Skip to main content

பாகிஸ்தானில் ராணுவ ஆட்சி?

பாகிஸ்தானில் கூடிய சீக்கிரம் ராணுவ ஆட்சி அமையப் போகிறது என்றும் இந்த ஆட்சி மாற்றத்தை அமெரிக்காவும் ஏற்றுகொள்கிறதென்றும் பத்திரிக்கைச் செய்திகள் தெரிவிக்கின்றன. இது குறித்து சற்று விவரமாக பார்ப்போம்.

சமீப காலமாக பாகிஸ்தானில் நடந்து வரும் நிகழ்வுகள் அங்கு மக்கள் பிரதிநிதித்துவ ஆட்சியின் "செயல்படாத் தன்மையினை" வெளிப்படுத்தக் கூடியதாகவே உள்ளன. பாகிஸ்தான் நாட்டின் ஒரு பகுதியில் இஸ்லாமிய சட்டத்தை முழுமையாக நடைமுறை படுத்த தலிபான்களுடன் தற்போதைய அரசு ஒப்பந்தம் செய்து கொண்டதும், பாகிஸ்தானிலேயே சிறந்த பாதுகாப்பான பகுதியாக அறியப்படும் லாகூரில் நேற்று இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலும், அரசாங்கத்தின் வலுவின்மையையே காட்டுகிறது. மேலும், தீவிரவாதிகள் பாகிஸ்தான் நாட்டில் வெளிப்படையாக உலா வருவதும், நேற்றைய தாக்குதல் முடிந்ததும் இந்த தீவிரவாதிகள் சிறு காயம் கூட ஏற்படாமல் போலீஸ் கண்பார்வையிலேயே தப்பித்ததும் நாடு அரசின் கட்டுப் பாட்டில் இல்லை என்பதையே காட்டுகிறது. இந்த கட்டுபாடற்ற நிலை தொடர்ந்து நீடித்தால், தலிபான்கள் கூடிய சீக்கிரம் பாகிஸ்தான் ஆட்சியைக் கைப் பற்றக் கூடும் என்பதாலும் அதனால் அமெரிக்கா (முக்கியமாக இந்தியா) உட்பட பல நாடுகளுக்கு மிகப் பெரிய சிக்கல் ஏற்படக் கூடும் என்றும் பாதுகாப்புத் துறை வல்லுனர்களால் கருதப் படுகிறது.

ராணுவம், அதிபர் மற்றும் பிரதமர் என பாகிதானில் பல அதிகார மையங்கள் இப்போது காணப் படுகின்றன. இவற்றில், யாரிடம் உண்மையான அதிகாரம் உள்ளது என்றும் தீவிரவாத பிரச்சினை குறித்து யாருடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்ற குழப்பங்கள் இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு இருக்கின்றன. ஜெனரல் முஷாரப் ஆட்சியில் இருந்த போது ராஜரீக தொடர்புகள் எளிமையாக இருந்ததும் சமீபத்திய மும்பை தாக்குதலின் போது பாகிஸ்தானில் இருந்து மாறுபட்ட வகையில் குழப்பமான தகவல்கள் வெளியிடப் பட்டதும் குறிப்பிடத் தக்கவை. வரலாற்று ரீதியாக கூட, பாகிஸ்தானிய ராணுவம் பாகிஸ்தானின் நிர்வாகத்தின் பெரும்பகுதியை பல ஆண்டுகள் கையில் வைத்திருந்ததும் கவனிக்கத் தக்கது.

மேற்சொன்ன காரணங்களால், பாகிஸ்தான் ராணுவத்தின் கையில் ஆட்சி போவது இப்போதைய குழப்பமான நிலைமையை கொஞ்சம் தெளிவாக்கும் என்று மற்ற உலக நாடுகள் கருதுவதாக கூறப் படுகிறது. தற்போதைய ராணுவத் தலைவர் ஜெனரல் அஷ்பாக் கயானி அடுத்த அதிபராக பொறுப்பேற்றுக் கொள்ள அமெரிக்கா சம்மதிக்கும் என்றும் சொல்லப் படுகிறது.

