Skip to main content

Posts

Showing posts from March, 2009

அன்று சூரியன் மறையாத நாடு - இன்றோ கையேந்தும் நிலையில்?

முன்னொரு காலத்தில் உலகின் தனி ஏகாதிபத்திய நாடாக விளங்கியது பிரிட்டிஷ் சாம்ராஜ்யம். கிழக்கே ஆஸ்திரேலியா முதல் மேற்கே அமெரிக்கா வரை அதன் ஆதிக்கம் பரவி விரவி கிடந்தது. கிட்டத் தட்ட உலக நிலப் பரப்பின் நான்கில் ஒரு பகுதியை ஆண்டதால், இந்த பேரரசு சூரியன் மறையாத நாடு என்ற புகழைப் பெற்றது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னால் தனது வலுவை பெருமளவு இழந்த இந்த நாடு தனது காலனிப் பகுதிகளுக்கு சுதந்திரம் அளிக்க நேரிட்டது. மேலும், உலகின் புதிய ஏகாதிபத்திய சக்தியாக உருவெடுத்த அமெரிக்காவுடன் ஒத்து போகவும் நேரிட்டது. முக்கியமாக, செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பின்னர், இங்கிலாந்தின் வெளியுறவுக் கொள்கைகள் அமெரிக்காவைப் பின்பற்றியே அமைந்து அந்த நாடு தனது தனித்துவத்தை முழுவதுமாக இழந்தது. இருந்தாலும் கூட, இங்கிலாந்து பொருளாதார ரீதியாக வளம் பெற்ற நாடாகவே தொடர்ந்து வந்தது. G-8, G-20, ஐநா பாதுகாப்புச் சபை போன்றவற்றில் ஓரளவுக்கு செல்வாக்கு பெற்றும் வந்துள்ளது. ஒரு குறிப்பிட்ட காலம் வரை, இங்கிலாந்தின் நாணயமான பவுண்டிற்கு டாலருக்கு நிகரான மரியாதை இருந்து வந்தது. இந்தியா உட்பட பல நாடுகள் தங்களது அந்நிய செலவாணியை பவுண்ட...

வெற்றி தொடருமா?

சென்ற வாரம் பலரும் எதிர்பாரா வண்ணம் சந்தைகள் மிகப் பெரிய முன்னேற்றத்தைக் கண்டன. உலக சந்தைகளின் தொடர்ந்த உயர்ச்சி நமது சந்தைகளுக்கும் நல்ல ஊக்கத்தைக் கொடுக்க சென்செக்ஸ் ஆயிரம் புள்ளிகளுக்கும் மேலே உயர்ந்து மிக முக்கிய இலக்கான 10,௦௦௦000 புள்ளிகளையும் எளிதில் கடந்தது. அதே போல, நிபிட்டி குறியீடு சுமார் 300 புள்ளிகள் உயர்ந்து 3100 புள்ளிகளுக்கும் மேலே முடிவடைந்தது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் பெருமளவு பங்குகளை வாங்கியதும், விற்று பின் வாங்கும் நிலையை எடுத்தவர்கள் அவசர அவசரமாக அந்த நிலையை சமன் செய்ய முனைந்ததும் இந்த முன்னேற்றத்திற்கு முக்கிய காரணங்கள். நாம் ஏற்கனவே சென்ற பதிவில் விவாதித்த படி, அமெரிக்க பணம் உலகெங்கும் பாயும் என்ற நம்பிக்கையும் சந்தைகளின் புதிய நம்பிக்கைக்கு முக்கிய காரணம். இதன் விளைவாக இந்திய ரூபாய் உட்பட முக்கிய உலக நாணயங்களுக்கு எதிரான டாலர் மதிப்பு சென்ற வாரம் குறைந்தது. உலகெங்கும் உள்ள பொருட்கள் மற்றும் பங்கு சந்தைகள் பெருமளவுக்கு உயர்ந்தன. பெரிய அமெரிக்க வங்கிகள் வீழ்ச்சியில் இருந்து தப்பிக்கும் என்ற புதிய நம்பிக்கையிலும், இந்திய வங்கிகளின் செயல்பாடு இந...

நாட்டுக்குத் தேவை அரசியல் தலைவரா? செயல் தலைவரா?

