனால் அவர்களின் பேச்சுக்கு அவ்வளவு மரியாதை கொடுக்க வேண்டியதில்லை. இவர்களைப் போன்றவர்களால் ஏற்கனவே நாடாள தகுதி பெற்றவர் என்று கூறப் பட்ட சந்திர பாபு நாயுடு அடுத்த சட்ட மன்ற தேர்தலில் தனது முதலமைச்சர் பதவியினையே இழந்தது குறிப்பிடத் தக்கது. தொழில் அதிபர்கள் பேச்சினை பா.ஜ.கவே ஏற்றுக் கொள்ளாத பட்சத்திலும் கூட, தீவிரவாதத்தை ஒடுக்கி குஜராத் மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்து சென்றவர் நரேந்திர மோடி என்றும் அவர் இந்தியாவின் பிரதமர் ஆவது நாட்டுக்கு நல்லது என்றும் பலராலும் கருதப் படுவதால், நரேந்திர மோடியின் செயல்பாடு பற்றியும் அவர் பிரதமர் ஆகலாமா என்பது பற்றியும் பிரதமராக அவர் ஏற்றுக் கொள்ளப் படுவாரா என்பதைப் பற்றியும் இங்கு பார்ப்போம். இன்றைய தேதியில் இந்தியாவிலேயே மிகுந்த முன்னேற்றம் அடைந்த ஒரு மாநிலமாக குஜரா...

இங்கும் அங்கும் பாதை உண்டு. இதில் நீ எந்த பக்கம்?

சென்ற வாரம் 8350 என்ற எதிர்ப்பு நிலையை தாண்டிய போதும், நிப்டியால் முழுமையான வெற்றியை பெற முடிய வில்லை. 8350 என்ற நிலையின் அருகிலேயே இன்னும் நிலை பெற்றுள்ளது. உலக சந்தைகளின் போக்கினையொட்டி இந்த வாரம் 8350 என்ற எதிர்ப்பு நிலையை முழுமையாக முறியடிக்கின்றதா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும். வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். நன்றி.