Skip to main content

சில்லறை வணிக நிறுவனங்கள் இப்போது சிக்கலில்?

அமெரிக்காவில் வால்மார்ட் நிறுவனம் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து இந்தியாவிலும் பல சங்கிலித் தொடர் சில்லறை வணிக நிறுவனங்கள் உருவாகின. ரிலையன்ஸ், பாரதி, டாட்டா என பெரிய தொழில் குழுமங்கள் கூட இநத தொழிலில் ஆர்வம் காட்டினாலும், பிக் பஜார் (பேண்டலூன் குழுமம்), ஸ்பென்செர் (ஆர்.பி.ஜி குழுமம்) போன்ற சில வணிக நிறுவனங்களே அவற்றில் குறிப்பிடத் தக்க வெற்றியைப் பெற்றவை. கடந்த சில வருடங்களில் இந்தியாவில் ஏற்பட்ட அசுர பொருளாதார வளர்ச்சியின் போதே பெருமளவு லாபம் சம்பாதிக்க முடியாத இநத துறையைச் சார்ந்த நிறுவனங்கள் இப்போதைய தளர்ச்சிக் காலத்தில் தடுமாறி வருகின்றன. இந்த சிக்கலான நிலைக்கு காரணங்கள் யாவை என்று இப்போது பார்ப்போம்.

முதல் காரணம், இப்போது நேரிட்டுள்ள பொருளாதார தளர்ச்சியின் காரணமாக நுகர்வோரின் வாங்கும் திறன் பெருமளவு குறைந்து போனது. அத்தியாவசியப் பொருட்களின் விலையை (தள்ளுபடி என்ற பெயரில்) சற்று குறைத்து, பல அத்தியாவசியமற்ற கவர்ச்சிப் பொருட்களை (பொருந்தாத விலையில்) மக்களின் தலையில் கட்டும் சில்லறை வணிக நிறுவனங்களின் வியாபாரத் தந்திரம் இன்றைய சூழ்நிலையில் பெருமளவில் பலிக்காமல் போகிறது. காரணம், பொருளாதார வளர்ச்சிக் காலத்தில் கண்ணில் படுகின்றவையையெல்லாம் வாங்கும் மக்கள், தளர்ச்சிக் காலத்தில், அத்தியாவசமற்ற பொருட்களை வாங்க சற்று தயங்குகிறார்கள். எனவே இநத நிறுவனங்களின் லாப விகிதம் பெருமளவு குறைந்து போய் விட்டது.

ரியல் எஸ்டேட் விலைகள் (வாடகைகள்) இன்னமும் கூட பெருமளவில் குறையாத நிலையில் நகரின் மையப் பகுதியில் பெரிய இடப் பரப்பில் (வாகனம் நிறுத்தும் வசதியுடன்) வணிக தளங்களை அமைக்க வேண்டியிருப்பது அதிக "முதல்" தேவையை உருவாக்கி பொருளாதார ரீதியாக இநத நிறுவனங்களுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்துகிறது. மேலும், முற்றிலும் குளிர்சாதன வசதி செய்யப் பட்ட அரங்குகள், அதிக எண்ணிக்கையிலான ஊழியர்கள், சேமிப்பு கிடங்கு என இவர்களுடைய அமைப்பு ரீதியான செலவுக் கணக்கு கூடிய அளவுக்கு வருமானம் பெருக வில்லை.

சில்லறை வணிகத்தில் பெரிய நிறுவனங்கள் நுழைந்த போது, சிறு வணிகர்கள் (நமது தெருவோர அண்ணாச்சி கடைகள்) பெருமளவு பயந்தனர். இநத நிறுவனங்களுக்கு எதிராக சில போராட்டங்கள் கூட நடத்தப் பட்டன. ஆனால், உண்மையில் இநத பெரிய நிறுவனங்களால், சிறு வணிகர்களுக்கு எதிராக (சிறிய நகரங்களில் மட்டுமல்ல, பெரிய நகரங்களில் கூட) பெரிய நிறுவனங்களால் போட்டி போட இயல வில்லை என்றுதான் கூற வேண்டும். சிறு வணிகர்களின் தாக்குப் பிடிக்கும் திறனுக்கு முக்கிய காரணங்களில் சில கீழே.

"நுகர்வோருக்கு அருகாமையிலேயே இருத்தல், சிறிய கடன் வசதி அளித்தல், சிறிய அளவில் பொருட்கள் கிடைப்பது, அமைப்பு ரீதியான செலவினங்கள் குறைவு."

