Skip to main content

ரசிக்க வைத்த நானோ 'கார்'ட்டூன்கள்


"இப்பெல்லாம் ஏன் லேட்டா வந்தேன்னு கேட்டா, கார் பஞ்சராயிடுச்சுன்னு சொல்றா"







"இப்போது ஒரு புதிய கோரிக்கை எழுந்துள்ளது. ஏழைகளுக்கு கார் பார்கிங் செய்ய தனி இட ஒதுக்கீடு வேண்டுமென்று"











"இங்கே குறைந்த விலை பெட்ரோல் கிடைக்குமா?"


















"டிராபிக் ஜாமா, நோ ப்ராப்ளம் "












இதற்கு வசனம் தேவையில்லை






"






"டிவி இலவசம் என்பதெல்லாம் பழைய கதையாச்சு. இப்போல்லாம் கார் ப்ரீயா கேக்கறாங்க."






"ஏதோ தருமம் பண்ணுங்க சாமீ"














"அப்பா எனக்கு பொம்மை கார் வேணாம், நானோ கார்தான் வேணும்"






"ஒண்ணில்லை, ரெண்டு கொடுங்க"







"இங்கே எக்சேஞ்ச் ஆபஃர் கிடைக்குமா? "

Comments

நல்ல காமெடி!
ஆனா பாருங்க முதன் முதலில் ஒரு பொருள் வரும்போது இந்த மாதிரி நகைச்சுவை வருவது சகஜம் தானே!
உதாரணம் விலைகுறைந்த செல்லுலார் போன்கள்
Maximum India said…
பின்னூட்டத்திற்கு நன்றி வால்பையன்

//நல்ல காமெடி!
ஆனா பாருங்க முதன் முதலில் ஒரு பொருள் வரும்போது இந்த மாதிரி நகைச்சுவை வருவது சகஜம் தானே!
உதாரணம் விலைகுறைந்த செல்லுலார் போன்கள்//

உண்மைதான். நானோ நடுத்தர எளிய மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது. எனவே இது ஒரு மகிழ்ச்சியான காமெடி.

நன்றி.
MCX Gold Silver said…
ரத்தன் டாடாவின் கனவை நாம் காமடி ஆக்கிவிட்டோம்.ஆனாலும் கார்டூன் நன்றாக உள்ளது.நன்றி
Maximum India said…
அன்புள்ள dg

கருத்துரைக்கு நன்றி

//ரத்தன் டாடாவின் கனவை நாம் காமடி ஆக்கிவிட்டோம்.//

நிச்சயமாக இது காமெடிக்காக மட்டும் அல்ல. எளியவர்களும் வாங்கும் அளவுக்கு கார் வந்ததில் உள்ள மகிழ்ச்சியின் வெளிப்பாடு.

நன்றி
குபீர் என்று சிரிக்க வைத்த கார்டூன்கள். குறிப்பாக இன்று காலை முதலில் சிரிக்க வைத்த இந்த சந்தை நிலவரம் பதிவுக்கு நன்றி..

அடித்தட்டு மற்றும் கீழ் நடுத்தர மக்களையும் கார் வாங்கும் எண்ணத்தை உருவாக்கி உள்ள டாடா வாழ்க... எனினும் வண்டி ஓடத் தொடங்கிய பின்தான் உண்மை மதிப்பு புரியும்... பிரச்னை தெரியும்.. பார்ப்போம்...
பல கார்ட்டூன்கள் நானோ கார் வாங்குபவர்களை பிச்சைகாரர்கள் ரேஞ்சில் சித்தரிப்பதால் சிரிப்பு வரவில்லை!:((
Mahesh said…
நல்ல நகைச்சுவைதான்.... ஆனா "நானோ" இந்தியாவோட ஐகானா ஆயிடும். இப்ப ஜெனீவா ஆட்டோ ஷோவுல ஸ்டார் "நானோ"தான்.
Maximum India said…
அன்புள்ள ஜெயராஜன் ஐயா!

பின்னூட்டத்திற்கு நன்றி

//எனினும் வண்டி ஓடத் தொடங்கிய பின்தான் உண்மை மதிப்பு புரியும்... பிரச்னை தெரியும்.. பார்ப்போம்...//

பல முன்னோட்டங்கள் கார் நன்றாக வந்திருப்பதாக சொல்கின்றன. இந்த சாலையிலும் சிறந்த செயல்பாட்டை காட்டும் என்று நம்புவோம்.

நன்றி.
Maximum India said…
அன்புள்ள குசும்பன்

//பல கார்ட்டூன்கள் நானோ கார் வாங்குபவர்களை பிச்சைகாரர்கள் ரேஞ்சில் சித்தரிப்பதால் சிரிப்பு வரவில்லை!:((//

அதையே கொஞ்சம் திருப்பி போட்டுப் பாருங்கள். எளியவர்களும் கார் வாங்கக் கூடிய விலையில் தரமான கார் உற்பத்தி செய்யும் அளவிற்கு இந்திய வாகனத் துறை இன்றைக்கு வளர்ந்திருக்கிறது. சந்தோஷம் தானாக வரும்.
:)

நன்றி.
Maximum India said…
அன்புள்ள மகேஷ்

//நல்ல நகைச்சுவைதான்.... ஆனா "நானோ" இந்தியாவோட ஐகானா ஆயிடும். இப்ப ஜெனீவா ஆட்டோ ஷோவுல ஸ்டார் "நானோ"தான்//

இந்திய தொழிற்நுட்ப வரலாற்றில் நானோ ஒரு புதிய மைல் கல்.