அறுதிப் பெரும்பான்மை இல்லாத ஒரு அரசுக்கு கூட்டணி கட்சிகளால் ஏற்படும் தொல்லைகள் ஏராளம். இந்த தொல்லைகள் அரசை தனது இயல்பான போக்கில் செயல்பட விடாமல் தடுக்கின்றன. முந்தைய கூட்டணி அரசாங்கள் சந்தித்த இது போன்ற தொந்தரவுகளை தவிர்க்க விரும்பிய இப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஒரு புதிய பரிசோதனை முயற்சியில் இறங்கியது. தலைவலி தரும் அரசியல் பிரச்சினைகளை கவனித்துக் கொள்ள ஒரு தலைவர். அரசாங்கத்தை நடத்திச் செல்ல ஓர் பிரதமர் என்று ஒரு வித இரட்டை ஆட்சி முறை உருவாக்கப் பட்டது. (சோனியா காந்தி வெளிநாட்டினர் என்றும் அதனால் அவர் பிரதமர் பதவி ஏற்கக் கூடாது என்று ஒரு தரப்பினர் வாதிட்டதும் இத்தகைய இரட்டை ஆட்சி முறைக்கு ஒரு காரணமாக இருந்தது). வணிக நிறுவனங்களில் இருப்பது போல பிரதமருக்கும் அவரது அமைச்சரவைக்கும் சில இலக்குகள் நிர்ணயிக்கப் பட்டன. (அதே சமயம், வணிக நிறுவனங்களின் செயல் தலைவருக்கு இருப்பது போல தனது சகாக்களை தேர்ந்தெடுக்கும் முழுமையான உரிமை பிரதமருக்கு வழங்கப் பட வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது). பொதுவாகவே பிரிட்டிஷ் நாடாளுமன்ற நடைமுறைகளை பின்பற்றி வந்த இந்தியாவிற்கு இது மிகவும் புதிய ஒன்று. இந்த பரி...

ரசிக்க வைத்த நானோ 'கார்'ட்டூன்கள்

"இப்பெல்லாம் ஏன் லேட்டா வந்தேன்னு கேட்டா, கார் பஞ்சராயிடுச்சுன்னு சொல்றா" "இப்போது ஒரு புதிய கோரிக்கை எழுந்துள்ளது. ஏழைகளுக்கு கார் பார்கிங் செய்ய தனி இட ஒதுக்கீடு வேண்டுமென்று" "இங்கே குறைந்த விலை பெட்ரோல் கிடைக்குமா?" "டிராபிக் ஜாமா, நோ ப்ராப்ளம் " இதற்கு வசனம் தேவையில்லை " "டிவி இலவசம் என்பதெல்லாம் பழைய கதையாச்சு. இப்போல்லாம் கார் ப்ரீயா கேக்கறாங்க." "ஏதோ தருமம் பண்ணுங்க சாமீ" "அப்பா எனக்கு பொம்மை கார் வேணாம், நானோ கார்தான் வேணும்" "ஒண்ணில்லை, ரெண்டு கொடுங்க" "இங்கே எக்சேஞ்ச் ஆபஃர் கிடைக்குமா? "

மன்மோகன் சிங் ~ லால் கிருஷ்ண அத்வானி - ஒரு ஒப்பீடு

நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தலில் பிரதமர் ஆகும் கனவோடு ஏராளமானோர் போட்டியிட்டாலும், பிரதமர் ஆக அதிக வாய்ப்பு உள்ள இருவர் (இரண்டு பெரிய கட்சிகளின் வேட்பாளர்கள்) மன்மோகன் சிங் மற்றும் எல் கே அத்வானி ஆகியோர் ஆவர். இவர்கள் இருவரின் பயோடேட்டாக்களையும் இங்கு சற்று ஒப்பிடுவோம். பிறப்பிடம் பிறப்பிலேயே இவர்கள் இருவருக்கும் ஒரு பெரிய ஒற்றுமை உள்ளது. இருவருமே இந்நாள் பாகிஸ்தான் பகுதியில் பிறந்தவர்கள். மன்மோகன் சிங் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் பகுதியில் பிறந்தவர். எல்.கே.அத்வானியோ பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரில் பிறந்தவர். வயது இருவருக்கும் வயது வித்தியாசம் அதிகமில்லை. அத்வானி பிறந்தது 1927 இல். வயது இப்போது 81. மன்மோகன் சிங் பிறந்தது 1932 இல். வயது இப்போது 76. இருவரில் மன்மோகன் சிங்தான் இளையவர் என்றாலும், பயிற்சிக் கூடம் சென்று புஜ பலம் எல்லாம் காட்டி அதிக ஆரோக்கியமாக பார்வைக்கு தென்படுபவர் அத்வானிதான். இனம் இருவருமே பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர் அல்லர் என்பது கூட ஆச்சரியப் படக் கூடிய ஒரு ஒற்றுமை. அத்வானி 'சிந்தி' இனத்தைச் சேர்ந்தவர். மன்மோகன் சிங் 'சீக்கியர்' இனத்தைச் சே...

காங்கிரஸ் அரசின் ஐந்தாண்டு கால ஆட்சி - எவ்வளவு மார்க் போடலாம்?

