Skip to main content

Posts

Showing posts from October, 2008

சிறந்த பின்னூட்டம் இடுவது எப்படி?

சிறந்த பின்னூட்டங்கள் பதிவினை மேலும் அழகுப்படுத்தும் அணிகலன்கள். அவை புதிய சிந்தனைகளை உருவாகவும் சில சமயங்களில் பதிவருக்கே சில சந்தேகங்களை தீர்க்கவும் உதவி செய்யும். எனது குறுகிய கால பதிவு உலக அனுபவத்தில், சிறந்த பின்னூட்டம் இடுவது எப்படி என்பது பற்றிய எனது சில சிந்தனைகளை தங்கள் முன் வைக்கிறேன். சிறந்த பின்னூட்டம் இடுவதற்கான அடிப்படை விஷயங்கள் கீழே. முதலில் பதிவின் நோக்கத்தினை முழுமையாக புரிந்து கொள்வது. அதன் மீது தனது உண்மையான உணர்வுகளை தெரிவிப்பது. எதிர் கருத்துகள் எதிரியின் கருத்துகள் அல்ல. சிறந்த நண்பர்களால், ஒத்துப் போகாமல் இருக்க ஒத்துப் போக முடியும். (Agree to Disagree) புரியாதவற்றை பற்றி தயங்காமல் சந்தேகங்கள் கேட்பது (பின்னூட்டம் இடுவது). ஏற்கனவே மற்றவர்கள் கேட்ட கேள்விகளைத் தவிர்ப்பது. புதிய சிந்தனைகளை பதிவுக்கு துணை சேர்ப்பது. நாகரிகமான நகைச்சுவை நல்லது. தனி மனித தாக்குதல்களை அல்லது புகழ்ச்சிகளை தவிர்ப்பது. மேலோட்டமான கருத்துகளை தவிர்ப்பது. (To the Point). பின்னூட்டங்கள் பதிவரின் மேல் உள்ள அக்கறையின் பேரிலேயே என்பதை தெளிவு படுத்துங்கள். இந்த பதிவின் மீது கூட சிறந்த பின்னூட்டங...

மனக் கணக்கியல்

பொதுவாக நிறுவனங்களும் அரசாங்கமும் தமது வரவு செலவு கணக்குகளை வகைப் படுத்துவதற்காக சில கணக்கியல் கொள்கைகளை (Accounting Policies) பின்பற்றி வருகின்றன. இதைப் போலவே, மனித மனம் கூட ஒவ்வொரு வரவு செலவினையும் சில பிரிவுகளாக பிரித்து வகைப்படுத்தி வருகிறது. புற உலகில் உள்ள பணத்திற்கான உண்மையான மதிப்பிற்கும் (Actual Value) மனதில் அதே அளவில் உள்ள பணத்திற்கான புரிந்துணரும் மதிப்பிற்கும் (Perceived Value) பெரும் வேறுபாடு உள்ளது. உதாரணமாக, சராசரி வருமானம் உள்ள ஒருவர் சுமார் 1000 ரூபாய் செலவு செய்து, ஒரு இசை நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்குகிறார். அந்த நிகழ்ச்சிக்கு போகும் வழியில் டிக்கெட் தவறி விடும் பட்சத்தில் மீண்டும் ஒருமுறை 1000 ரூபாய் செலவு செய்து புதிய டிக்கெட் வாங்க தயங்குவார். அதே சமயத்தில், அவரே முதன் முறையாக டிக்கெட் வாங்க செல்லும் போது, கைப்பையில் உள்ள பணத்தில் 1000 ரூபாய் தவற விட்டிருந்தாலும் கூட டிக்கெட்டுகளை வாங்குவார் என மனவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். காரணம், இரண்டு முறையிலும் இழந்த பணத்தின் உண்மையான (புற) மதிப்பு ஒன்றுதான் (ரூ.1000/-) என்றாலும் ஒவ்வொரு வகையிலும், இழந்த பணத்திற்கு மனம் க...

