Skip to main content

ரசிக்க வைத்த நானோ 'கார்'ட்டூன்கள்


"இப்பெல்லாம் ஏன் லேட்டா வந்தேன்னு கேட்டா, கார் பஞ்சராயிடுச்சுன்னு சொல்றா"







"இப்போது ஒரு புதிய கோரிக்கை எழுந்துள்ளது. ஏழைகளுக்கு கார் பார்கிங் செய்ய தனி இட ஒதுக்கீடு வேண்டுமென்று"











"இங்கே குறைந்த விலை பெட்ரோல் கிடைக்குமா?"


















"டிராபிக் ஜாமா, நோ ப்ராப்ளம் "












இதற்கு வசனம் தேவையில்லை






"






"டிவி இலவசம் என்பதெல்லாம் பழைய கதையாச்சு. இப்போல்லாம் கார் ப்ரீயா கேக்கறாங்க."






"ஏதோ தருமம் பண்ணுங்க சாமீ"














"அப்பா எனக்கு பொம்மை கார் வேணாம், நானோ கார்தான் வேணும்"






"ஒண்ணில்லை, ரெண்டு கொடுங்க"







"இங்கே எக்சேஞ்ச் ஆபஃர் கிடைக்குமா? "

Comments

நல்ல காமெடி!
ஆனா பாருங்க முதன் முதலில் ஒரு பொருள் வரும்போது இந்த மாதிரி நகைச்சுவை வருவது சகஜம் தானே!
உதாரணம் விலைகுறைந்த செல்லுலார் போன்கள்
Maximum India said…
பின்னூட்டத்திற்கு நன்றி வால்பையன்

//நல்ல காமெடி!
ஆனா பாருங்க முதன் முதலில் ஒரு பொருள் வரும்போது இந்த மாதிரி நகைச்சுவை வருவது சகஜம் தானே!
உதாரணம் விலைகுறைந்த செல்லுலார் போன்கள்//

உண்மைதான். நானோ நடுத்தர எளிய மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது. எனவே இது ஒரு மகிழ்ச்சியான காமெடி.

நன்றி.
MCX Gold Silver said…
ரத்தன் டாடாவின் கனவை நாம் காமடி ஆக்கிவிட்டோம்.ஆனாலும் கார்டூன் நன்றாக உள்ளது.நன்றி
Maximum India said…
அன்புள்ள dg

கருத்துரைக்கு நன்றி

//ரத்தன் டாடாவின் கனவை நாம் காமடி ஆக்கிவிட்டோம்.//

நிச்சயமாக இது காமெடிக்காக மட்டும் அல்ல. எளியவர்களும் வாங்கும் அளவுக்கு கார் வந்ததில் உள்ள மகிழ்ச்சியின் வெளிப்பாடு.

நன்றி
குபீர் என்று சிரிக்க வைத்த கார்டூன்கள். குறிப்பாக இன்று காலை முதலில் சிரிக்க வைத்த இந்த சந்தை நிலவரம் பதிவுக்கு நன்றி..

அடித்தட்டு மற்றும் கீழ் நடுத்தர மக்களையும் கார் வாங்கும் எண்ணத்தை உருவாக்கி உள்ள டாடா வாழ்க... எனினும் வண்டி ஓடத் தொடங்கிய பின்தான் உண்மை மதிப்பு புரியும்... பிரச்னை தெரியும்.. பார்ப்போம்...
பல கார்ட்டூன்கள் நானோ கார் வாங்குபவர்களை பிச்சைகாரர்கள் ரேஞ்சில் சித்தரிப்பதால் சிரிப்பு வரவில்லை!:((
Mahesh said…
நல்ல நகைச்சுவைதான்.... ஆனா "நானோ" இந்தியாவோட ஐகானா ஆயிடும். இப்ப ஜெனீவா ஆட்டோ ஷோவுல ஸ்டார் "நானோ"தான்.
Maximum India said…
அன்புள்ள ஜெயராஜன் ஐயா!

பின்னூட்டத்திற்கு நன்றி

//எனினும் வண்டி ஓடத் தொடங்கிய பின்தான் உண்மை மதிப்பு புரியும்... பிரச்னை தெரியும்.. பார்ப்போம்...//

பல முன்னோட்டங்கள் கார் நன்றாக வந்திருப்பதாக சொல்கின்றன. இந்த சாலையிலும் சிறந்த செயல்பாட்டை காட்டும் என்று நம்புவோம்.

நன்றி.
Maximum India said…
அன்புள்ள குசும்பன்

//பல கார்ட்டூன்கள் நானோ கார் வாங்குபவர்களை பிச்சைகாரர்கள் ரேஞ்சில் சித்தரிப்பதால் சிரிப்பு வரவில்லை!:((//

அதையே கொஞ்சம் திருப்பி போட்டுப் பாருங்கள். எளியவர்களும் கார் வாங்கக் கூடிய விலையில் தரமான கார் உற்பத்தி செய்யும் அளவிற்கு இந்திய வாகனத் துறை இன்றைக்கு வளர்ந்திருக்கிறது. சந்தோஷம் தானாக வரும்.
:)

நன்றி.
Maximum India said…
அன்புள்ள மகேஷ்

//நல்ல நகைச்சுவைதான்.... ஆனா "நானோ" இந்தியாவோட ஐகானா ஆயிடும். இப்ப ஜெனீவா ஆட்டோ ஷோவுல ஸ்டார் "நானோ"தான்//

இந்திய தொழிற்நுட்ப வரலாற்றில் நானோ ஒரு புதிய மைல் கல்.