இது தேர்வுகளின் காலம். பள்ளிகள்/ கல்லூரிகள் இறுதி தேர்வு நடத்தி மாணவர்களின் செயல்பாடு மற்றும் தேர்ச்சி குறித்து முடிவெடுக்கும் நேரம். மத்தியில் ஐந்து ஆண்டு காலம் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சிக்கும் கூட ஒரு வகையில் இது ஒரு பரீட்சை நேரம்தான். நம்முடைய பார்வையில் காங்கிரஸ் அரசின் கடந்த ஐந்து ஆண்டு கால செயல்பாடு எப்படி என்று பார்ப்போமா? மாணவர்களுக்கு எப்படி தமிழ், ஆங்கிலம், கணக்கு அறிவியல் என வேறு வேறு பாடத் திட்டங்களில் தேர்வுகள் நடக்கிறதோ, அது போல, இந்த ஆட்சியின் மதிப்பீட்டையும், பொருளாதாரம், தலைமைப் பண்பு, தேசப் பாதுகாப்பு, வெளிநாட்டு உறவுகள், சமூக நலத் திட்டங்கள் என வேறு வேறு பகுதிகளாக மதிப்பீடு செய்யலாம். பொருளாதாரம்: மன்மோகன் சிங், ப.சிதம்பரம் மற்றும் அலுவாலியா ஆகிய மூன்று பொருளாதார மேதைகளின் வழிநடத்துதலில் கடந்த ஐந்து ஆண்டுகளில், முதல் நான்கு ஆண்டுகள் இந்தியப் பொருளாதாரம் அசுர வளர்ச்சி அடைந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. இந்த அசாதாரண வளர்ச்சிக்கு உலக (முக்கியமாக அமெரிக்க) பொருளாதார வளர்ச்சியும் ஒரு முக்கிய காரணம் என்றாலும், இந்த மூவர் கூட்டணியின் பங்கையும் குறைத்து மதிப்பிட முடி...

சிறியது ஆனால் பெரியது

இன்றைய தேதியில், நோட்டுக்காக நாட்டை ரத்தம் வரும் வரை சுரண்டத் தயங்காத பல இந்திய தொழில் அதிபர்களுக்கு மத்தியில், தன்னை வசதியாக வாழ வைத்த நாட்டுக்கு பதிலுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்று விரும்பும் வெகு சில தொழில் அதிபர்களில் ரத்தன் டாட்டாவும் ஒருவர். இவர் மட்டுமல்ல, இவரது குழுமமும் நாட்டுப் பற்றுக்கு பெயர் போனது. தொழிற் துறையைப் பொருத்த வரை இந்தியாவின் பல 'முதல்'களில் (விமான சேவை, நட்சத்திர ஹோட்டல், உருக்கு தயாரிப்பு) டாட்டா குழுமத்தின் பெயரே பொறிக்கப் பட்டிருக்கும். ரத்தன் டாட்டா அவர்கள் ஒரு முறை காரில் செல்லும் போது, மழையில் நனைந்து கொண்டு தடுமாறியபடி ஸ்கூட்டரில் செல்லும் ஒரு இந்திய குடும்பத்தை சாலையில் பார்த்தார், இது அவர் மனதை வேதனைப் படுத்த, இந்திய நடுத்தர வகுப்பு மக்கள் பாதுகாப்பாக ஒரு காரில் பயணம் செய்வதற்கு ஏதுவாக, அவர்களின் வாங்கும் சகதிக்குள் அடங்கும் படி ஒரு கார் தயாரிக்க வேண்டுமென தீர்மானித்தார். அது மட்டுமல்லால், குறைந்த விலையில் கார் தயாரித்து தருவதாக இந்திய மக்களுக்கு ஒரு வாக்குறுதியும் அளித்தார். தேர்தல் பிரசாரத்தில் பல வாக்குறுதிகளை அள்ளி வீசி விட்டு பின் ஆட்...

காசேதான் கடவுளடா!

சென்ற வாரம் அமெரிக்க தலைமை வங்கி, அமெரிக்க பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக சுமார் 50 லட்சம் கோடி ரூபாயை ($ 1 trillion) சந்தையில் இறக்கி விடுவதாக அறிவித்தது. இந்த அறிவிப்பு நீண்ட கால நோக்கில் உலக பொருளாதாரத்தை பாதிக்கும் விஷயம்தான் என்றாலும், குறுகிய கால நோக்கில் உலக சந்தைகளை சந்தோசப் படுத்தியது. உலக சந்தைகளின் கொண்டாட்ட்டங்களில் நம்முடைய சந்தையும் கலந்து கொள்ள, முன்னேற்றம் இரண்டாவது வாரமாக தொடர்ந்தது. சுமார் ஒரு டிரில்லியன் டாலர் பணம் உலக சந்தையில் நுழைவதை அடுத்து, டாலரின் மதிப்பு இந்திய ரூபாய் உட்பட இதர உலக கரன்சிகளுக்கு எதிராக வீழ்ச்சி அடைந்தது. தங்கம் மற்றும் இதர உலோகங்களும் டாலர் மதிப்பில் விலை உயர்ந்தன. கச்சா எண்ணெய் விலை கூட ஐம்பது டாலருக்கும் மேல் எகிறியது. அமெரிக்காவில் வீட்டு விற்பனை உயர்வு, வேலை இழப்பு குறைவு போன்ற சில நல்ல பொருளாதார தகவல்களும் சேர்ந்து கொள்ள உலக பங்கு சந்தைகளும் நன்கு உயர்ந்தன. ஆனால், ஒரு வகையில் இவ்வாறு பெரிய அளவில் அமெரிக்கா தனது கரன்சியை வெளியிடுவது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துவதுடன் நீண்ட கால நோக்கில் உலக பொருளாதாரத்திற்கு தவறான விளைவுகளையே கொடுக்கும...