மனக் கணக்கியல்

பொதுவாக நிறுவனங்களும் அரசாங்கமும் தமது வரவு செலவு கணக்குகளை வகைப் படுத்துவதற்காக சில கணக்கியல் கொள்கைகளை (Accounting Policies) பின்பற்றி வருகின்றன. இதைப் போலவே, மனித மனம் கூட ஒவ்வொரு வரவு செலவினையும் சில பிரிவுகளாக பிரித்து வகைப்படுத்தி வருகிறது. புற உலகில் உள்ள பணத்திற்கான உண்மையான மதிப்பிற்கும் (Actual Value) மனதில் அதே அளவில் உள்ள பணத்திற்கான புரிந்துணரும் மதிப்பிற்கும் (Perceived Value) பெரும் வேறுபாடு உள்ளது. உதாரணமாக, சராசரி வருமானம் உள்ள ஒருவர் சுமார் 1000 ரூபாய் செலவு செய்து, ஒரு இசை நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்குகிறார். அந்த நிகழ்ச்சிக்கு போகும் வழியில் டிக்கெட் தவறி விடும் பட்சத்தில் மீண்டும் ஒருமுறை 1000 ரூபாய் செலவு செய்து புதிய டிக்கெட் வாங்க தயங்குவார். அதே சமயத்தில், அவரே முதன் முறையாக டிக்கெட் வாங்க செல்லும் போது, கைப்பையில் உள்ள பணத்தில் 1000 ரூபாய் தவற விட்டிருந்தாலும் கூட டிக்கெட்டுகளை வாங்குவார் என மனவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். காரணம், இரண்டு முறையிலும் இழந்த பணத்தின் உண்மையான (புற) மதிப்பு ஒன்றுதான் (ரூ.1000/-) என்றாலும் ஒவ்வொரு வகையிலும், இழந்த பணத்திற்கு மனம் க...

தமிழ் இலக்கியத்தில் சந்தை நிலவரம்

தமிழ் பதிவுலகில் (எழுத்துலகில்) நுழைந்து சுமார் 50 நாட்களே ஆகிருக்கும் பட்சத்தில், எனது எழுத்துக்களை மேம்படுத்த என் பதிவுலக நண்பர் ஒருவரிடம் கோரிய போது அவர் கூறிய யோசனை. மற்ற பதிவுகளையும் படித்து புரிந்து கொண்டு பின்னூட்டம் அளிக்க முயற்சி செய்வது. சரிதான், நம் பதிவுகளுக்கு பின்னூட்டம் இட்ட நண்பர்களின் பதிவு பூக்களிலிருந்து ஆரம்பிப்போம் என்ற எனது முடிவின் முடிவு என்னைக் கொஞ்சம் மிரளச் செய்து விட்டது. புகைப் படங்களால் மயக்கும் ஒருவர், கவிதைகளால் வேறு உலகம் காணச் செய்யும் ஒருவர், கவிதைகளையும் கவிதையான புகைப்படங்களையும் ஒருங்கே கொடுத்து மிரட்டும் ஒருவர், காந்தி தேசத்தின் மறுபக்கம் கண்ட ஒருவர், கட்டுரையினையே கவிதையாக்கிய ஒருவர், ஜெர்மானிய ரஷ்ய இலக்கியம் பேசும் ஒருவர், ஜெயகாந்தன் முதல் ஜெயமோகன் வரை அலசும் ஒருவர், வெளி வராத புத்தகங்களுக்கு கூட விமர்சனம் எழுதும் ஒருவர் மற்றும் பதிவினையே தலை கீழாக இட்டு Irreversible Technique கண்ட ஒருவர். இவர்கள் எழுத்துக்களை இரு மாதங்கள் முன்னரே கண்டிருப்பேன் என்றால் நான் எழுத தைரியமாக முன்வந்திருப்பேனா என்பதே சந்தேகம்தான். என்னை பொறுத்த வரை (தமிழ் மற்றும் ஆங...

மும்பை யாருக்கு சொந்தம்?

