Skip to main content

மகளிர் தினத்தில் ஆண்களுக்கு சில யோசனைகள்!

மகளிர் தினமான இன்று தன் குடும்பப் பெண்களை எப்படி அசத்துவது என்பது பற்றி ஆண்களுக்கு சில யோசனைகள் இங்கே.

இன்றைய சமையல் வேலைகளை முழுமையாக கவனித்துக் கொண்டு நீங்கள் உணவை பரிமாறுவது. (இதில் இன்னொரு உள்நோக்கமும் அடங்கியிருக்கிறது. ஒரு நாளைக்காவது நல்ல சாப்பாடு என்றால் எப்படி இருக்கும் என்று அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா? ஒரு வேளை, உங்களுக்கு சமைக்கத் தெரியாதா? அப்போதும் கவலையில்லை. அவர்களும் ஒரு நாள் கஷ்டப் படட்டுமே? நம் வேதனை எப்படி இருக்கும் என்று புரிந்து கொள்ளட்டுமே)

இன்றைக்கு முழுக்க அவர்களை பேச விட்டு நாம் கேட்டுக் கொண்டே இருப்பது. (எல்லா நாளும் இதே கதைதான் என்று அலுத்துக் கொள்கிறீர்களா?)

உங்கள் வேலைகளை நீங்களே பார்த்துக் கொள்வது. உங்கள் துணிமணிகளை கழற்றி தூக்கி வீசாமல் ஒழுங்காக மடித்து அலமிராவில் வைப்பது. (இது கொஞ்சம் கவனிக்க வேண்டிய சீரியசான விஷயம்)

உங்கள் மனைவியை பியுட்டி பார்லருக்கு அழைத்துச் செல்வது (பியுட்டின்னா என்னான்னு நாமளும் தெரிஞ்சுக்க வேண்டாமா?). அங்கே வருபவர்கள் யாருமே அழகாக இல்லை என்று திரும்பி வரும் போது கூற மறந்து விடக் கூடாது.

சென்ற வருடத்தை விட இந்த வருடம் சற்று ஒல்லியாக ஆகி இருப்பது போல தோன்றுகிறது என்று போட்டு வைப்பது. (என்ன பண்ணுவது? பொழப்பு ஓடனுமில்ல?)

இவ்வளவு நேரத்திற்குள் முடித்து விட வேண்டும் என்று கண்டிஷன் எல்லாம் போடாமல், ஷாப்பிங் அழைத்துச் செல்வது. (நகைக் கடை பக்கம் போனால் உங்கள் பர்ஸுக்கு நான் காரண்டி இல்லை. இப்படித்தான் ஒரு முறை, இரண்டு நண்பர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். தனது மனைவியின் கண்ணில் ஒரு பூச்சி விழுந்து ஐந்நூறு ரூபாய் செலவு வைத்து விட்டதாக ஒருவர் ரொம்பவும் அலுத்துக் கொண்டார். அதற்கு மற்றவர் சொன்னார், "உனக்கு பரவாயில்லை, கண்ணில் விழுந்தது பூச்சிதான். என் மனைவியின் கண்ணில் விழுந்தது ஒரு புதிய நகைக்கடையின் விளம்பரம். என் நிலைமை எப்படி இருக்குமென்று யோசித்துப் பார்".)

என்ன ரொம்ப கஷ்டமாக இருக்கிறதே என்று யோசிக்கிறீர்களா?

பேசாமல் "மகளிர் தின வாழ்த்துக்கள்" என்று உளமார ஒரு தடவை வாழ்த்தி விடுங்கள் போதும். அவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து விடுவார்கள்.

என்னைப் பொருத்த வரை, பெண்களின் உண்மையான தியாக உணர்வு, பிரதிபலன் பாரா அன்பு, வீட்டினருக்காக ஓயவில்லாமல் தரும் உழைப்பு, எல்லாவற்றுக்கும் மேலான அந்த தாய்மை ஆகியவற்றை நாம் சரியாக புரிந்து கொள்வதே அவர்களுக்கு நம்முடைய உண்மையான மகளிர்தின வாழ்த்துக்களாக இருக்கும்.

கடவுளின் பெருமைக்குரிய படைப்பான பெண்கள் அனைவருக்கும்,

"மகளிர் தின நல்வாழ்த்துக்கள்"

நன்றி.

Comments

நல்ல யோசனைகள்தான். வெளியில கூட்டிகிட்டு போனா பர்ஸ் பழுத்திடும்தான் அதனால அந்த சமைச்சி குடுக்கிறது வாழ்த்தறது அந்த மாதிரி ஐட்டம் ஓகே!!

:))))
/
உங்கள் மனைவியை பியுட்டி பார்லருக்கு அழைத்துச் செல்வது (பியுட்டின்னா என்னான்னு நாமளும் தெரிஞ்சுக்க வேண்டாமா?). அங்கே வருபவர்கள் யாருமே அழகாக இல்லை என்று திரும்பி வரும் போது கூற மறந்து விடக் கூடாது.
/

இந்த சோகத்தை ஏன் கேக்குறீங்க பியூட்டி பார்லர் நடத்தற "ஆண்ட்டிய" நான் சைட் அடிக்கறேனாம் அதனால அம்மிணி தனியாதான் போய்ட்டு வருவாங்க :(((
நல்ல நல்ல யோசனைகள்தான்.
Maximum India said…
அன்புள்ள சிவா!

பின்னூட்டங்களுக்கு நன்றி.