திகில் கூட்டும் இரவுகள்

பொதுவாகவே, வெட்பப் பிரதேசமான நம் நாட்டில் மிதமான தட்பவெட்ப நிலையுள்ள இரவுகளே அதிகம் விரும்பப் படுபவை. அதுவும் பல நாட்களில் காலையில் நாம் எழும் போது, இன்னும் கொஞ்சம் நேரம் தூங்க வசதியாக, சூரியன் தாமதமாக உதிக்கக் கூடாதா என்பது போன்ற எண்ணங்கள் தோன்றும். அதே சமயம் சில நாட்கள் எப்போதடா இந்த இரவு முடியும், விடியற்காலை சீகிரமாக வருமா என்று மனம் ஏங்கும் நிலை ஏற்பட்டு விடும். குறிப்பாக உடல் நிலை சரியில்லாத காலங்களில், பகலை விட இரவுதான் அதிக பயமூட்டுவதாகவே அமையும். "நோய்க்கும் பேய்க்கும் இரவில்தான் கொண்டாட்டம்" என்று கூட நம்மூரில் சொல்வார்கள். அதிலும் கூட நமது குழந்தைகளுக்கு கொஞ்சம் உடல் நிலை சரியில்லா விடில் அதுவும் இரவில் ஏதேனும் பிரச்சினைகள் வந்து விடில், நடு இரவு சிம்ம சொப்பனமாகவே திகழ்கிறது. அசுத்தங்களும் கலப்படங்களும் மிகுந்த மும்பை போன்ற மாநகரங்களில் வசிப்பவர்களுக்கு முக்கியமன ஒரு பிரச்சினை பால். பாலில் கலப்படம் அதுவும் சுகாதாரமற்ற நீரின் உதவியால் கலப்படம் செய்பவர்களின் மீது பல முறை போலீஸ் நடவடிக்கை எடுத்தாலும் அவர்கள் மட்டும் தமது திருப்பணியை நிறுத்துவதே இல்லை. இவர்களின் கலப்ப...

பதினாறு வயதினிலே - சிறுகதை

நடேசனுக்கு குப்பென வியர்த்தது. காலையில் எழுந்த பிறகு அவர் மகள் வசந்தியை பார்க்க முடிய வில்லை. வீடு முழுக்க தேடிப் பார்த்து விட்டார். எங்கேயும் காணவில்லை. படுக்கை கசங்காமல் இருந்ததைப் பார்த்த போது இரவிலிருந்தே அவள் வீட்டில் இல்லை என்று அவருக்கு புரிந்தது. படுக்கையறை மேஜை மேலே மடித்து வைக்கப் பட்டிருந்த ஒரு காகிதத்தை கண்ட அவர் கைகள் நடுநடுங்க அதனைப் பிரித்து மகள் எழுதியதை கீழ்கண்டவாறு படித்தார். " அன்புள்ள அப்பா! தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள். நான் உங்களை விட்டு பிரியும் நேரம் வந்து விட்டது. ஏனென்றால் நான் இப்போது ஒரு முடிவு எடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். அந்த முடிவு உங்களுக்கு பிடிக்காது என்று தெரியும். இருந்தாலும் வேறு வழியில்லை. நான் வெகு நாட்களாக ஒருவரை காதலித்து வருகிறேன். அவர் இப்போது என்னை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார். நானும் அதற்கு சம்மதித்து விட்டேன். ஆனால் நீங்கள் இதற்கு ஒப்புக் கொள்ள மாட்டீர்கள் என்று தெரியும். ஏனென்றால் அவருக்கு நாற்பத்தைந்து வயது. எனக்கோ பதினாறு வயது மட்டும்தான். வயது வித்தியாசம் அதிகம் என்று சொல்வீர்கள். ஆனால் காதலுக்கு ஏத...

சுவிஸ் பாங்க் ரகசியங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கப் படுமா?

"கறுப்புப் பணத்தின் சொர்க்கம்" என்றழைக்கப் படும் சுவிஸ் நாட்டின் வங்கிகளுக்கு இப்போது ஒரு சிக்கல் புதிதாக முளைத்திருக்கிறது. பொருளாதார தேக்கத்தில் தற்போது சிக்கிக் கொண்டிருக்கும் "முன்னேறிய நாடுகளின்" பார்வை இப்போது இந்த வங்கிகளின் மீது படிந்துள்ளது. சுவிஸ் வங்கிகளின் ரகசியத் தன்மை தொடருமா என்றும் இந்த விவகாரத்தில் இந்தியாவின் நிலைபாடு பற்றி இங்கு விவாதிப்போம். முதலில், சுவிஸ் வங்கியில் ரகசியம் மற்றும் பணத்தின் "கறுப்புத் தன்மை" எப்படி காக்கப் படுகிறது என்று பார்ப்போம். தனது வாடிக்கையாளர்களுக்கு இந்த கறுப்புப் பண சேவையை கிட்டத்தட்ட முன்னூறு வருடங்களாக செய்து கொண்டிருக்கும் சுவிஸ் வங்கிகள், தங்கள் வங்கியின் கணக்குகளை வாடிக்கையாளரின் பெயரில் பராமரிப்பதில்லை. ஒவ்வொரு கணக்குக்கும் ஒரு தனி ரகசிய எண் வழங்கப் படுகிறது. அந்த வங்கிக் கணக்கு பற்றிய அனைத்து தகவல் பரிமாற்றங்களும் அந்த ரகசிய "எண்"ணைக் கொண்டே நடைபெறுகிறது. அதே சமயம், வங்கிக் கணக்குகள் முற்றிலும் "ஆளில்லா" கணக்குகள் அல்ல என்பதும் வங்கியின் முக்கிய அலுவலர்களுக்கு வாடிக்கையாளர்களின் மு...

