Skip to main content

மகளிர் தினத்தில் ஆண்களுக்கு சில யோசனைகள்!

மகளிர் தினமான இன்று தன் குடும்பப் பெண்களை எப்படி அசத்துவது என்பது பற்றி ஆண்களுக்கு சில யோசனைகள் இங்கே.

இன்றைய சமையல் வேலைகளை முழுமையாக கவனித்துக் கொண்டு நீங்கள் உணவை பரிமாறுவது. (இதில் இன்னொரு உள்நோக்கமும் அடங்கியிருக்கிறது. ஒரு நாளைக்காவது நல்ல சாப்பாடு என்றால் எப்படி இருக்கும் என்று அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா? ஒரு வேளை, உங்களுக்கு சமைக்கத் தெரியாதா? அப்போதும் கவலையில்லை. அவர்களும் ஒரு நாள் கஷ்டப் படட்டுமே? நம் வேதனை எப்படி இருக்கும் என்று புரிந்து கொள்ளட்டுமே)

இன்றைக்கு முழுக்க அவர்களை பேச விட்டு நாம் கேட்டுக் கொண்டே இருப்பது. (எல்லா நாளும் இதே கதைதான் என்று அலுத்துக் கொள்கிறீர்களா?)

உங்கள் வேலைகளை நீங்களே பார்த்துக் கொள்வது. உங்கள் துணிமணிகளை கழற்றி தூக்கி வீசாமல் ஒழுங்காக மடித்து அலமிராவில் வைப்பது. (இது கொஞ்சம் கவனிக்க வேண்டிய சீரியசான விஷயம்)

உங்கள் மனைவியை பியுட்டி பார்லருக்கு அழைத்துச் செல்வது (பியுட்டின்னா என்னான்னு நாமளும் தெரிஞ்சுக்க வேண்டாமா?). அங்கே வருபவர்கள் யாருமே அழகாக இல்லை என்று திரும்பி வரும் போது கூற மறந்து விடக் கூடாது.

சென்ற வருடத்தை விட இந்த வருடம் சற்று ஒல்லியாக ஆகி இருப்பது போல தோன்றுகிறது என்று போட்டு வைப்பது. (என்ன பண்ணுவது? பொழப்பு ஓடனுமில்ல?)

இவ்வளவு நேரத்திற்குள் முடித்து விட வேண்டும் என்று கண்டிஷன் எல்லாம் போடாமல், ஷாப்பிங் அழைத்துச் செல்வது. (நகைக் கடை பக்கம் போனால் உங்கள் பர்ஸுக்கு நான் காரண்டி இல்லை. இப்படித்தான் ஒரு முறை, இரண்டு நண்பர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். தனது மனைவியின் கண்ணில் ஒரு பூச்சி விழுந்து ஐந்நூறு ரூபாய் செலவு வைத்து விட்டதாக ஒருவர் ரொம்பவும் அலுத்துக் கொண்டார். அதற்கு மற்றவர் சொன்னார், "உனக்கு பரவாயில்லை, கண்ணில் விழுந்தது பூச்சிதான். என் மனைவியின் கண்ணில் விழுந்தது ஒரு புதிய நகைக்கடையின் விளம்பரம். என் நிலைமை எப்படி இருக்குமென்று யோசித்துப் பார்".)

என்ன ரொம்ப கஷ்டமாக இருக்கிறதே என்று யோசிக்கிறீர்களா?

பேசாமல் "மகளிர் தின வாழ்த்துக்கள்" என்று உளமார ஒரு தடவை வாழ்த்தி விடுங்கள் போதும். அவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து விடுவார்கள்.

என்னைப் பொருத்த வரை, பெண்களின் உண்மையான தியாக உணர்வு, பிரதிபலன் பாரா அன்பு, வீட்டினருக்காக ஓயவில்லாமல் தரும் உழைப்பு, எல்லாவற்றுக்கும் மேலான அந்த தாய்மை ஆகியவற்றை நாம் சரியாக புரிந்து கொள்வதே அவர்களுக்கு நம்முடைய உண்மையான மகளிர்தின வாழ்த்துக்களாக இருக்கும்.

கடவுளின் பெருமைக்குரிய படைப்பான பெண்கள் அனைவருக்கும்,

"மகளிர் தின நல்வாழ்த்துக்கள்"

நன்றி.

Comments

நல்ல யோசனைகள்தான். வெளியில கூட்டிகிட்டு போனா பர்ஸ் பழுத்திடும்தான் அதனால அந்த சமைச்சி குடுக்கிறது வாழ்த்தறது அந்த மாதிரி ஐட்டம் ஓகே!!

:))))
/
உங்கள் மனைவியை பியுட்டி பார்லருக்கு அழைத்துச் செல்வது (பியுட்டின்னா என்னான்னு நாமளும் தெரிஞ்சுக்க வேண்டாமா?). அங்கே வருபவர்கள் யாருமே அழகாக இல்லை என்று திரும்பி வரும் போது கூற மறந்து விடக் கூடாது.
/

இந்த சோகத்தை ஏன் கேக்குறீங்க பியூட்டி பார்லர் நடத்தற "ஆண்ட்டிய" நான் சைட் அடிக்கறேனாம் அதனால அம்மிணி தனியாதான் போய்ட்டு வருவாங்க :(((
நல்ல நல்ல யோசனைகள்தான்.
Maximum India said…
அன்புள்ள சிவா!

பின்னூட்டங்களுக்கு நன்றி.

இந்த மகளிர் தினம் ஆண்களுக்கும் மகிழ்ச்சி தரும் தினமாக அமைய வாழ்த்துக்கள்.

