Skip to main content

கருத்துக் கணிப்பு நடத்துபவர்களுக்கு ஒரு கோரிக்கை.


இந்த வாரம், என்னால் பெரிது மதிக்கப் பட்டு வந்த, சென்னையைச் சேர்ந்த ஒரு கல்லுரியின் கருத்துக் கணிப்பு தலைப்பை (தமிழர்களுக்கு பிடித்த சினிமா நடிகர் யார்?) செய்தி தாள்களில் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.


ஊடகங்கள் மட்டுமே அரசியல் தலைவர்கள், சினிமா நடிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் ஆகியோருக்கு பெருமளவிற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன என்று எண்ணியிருந்த போது, சிறந்த கருத்துகளை மக்களுக்கு சொல்ல வேண்டிய சில நல்ல கல்லூரிகள் கூட ஊடகங்களின் பாணியை பின் பற்றுவது கவலை அளிக்கக் கூடிய விஷயமாக இருக்கிறது.

மக்கள் விரும்புகிறார்கள் என்பதினால்தான் இத்தகைய விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பவர்களுக்கு ஒரு கேள்வி. உங்கள் குழந்தைகள் விரும்புகிறார்கள் என்பதற்காக, சுகாதாரமற்ற, உடலுக்கு ஒவ்வாத உணவுகளைக் கொடுப்பீர்களா?

மேலும், அரசியல் தலைவர்கள், சினிமா நடிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் ஆகியோர் மிக அதிக அரசியல் பலம், மக்கள் செல்வாக்கு, பதவி மற்றும் பண பலம் கொண்டவர்கள். அவர்கள், நம்மைப் போன்ற சாமான்யர்கள், கவலை மற்றும் அக்கறை காட்ட தேவை இல்லாத உயரத்தில் இருப்பவர்கள். நாம் நம்மைப் பற்றியும், நம்மையும் விட கீழே, அதிகம் சுரண்டப் பட்ட (படுகின்ற) மக்களைப் பற்றி மட்டும் கவலைப் பட்டால் போதுமானது.

அது மட்டுமல்ல, இன்றைய பெரும்பாலான கருத்துக் கணிப்புகள், பாரபட்சமானவையாகவும், ஒரு குறிப்பிட்ட தரப்பினரின் செல்வாக்கை உயர்த்துவதற்காகவும் மட்டுமே நடத்தப் படுகின்றன. மற்றவை கூட, மக்களின் வெளிமனதைப் படிக்க உதவும் ஒரு தொழிற் நுட்ப வழி முறையாகவே இருக்கின்றன. சமூக அக்கறைக் கொண்ட கருத்துக் கணிப்புகளை சிலர் நடத்தினாலும் அவற்றை ஊடகங்கள் வெளிக்கொணர முன் வருவதில்லை

சமூக அக்கறை கொண்ட ஒரு கருத்துக் கணிப்பு என்பது, அன்றாட சமூக பொருளாதார பிரச்சினைகளினால் ஒட்டடை அண்டிப் போன சாதாரண மக்களின் இதயங்களில் ஒளிந்து கொண்டிருக்கும் பல நல்ல விஷயங்களை வெளிக் கொண்டு வருவதே ஆகும். அது மட்டுமல்ல, ஒரு சிறந்த கருத்துக் கணிப்பினால், மக்களின் ஆழ்மனதில் சிறந்த கருத்துகளை விதைக்கவும் முடியும்.

சமூக அக்கறைக் கொண்ட கருத்துக் கணிப்புகளுக்கான, சில உதாரணங்கள் கீழே.

இந்திய மக்களின் அடிப்படை தேவை?

௧. தொடக்கக் கல்வி.

௨. பொது சுகாதாரம்.

௩.சுகாதாரமான குடிநீர் வசதி.

௪.வறுமை நீக்கம்.

இந்திய அரசாங்கம் உடனடியாக தீர்க்க வேண்டிய பிரச்சினை?

௧. இன/மதக் கலவரங்கள்

௨. தீவிர வாதம்.

௩. பிரிவினை வாதம்

௪. சமூக விரோத நடவடிக்கைகள்

விவசாயிகள் வாட்டத்திற்கு முக்கிய காரணம்?

௧. போதுமான கடன் வசதி இல்லை.

௨. விளை பொருட்களுக்கு சரியான விலை இல்லை.

௩. சேமிக்க போதுமான வசதி இல்லை.

௪. சந்தைக்கு கொண்டு போக வசதிகள் இல்லை.

தொழிற் வளர்ச்சிக்கு பெரும் தடையானவை?

௧. மின் பற்றாக்குறை

௨. கட்டுமான வசதிகள் குறைபாடு.

௩. அரசாங்க ஊழல்.

௪. போக்குவரத்து வசதி குறைவு.


மின் வெட்டை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

௧. புதிய மின் உற்பத்தி ஆலைகள்

௨. மின் திருட்டு மற்றும் இழப்புகளை தவிர்த்தல்

௩. மான்ய உதவியுடன் மரபு சாரா எரிசக்தி

௪. சிறந்த விநியோக முறை.


மேலும் பல சொல்லிக் கொண்டே போகலாம். இந்த விஷயங்களுக்காக கருத்துக் கணிப்பு நடத்த முன் வருவோரை வாழ்த்தி வரவேற்போம்.


இப்படி உடனடியாக அக்கறை காட்ட வேண்டிய விஷயங்கள் பல இருக்கும் போது, பளபளக்கும் உணவு வகைகளை, நிலைக் கண்ணாடியில் காட்டி, நம்மை பசி மறக்கச் செய்யும் மோடி மஸ்தான் வேலையினை, சமூக பொறுப்பு உள்ள ஊடகங்கள் மற்றும் கல்லூரிகள் செய்ய வேண்டாம் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.


