Skip to main content

மனக் கணக்கியல்

பொதுவாக நிறுவனங்களும் அரசாங்கமும் தமது வரவு செலவு கணக்குகளை வகைப் படுத்துவதற்காக சில கணக்கியல் கொள்கைகளை (Accounting Policies) பின்பற்றி வருகின்றன. இதைப் போலவே, மனித மனம் கூட ஒவ்வொரு வரவு செலவினையும் சில பிரிவுகளாக பிரித்து வகைப்படுத்தி வருகிறது. புற உலகில் உள்ள பணத்திற்கான உண்மையான மதிப்பிற்கும் (Actual Value) மனதில் அதே அளவில் உள்ள பணத்திற்கான புரிந்துணரும் மதிப்பிற்கும் (Perceived Value) பெரும் வேறுபாடு உள்ளது.

உதாரணமாக, சராசரி வருமானம் உள்ள ஒருவர் சுமார் 1000 ரூபாய் செலவு செய்து, ஒரு இசை நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்குகிறார். அந்த நிகழ்ச்சிக்கு போகும் வழியில் டிக்கெட் தவறி விடும் பட்சத்தில் மீண்டும் ஒருமுறை 1000 ரூபாய் செலவு செய்து புதிய டிக்கெட் வாங்க தயங்குவார். அதே சமயத்தில், அவரே முதன் முறையாக டிக்கெட் வாங்க செல்லும் போது, கைப்பையில் உள்ள பணத்தில் 1000 ரூபாய் தவற விட்டிருந்தாலும் கூட டிக்கெட்டுகளை வாங்குவார் என மனவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். காரணம், இரண்டு முறையிலும் இழந்த பணத்தின் உண்மையான (புற) மதிப்பு ஒன்றுதான் (ரூ.1000/-) என்றாலும் ஒவ்வொரு வகையிலும், இழந்த பணத்திற்கு மனம் கொடுக்கும் மதிப்பு வேறு. இத்தகைய மன கணக்கியல் பற்றிய சிறு அறிமுகமும் அதனை புரிந்து கொள்வதினால் உள்ள சில பயன்கள் பற்றியும் இங்கு விவாதிப்போம்.

சம்பள வருமானமும் இதர வருமானமும்

பொதுவாக மனித மனம், சம்பளப் பணத்தினை உழைப்பின் ஊதியமாக கருதுகிறது. எனவே அந்த பணத்திற்கு எப்போதுமே சற்று அதிக மரியாதைதான் (Sacred Money). அதே சமயத்தில், உழைப்பின்றி (சில சமயங்களில் எதிர்பாராமல்) வந்த பணத்திற்கு (உதாரணமாக அன்பளிப்புகள், மூதாதையர் சொத்து முதலியவை) சற்று மரியாதை குறைவுதான். இது போன்ற சமயங்களில் பணம் வந்த வேகத்திலேயே காணாமல் போகிறது. அதிலும் சிறிய வகையிலான வரவுகள் அதி விரைவாகவே செலவு செய்யப்படுகின்றன.

மூதாதையர் சொத்து விஷயத்தில் கூட சில வேறுபாடான கொள்கைகளை மனம் வைத்திருக்கிறது. அதாவது, சொத்தினைக் கொடுப்பவர், மிகவும் சிரமப்பட்டு சொத்து சேர்த்திருந்தால் அந்த பணத்திற்கு அதிக மரியாதை. அல்லது ஒரு செலவாளியிடம் இருந்து சொத்துப் பணம் வந்திருந்தால் அதற்கு வேறு வித மரியாதை.

வரவுக் கொள்கைகளைப் பார்த்தோம். இப்போது செலவுக் கொள்கைகள்.

ஒரு மிகப் பெரிய செலவு செய்யும் போது (கார் அல்லது வீடு) அதிகப்படியான துணைச் செலவுகளைச் செய்ய மனம் தயங்குவதில்லை. உதாரணமாக, காருக்கு அதிக செலவினாலான சீட் கவர் அல்லது வீட்டில் மேலை நாகரிக குளியலறை அமைப்பது போன்றவை. அதே அளவிலான செலவு சாதாரண நேரங்களில் செய்ய மனம் தயங்கும்.

மேலும், பெரிய செலவினங்களில் (பிரிட்ஜ் வாஷிங் மிஷன் போன்றவை) சிக்கனம் செய்ய பல கடைகள் ஏறி இறங்கும் மக்கள் பல முறை செய்யும் சிறிய செலவுகளில் (மாதந்திர செலவினங்கள்) சிக்கனம் பிடிக்க முயற்சி செய்வதில்லை.

ரொக்கமாக (cash) செலவு செய்யும் போது ஆடம்பரச் செலவுகளை தவிர்க்க எண்ணும் மனம் கடன் அட்டைகளை (credit card) அதே வகையான செலவுகளுக்காக உபயோகிக்கும் போது அவ்வளவு சிந்திப்பதில்லை.

அளவு அறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல்
இல்லாகித் தோன்றக் கெடும்

எனும் குறளுக்கு ஏற்ப எவ்வளவு வருமானம் இருந்தாலும் சிறந்த நிதி திட்டம் இல்லாவிடில் காலப் போக்கில் ஒருவர் சிரமப் பட வேண்டியிருக்கும். எனவே, மன கணக்கியலைப் புரிந்து கொள்வதும் மனதிற்கு சில பயிற்சிகள் அளிப்பதும் நல்லது.

முதலில் வரவு கணக்கியல்.

