Skip to main content

தீபாவளி - சொந்த ஊரிலும் வந்த ஊரிலும்




இப்போது, மின்னஞ்சல் வட்டாரங்களில் அதிகம் உலா வரும் ஒரு நகைச்சுவை கலந்த (உள்ளூருக்கு வருவதற்கான) அழைப்பிதழ் கீழே.







இதிலுள்ள படி இந்த பண்டிகைக்கு, சொந்த ஊர் சென்றவர்கள் தன் உறவினர் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து தீபாவளியைச் சிறப்பாக கொண்டாட எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.


சில பல காரணங்களினால், இது போன்ற தருணங்களில் தனது சொந்த ஊருக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்காத என் போன்ற சிலருக்காக இங்கே சில கருத்துகள்.


எவ்வளவு சாப்பிட்டாலும் கம்மி என்று சொல்லும் அம்மாவின் அன்பு கலந்த சாப்பாடு, எவ்வளவு தாமதமாக வந்தாலும் தூங்காமல் காத்திருக்கும் அப்பாவிடம் இன்னமும் வாங்கும் திட்டு , உறவினர் வீட்டுக்கு அடிக்கும் விசிட்கள் மற்றும் நண்பருடன் பார்க்கும் தீபாவளி ரிலீஸ். இது மட்டுமல்ல, இளமையின் வசந்த காலங்களை நினைவூட்டும் உள்ளூர் பகுதிகள். இவை அனைத்தும் பண்டிகை காலங்களில், ஊருக்கு செல்லாததால் ஏற்படும் ஈடு செய்ய முடியாத சில இழப்புகள்.

இப்போது, என்ன செய்ய முடியும் நம்மால்?


அடி வாங்கினாலும் அடுத்த நிமிடம் மறந்து சிரிக்கும் ஒரு குழந்தையின் மனதை தீபாவளி முடியும் வரை கொஞ்சம் கடன் வாங்கி கொள்ளுங்கள். கடன் வாங்கிய மனதில், இப்போது பணி நிமித்தமாக தங்கி இருக்கக் கூடிய பகுதியை தனியாக சுற்றிப் பார்க்கும் ஒரு பொருட்காட்சியாக ஏற்றிக் கொள்ளுங்கள். திறந்த மனதோடு வேடிக்கை பாருங்கள் மேலும் அங்கு நடைபெறும் தீபாவளிக் கொண்டாட்டங்களில் (எத்தகையதாக இருந்தாலும்) முழு மனதோடு கலந்து கொள்ளுங்கள்.


உதாரணமாக, தீபாவளி எப்போது வரும் என்று பல நாட்கள் காத்திருந்து விட்டு, தீபாவளியன்று மதியத்திற்கு மேல், தீபாவளி முடியப் போகிறதே என்று கவலையும் அடுத்த தீபாவளி எப்போது வரும் என்ற ஏக்கமும் சிறு வயதில் கொண்டிருந்தவன் நான். ஆனால் நான் இப்போது உள்ள பகுதியிலோ மூன்று நாட்கள் தீபாவளி கொண்டாடப் படுகிறது. நம்மூரின் தீபாவளியையும் சேர்த்து கொள்ளும் பட்சத்தில், என்னால் (மனம் மட்டும் இருந்தால் போதும்) நான்கு நாட்கள் தீபாவளி கொண்டாட முடியும்.

ஆகவே நண்பர்களே, யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற மனப்பான்மையுடன் இந்த தீபாவளியை எங்கிருந்தாலும் இனிதாக கொண்டாடுவோம்.



தீபாவளி நல்வாழ்த்துக்கள்




Comments

Maximum India said…
Thank You Babu.

Wish you a great Deepavali
Karthik said…
Happy Deepavali!
:)
Maximum India said…
Thank You Karthik

Wish You a Great Deepavali
தீபாவளிக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

எங்கூரில் பத்துக் கொண்டாட்டம்.