இந்த மகளிர் தினம் ஆண்களுக்கும் மகிழ்ச்சி தரும் தினமாக அமைய வாழ்த்துக்கள்.

நன்றி.
மகளீர் தின வாழ்த்துகள்
Maximum India said…
நன்றி ஜமால்! :)
ஞாயிற்றுகிழமையா போச்சு!
இல்லைனா லீவு போட்டு நீங்க சொன்னதெல்லாம் செஞ்சிருப்பேன்

சும்மா லுலுலாயிக்கு!
Maximum India said…
அன்புள்ள வால்பையன்

//சும்மா லுலுலாயிக்கு!//

கொஞ்சம் உங்க வீட்டுக்காரம்மா முன்னாடி சொல்லி பாருங்க. :)

நன்றி.
Naresh Kumar said…
லேட்டானாலும், மகளீர் தின வாழ்த்துகள்!!!

இப்படி யோசனை தர்றீங்களே, உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சீங்களா???
Maximum India said…
அன்புள்ள நரேஷ்

// இப்படி யோசனை தர்றீங்களே, உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சீங்களா???//

என்ன இப்படி கேட்டுட்டீங்க? ஏழாவது கல்யாண நாளை போன வாரம்தான் கொண்டாடினேன். ஐந்து வயதில் ஒரு குழந்தை கூட இருக்கிறது.

நன்றி.

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

தீவிரவாதிகளை வென்ற கதை - இந்திய கமாண்டோவின் விளக்கம்

நேற்று ஒரு தீவிரவாதி பிடிப் பட்ட கதை பார்த்தோம். இன்று தாஜ் ஹோட்டலில் எவ்வாறு நான்கு தீவிரவாதிகள் ஒழிக்கப் பட்டனர் என்று விளக்கும் இந்திய கமாண்டோவின் விளக்கத்தை பார்ப்போம். முதலில் இந்தியா கமாண்டோக்கள் தாஜ் ஹோட்டல் வந்த கதை புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் மும்பையை பயங்கரவாதம் தாக்கியது. அப்போது கேரளாவில் இருந்த மகாராஷ்டிர முதல்வர் மும்பை வரவும் இந்த சூழ்நிலையின் பயங்கரத்தையும் முழுமையாக உணர்ந்துக் கொள்ளவும் 90 நிமிடம் பிடித்தது .பின்னர் 11.00 அளவில் மத்திய அரசிற்கு போன் பேசிய முதல்வர் கோரியது 200 கமாண்டோக்களை. உடனே அந்நேரத்தில் தூங்கி கொண்டிருந்த இந்திய கமாண்டோக்கள் எழுப்பப் பட்டனர். அவர்கள் மும்பை வரத் தயாரான போதுதான் புரிந்தது, அவ்வளவு பேரை மும்பை கொண்டுவர தேவையான சிறப்பு விமானம் சண்டிகரில் உள்ளது என்று. உடனே அந்த விமானியையும் தூக்கத்தில் இருந்து எழுப்பி தயார் படுத்தி டெல்லியிலிருந்து கமாண்டோக்கள் மும்பை வந்த போது நேரம் காலை 5.25 மணி. அவர்கள் தாஜ் ஹோட்டலுக்கு கொண்டு வரப்பட்டு திட்டம் தயாரிக்கப் பட்டு அவர்கள் தாஜ் ஹோட்டலுக்குள் நுழைந்த போது நேரம் காலை 7.00 மணி. அதாவது மும்பை தாக்கப் ப...

கம்ப்யூட்டர் கட்சியும் கால்குலேட்டர் கட்சியும்!

மத்திய கல்வி அமைச்சர் கபில் சிபல் இந்தியா முழுவதும் அனைவரும் தாய்மொழியுடன் ஹிந்தியும் படிக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்துள்ளார். இவ்வாறு அனைவரும் ஹிந்தி படிப்பதன் மூலம் நாட்டில் ஒருமைப்பாடு ஏற்படுவதுடன் ஹிந்தியை ஆங்கிலம் போன்று ஒரு "அறிவு மொழியாக (lingua franca)" மாற்ற முடியும் என்றும் கூறியுள்ளார். இந்த கருத்தின் மீது பதிவுலகில் ஏராளமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆங்கிலம் மட்டுமே போதும் என்று ஒரு கட்சியும், ஆங்கிலம் வாசலாக இருக்கும் போது ஹிந்தி ஒரு சன்னலாக இருந்து விட்டு போகட்டுமே என்று இன்னொரு கட்சியும் விவாதித்து வருகின்றன. ஹிந்தி எதிர்ப்பு என்பது எப்போதுமே ஒரு உணர்வு பூர்வமான விஷயமாகவே பலராலும் கருதப் பட்டாலும், அதற்கு அறிவு பூர்வமான, சரித்திர பூர்வமான சில அடிப்படைகள் உண்டு. ஹிந்தி திணிப்பு மற்றும் ஹிந்தி எதிர்ப்பு பற்றி எனக்கு தெரிந்த சில கருத்துக்களை இங்கு ஒரு புனைவு வடிவில் அளிக்க முயற்சிக்கிறேன். இப்போது புனைவு ! ஒரு காலத்தில் பரதம்பட்டி என்ற ஒரு கிராமம் இருந்ததாம். அங்கு பல ஆண்டுகள் வரை ஆட்சி செய்து வந்த துரை மகாராஜா ஒரு காலத்தில், அந்த கிராமத்தை ஜனநாயக ...