எத்தகைய வருவாயாக இருந்தாலும் அவற்றை ஈட்டிய பணமாகவே கொள்வது நல்லது. There is no free Money. அதே போல, எதிர்பாராமல் வந்த பணத்தினை என்ன செய்வது என்று உடனே முடிவெடுக்காமல், அந்த பணத்தினை குறுகிய கால வைப்பு தொகையாக வங்கியில் இடுவது நல்லது. சிறிது கால யோசனைக்கு பின்னர் அந்த பணத்தினை என்ன செய்வது என முடிவெடுக்கலாம்.

இப்போது செலவு கணக்கியல்

பெரிய செலவுகளின் உடன் வரும் அதே சமயத்தில் உடனடி அவசியமில்லாத சில ஆடம்பர செலவுகளை தள்ளிப் போடுவது நல்லது. மேலும் கடன் அட்டையினை மிக கவனமாக உபயோகப் படுத்துவதும் அதனை ஒரு கடன் பெறும் சாதனமாக பயன் படுத்துவதை தவிர்ப்பதும் நல்லது.

நன்றி.

Comments

மிக அருமை

இது போன்ற மேலும் பலப்பல முத்துக்களை எதிர் நோக்குகிறோம்.
சரியாக சொன்னீர்கள்.
அன்பளிப்பை போல கடனையும் நினைத்ததால் அமெரிக்கா இன்று பொருளாதாரத்தில் தள்ளாடுகிறது
Maximum India said…
Dear Nerkuppai Sir

Thank You for the comments
Maximum India said…
Dear Valpaiyan

Rightly said

Thank You for comments

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

தீவிரவாதிகளை வென்ற கதை - இந்திய கமாண்டோவின் விளக்கம்

நேற்று ஒரு தீவிரவாதி பிடிப் பட்ட கதை பார்த்தோம். இன்று தாஜ் ஹோட்டலில் எவ்வாறு நான்கு தீவிரவாதிகள் ஒழிக்கப் பட்டனர் என்று விளக்கும் இந்திய கமாண்டோவின் விளக்கத்தை பார்ப்போம். முதலில் இந்தியா கமாண்டோக்கள் தாஜ் ஹோட்டல் வந்த கதை புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் மும்பையை பயங்கரவாதம் தாக்கியது. அப்போது கேரளாவில் இருந்த மகாராஷ்டிர முதல்வர் மும்பை வரவும் இந்த சூழ்நிலையின் பயங்கரத்தையும் முழுமையாக உணர்ந்துக் கொள்ளவும் 90 நிமிடம் பிடித்தது .பின்னர் 11.00 அளவில் மத்திய அரசிற்கு போன் பேசிய முதல்வர் கோரியது 200 கமாண்டோக்களை. உடனே அந்நேரத்தில் தூங்கி கொண்டிருந்த இந்திய கமாண்டோக்கள் எழுப்பப் பட்டனர். அவர்கள் மும்பை வரத் தயாரான போதுதான் புரிந்தது, அவ்வளவு பேரை மும்பை கொண்டுவர தேவையான சிறப்பு விமானம் சண்டிகரில் உள்ளது என்று. உடனே அந்த விமானியையும் தூக்கத்தில் இருந்து எழுப்பி தயார் படுத்தி டெல்லியிலிருந்து கமாண்டோக்கள் மும்பை வந்த போது நேரம் காலை 5.25 மணி. அவர்கள் தாஜ் ஹோட்டலுக்கு கொண்டு வரப்பட்டு திட்டம் தயாரிக்கப் பட்டு அவர்கள் தாஜ் ஹோட்டலுக்குள் நுழைந்த போது நேரம் காலை 7.00 மணி. அதாவது மும்பை தாக்கப் ப...

கம்ப்யூட்டர் கட்சியும் கால்குலேட்டர் கட்சியும்!

மத்திய கல்வி அமைச்சர் கபில் சிபல் இந்தியா முழுவதும் அனைவரும் தாய்மொழியுடன் ஹிந்தியும் படிக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்துள்ளார். இவ்வாறு அனைவரும் ஹிந்தி படிப்பதன் மூலம் நாட்டில் ஒருமைப்பாடு ஏற்படுவதுடன் ஹிந்தியை ஆங்கிலம் போன்று ஒரு "அறிவு மொழியாக (lingua franca)" மாற்ற முடியும் என்றும் கூறியுள்ளார். இந்த கருத்தின் மீது பதிவுலகில் ஏராளமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆங்கிலம் மட்டுமே போதும் என்று ஒரு கட்சியும், ஆங்கிலம் வாசலாக இருக்கும் போது ஹிந்தி ஒரு சன்னலாக இருந்து விட்டு போகட்டுமே என்று இன்னொரு கட்சியும் விவாதித்து வருகின்றன. ஹிந்தி எதிர்ப்பு என்பது எப்போதுமே ஒரு உணர்வு பூர்வமான விஷயமாகவே பலராலும் கருதப் பட்டாலும், அதற்கு அறிவு பூர்வமான, சரித்திர பூர்வமான சில அடிப்படைகள் உண்டு. ஹிந்தி திணிப்பு மற்றும் ஹிந்தி எதிர்ப்பு பற்றி எனக்கு தெரிந்த சில கருத்துக்களை இங்கு ஒரு புனைவு வடிவில் அளிக்க முயற்சிக்கிறேன். இப்போது புனைவு ! ஒரு காலத்தில் பரதம்பட்டி என்ற ஒரு கிராமம் இருந்ததாம். அங்கு பல ஆண்டுகள் வரை ஆட்சி செய்து வந்த துரை மகாராஜா ஒரு காலத்தில், அந்த கிராமத்தை ஜனநாயக ...