3 முடிஞ்சுருச்சு. ஏழு மிச்சம் இருக்கு:-)
Anonymous said…
I wish you great deepavali
Anonymous said…
I wish you great deepavali
Maximum India said…
Dear Thulasi Gopal and Rajagopal

Wish you very happy deepavali
KARTHIK said…
// அடி வாங்கினாலும் அடுத்த நிமிடம் மறந்து சிரிக்கும் ஒரு குழந்தையின் மனதை தீபாவளி முடியும் வரை கொஞ்சம் கடன் வாங்கி கொள்ளுங்கள்.//

சரிதான்

// நம்மூரின் தீபாவளியையும் சேர்த்து கொள்ளும் பட்சத்தில், என்னால் (மனம் மட்டும் இருந்தால் போதும்) நான்கு நாட்கள் தீபாவளி கொண்டாட முடியும்.//

அப்போ உங்க்களுக்கு இன்னைக்குத்தான்
தீபாவளி நல்வாழ்த்துக்கள்

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

தீவிரவாதிகளை வென்ற கதை - இந்திய கமாண்டோவின் விளக்கம்

நேற்று ஒரு தீவிரவாதி பிடிப் பட்ட கதை பார்த்தோம். இன்று தாஜ் ஹோட்டலில் எவ்வாறு நான்கு தீவிரவாதிகள் ஒழிக்கப் பட்டனர் என்று விளக்கும் இந்திய கமாண்டோவின் விளக்கத்தை பார்ப்போம். முதலில் இந்தியா கமாண்டோக்கள் தாஜ் ஹோட்டல் வந்த கதை புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் மும்பையை பயங்கரவாதம் தாக்கியது. அப்போது கேரளாவில் இருந்த மகாராஷ்டிர முதல்வர் மும்பை வரவும் இந்த சூழ்நிலையின் பயங்கரத்தையும் முழுமையாக உணர்ந்துக் கொள்ளவும் 90 நிமிடம் பிடித்தது .பின்னர் 11.00 அளவில் மத்திய அரசிற்கு போன் பேசிய முதல்வர் கோரியது 200 கமாண்டோக்களை. உடனே அந்நேரத்தில் தூங்கி கொண்டிருந்த இந்திய கமாண்டோக்கள் எழுப்பப் பட்டனர். அவர்கள் மும்பை வரத் தயாரான போதுதான் புரிந்தது, அவ்வளவு பேரை மும்பை கொண்டுவர தேவையான சிறப்பு விமானம் சண்டிகரில் உள்ளது என்று. உடனே அந்த விமானியையும் தூக்கத்தில் இருந்து எழுப்பி தயார் படுத்தி டெல்லியிலிருந்து கமாண்டோக்கள் மும்பை வந்த போது நேரம் காலை 5.25 மணி. அவர்கள் தாஜ் ஹோட்டலுக்கு கொண்டு வரப்பட்டு திட்டம் தயாரிக்கப் பட்டு அவர்கள் தாஜ் ஹோட்டலுக்குள் நுழைந்த போது நேரம் காலை 7.00 மணி. அதாவது மும்பை தாக்கப் ப...

கம்ப்யூட்டர் கட்சியும் கால்குலேட்டர் கட்சியும்!

மத்திய கல்வி அமைச்சர் கபில் சிபல் இந்தியா முழுவதும் அனைவரும் தாய்மொழியுடன் ஹிந்தியும் படிக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்துள்ளார். இவ்வாறு அனைவரும் ஹிந்தி படிப்பதன் மூலம் நாட்டில் ஒருமைப்பாடு ஏற்படுவதுடன் ஹிந்தியை ஆங்கிலம் போன்று ஒரு "அறிவு மொழியாக (lingua franca)" மாற்ற முடியும் என்றும் கூறியுள்ளார். இந்த கருத்தின் மீது பதிவுலகில் ஏராளமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆங்கிலம் மட்டுமே போதும் என்று ஒரு கட்சியும், ஆங்கிலம் வாசலாக இருக்கும் போது ஹிந்தி ஒரு சன்னலாக இருந்து விட்டு போகட்டுமே என்று இன்னொரு கட்சியும் விவாதித்து வருகின்றன. ஹிந்தி எதிர்ப்பு என்பது எப்போதுமே ஒரு உணர்வு பூர்வமான விஷயமாகவே பலராலும் கருதப் பட்டாலும், அதற்கு அறிவு பூர்வமான, சரித்திர பூர்வமான சில அடிப்படைகள் உண்டு. ஹிந்தி திணிப்பு மற்றும் ஹிந்தி எதிர்ப்பு பற்றி எனக்கு தெரிந்த சில கருத்துக்களை இங்கு ஒரு புனைவு வடிவில் அளிக்க முயற்சிக்கிறேன். இப்போது புனைவு ! ஒரு காலத்தில் பரதம்பட்டி என்ற ஒரு கிராமம் இருந்ததாம். அங்கு பல ஆண்டுகள் வரை ஆட்சி செய்து வந்த துரை மகாராஜா ஒரு காலத்தில், அந்த கிராமத்தை ஜனநாயக ...