ஆக மொத்தத்தில், பாகிஸ்தானில் ராணுவ ஆட்சி ஏற்படப் போவது கிட்டத் தட்ட உறுதியாகி விட்டது என்றும் ஆட்சி மாற்றம் எவ்வளவு சீக்கிரம் நடைபெற போகிறது என்பது மட்டுமே இப்போதைய கேள்வி என்று நினைக்கிறேன்.

நன்றி.

Comments

மதவாதமாக எடுத்துக்கொள்ளாமல் சமூக பொருளாகப் பார்த்து, முஸ்லீம் நாடுகளில் குடியரசு முறை ஆட்சிமுறை ஏன் வெற்றிபெறுவதில்லை? எவ்வளவு நாடுகளில் (மலேசியா போன்று ) குடியரசு முறை உள்ளது என யாரேனும் சொல்வார்கள?
பாகிஸ்தான் ஜனநாயக தவளும் குழந்தை.அதை நடைபழக விடுங்க.
Maximum India said…
அன்புள்ள நெற்குப்பை ஐயா

கருத்துரைக்கு நன்றி.

//மதவாதமாக எடுத்துக்கொள்ளாமல் சமூக பொருளாகப் பார்த்து, முஸ்லீம் நாடுகளில் குடியரசு முறை ஆட்சிமுறை ஏன் வெற்றிபெறுவதில்லை? எவ்வளவு நாடுகளில் (மலேசியா போன்று ) குடியரசு முறை உள்ளது என யாரேனும் சொல்வார்கள?//

இது ஒரு வித்தியாசமான கேள்வியாக இருக்கிறது. எனக்குத் தெரிந்து துருக்கி ஒரு ஜனநாயக குடியரசு நாடு. மற்ற நாடுகள் பற்றி தெரிய வில்லை. விடையை நான் கூட எதிர்பார்க்கிறேன்.

நன்றி.
Maximum India said…
அன்புள்ள ராஜா நடராஜன்

பின்னூட்டத்திற்கு நன்றி

//பாகிஸ்தான் ஜனநாயக தவளும் குழந்தை.அதை நடைபழக விடுங்க.//

இந்தியாவிற்கு ஒரு நாள் முன்னதாகவே பாகிஸ்தான் சுதந்திரம் பெற்றது என்பது இங்கு குறிப்பிடத் தக்கது. காந்தி நேரு போன்ற இந்திய தலைவர்களைப் போல மக்களுடன் அதிக தொடர்பு இல்லாத (ஜின்னா) போன்ற அரசியல் தலைவர்களை பாகிஸ்தான் பெற்றிருந்தது ராணுவ தலைவர்கள் அடிக்கடி ஆட்சி மாற்றம் செய்ய உதவியது என்று நினைக்கிறேன்.

மற்றபடிக்கு பாகிஸ்தான் ஒரு நல்ல ஜனநாயக நாடாக இருப்பது இந்திய பாதுகாப்புக்கு மிகவும் அவசியம்.

நன்றி.
கவலை வேண்டாம். தலிபான்கள் தாலி கட்டி விட்டதால் சீக்கிரம் கதை முடிந்து விடும். பாகிஸ்தானியர்கள் நம்மை பார்த்து அழும் நேரம் வரும்.
Maximum India said…
அன்புள்ள பொதுஜனம்

//கவலை வேண்டாம். தலிபான்கள் தாலி கட்டி விட்டதால் சீக்கிரம் கதை முடிந்து விடும். பாகிஸ்தானியர்கள் நம்மை பார்த்து அழும் நேரம் வரும்.//

அண்டை வீடு அமைதியாக இருந்தால்தான், நாம் நிம்மதியாக தூங்க முடியும். பாகிஸ்தான் தீவிரவாதத்தால் பாதிக்கப் படாத ஒரு சிறந்த ஜனநாயக நாடாக மாறுவது நம் நாட்டின் பாதுகாப்பிற்கு மிகவும் அவசியம்.