இவ்வாறு சிறு வணிகர்கள் கடும் போட்டி அளிப்பதால், பெரிய சில்லறை நிறுவனங்களால் எதிர்பார்த்த அளவுக்கு தனி ஆதிக்கம் செலுத்தவோ, பெரிய அளவுக்கு வாடிக்கையாளர்களை பெறவோ முடிய வில்லை.

மேலும், தமது சங்கிலி தொடர் கிளைகளை அதி வேகமாக விரிவு படுத்திய இநத வணிக நிறுவனங்கள் இப்போது கடும் நிதிச் சிக்கலில் சிக்கி கொண்டன. வட்டி வீத உயர்வு மற்றும் வீழ்ச்சியடைந்த பங்கு சந்தைகள், புதிய முதல் திரட்டுவதற்கு இந்த நிறுவனங்களுக்கு பெரும் தடையாக உள்ளன. பல தொடர் சங்கிலி சில்லறை நிறுவனங்கள் கடந்த காலாண்டில் (அதுவும் பண்டிகை காலத்தில்)பெரும் இழப்பை சந்தித்துள்ளது குறிப்பிடத் தக்கது. பெரிய அளவில் தள்ளுபடி என்று செய்யப் பட்ட வியாபார தந்திரங்கள் பெருமளவிற்கு எடுபடவில்லை

ஆக மொத்தத்தில், கடும் நிதி நெருக்கடியை சந்தித்துள்ள இநத நிறுவனங்கள், தமது கிளைகளை மூடுவது, ஆட்குறைப்பு, வைத்திருக்கும் பொருட்களின் எண்ணிக்கை குறைப்பு, குறிப்பிட்ட பொருட்களின் விலை அதிகரிப்பு என போர்க்கால அடிப்படையில் சில நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

ஆனால் இநத நடவடிக்கைகள் எந்த அளவுக்கு இநத நிறுவனங்களை காப்பாற்றும் என்று இப்போதைக்கு சொல்வது கடினம். இதே பொருளாதார தளர்ச்சி நிலை நீடிக்கும் பட்சத்தில், இன்னும் கூட பல கிளைகள் ஏன் சில பெரிய நிறுவனங்கள் கூட மூடப் படுவதை நாம் பார்க்க முடியும்.

நன்றி.

Comments

நந்து அண்ணாவிடம் குறைந்தவிலையில் ஒரு குளிர்சாதன பெட்டி வேணும்னு சொல்லியிருந்தேன்.

கொஞ்சம் பொறு இன்னும் கொஞ்ச நாள்ல நிறை செகண்ட் கேன்ட் அயிட்டங்கள் மார்கெட்டுக்கு வரும், வேண்டியதை அள்ளி கொள்ளலாம் என்றார்.

:)
Maximum India said…
அன்புள்ள வால்பையன்

//கொஞ்சம் பொறு இன்னும் கொஞ்ச நாள்ல நிறை செகண்ட் கேன்ட் அயிட்டங்கள் மார்கெட்டுக்கு வரும், வேண்டியதை அள்ளி கொள்ளலாம் என்றார்.//

குளிர்சாதன பேட்டிகள் மட்டுமல்ல, இன்னும் பல விஷயங்கள் தள்ளுபடியில் மார்கெட்டுக்கு வரப் போகின்றன. பொறுமையாக இருங்கள். :)
Tech Shankar said…
சுபிக்‌ஷா மூடிட்டாங்களாம்லோ அப்படியா?
Maximum India said…
அன்புள்ள தமிழ்நெஞ்சம்

பின்னூட்டத்திற்கு நன்றி.

சுபிக்ஷா இப்போதைக்கு கடும் நிதி நெருக்கடியில் இருப்பதாக தெரிகிறது. ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க மற்றும் புதிய பொருட்களை வாங்க முடியாத நிலையில் உள்ளது. அதே சமயம் இந்த நிலை தற்காலிகமானதே என்றும் கடன் மற்றும் புதிய மூலதனம் பெற முயற்சித்துக் கொண்டிருப்பதாகவும் அதன் தலைவர் தெரிவித்துள்ளார். விஷால் ரீடைல் எனும் நிறுவனம் கூட இதே போல கடும் நெருக்கடியில் உள்ளதாக தெரிகிறது.