நன்றி.
நானோ நீங்களோ கார் வாங்க முடியும் என்பதை நானோ கார் மூலம் சாத்தியம் செய்துள்ளார் டாட்டா. மத்திய வர்க்க பொருளாதார நிலையில் மற்றவர்களை எட்டி பிடிக்க முடியும் என்ற நம்பிக்கையை டாட்டா தந்துள்ளார்.மேலும் இரு சக்கர வாகனங்களால் உருவாக்கப்படும் சாலை நெருக்கடியை நானோ குறைக்கும்.விபத்துக்கள் குறையும். நானோ .. போக போக தெரியும்..
Maximum India said…
நன்றி பொதுஜனம். நானோ பொதுஜனத்தின் வெகுஜன காராக இருக்கட்டும்.
Sir,

If I want to book a nano car, may i know the simple way for it.... herein Salem...
Maximum India said…
அன்புள்ள ஜெயராஜன் ஐயா!

நீங்கள் சேலம் அருகிலுள்ள டாட்டா மோட்டார்ஸ் ஷோ ரூம் அல்லது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கிளையை அணுகலாம்.

நன்றி.
நன்றி அய்யா...

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

தீவிரவாதிகளை வென்ற கதை - இந்திய கமாண்டோவின் விளக்கம்

நேற்று ஒரு தீவிரவாதி பிடிப் பட்ட கதை பார்த்தோம். இன்று தாஜ் ஹோட்டலில் எவ்வாறு நான்கு தீவிரவாதிகள் ஒழிக்கப் பட்டனர் என்று விளக்கும் இந்திய கமாண்டோவின் விளக்கத்தை பார்ப்போம். முதலில் இந்தியா கமாண்டோக்கள் தாஜ் ஹோட்டல் வந்த கதை புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் மும்பையை பயங்கரவாதம் தாக்கியது. அப்போது கேரளாவில் இருந்த மகாராஷ்டிர முதல்வர் மும்பை வரவும் இந்த சூழ்நிலையின் பயங்கரத்தையும் முழுமையாக உணர்ந்துக் கொள்ளவும் 90 நிமிடம் பிடித்தது .பின்னர் 11.00 அளவில் மத்திய அரசிற்கு போன் பேசிய முதல்வர் கோரியது 200 கமாண்டோக்களை. உடனே அந்நேரத்தில் தூங்கி கொண்டிருந்த இந்திய கமாண்டோக்கள் எழுப்பப் பட்டனர். அவர்கள் மும்பை வரத் தயாரான போதுதான் புரிந்தது, அவ்வளவு பேரை மும்பை கொண்டுவர தேவையான சிறப்பு விமானம் சண்டிகரில் உள்ளது என்று. உடனே அந்த விமானியையும் தூக்கத்தில் இருந்து எழுப்பி தயார் படுத்தி டெல்லியிலிருந்து கமாண்டோக்கள் மும்பை வந்த போது நேரம் காலை 5.25 மணி. அவர்கள் தாஜ் ஹோட்டலுக்கு கொண்டு வரப்பட்டு திட்டம் தயாரிக்கப் பட்டு அவர்கள் தாஜ் ஹோட்டலுக்குள் நுழைந்த போது நேரம் காலை 7.00 மணி. அதாவது மும்பை தாக்கப் ப...

கம்ப்யூட்டர் கட்சியும் கால்குலேட்டர் கட்சியும்!

மத்திய கல்வி அமைச்சர் கபில் சிபல் இந்தியா முழுவதும் அனைவரும் தாய்மொழியுடன் ஹிந்தியும் படிக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்துள்ளார். இவ்வாறு அனைவரும் ஹிந்தி படிப்பதன் மூலம் நாட்டில் ஒருமைப்பாடு ஏற்படுவதுடன் ஹிந்தியை ஆங்கிலம் போன்று ஒரு "அறிவு மொழியாக (lingua franca)" மாற்ற முடியும் என்றும் கூறியுள்ளார். இந்த கருத்தின் மீது பதிவுலகில் ஏராளமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆங்கிலம் மட்டுமே போதும் என்று ஒரு கட்சியும், ஆங்கிலம் வாசலாக இருக்கும் போது ஹிந்தி ஒரு சன்னலாக இருந்து விட்டு போகட்டுமே என்று இன்னொரு கட்சியும் விவாதித்து வருகின்றன. ஹிந்தி எதிர்ப்பு என்பது எப்போதுமே ஒரு உணர்வு பூர்வமான விஷயமாகவே பலராலும் கருதப் பட்டாலும், அதற்கு அறிவு பூர்வமான, சரித்திர பூர்வமான சில அடிப்படைகள் உண்டு. ஹிந்தி திணிப்பு மற்றும் ஹிந்தி எதிர்ப்பு பற்றி எனக்கு தெரிந்த சில கருத்துக்களை இங்கு ஒரு புனைவு வடிவில் அளிக்க முயற்சிக்கிறேன். இப்போது புனைவு ! ஒரு காலத்தில் பரதம்பட்டி என்ற ஒரு கிராமம் இருந்ததாம். அங்கு பல ஆண்டுகள் வரை ஆட்சி செய்து வந்த துரை மகாராஜா ஒரு காலத்தில், அந்த கிராமத்தை ஜனநாயக ...