இன்றைய தேதியில், மும்பை யாருக்கு சொந்தம் என்ற கேள்விக்கு சிலர் விவாதங்களிலும் சிலர் வன்முறைகளிலும் தீர்வு காண முயல்கின்றனர். இது பற்றியும், மும்பை உண்மையான மண்ணின் மைந்தர்கள் யார் என்பது பற்றியும் ஒரு சிறு ஆராய்ச்சி இங்கே. கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே மக்கள் இங்கு வாழ்ந்திருக்கிறார்கள் என்பதும் மும்பையின் அருகில் உள்ள யானைத் தீவில் (Elephanta Caves) உள்ள சிற்பங்கள் பல நூறு ஆண்டுகள் பழமையானவை என்றாலும் கூட, அனைத்து ஆராய்ச்சியாளர்களும் ஒப்புக் கொள்ளும் ஒரு விஷயம் இது. அதாவது, கோலி (மீனவர்கள்) இன மக்களே மும்பை தீவின் முன்னோடிகள் (Original Inhabitants). இவர்கள் திராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கூட சிலர் கூறுகின்றனர். இவர்களது தெய்வமான மும்பா தேவியின் பெயரே இன்றைய மும்பை என்ற பெயருக்கு அடிகோலி உள்ளது. மும்பா தேவி கோயில் உள் அமைப்பும், மூலவரின் உருவமும் நமது ஊரிலுள்ள மாரி அம்மன் கோயில்களை ஓரளவிற்கு ஒத்துள்ளது. கோலி மீனவ இன மக்கள் இன்றும் கூட மும்பையின் கடலோரப் பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர். கொலாபா போன்ற மும்பை நகரத்தின் வளமான பகுதிகளில் வசிக்கும் இவர்களது குடியிருப்புக்களை அகற்றி அங்க...

தீபாவளி சிந்தனைகள்

தீபாவளி நமக்குத் தரும் மறைபொருள் விளக்கம். உலகத்தில் மட்டுமல்ல ஒட்டுமொத்த பிரபஞ்சத்திலும் உள்ள அத்தனை இருட்டும் ஒன்று சேர்ந்தாலும் கூட, ஒரு சிறிய தீபத்தின் ஒளியை அழித்து விட முடியாது. அதே போல, இன்றைய உலகில் எவ்வளவோ தீமைகள் சேர்ந்து வந்தாலும் கூட ஒரு சிறிய இதயத்தின் நல்ல சிந்தனைகளை மாற்றிவிட முடியாது. புத்தாடை அணிந்து இனிப்புகளுடன் பட்டாசுகளுடன் இன்றைக்கு தீபாவளி கொண்டாடும் நாம், இந்த வாய்ப்பினை பல வருடங்களாக இழந்திருக்கும் ஈழ தமிழர்களும், அடுத்தவர்களின் கொண்டாட்டங்களை ஏக்கத்துடன் பார்க்க மட்டுமே முடிகின்ற எளியவர்களும், நம்முடன் சேர்ந்து அடுத்த தீபாவளியை அனைவருக்குமான தீபாவளியாக கொண்டாட இருளிலும் ஒளியாய் நமக்கு வழி காட்டும் அந்த எல்லாம் வல்ல இறைவனை இந்த தீப ஒளித் திருநாளில் வேண்டிக்கொள்வோம். தீபாவளி நல்வாழ்த்துகள்

தீபாவளி தள்ளுபடி விற்பனை

வரலாறு காணாத தீபாவளி தள்ளுபடி விற்பனை இப்போது இந்திய பங்குச்சந்தையில். மேலும் விவரத்திற்கு பாருங்கள் Maximum India தீபாவளி நல்வாழ்த்துக்கள்