மேலும், மேற்குறிப்படப் பட்டவை தீர்க்க முடியாத பிரச்சினைகள் என்றும் அரசாங்கம் மட்டுமே கவனிக்க வேண்டிய (கவலை கொள்ள வேண்டிய ) பிரச்சினை என்பவர்க்கும் ஒரு செய்தி. சூரியன் மறையாத நாடு எனக் கருதப் பட்ட ஒரு நாட்டை நம்மை போன்ற அடிமை நாடு வெல்ல முடியாது என்று ஒரு நூற்றாண்டிற்கு முன்னர் இங்கே வாழ்ந்தவர்கள் (ஊடகங்கள் கூட) நினைத்திருந்தால் நமக்கு இன்று சுதந்திரம் இருக்காது.

சிந்திப்போம்


மீண்டும் சந்திப்போம்

Comments

Maximum India said…
Raghavan commented on your story 'கருத்துக் கணிப்பு நடத்துபவர்களுக்கு ஒரு கோரிக்கை.'

'நீங்கள் சொல்வதை படிக்க நன்றாக இருக்கின்றது. யார் செய்யப்போகின்றார்கள் என்பதுதான் புரியவில்லை.'

Here is the link to the story: http://www.tamilish.com/story/8750
Maximum India said…
Your hopes, dreams and aspirations are legitimate. They are trying to take you airborne, above the clouds, above the storms, if you only let them.



~ William James
A very nice thought. At the same time I am in agreement with maximumindia.

You gave your voice over this issue. let us see what happens???
Maximum India said…
Thank you for the comments

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

தீவிரவாதிகளை வென்ற கதை - இந்திய கமாண்டோவின் விளக்கம்

நேற்று ஒரு தீவிரவாதி பிடிப் பட்ட கதை பார்த்தோம். இன்று தாஜ் ஹோட்டலில் எவ்வாறு நான்கு தீவிரவாதிகள் ஒழிக்கப் பட்டனர் என்று விளக்கும் இந்திய கமாண்டோவின் விளக்கத்தை பார்ப்போம். முதலில் இந்தியா கமாண்டோக்கள் தாஜ் ஹோட்டல் வந்த கதை புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் மும்பையை பயங்கரவாதம் தாக்கியது. அப்போது கேரளாவில் இருந்த மகாராஷ்டிர முதல்வர் மும்பை வரவும் இந்த சூழ்நிலையின் பயங்கரத்தையும் முழுமையாக உணர்ந்துக் கொள்ளவும் 90 நிமிடம் பிடித்தது .பின்னர் 11.00 அளவில் மத்திய அரசிற்கு போன் பேசிய முதல்வர் கோரியது 200 கமாண்டோக்களை. உடனே அந்நேரத்தில் தூங்கி கொண்டிருந்த இந்திய கமாண்டோக்கள் எழுப்பப் பட்டனர். அவர்கள் மும்பை வரத் தயாரான போதுதான் புரிந்தது, அவ்வளவு பேரை மும்பை கொண்டுவர தேவையான சிறப்பு விமானம் சண்டிகரில் உள்ளது என்று. உடனே அந்த விமானியையும் தூக்கத்தில் இருந்து எழுப்பி தயார் படுத்தி டெல்லியிலிருந்து கமாண்டோக்கள் மும்பை வந்த போது நேரம் காலை 5.25 மணி. அவர்கள் தாஜ் ஹோட்டலுக்கு கொண்டு வரப்பட்டு திட்டம் தயாரிக்கப் பட்டு அவர்கள் தாஜ் ஹோட்டலுக்குள் நுழைந்த போது நேரம் காலை 7.00 மணி. அதாவது மும்பை தாக்கப் ப...

கம்ப்யூட்டர் கட்சியும் கால்குலேட்டர் கட்சியும்!

மத்திய கல்வி அமைச்சர் கபில் சிபல் இந்தியா முழுவதும் அனைவரும் தாய்மொழியுடன் ஹிந்தியும் படிக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்துள்ளார். இவ்வாறு அனைவரும் ஹிந்தி படிப்பதன் மூலம் நாட்டில் ஒருமைப்பாடு ஏற்படுவதுடன் ஹிந்தியை ஆங்கிலம் போன்று ஒரு "அறிவு மொழியாக (lingua franca)" மாற்ற முடியும் என்றும் கூறியுள்ளார். இந்த கருத்தின் மீது பதிவுலகில் ஏராளமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆங்கிலம் மட்டுமே போதும் என்று ஒரு கட்சியும், ஆங்கிலம் வாசலாக இருக்கும் போது ஹிந்தி ஒரு சன்னலாக இருந்து விட்டு போகட்டுமே என்று இன்னொரு கட்சியும் விவாதித்து வருகின்றன. ஹிந்தி எதிர்ப்பு என்பது எப்போதுமே ஒரு உணர்வு பூர்வமான விஷயமாகவே பலராலும் கருதப் பட்டாலும், அதற்கு அறிவு பூர்வமான, சரித்திர பூர்வமான சில அடிப்படைகள் உண்டு. ஹிந்தி திணிப்பு மற்றும் ஹிந்தி எதிர்ப்பு பற்றி எனக்கு தெரிந்த சில கருத்துக்களை இங்கு ஒரு புனைவு வடிவில் அளிக்க முயற்சிக்கிறேன். இப்போது புனைவு ! ஒரு காலத்தில் பரதம்பட்டி என்ற ஒரு கிராமம் இருந்ததாம். அங்கு பல ஆண்டுகள் வரை ஆட்சி செய்து வந்த துரை மகாராஜா ஒரு காலத்தில், அந்த கிராமத்தை ஜனநாயக ...