நன்றி

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

தீவிரவாதிகளை வென்ற கதை - இந்திய கமாண்டோவின் விளக்கம்

நேற்று ஒரு தீவிரவாதி பிடிப் பட்ட கதை பார்த்தோம். இன்று தாஜ் ஹோட்டலில் எவ்வாறு நான்கு தீவிரவாதிகள் ஒழிக்கப் பட்டனர் என்று விளக்கும் இந்திய கமாண்டோவின் விளக்கத்தை பார்ப்போம். முதலில் இந்தியா கமாண்டோக்கள் தாஜ் ஹோட்டல் வந்த கதை புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் மும்பையை பயங்கரவாதம் தாக்கியது. அப்போது கேரளாவில் இருந்த மகாராஷ்டிர முதல்வர் மும்பை வரவும் இந்த சூழ்நிலையின் பயங்கரத்தையும் முழுமையாக உணர்ந்துக் கொள்ளவும் 90 நிமிடம் பிடித்தது .பின்னர் 11.00 அளவில் மத்திய அரசிற்கு போன் பேசிய முதல்வர் கோரியது 200 கமாண்டோக்களை. உடனே அந்நேரத்தில் தூங்கி கொண்டிருந்த இந்திய கமாண்டோக்கள் எழுப்பப் பட்டனர். அவர்கள் மும்பை வரத் தயாரான போதுதான் புரிந்தது, அவ்வளவு பேரை மும்பை கொண்டுவர தேவையான சிறப்பு விமானம் சண்டிகரில் உள்ளது என்று. உடனே அந்த விமானியையும் தூக்கத்தில் இருந்து எழுப்பி தயார் படுத்தி டெல்லியிலிருந்து கமாண்டோக்கள் மும்பை வந்த போது நேரம் காலை 5.25 மணி. அவர்கள் தாஜ் ஹோட்டலுக்கு கொண்டு வரப்பட்டு திட்டம் தயாரிக்கப் பட்டு அவர்கள் தாஜ் ஹோட்டலுக்குள் நுழைந்த போது நேரம் காலை 7.00 மணி. அதாவது மும்பை தாக்கப் ப...

கம்ப்யூட்டர் கட்சியும் கால்குலேட்டர் கட்சியும்!

மத்திய கல்வி அமைச்சர் கபில் சிபல் இந்தியா முழுவதும் அனைவரும் தாய்மொழியுடன் ஹிந்தியும் படிக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்துள்ளார். இவ்வாறு அனைவரும் ஹிந்தி படிப்பதன் மூலம் நாட்டில் ஒருமைப்பாடு ஏற்படுவதுடன் ஹிந்தியை ஆங்கிலம் போன்று ஒரு "அறிவு மொழியாக (lingua franca)" மாற்ற முடியும் என்றும் கூறியுள்ளார். இந்த கருத்தின் மீது பதிவுலகில் ஏராளமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆங்கிலம் மட்டுமே போதும் என்று ஒரு கட்சியும், ஆங்கிலம் வாசலாக இருக்கும் போது ஹிந்தி ஒரு சன்னலாக இருந்து விட்டு போகட்டுமே என்று இன்னொரு கட்சியும் விவாதித்து வருகின்றன. ஹிந்தி எதிர்ப்பு என்பது எப்போதுமே ஒரு உணர்வு பூர்வமான விஷயமாகவே பலராலும் கருதப் பட்டாலும், அதற்கு அறிவு பூர்வமான, சரித்திர பூர்வமான சில அடிப்படைகள் உண்டு. ஹிந்தி திணிப்பு மற்றும் ஹிந்தி எதிர்ப்பு பற்றி எனக்கு தெரிந்த சில கருத்துக்களை இங்கு ஒரு புனைவு வடிவில் அளிக்க முயற்சிக்கிறேன். இப்போது புனைவு ! ஒரு காலத்தில் பரதம்பட்டி என்ற ஒரு கிராமம் இருந்ததாம். அங்கு பல ஆண்டுகள் வரை ஆட்சி செய்து வந்த துரை மகாராஜா ஒரு காலத்தில், அந்த கிராமத்தை ஜனநாயக ...