தீபாவளி - சொந்த ஊரிலும் வந்த ஊரிலும்

இப்போது, மின்னஞ்சல் வட்டாரங்களில் அதிகம் உலா வரும் ஒரு நகைச்சுவை கலந்த (உள்ளூருக்கு வருவதற்கான) அழைப்பிதழ் கீழே. இதிலுள்ள படி இந்த பண்டிகைக்கு, சொந்த ஊர் சென்றவர்கள் தன் உறவினர் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து தீபாவளியைச் சிறப்பாக கொண்டாட எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். சில பல காரணங்களினால், இது போன்ற தருணங்களில் தனது சொந்த ஊருக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்காத என் போன்ற சிலருக்காக இங்கே சில கருத்துகள். எவ்வளவு சாப்பிட்டாலும் கம்மி என்று சொல்லும் அம்மாவின் அன்பு கலந்த சாப்பாடு, எவ்வளவு தாமதமாக வந்தாலும் தூங்காமல் காத்திருக்கும் அப்பாவிடம் இன்னமும் வாங்கும் திட்டு , உறவினர் வீட்டுக்கு அடிக்கும் விசிட்கள் மற்றும் நண்பருடன் பார்க்கும் தீபாவளி ரிலீஸ். இது மட்டுமல்ல, இளமையின் வசந்த காலங்களை நினைவூட்டும் உள்ளூர் பகுதிகள். இவை அனைத்தும் பண்டிகை காலங்களில், ஊருக்கு செல்லாததால் ஏற்படும் ஈடு செய்ய முடியாத சில இழப்புகள். இப்போது, என்ன செய்ய முடியும் நம்மால்? அடி வாங்கினாலும் அடுத்த நிமிடம் மறந்து சிரிக்கும் ஒரு குழந்தையின் மனதை தீபாவளி முடியும் வரை கொஞ்சம் கடன் வாங்கி கொள்ளுங்கள். க...

வெல்ல முடியாத கடல் கோட்டை

இதுவரை, இந்திய சரித்திரத்தில் ஒரு முறை கூட எதிரிகளால் (ஆங்கிலேயர்கள் உட்பட) வெல்ல முடியாத கோட்டை ஒன்றினை கேள்விப் பட்டு இருக்கிறீர்களா? அரபிக் கடல் நடுவே அமைந்துள்ள அந்த மெய் சிலிர்க்க வைத்த கோட்டைக்கு செல்லும் ஒரு வாய்ப்பு சமீபத்தில் எனக்கு கிடைத்தது. அந்த கோட்டையின் சிறப்பம்சங்கள் பற்றியும் அதன் வெல்ல முடியாத கதை பற்றியும் எனக்கு கிடைத்த சில தகவல்களை தங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். முருட் ஜன்ஜிரா எனும் இந்த மிகப் பெரிய கடல் கோட்டை, மகாராஷ்டிரா மாநிலத்தில் ராய்கட் மாவட்டத்தில் அரபிக் கடலில் (கடற்கரையிலிருந்து சுமார் 2 கி.மீ. தூரத்தில்) அமைந்துள்ளது. மும்பையிலிருந்து சாலை வழியாக (சுமார் 100 கி.மீ. தூரம்) அந்த கடற்கரைக்கு செல்ல முடியும். இந்தப் பகுதியைச் சுற்றி மிக அழகான கன்னிக் கடற்கரைகள் (virgin beaches) உண்டு. இந்த கோட்டை கடற் பயணம் செய்யும் இஸ்லாமியர்களுக்கு (முக்கியமாக ஹஜ் போன்ற பயணங்களுக்கு) பாதுகாப்பு அளிப்பதற்காகவும், இந்திய நிலப் பகுதியில் உள்ள முஸ்லீம் நாடுகளுக்கு கடற் தாக்குதலில் இருந்து காப்பற்றும் அரணாக இருப்பதற்காகவும் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு உ ருவாக்கப்...