உத்தர பிரதேசம் - திருப்பிப் போட்ட தோசை?

சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகள் வரை, உத்தர பிரதேசத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப் படும் ஒருவர்தான் இந்தியாவின் பிரதமர் என்ற நிலை இருந்தது. 1991 தேர்தலுக்கு பிறகு அகில இந்திய அரசியலில் உத்தர பிரதேசத்தின் பங்கு மிகவும் குறைந்தே காணப் படுகிறது. இதற்கான காரணங்களையும் இந்த தேர்தலில் உத்தர பிரதேசம் தனது முக்கியத்துவத்தை மீண்டும் நிலை நாட்டுமா என்பதை பற்றியும் இங்கு விவாதிக்கலாம். 1989 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு பின்னர், உத்தர பிரதேசத்தில் ஒரு பெரியதொரு சமூக அரசியல் மாற்றம் நிகழ்ந்தது. முன்னேறிய வகுப்பினர் பெருமளவு ஆதிக்கம் செலுத்தி வந்த காங்கிரஸ் கட்சி தலித் மக்களிடமும் சிறுபான்மை இனத்தவரிடமும் முழு செல்வாக்கு பெற்று இருந்தது. அவர்களுக்கு பல சலுகைகள் அளிப்பது போல காட்டிக் கொண்டு, ஒரு பெரிய வாக்கு வங்கியை உருவாக்கி வைத்திருந்தது. அதே சமயம், சமூகத்தின் மற்ற பிரிவினரான இதர பிற்படுத்தப் பட்ட சமூகத்தினர் பல அணிகளாக பிரிந்திருந்தனர். அவர்களின் அரசியல் செல்வாக்கு மிகவும் குறைந்தே காணப் பட்டது. சிறுபான்மை இனத்தவரும் தலித் இனத்தவரும் கூட வெறும் வாக்கு வங்கிகளாகவே நடத்தப் பட்டனர். அவர்களுக்கும் உள்ள...

பொறுத்தது போதும்! பொங்கி எழு!

பல வாரமாக பந்தாடப் பட்ட (பங்குசந்தையின்) காளைகள் சென்ற வாரம் பொங்கி எழுந்து கரடிகளை புரட்டி எடுத்து விட்டனர். பலரும் எதிர்பாரா வண்ணம் சிட்டி பாங்க் சென்ற காலாண்டில் லாபம் ஈட்டியதும், அந்த வங்கிக்கு இனிமேல் அரசு உதவி தேவைப் படாது என்று அதன் தலைவர் (விக்ரம் பண்டிட்) கூறியதும் இந்த எழுச்சிக்கு முக்கிய காரணங்கள். காளைகள் தமது முன்னேற்றத்தை தொடர்வார்களா அல்லது கரடிகள் மீண்டும் ஆதிக்கம் செலுத்துவார்களா என்று இங்கு பார்ப்போம். சென்ற வாரம், மிலாடி நபி மற்றும் ஹோலி பண்டிகைகளை முன்னிட்டு இந்தியப் பங்குச்சந்தை இரண்டு நாட்கள் மூடப் பட்டிருந்ததால், வர்த்தக நடவடிக்கைகள் குறைந்தே காணப் படும் என்று எதிர்பார்க்கப் பட்டது. ஆனால், உலக சந்தைகள் (உபயம்: சிட்டிபாங்க்) பெருமளவு முன்னேறியதன் தொடர்ச்சியாக நம்முடைய சந்தைகளும் நல்ல முன்னேற்றம் கண்டன. இந்தியாவின் தொழிற் உற்பத்தி (Industrial Production, -0.50%) வீழ்ச்சியடைந்தாலும், அந்த வீழ்ச்சி எதிர்பார்த்ததை விட குறைவாகவே இருந்ததால் சந்தைகள் மகிழ்ச்சி அடைந்தன. நுகர்வோர் பொருட்கள் விற்பனை வளர்ச்சி அடைந்ததும் ஒரு சாதகமான செய்தியாக இருந்தது. மேலும், பல ஆண்டுகள் க...

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

2004 = தமிழ் நாடு, 2009 = மேற்கு வங்கம்?