நன்றி.
மகளீர் தின வாழ்த்துகள்
Maximum India said…
நன்றி ஜமால்! :)
ஞாயிற்றுகிழமையா போச்சு!
இல்லைனா லீவு போட்டு நீங்க சொன்னதெல்லாம் செஞ்சிருப்பேன்

சும்மா லுலுலாயிக்கு!
Maximum India said…
அன்புள்ள வால்பையன்

//சும்மா லுலுலாயிக்கு!//

கொஞ்சம் உங்க வீட்டுக்காரம்மா முன்னாடி சொல்லி பாருங்க. :)

நன்றி.
Naresh Kumar said…
லேட்டானாலும், மகளீர் தின வாழ்த்துகள்!!!

இப்படி யோசனை தர்றீங்களே, உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சீங்களா???
Maximum India said…
அன்புள்ள நரேஷ்

// இப்படி யோசனை தர்றீங்களே, உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சீங்களா???//

என்ன இப்படி கேட்டுட்டீங்க? ஏழாவது கல்யாண நாளை போன வாரம்தான் கொண்டாடினேன். ஐந்து வயதில் ஒரு குழந்தை கூட இருக்கிறது.

நன்றி.

Popular posts from this blog

நரேந்திர மோடி நாடாளலாமா?

சமீபத்தில் நடைபெற்ற குஜராத் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கார்பொரட் கனவான்களான அனில் அம்பானி மற்றும் சுனில் மிட்டல் ஆகியோர் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர். காரியம் ஆக வேண்டும் என்றால் என்ன வேண்டுமானாலும் பேசக் கூடியவர்கள் நமது தொழில் அதிபர்கள் என்பதனால் அவர்களின் பேச்சுக்கு அவ்வளவு மரியாதை கொடுக்க வேண்டியதில்லை. இவர்களைப் போன்றவர்களால் ஏற்கனவே நாடாள தகுதி பெற்றவர் என்று கூறப் பட்ட சந்திர பாபு நாயுடு அடுத்த சட்ட மன்ற தேர்தலில் தனது முதலமைச்சர் பதவியினையே இழந்தது குறிப்பிடத் தக்கது. தொழில் அதிபர்கள் பேச்சினை பா.ஜ.கவே ஏற்றுக் கொள்ளாத பட்சத்திலும் கூட, தீவிரவாதத்தை ஒடுக்கி குஜராத் மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்து சென்றவர் நரேந்திர மோடி என்றும் அவர் இந்தியாவின் பிரதமர் ஆவது நாட்டுக்கு நல்லது என்றும் பலராலும் கருதப் படுவதால், நரேந்திர மோடியின் செயல்பாடு பற்றியும் அவர் பிரதமர் ஆகலாமா என்பது பற்றியும் பிரதமராக அவர் ஏற்றுக் கொள்ளப் படுவாரா என்பதைப் பற்றியும் இங்கு பார்ப்போம். இன்றைய தேதியில் இந்தியாவிலேயே மிகுந்த முன்னேற்றம் அடைந்த ஒரு மாநிலமாக குஜரா...

இந்தியா தாக்குப் பிடிக்குமா?

இன்றைய உலகப் பொருளாதாரத் தேக்க நிலையில், இந்தியாவால் தாக்குப் பிடிக்க முடியுமா என்பது பற்றி பார்ப்போம். சமீபத்தில் வெளியிடப் பட்ட மத்திய புள்ளியல் (மத்திய அரசு) நிறுவனத்தின் மதிப்பீட்டின் படி இந்தியப் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 7.1 சதவீதம் வளர்ச்சியுறும் என்று தெரிகிறது. இது சரியாக இருக்கும் பட்சத்தில் உலகிலேயே இரண்டாவதாக வேகமாக வளர்ச்சியுறும் நாடு இந்தியாவாகத்தான் இருக்கும் (சீனா முதலாவது). சென்ற ஆண்டில் ஒன்பது சதவீதம் வளர்ச்சி பெற்றிருந்த இந்தியப் பொருளாதாரம் செப்டம்பர் 2008 வரையிலான முதல் அரையாண்டில் 7.80% வளர்ச்சிப் பெற்றிருந்தது. பொதுவாகவே பண்டிகைக் காலமாக கருதப் படுகிற இரண்டாவது அரையாண்டே தொழிற் துறையில் அதிக வளர்ச்சியைக் காட்டும் என்றாலும் இந்த முறை இந்தியத் தொழில் துறை பெரும் தேக்க நிலையில் இருந்து வந்திருக்கிறது என்பது கவனிக்கத் தக்கது. இந்திய தொழிற் வளர்ச்சி கடந்த இரு மாதங்களாக மிகவும் குறைந்து காணப் படுவதாலும் ஏற்றுமதியோ இறங்குமுகத்தில் இருப்பதாலும் இந்திய அரசாங்கம், மார்ச் 2009 வரையிலான நிதி ஆண்டின் இரண்டாவது அரையாண்டில் நமது பொருளாதாரம் குறைந்த வளர்ச்சியே (6.30%) இரு...

இங்கும் அங்கும் பாதை உண்டு. இதில் நீ எந்த பக்கம்?

சென்ற வாரம் 8350 என்ற எதிர்ப்பு நிலையை தாண்டிய போதும், நிப்டியால் முழுமையான வெற்றியை பெற முடிய வில்லை. 8350 என்ற நிலையின் அருகிலேயே இன்னும் நிலை பெற்றுள்ளது. உலக சந்தைகளின் போக்கினையொட்டி இந்த வாரம் 8350 என்ற எதிர்ப்பு நிலையை முழுமையாக முறியடிக்கின்றதா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும். வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். நன்றி.