கட்டுப்பாடான வேகம் நன்று

சிறிது காலத்திற்கு முன்பு, நான் என் குடும்பத்துடன் காரில் ஒரு விரைவு நெடுஞ்சாலையில் (Express Highway) சுவாரஸ்யமாக பேசிக்கொண்டே மிக அதிக வேகத்தில் (சுமார் 110-120 கி.மீ.) சென்ற பொழுது, ஒரு கனரக வாகனம் தடம் (lane) மாறி திடீரென குறுக்கே வந்து விட்டது. ஒரு பெரும் விபத்தில் இருந்து மயிரிழையில் தப்பியது தம்பிரான் புண்ணியம். இது நடந்து சில காலத்திற்கு பின், என் நண்பர் ஒரு தேசிய நெடுஞ்சாலையில், காரில் மிக வேகமாக சென்ற போது, சாலைப் பணிக்காக குறுக்கே வைக்கப் பட்டிருந்த ஒரு தடுப்பில் (கவனக் குறைவினால்) மோதி தனது குடும்பத்துடன் உயிரிழந்தார். சீரான, நேரான சாலைகள், லேசாக அழுத்தினால் பறக்கக் கூடிய நவீன வகை கார்கள் நமது மனதில் ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தி மிக அதிக வேகத்தில் செல்ல உந்துகின்றன. முதலில் சாலையில் கவனமாக இருந்தாலும், தொடர்ந்து சில நேரம் அதிக வேகத்தில் செல்லும் போது, அயர்ச்சினாலும் அதீத தன்னம்பிக்கையினாலும், கவனக் குறைவு ஏற்படுவது தவிர்க்க முடியாதது ஆகி விடுகிறது. அப்போது, சாலையில் திடீரென ஏற்படும் சில எதிர்பாராத குறுக்கீடுகளால் பெரும் விபத்து நேரிட்டு விடுகிறது. இந்த நிலை சாலைப் பயணத்திற்கு ...

வெளிநாட்டில் பணிபுரியும் நண்பர்களுக்கு ஒரு தகவல்

சமீபத்தில், வெளிநாட்டில் பணிபுரிந்து தாயகம் திரும்பிய நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்த பொழுது, டாலர் நாணய சந்தையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களினால் அவருக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து பேச்சு இருந்தது. அதாவது, வெளிநாட்டில் அவர்தம் சம்பளம் டாலர் மதிப்பில், ஒரே அளவில் இருந்தாலும் கூட, அந்த டாலர் தொகை ரூபாயில் மாற்றம் பெறும் போது, பெருத்த மாற்றங்களை சந்திக்கிறது. இதனால் இந்தியாவில் உள்ள அவர் குடும்பத்தின் மாதாந்திர பட்ஜெட் இடுவது மிகவும் சிரமமாக இருக்கிறது. உதாரணமாக, ரூ.49 ஆக இருந்த டாலர் காலப் போக்கில் ரூ.39 ஆக குறைந்து, பின்னர் மீண்டும் ரூ.49 அளவிற்கு உயர்ந்துள்ளது. இதனால்,1500 டாலர் சம்பளம் பெற்று சுமார் 1000 டாலர் தனது குடும்பத்திற்கு அனுப்பினால், ஒரு மாதம் 49000 ரூபாயும் சில காலம் கழித்து இன்னொரு மாதம் 39000 ரூபாயும் என மாறி மாறி வருகிறது. அந்த நண்பர் வேடிக்கையாக கூறினார். அவர் குடும்பத்தினர் அவர் மீதே சந்தேகப் படுகின்றனர் என்று. இந்த ஏற்ற இறக்கங்களில் இருந்து அவர் போன்றவர்கள் தம்மை பாதுகாத்துக் கொள்ள இப்போது ஒரு புதிய வழிமுறை உள்ளது. அதாவது "எதிர்கால நாணய விலை ஒப்பந்தங்கள்" ...