நன்றி.
நானோ நீங்களோ கார் வாங்க முடியும் என்பதை நானோ கார் மூலம் சாத்தியம் செய்துள்ளார் டாட்டா. மத்திய வர்க்க பொருளாதார நிலையில் மற்றவர்களை எட்டி பிடிக்க முடியும் என்ற நம்பிக்கையை டாட்டா தந்துள்ளார்.மேலும் இரு சக்கர வாகனங்களால் உருவாக்கப்படும் சாலை நெருக்கடியை நானோ குறைக்கும்.விபத்துக்கள் குறையும். நானோ .. போக போக தெரியும்..
Maximum India said…
நன்றி பொதுஜனம். நானோ பொதுஜனத்தின் வெகுஜன காராக இருக்கட்டும்.
Sir,

If I want to book a nano car, may i know the simple way for it.... herein Salem...
Maximum India said…
அன்புள்ள ஜெயராஜன் ஐயா!

நீங்கள் சேலம் அருகிலுள்ள டாட்டா மோட்டார்ஸ் ஷோ ரூம் அல்லது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கிளையை அணுகலாம்.

நன்றி.
நன்றி அய்யா...

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

நரேந்திர மோடி நாடாளலாமா?

சமீபத்தில் நடைபெற்ற குஜராத் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கார்பொரட் கனவான்களான அனில் அம்பானி மற்றும் சுனில் மிட்டல் ஆகியோர் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர். காரியம் ஆக வேண்டும் என்றால் என்ன வேண்டுமானாலும் பேசக் கூடியவர்கள் நமது தொழில் அதிபர்கள் என்பதனால் அவர்களின் பேச்சுக்கு அவ்வளவு மரியாதை கொடுக்க வேண்டியதில்லை. இவர்களைப் போன்றவர்களால் ஏற்கனவே நாடாள தகுதி பெற்றவர் என்று கூறப் பட்ட சந்திர பாபு நாயுடு அடுத்த சட்ட மன்ற தேர்தலில் தனது முதலமைச்சர் பதவியினையே இழந்தது குறிப்பிடத் தக்கது. தொழில் அதிபர்கள் பேச்சினை பா.ஜ.கவே ஏற்றுக் கொள்ளாத பட்சத்திலும் கூட, தீவிரவாதத்தை ஒடுக்கி குஜராத் மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்து சென்றவர் நரேந்திர மோடி என்றும் அவர் இந்தியாவின் பிரதமர் ஆவது நாட்டுக்கு நல்லது என்றும் பலராலும் கருதப் படுவதால், நரேந்திர மோடியின் செயல்பாடு பற்றியும் அவர் பிரதமர் ஆகலாமா என்பது பற்றியும் பிரதமராக அவர் ஏற்றுக் கொள்ளப் படுவாரா என்பதைப் பற்றியும் இங்கு பார்ப்போம். இன்றைய தேதியில் இந்தியாவிலேயே மிகுந்த முன்னேற்றம் அடைந்த ஒரு மாநிலமாக குஜரா...

இந்தியா தாக்குப் பிடிக்குமா?

இன்றைய உலகப் பொருளாதாரத் தேக்க நிலையில், இந்தியாவால் தாக்குப் பிடிக்க முடியுமா என்பது பற்றி பார்ப்போம். சமீபத்தில் வெளியிடப் பட்ட மத்திய புள்ளியல் (மத்திய அரசு) நிறுவனத்தின் மதிப்பீட்டின் படி இந்தியப் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 7.1 சதவீதம் வளர்ச்சியுறும் என்று தெரிகிறது. இது சரியாக இருக்கும் பட்சத்தில் உலகிலேயே இரண்டாவதாக வேகமாக வளர்ச்சியுறும் நாடு இந்தியாவாகத்தான் இருக்கும் (சீனா முதலாவது). சென்ற ஆண்டில் ஒன்பது சதவீதம் வளர்ச்சி பெற்றிருந்த இந்தியப் பொருளாதாரம் செப்டம்பர் 2008 வரையிலான முதல் அரையாண்டில் 7.80% வளர்ச்சிப் பெற்றிருந்தது. பொதுவாகவே பண்டிகைக் காலமாக கருதப் படுகிற இரண்டாவது அரையாண்டே தொழிற் துறையில் அதிக வளர்ச்சியைக் காட்டும் என்றாலும் இந்த முறை இந்தியத் தொழில் துறை பெரும் தேக்க நிலையில் இருந்து வந்திருக்கிறது என்பது கவனிக்கத் தக்கது. இந்திய தொழிற் வளர்ச்சி கடந்த இரு மாதங்களாக மிகவும் குறைந்து காணப் படுவதாலும் ஏற்றுமதியோ இறங்குமுகத்தில் இருப்பதாலும் இந்திய அரசாங்கம், மார்ச் 2009 வரையிலான நிதி ஆண்டின் இரண்டாவது அரையாண்டில் நமது பொருளாதாரம் குறைந்த வளர்ச்சியே (6.30%) இரு...