நன்றி.
Anonymous said…
எப்படியோ, சில்லறை வணிக நிறுவனங்களுக்கு நிம்மதியான வாழ்க்கை கிடைத்தால் சரிதான்...
Maximum India said…
அன்புள்ள நரேஷ்

பின்னூட்டத்திற்கு நன்றி

//எப்படியோ, சில்லறை வணிக நிறுவனங்களுக்கு நிம்மதியான வாழ்க்கை கிடைத்தால் சரிதான்...//

பொதுவாகவே இப்போது அனைத்து சில்லறை வணிக நிறுவனங்களுக்கும் போதாத காலம்தான்.

நன்றி

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

இந்தியா தாக்குப் பிடிக்குமா?

இன்றைய உலகப் பொருளாதாரத் தேக்க நிலையில், இந்தியாவால் தாக்குப் பிடிக்க முடியுமா என்பது பற்றி பார்ப்போம். சமீபத்தில் வெளியிடப் பட்ட மத்திய புள்ளியல் (மத்திய அரசு) நிறுவனத்தின் மதிப்பீட்டின் படி இந்தியப் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 7.1 சதவீதம் வளர்ச்சியுறும் என்று தெரிகிறது. இது சரியாக இருக்கும் பட்சத்தில் உலகிலேயே இரண்டாவதாக வேகமாக வளர்ச்சியுறும் நாடு இந்தியாவாகத்தான் இருக்கும் (சீனா முதலாவது). சென்ற ஆண்டில் ஒன்பது சதவீதம் வளர்ச்சி பெற்றிருந்த இந்தியப் பொருளாதாரம் செப்டம்பர் 2008 வரையிலான முதல் அரையாண்டில் 7.80% வளர்ச்சிப் பெற்றிருந்தது. பொதுவாகவே பண்டிகைக் காலமாக கருதப் படுகிற இரண்டாவது அரையாண்டே தொழிற் துறையில் அதிக வளர்ச்சியைக் காட்டும் என்றாலும் இந்த முறை இந்தியத் தொழில் துறை பெரும் தேக்க நிலையில் இருந்து வந்திருக்கிறது என்பது கவனிக்கத் தக்கது. இந்திய தொழிற் வளர்ச்சி கடந்த இரு மாதங்களாக மிகவும் குறைந்து காணப் படுவதாலும் ஏற்றுமதியோ இறங்குமுகத்தில் இருப்பதாலும் இந்திய அரசாங்கம், மார்ச் 2009 வரையிலான நிதி ஆண்டின் இரண்டாவது அரையாண்டில் நமது பொருளாதாரம் குறைந்த வளர்ச்சியே (6.30%) இரு...

தீவிரவாதிகளை வென்ற கதை - இந்திய கமாண்டோவின் விளக்கம்

நேற்று ஒரு தீவிரவாதி பிடிப் பட்ட கதை பார்த்தோம். இன்று தாஜ் ஹோட்டலில் எவ்வாறு நான்கு தீவிரவாதிகள் ஒழிக்கப் பட்டனர் என்று விளக்கும் இந்திய கமாண்டோவின் விளக்கத்தை பார்ப்போம். முதலில் இந்தியா கமாண்டோக்கள் தாஜ் ஹோட்டல் வந்த கதை புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் மும்பையை பயங்கரவாதம் தாக்கியது. அப்போது கேரளாவில் இருந்த மகாராஷ்டிர முதல்வர் மும்பை வரவும் இந்த சூழ்நிலையின் பயங்கரத்தையும் முழுமையாக உணர்ந்துக் கொள்ளவும் 90 நிமிடம் பிடித்தது .பின்னர் 11.00 அளவில் மத்திய அரசிற்கு போன் பேசிய முதல்வர் கோரியது 200 கமாண்டோக்களை. உடனே அந்நேரத்தில் தூங்கி கொண்டிருந்த இந்திய கமாண்டோக்கள் எழுப்பப் பட்டனர். அவர்கள் மும்பை வரத் தயாரான போதுதான் புரிந்தது, அவ்வளவு பேரை மும்பை கொண்டுவர தேவையான சிறப்பு விமானம் சண்டிகரில் உள்ளது என்று. உடனே அந்த விமானியையும் தூக்கத்தில் இருந்து எழுப்பி தயார் படுத்தி டெல்லியிலிருந்து கமாண்டோக்கள் மும்பை வந்த போது நேரம் காலை 5.25 மணி. அவர்கள் தாஜ் ஹோட்டலுக்கு கொண்டு வரப்பட்டு திட்டம் தயாரிக்கப் பட்டு அவர்கள் தாஜ் ஹோட்டலுக்குள் நுழைந்த போது நேரம் காலை 7.00 மணி. அதாவது மும்பை தாக்கப் ப...