மதச் சார்பின்மை - சொற்பொருள் மாற்றம் - ஒரு இலக்கண ஆராய்ச்சி

சொற்பொருளியலின் (Semantics) படி, ஒரு மொழியில் உள்ள சொற்கள், காலப் போக்கில், பல்வேறு காரணங்களினால், தமது வேர் பொருட்களை இழந்து, புதிய பொருட்களை பெறுகின்றன. உதாரணமாக, ஒரு காலத்தில் உலோகங்களை பொதுவாக குறித்த பொன் என்ற சொல் தற்போது தங்கம் என்ற அர்த்தத்தில் வழங்கப் படுகிறது. நாற்றம் என்ற சொல் மணம் என்ற தனது வேர் பொருளை இழந்து துர்மணம் என்ற புதிய பொருளைப் பெற்றுள்ளது. இதே போல, கழகம், காமம், கோயில் போன்ற பல சொற்கள் காலப் போக்கில் வேர் பொருளை இழந்து புதிய பொருளிலேயே உணரப் படுகின்றன. எனக்கு வெகு நாட்களாக ஒரு சந்தேகம். மதச் சார்பின்மை எனும் சொல் கூட இதே போல தனது வேர் பொருளை காலப் போக்கில் இழந்து, இன்றைக்கு வேறு அர்த்தத்தில் வழங்கப் படுகின்றதோ என்று. இந்திய அரசியல் சட்டப் படி, இந்தியா ஒரு மதச் சார்பற்ற நாடு. இதன் அடிப்படையில், அரசியல் சட்ட வல்லுனர்கள் மதச் சார்பின்மைக்கு சில விளக்கங்கள் அளிக்கிறார்கள். அதாவது, மதச் சார்பின்மை என்பது அனைத்து மதங்களையும் சமமாகக் கருதுவது. மதத்தின் அடிப்படையில் வேறுபாடுகள் காணாமல் இருப்பது. ஆனால், தற்போது மதச் சார்பின்மைக்கு நடைமுறை விளக்கம் என்ன? இங்கே கொஞ்சம் அலசல...

மேலை உலகம் நமக்கு குத்தி வரும் முத்திரை.

இந்த ஆண்டிற்கான புக்கர் பரிசு இந்தியர் ஒருவருக்கு கிடைத்துள்ளது. உலக அளவில், எழுத்துலகின் மிக உயரிய விருதாக இந்த பரிசு கருதப்படுகிறது. மேலும், இதன் பரிசுத் தொகை, இந்திய எழுத்தாளர்கள் சாதாரணமாக நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு பெரியது ஆகும். இந்தியர் ஒருவருக்கு, இத்தகைய பரிசு கிடைத்திருப்பது மேலோட்டமாக பார்க்கும் போது பெருமையளிக்கக் கூடியதாகவே தோன்றியது. ஆனால், இந்தியாவின் இருண்ட பக்கங்களை வெளிச்சம் போட்டுக் காட்டிய எழுத்தாளர்களுக்கு மட்டுமே இது போன்ற விருதுகள் வழங்கப் பட்டு உள்ளன என்பதும், இநத வருடம் பரிசு பெற்ற எழுத்தாளர் கூட மேற்கூறிய வகைக்கு விதி விலக்கானவர் அல்ல என்பதும் அறிந்த பின்னர் வருத்தமே மிஞ்சியது. பழைய இந்தியா உலக பெரும் நாகரிகங்களில் ஒன்று, எத்தனையோ மகான்கள் அவதரித்த பூமி என்றும் புதிய இந்தியா அதி வேகமாக முன்னேறி வரும் ஒரூ இளைய நாடு, ஜொலிக்கின்ற நாடு (India Shining) என்றும் நாம் காட்டுக் கூச்சலாக கத்தினாலும் கூட, மேலை நாடுகள் நம்மை இன்னும் ஏளனமாகவே நோக்கி வருகின்றன. அந்த ஏளன நோக்கின் மற்றுமொரு வெளிப்பாடே இது போன்ற புத்தகங்கள் மற்றும் சில திரைப் படங்களுக்கு தொடர்ந்து வ...

வாராந்திர சந்தை நிலவரம்

சென்ற வார சந்தை நிலவரம் மற்றும் வருகின்ற வாரத்திற்கான எதிர்பார்ப்புகள் குறித்து, இந்த பதிவரின், ஆங்கில பதிவு வலையில் குறிப்பிடப் பட்டுள்ளது. அதனைப் பார்க்க கீழ் கண்ட இணைப்பை அணுகவும். Maximum India Weekly Review

கருத்துக் கணிப்பு நடத்துபவர்களுக்கு ஒரு கோரிக்கை.