2004 ஆம் ஆண்டு மக்களவை பொதுத் தேர்தலில் காங்கிரஸ் எளிதாக ஆட்சியைப் பிடிக்கும் என்று அந்த கட்சியைச் சார்ந்த பலரே எண்ணியிராத போது, அந்த கட்சியின் தலைமை, கூட்டணி அமைக்கும் விஷயத்தில் ஒரு அதிரடி முடிவு எடுத்தது. ராஜிவ் காந்தி கொலை சம்பந்தமாக அமைக்கப் பட்ட ஜெயின் கமிஷன் அறிக்கையில் குற்றம் சாட்டப் பட்ட எந்த கட்சியின் அமைச்சர்களை நீக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்து அப்போதைய ஐ.கே குஜரால் அரசு கவிழ காரணமாக இருந்ததோ, அந்த கட்சியுடனேயே (திமுக) தமிழகத்தில் கூட்டணி அமைக்கும் ஒரு எதிர்பாரா முடிவை காங்கிரஸ் தலைமை எடுத்தது. அது மட்டுமல்ல, விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்று கருதப் பட்ட பாமக, மதிமுக போன்ற கட்சிகளுடனும் பல மாநிலங்களில் தனக்கு நேர் போட்டியாளர்களான இடது சாரி கட்சிகளுடனும் இனைந்து ஒரு மெகா கூட்டணியை காங்கிரஸ் அமைத்தது. விளைவு அனைவரும் அறிந்ததுதான். பாண்டிச்சேரியையும் சேர்த்து தமிழகத்தின் நாற்பது தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இந்த வெற்றி அகில இந்திய அளவில் காங்கிரசுக்கு பெரும் பலமாக இருந்ததுடன் எளிதில் ஆட்சியை அமைக்கவும் உதவி புரிந்தது. தனிப் பட்ட அளவில் காங்கிர...

வாழ்க்கை வாழ்வதற்கே!

வாழ்க்கையின் பொருள் பற்றி சமீபத்தில் நான் படித்த ஒரு கதை இங்கே. ஒரு கல்லூரியில் ஒன்றாக படித்த சில மாணவர்கள், படித்து முடித்து சில ஆண்டுகள் கழித்து மீண்டும் அதே கல்லூரியில் சந்திக்கின்றனர். அப்போது, கல்லூரி வாழ்க்கையைப் போல வெளி உலக வாழ்க்கை சந்தோசமானதாக இல்லை என்றும் வாழ்க்கை மிகவும் கடினமாக இருக்கின்றது என்றும் அலுத்துக் கொள்கின்றனர். அப்போது அங்கு வந்த அவர்களது முன்னாள் பேராசிரியர் அவர்களை தன் வீட்டிற்கு தேநீர் விருந்துக்கு அழைக்கிறார். சுவையில் சிறந்த அவர் வீட்டு தேநீர் கல்லூரி மாணவர்கள் மத்தியில் மிகவும் பிரசித்தமானது. அவரது வீட்டில் தேநீர் பல்வேறு விதமான கோப்பைகளில் பரிமாறப் படுகின்றது. சில கோப்பைகள் சாதாரணமானவை, சில கோப்பைகள் அழகானவை, சில கோப்பைகள் விலை உயர்ந்தவை, வேறு சிலவோ பிரத்யேகமாக கலை அழகோடு வடிவமைக்கப் பட்டவை. அந்த மாணவர்கள், அழகற்ற கோப்பைகளை தவிர்த்து விட்டு அழகிய கோப்பைகளிலேயே தேநீர் அருந்த விரும்புகின்றனர். கலை வடிவம் மிக்க தேநீர் கோப்பைக்காக அவர்களிடையே சிறிய போட்டி கூட நடக்கிறது. ஒருவழியாக, தமக்கான கோப்பையை தேர்வு செய்து, மாணவர்கள் அனைவரும் தேநீர் அருந்தும் போது அங்க...

13 B (யாவரும் நலம்) திரை விமர்சனம்

கர்ப்பவதியான மனைவி அடிபட்டு மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்க, கணவனோ மதியம் ஒரு மணிக்கு வரும் டிவி சீரியல் பார்க்க ஓடுகிறான். காரணம், மனைவி பிழைப்பாளா, இல்லையா என்று வீட்டில் வரும் ஒரு தொலைக்காட்சித் தொடரை பார்த்துத்தான் தெரிந்து கொள்ள முடியும். ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? இப்படித்தான், தமிழ் சினிமாவுக்கு முற்றிலும் மாறுபட்ட காட்சிகளைக் கொண்ட ஒரு திரைப்படமாக வெளிவந்துள்ளது, 13 B (தமிழில் யாவரும் நலம்). ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், மத்திய தர குடும்பம் ஒன்று புதிதாக குடி வருகிறது. ஒருவருக்கொருவர் அன்பாக இணைந்து, அமைதியான முறையில் வாழும் அந்தக் குடும்பத்திலுள்ள ஒருவனுக்கு மட்டும், அந்த வீட்டில் சில அமானுஷ்ய விஷயங்கள் நடப்பது புரிய வருகிறது. (அவன் மட்டும் தனியாக) உள்ளே சென்றால் இயங்க மறுக்கும் லிப்ட், வீட்டிற்குள் இருந்து புகைப்படம் எடுத்தால் கோணலாக தெரியும் அவன் முகம், இவற்றுக்கெல்லாம் மேலாக இவனது வாழ்வில் நடைபெறும் விஷயங்கள் முன்கூட்டியே வெளிவரும் தொலைக்காட்சித் தொடரைக் காட்டும் ஒரு டிவி பெட்டி என்று பல விந்தையான நிகழ்வுகள் அவனைச் சுற்றி நடக்கின்றன. பல நல்ல விஷயங்கள் இவ...

