Skip to main content

தீபாவளி - சொந்த ஊரிலும் வந்த ஊரிலும்




இப்போது, மின்னஞ்சல் வட்டாரங்களில் அதிகம் உலா வரும் ஒரு நகைச்சுவை கலந்த (உள்ளூருக்கு வருவதற்கான) அழைப்பிதழ் கீழே.







இதிலுள்ள படி இந்த பண்டிகைக்கு, சொந்த ஊர் சென்றவர்கள் தன் உறவினர் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து தீபாவளியைச் சிறப்பாக கொண்டாட எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.


சில பல காரணங்களினால், இது போன்ற தருணங்களில் தனது சொந்த ஊருக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்காத என் போன்ற சிலருக்காக இங்கே சில கருத்துகள்.


எவ்வளவு சாப்பிட்டாலும் கம்மி என்று சொல்லும் அம்மாவின் அன்பு கலந்த சாப்பாடு, எவ்வளவு தாமதமாக வந்தாலும் தூங்காமல் காத்திருக்கும் அப்பாவிடம் இன்னமும் வாங்கும் திட்டு , உறவினர் வீட்டுக்கு அடிக்கும் விசிட்கள் மற்றும் நண்பருடன் பார்க்கும் தீபாவளி ரிலீஸ். இது மட்டுமல்ல, இளமையின் வசந்த காலங்களை நினைவூட்டும் உள்ளூர் பகுதிகள். இவை அனைத்தும் பண்டிகை காலங்களில், ஊருக்கு செல்லாததால் ஏற்படும் ஈடு செய்ய முடியாத சில இழப்புகள்.

இப்போது, என்ன செய்ய முடியும் நம்மால்?


அடி வாங்கினாலும் அடுத்த நிமிடம் மறந்து சிரிக்கும் ஒரு குழந்தையின் மனதை தீபாவளி முடியும் வரை கொஞ்சம் கடன் வாங்கி கொள்ளுங்கள். கடன் வாங்கிய மனதில், இப்போது பணி நிமித்தமாக தங்கி இருக்கக் கூடிய பகுதியை தனியாக சுற்றிப் பார்க்கும் ஒரு பொருட்காட்சியாக ஏற்றிக் கொள்ளுங்கள். திறந்த மனதோடு வேடிக்கை பாருங்கள் மேலும் அங்கு நடைபெறும் தீபாவளிக் கொண்டாட்டங்களில் (எத்தகையதாக இருந்தாலும்) முழு மனதோடு கலந்து கொள்ளுங்கள்.


உதாரணமாக, தீபாவளி எப்போது வரும் என்று பல நாட்கள் காத்திருந்து விட்டு, தீபாவளியன்று மதியத்திற்கு மேல், தீபாவளி முடியப் போகிறதே என்று கவலையும் அடுத்த தீபாவளி எப்போது வரும் என்ற ஏக்கமும் சிறு வயதில் கொண்டிருந்தவன் நான். ஆனால் நான் இப்போது உள்ள பகுதியிலோ மூன்று நாட்கள் தீபாவளி கொண்டாடப் படுகிறது. நம்மூரின் தீபாவளியையும் சேர்த்து கொள்ளும் பட்சத்தில், என்னால் (மனம் மட்டும் இருந்தால் போதும்) நான்கு நாட்கள் தீபாவளி கொண்டாட முடியும்.

ஆகவே நண்பர்களே, யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற மனப்பான்மையுடன் இந்த தீபாவளியை எங்கிருந்தாலும் இனிதாக கொண்டாடுவோம்.



தீபாவளி நல்வாழ்த்துக்கள்




Comments

Maximum India said…
Thank You Babu.

Wish you a great Deepavali
Karthik said…
Happy Deepavali!
:)
Maximum India said…
Thank You Karthik

Wish You a Great Deepavali
தீபாவளிக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

எங்கூரில் பத்துக் கொண்டாட்டம்.

3 முடிஞ்சுருச்சு. ஏழு மிச்சம் இருக்கு:-)
Anonymous said…
I wish you great deepavali
Anonymous said…
I wish you great deepavali
Maximum India said…
Dear Thulasi Gopal and Rajagopal

Wish you very happy deepavali
KARTHIK said…
// அடி வாங்கினாலும் அடுத்த நிமிடம் மறந்து சிரிக்கும் ஒரு குழந்தையின் மனதை தீபாவளி முடியும் வரை கொஞ்சம் கடன் வாங்கி கொள்ளுங்கள்.//

சரிதான்

// நம்மூரின் தீபாவளியையும் சேர்த்து கொள்ளும் பட்சத்தில், என்னால் (மனம் மட்டும் இருந்தால் போதும்) நான்கு நாட்கள் தீபாவளி கொண்டாட முடியும்.//

அப்போ உங்க்களுக்கு இன்னைக்குத்தான்
தீபாவளி நல்வாழ்த்துக்கள்

Popular posts from this blog

NHPC நிறுவன பங்கு வெளியீடு (IPO) - முதலீடு செய்யலாமா?

வெகு நாட்களுக்கு பிறகு ஒரு அரசு நிறுவனத்தின் அதுவும் ஒரு மினி-ரத்னா தகுதி கொண்ட ஒரு பெரிய நிறுவனத்தின் பங்குகள் சந்தையில் புதிதாக வெளியிடப் பட உள்ளன. இந்த நிறுவனத்தைப் பற்றியும் ]பங்கின் விலை நிர்ணயம் பற்றியும் சில தகவல்கள் பகிர்தலுக்காக இங்கே. NHPC அதாவது தேசிய நீர்மின் உற்பத்தி நிறுவனம் 1975 ஆம் ஆண்டு நாட்டின் நீர்சக்தியை திறம்பட உபயோகிப்பதற்கான நோக்கத்துடன் உருவாக்கப் பட்டது. இந்த நிறுவனம் இது வரை 13 மின் உற்பத்தி நிலையங்களை அமைத்து சுமார் 5100 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி திறன் பெற்றுள்ளது. தற்போது 11 மின் உற்பத்தி நிலையங்களை புதிதாக அமைத்து வருவதன் மூலம் இந்த நிறுவனம் இன்னும் சில ஆண்டுகளில் சுமார் 4600 மெகாவாட் அளவுக்கு கூடுதலாக மின் உற்பத்தி திறனை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்க படுகிறது. இந்த பதினொரு மின் நிலையங்களில் ஏழு நிலையங்களின் மூலம் மட்டும் சுமார் 3240 மெகாவாட் அளவுக்கான மின்சாரம் பெப்ரவரி 2011 ஆம் ஆண்டுக்குள் உற்பத்தி செய்ய முடியும் என்றும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிறுவனம் இப்போது சுமார் 168 கோடி பங்குகளை ஏலக்கணக்கில் (BOOK BUILDING) சந்தையில் வெளியிடுகி...

இங்கும் அங்கும் பாதை உண்டு. இதில் நீ எந்த பக்கம்?

சென்ற வாரம் 8350 என்ற எதிர்ப்பு நிலையை தாண்டிய போதும், நிப்டியால் முழுமையான வெற்றியை பெற முடிய வில்லை. 8350 என்ற நிலையின் அருகிலேயே இன்னும் நிலை பெற்றுள்ளது. உலக சந்தைகளின் போக்கினையொட்டி இந்த வாரம் 8350 என்ற எதிர்ப்பு நிலையை முழுமையாக முறியடிக்கின்றதா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும். வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். நன்றி.

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...