இந்த வாரம், என்னால் பெரிது மதிக்கப் பட்டு வந்த, சென்னையைச் சேர்ந்த ஒரு கல்லுரியின் கருத்துக் கணிப்பு தலைப்பை (தமிழர்களுக்கு பிடித்த சினிமா நடிகர் யார்?) செய்தி தாள்களில் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். ஊடகங்கள் மட்டுமே அரசியல் தலைவர்கள், சினிமா நடிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் ஆகியோருக்கு பெருமளவிற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன என்று எண்ணியிருந்த போது, சிறந்த கருத்துகளை மக்களுக்கு சொல்ல வேண்டிய சில நல்ல கல்லூரிகள் கூட ஊடகங்களின் பாணியை பின் பற்றுவது கவலை அளிக்கக் கூடிய விஷயமாக இருக்கிறது. மக்கள் விரும்புகிறார்கள் என்பதினால்தான் இத்தகைய விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பவர்களுக்கு ஒரு கேள்வி. உங்கள் குழந்தைகள் விரும்புகிறார்கள் என்பதற்காக, சுகாதாரமற்ற, உடலுக்கு ஒவ்வாத உணவுகளைக் கொடுப்பீர்களா? மேலும், அரசியல் தலைவர்கள், சினிமா நடிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் ஆகியோர் மிக அதிக அரசியல் பலம், மக்கள் செல்வாக்கு, பதவி மற்றும் பண பலம் கொண்டவர்கள். அவர்கள், நம்மைப் போன்ற சாமான்யர்கள், கவலை மற்றும் அக்கறை காட்ட தேவை இல்லாத உயரத்தில் இருப்பவர்கள். நாம் நம்மைப் பற...

கடன் வாங்கலாமா?

கடன் பொருளாதாரம் , ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படையான ஒன்றாகும் . ஆனால் , அதே சமயத்தில் , சில தவறான கடன் கொள்கைகளால் , இன்றைய தேதியில்உலகமே தத்தளித்து கொண்டு இருக்கிறது . இந்த சூழ்நிலையில் நம்மைப் போன்ற சாமான்யர்கள் கடன் வாங்கலாமா என்பதை பற்றியும் வாங்குவதற்கு முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள் யாவை என்பதைப் பற்றியும் இங்கு ஆராயலாம் . பொதுவாக , கடன் வாங்குவதற்கு கீழ்க் கண்ட காரணங்கள் இருக்கக் முடியும் . தொழில் மற்றும் வியாபார தேவைகள் . சுய தேவைகள் , மேற்படிப்பு தேவைகள் மற்றும் இதர முதலீடுகள் (Speculative nature) 1. தொழில் மற்றும் வியாபார தேவைகள் பொதுவாக ஒரு நாட்டின் அனைத்து துறைகளின் சராசரி வளர்ச்சி , அந்நாட்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தி (GDP) மற்றும் பண வீக்கத்தின் (Inflation) கூட்டு தொகையாக இருக்கும் . உதாரணமாக , இந்திய வளர்ச்சி 8% மற்றும் பண வீக்கம் 12% எனும் பட்சத்தில் சராசரி துறை வளர்ச்சி (12+8) 20% ஆக இருக்கும் . இதன் அடிப்படையில் , ஒவ்வொரு துறைக்குமான , வருங்கால தனிப் பட்ட ...

இலங்கைப் பிரச்சினைக்கு தீர்வு - ஒரு இந்தியப் பார்வை - பகுதி ௨

நேற்றைய பதிவின் மீது, ஒரு நண்பர் தனது பின்னூட்டத்தில், சில கேள்விகள் கேட்டிருந்தார். அவரது கேள்விகள், மேலும் பலரது எண்ணங்களிலும் பிரதிபலித்து இருக்கக் கூடும் என்பதனாலும், அவற்றின் பதில்கள் கூட அனைவரையும் சென்றடைய வேண்டி இருப்பதாலும் அவற்றை தங்கள் பார்வைக்காக பதிந்துள்ளேன் . கேள்விகள் Hi... I have few questions in my mind.. (1) LTTE and Sri Lankan government is not interested to settle this issue and want to live with the issue for ever. Why Indians to spend their time to resolve this issue? (2) Is all Indians are having 3 times food, shelter and enough basic needs? How the Indian government is qualify to resolve this dispute when they are not capable to improve their own people livelihood? (3) When both LTTE & Sri Lankan government is not believed in peace talks and they stick to violence, why the other parties inject the peace talks? My sincere request to Indian Government & Tamil Nadu government, please concentrate on literacy, health care and other basic needs of Indians. ...