மூன்றாவது அணி முந்துமா?

கடந்த சில நாட்களில் நடைபெற்று வரும் கூட்டணி மாற்றங்கள், இந்த தேர்தல் காங்கிரஸ் மற்றும் பி.ஜெ.பி ஆகிய இரு கட்சிகளுக்கிடையே நடைபெறும் நேரடி போட்டியாக மட்டும் இருக்காது என்றே தோன்றுகிறது. முக்கியமாக, பல ஆண்டுகளாக உடன் இருந்த பிஜு ஜனதா தள் பி.ஜெ.பி. கூட்டணியை விட்டு விலகியதும், காங்கிரஸ்-சமாஜ்வாடி தொகுதி பங்கீடு நிகழாமல் போனதும், காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கே இடையே இழுபறி நிகழ்ந்து வருவதும் கவனிக்க தக்கவை. சென்ற தேர்தலிலேயே, இந்தியாவின் முதல் இரண்டு பெரிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பிஜேபி கட்சிகள் இரண்டும் சேர்ந்தே மக்கள் சபையின் மொத்த உறுப்பினர் அளவில் பாதியளவே பெற்றன என்பது குறிப்பிடத் தக்கது. மீதமுள்ள உறுப்பினர்களில் பெரும்பாலானவை முன்னாள் இந்நாள் மூன்றாவது அணி கட்சிகளாலேயே பெறப் பட்டன என்பதும் கவனிக்கத் தக்கது. தேர்தலுக்கு முன்பே தொகுதி உடன்படிக்கை வைத்திருந்த காங்கிரஸ் கூட்டணிக்கே கூட சென்ற முறை அறுதி பெரும்பான்மை கிடைக்க வில்லை. பல மாநிலங்களில் தானே எதிர்த்து போட்டியிட்ட இடது சாரி கூட்டணியின் உதவியுடனேயே ஐக்கிய ஜனநாயக கூட்டணியால் ஆட்சிக்கு வர முடிந்தது. அதிக மக்கள்...

கேலிகூத்தாகும் உண்ணாவிரத போராட்டங்கள்!

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு விரதம் இருப்பவர்கள், ஏகாதசிக்கு முந்தைய நாள் மதியம் சாப்பிட்டு முடித்த பின்னர், அன்று முழுக்க எதுவும் உண்ணா மாட்டர்கள். மறு நாள் முழுக்கவும் கூட எதுவும் சாப்பிட மாட்டார்கள். ஏகாதசி முடிந்து அடுத்த நாளான துவாதசி அன்று காலையிலே இறை வழிபாடு முடிந்த பின்னரே தமது விரதத்தை முடித்துக் கொள்வார்கள். நமது இஸ்லாமிய சகோதரர்கள் கூட, புனித ரமலான் மாதத்தில், சூரிய உதயத்திற்கு முன்னரே தமது உணவினை முடித்துக் கொள்வார்கள். பகல் முழுக்க தண்ணீர் கூட குடிக்க மாட்டார்கள். மாலை சூரியன் மறைந்த பின்னரே தமது விரதத்தை முடித்துக் கொள்வார்கள். காலம் காலமாக இது போன்ற தம்மைத் தாமே வருத்திக் கொள்ளும் உண்ணா நோன்புகளே விரதங்கள் என்று ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கின்றன. ஆன்மீகத்தின் வெளிப்பாடாக இருந்த இது போன்ற விரதங்களை, சுதந்திர போராட்டத்தின் ஒரு கருவியாக அறிமுகப்படுத்தியவர் அண்ணல் மகாத்மா காந்தி அடிகள். அவர் கூட, உண்ணாவிரத போராட்டம் தொடங்கினால் அந்த போராட்டத்திற்கான தீர்வு வரும் வரை தனது உண்ணா நோன்பினை முடித்துக் கொண்டதில்லை. அந்த மாறா வைராக்கியத்தின் காரணமாகவே, சூரியன் மறையா நாடு என்று புகழ்...

மகளிர் தினத்தில் ஆண்களுக்கு சில யோசனைகள்!

மகளிர் தினமான இன்று தன் குடும்பப் பெண்களை எப்படி அசத்துவது என்பது பற்றி ஆண்களுக்கு சில யோசனைகள் இங்கே. இன்றைய சமையல் வேலைகளை முழுமையாக கவனித்துக் கொண்டு நீங்கள் உணவை பரிமாறுவது. (இதில் இன்னொரு உள்நோக்கமும் அடங்கியிருக்கிறது. ஒரு நாளைக்காவது நல்ல சாப்பாடு என்றால் எப்படி இருக்கும் என்று அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா? ஒரு வேளை, உங்களுக்கு சமைக்கத் தெரியாதா? அப்போதும் கவலையில்லை. அவர்களும் ஒரு நாள் கஷ்டப் படட்டுமே? நம் வேதனை எப்படி இருக்கும் என்று புரிந்து கொள்ளட்டுமே) இன்றைக்கு முழுக்க அவர்களை பேச விட்டு நாம் கேட்டுக் கொண்டே இருப்பது. (எல்லா நாளும் இதே கதைதான் என்று அலுத்துக் கொள்கிறீர்களா?) உங்கள் வேலைகளை நீங்களே பார்த்துக் கொள்வது. உங்கள் துணிமணிகளை கழற்றி தூக்கி வீசாமல் ஒழுங்காக மடித்து அலமிராவில் வைப்பது. (இது கொஞ்சம் கவனிக்க வேண்டிய சீரியசான விஷயம்) உங்கள் மனைவியை பியுட்டி பார்லருக்கு அழைத்துச் செல்வது (பியுட்டின்னா என்னான்னு நாமளும் தெரிஞ்சுக்க வேண்டாமா?). அங்கே வருபவர்கள் யாருமே அழகாக இல்லை என்று திரும்பி வரும் போது கூற மறந்து விடக் கூடாது. சென்ற வருடத்தை விட இந்த வருடம் ...

சோதனை மேல் சோதனை!

சந்தைகள் சென்ற வாரம் ஒரு மிகப் பெரிய சரிவை சந்தித்தது. பங்கு சந்தையின் முக்கியக் குறியீடான நிபிட்டியின் வலுவான அரணாக கருதப் பட்ட 2700 புள்ளிகள் அளவு முற்றிலுமாக முறியடிக்கப் பட்டுள்ளது. அடுத்த வலுவான அரண் நிலை இன்னும் வெகு தொலைவு (2300) இருக்கும் நிலையில், தற்போதைக்கு சந்தைகளின் நம்பிக்கைகள் முறிந்து போன நிலையிலேயே உள்ளன. இருந்தாலும் எதிர்கால வர்த்தகப் பிரிவில் (F&O Segment) விற்று பின் வாங்கும் நிலை (Short Position) சமன் (Short Covering) செய்யப் படும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதாலும் அடுத்த வாரம், இரண்டு நாட்கள் சந்தை விடுமுறை இருப்பதாலும், சந்தையின் சரிவு இப்போதைக்கு தணிந்து காணப் படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. சென்ற வாரம் அமெரிக்க மற்றும் முக்கிய உலக சந்தைகள், உலகப் பொருளாதார பின்னடைவின் எதிரொலியாக, பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தன. இதில் சில முக்கிய குறியீடுகள் பல வருடங்களுக்கான தாழ்ந்த நிலையை சந்தித்தன. இந்தியாவிலும் கூட சென்செக்ஸ் மற்றும் நிபிட்டி குறியீடுகள் மூன்று வருடத்தில் கண்டிராத வீழ்ச்சியை சந்தித்தன. இந்தியாவின் தரவரிசை சரிந்து போனதும் அதன் எதிரொலியாக டாலருக்கு எதிர...

எதிர்மறையான விமர்சனங்களை கையாளுவது எப்படி?

அன்றாட வாழ்வில் நாம் பல தர பட்ட விமர்சனங்களை எதிர்கொள்கிறோம். சில விமர்சனங்கள் சிரிப்பை வரவழைக்கின்றன. சில விமர்சனங்கள் மனதில் காயத்தை உண்டாக்குகின்றன. சில விமர்சனங்கள் கோபத்தையும் விரோதத்தையும் வளர்க்கின்றன. விமர்சனங்களை சரியாக கையாளும் போது, அவற்றின் எதிர்மறையான பாதிப்பிலிருந்து நாம் தப்பிப்பதோடு, அவற்றை நம் நன்மைக்காக பயன்படுத்திக் கொள்ள முடியும். (சொந்த வாழ்வில்) வெற்றி பெற்றவர்களான அரசியல் வாதிகள், சினிமா ஹீரோக்கள், கிரிக்கெட் வீரர்கள் போன்றவர்கள் தம்மைப் பற்றி எழும் விமர்சனங்களை வெற்றிகரமாக எதிர்கொள்வதை கண்கூடாக பார்க்க முடியும். எதிர்மறை விமர்சனங்களை எப்படி சிறப்பாக எதிர்கொள்வது என்பது பற்றி இங்கு விவாதிப்போம். விமர்சனங்களுக்கான களங்களையும் காரணங்களையும் அடிப்படையாக கொண்டு அவற்றை மூன்று வகையாக பிரிக்கலாம். முதல் வகை காற்று வாக்கிலான விமர்சனங்கள். இவை பெரும்பாலும் விமர்சிப்பவரின் அறியாமையினாலேயே (இயந்திரகதியில்) எழுப்பப் படுகின்றன. இந்த குறிப்பிட்ட வகை விமர்சனங்களால் (இரு தரப்பிற்கும்) பயன்கள் எதுவுமில்லை என்றாலும் ஏதோ விமர்சிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக இவை எழுப்பப் படு...