இலங்கைப் பிரச்சினைக்கு தீர்வு - ஒரு இந்தியப் பார்வை

இந்தியா, உலக பழம் பெருமை வாய்ந்த நாகரிகங்களின் தொட்டிலாக கருதப் படும் ஒரு நாடு. தன்னை அழிக்க வந்த , கிரேக்கர், மங்கோலியர், துருக்கியர் போன்ற அந்நியர்களைக் கூட அரவணைத்துக் கொண்டு, தன்னுடைய உயரிய பண்பாட்டினால், தன்னுள்ளே ஐக்கியப் படுத்திக் கொண்ட நாடு இது. பொறுமைக்கும் சகிப்புத் தன்மைக்குப் பெயர் பெற்ற இந்த நாட்டின் நீண்ட நெடிய வரலாற்றில், இதன் சீரிய பெருந்தன்மைக்கு நவீன காலத்திய உதாரணங்கள் சில இங்கே. இந்திய-பாகிஸ்தான் தேசப் பிரிவினையின் போது, பாகிஸ்தானுடன் சேர கிழக்கு வங்க மக்கள் (அரசியல்வாதிகள்) முடிவு எடுத்திருந்தப் போதும், அந்நாட்டு மக்கள் அபயக் குரல் எழுப்பியவுடன், நேசக் கரம் நீட்டி, அவர்களுக்கு பங்களாதேஷ் தந்த நாடு இது. ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த சிலரால் இந்நாட்டு பிரதமர் கொல்லப் பட்ட போது, உடனடியாக சற்று கோபப் பட்டாலும், பின்னர் அமைதியாகி, அந்த சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரையே (அதுவும் அதே கட்சியின் மூலமாகவே) அதே உயர் பதவியில் அமர்த்தி அழகு பார்த்து இந்த நாடு. ஒரு மாநில மக்கள், தனி நாடு கோரிய போதும், அவர்கள் அண்டை நாட்டில் உள்ள தமது உறவினரைக் காண, சாலை அமைத்து தந்தது இந்த ந...

சேமிக்க கற்றுக் கொள்வோம்!

நம்மில் ( இளைஞர்கள் ) பலரும் பொருளாதாரத்தின் ஒரு பக்கத்தினை ( அதாவது , வளர்ச்சி அல்லது அதி வேக வளர்ச்சி ) மட்டுமே இது வரை பார்த்து வந்திருக்கிறோம் . இப்போது மறுபக்கமும் ( அதாவது தேக்கம் அல்லது வீழ்ச்சி ) பார்க்க நேரிடும் நிலை உருவாக வாய்ப்பு உள்ளது . இது வரை , நாம் வருங்காலம் பற்றிய கவலை மற்றும் தேவை இல்லாத , செலவுகள் ( இது வரை வருமானத்திற்கு மிகக் கீழே இருந்தது ) குறைக்க வேண்டிய அவசியம் இல்லாத ஒரு சூழலில் வாழ்ந்து வந்திருககிறோம் . இப்போதோ , பொருளாதார வீழ்ச்சி ( குறைந்த பட்சம் தேக்கம் ) நம் கண் முன்னே பயமுறுத்தி கொண்டு இருக்கிறது . வருமானம் பெருமளவு அதிகரிக்காத அதே சமயத்தில் , செலவுகள் நாளுக்கு நாள் மேல் செல்லும் வாய்ப்பு ( உபயம் - பண வீக்கம் ) உருவாகி உள்ளது . இவ்வாறான சூழலில் நாம் என்ன செய்ய வேண்டும் ? என்னுடைய நண்பர் ஒருவர் கூறினார் . நாம் இப்போது நமது பெற்றோரின் வாழ்க்கை முறையிலிருந்து சிலவற்றைக் கற்றுக் கொள்ள வேண்டும் . முதலாவது Contented Life Style. அதாவது , அதிகம் ஆசைப் படாத வாழ்வு நெறி . ...