Skip to main content

மதச் சார்பின்மை - சொற்பொருள் மாற்றம் - ஒரு இலக்கண ஆராய்ச்சி

சொற்பொருளியலின் (Semantics) படி, ஒரு மொழியில் உள்ள சொற்கள், காலப் போக்கில், பல்வேறு காரணங்களினால், தமது வேர் பொருட்களை இழந்து, புதிய பொருட்களை பெறுகின்றன.




உதாரணமாக, ஒரு காலத்தில் உலோகங்களை பொதுவாக குறித்த பொன் என்ற சொல் தற்போது தங்கம் என்ற அர்த்தத்தில் வழங்கப் படுகிறது.




நாற்றம் என்ற சொல் மணம் என்ற தனது வேர் பொருளை இழந்து துர்மணம் என்ற புதிய பொருளைப் பெற்றுள்ளது.





இதே போல, கழகம், காமம், கோயில் போன்ற பல சொற்கள் காலப் போக்கில் வேர் பொருளை இழந்து புதிய பொருளிலேயே உணரப் படுகின்றன.





எனக்கு வெகு நாட்களாக ஒரு சந்தேகம். மதச் சார்பின்மை எனும் சொல் கூட இதே போல தனது வேர் பொருளை காலப் போக்கில் இழந்து, இன்றைக்கு வேறு அர்த்தத்தில் வழங்கப் படுகின்றதோ என்று.






இந்திய அரசியல் சட்டப் படி, இந்தியா ஒரு மதச் சார்பற்ற நாடு.






இதன் அடிப்படையில், அரசியல் சட்ட வல்லுனர்கள் மதச் சார்பின்மைக்கு சில விளக்கங்கள் அளிக்கிறார்கள்.






அதாவது, மதச் சார்பின்மை என்பது அனைத்து மதங்களையும் சமமாகக் கருதுவது. மதத்தின் அடிப்படையில் வேறுபாடுகள் காணாமல் இருப்பது.






ஆனால், தற்போது மதச் சார்பின்மைக்கு நடைமுறை விளக்கம் என்ன?







இங்கே கொஞ்சம் அலசலாம்.




இன்றைய மதச் சார்பின்மை என்பது.



ஒரு குறிப்பிட்ட மதத்தில் உள்ள மூட நம்பிக்கைகளையும் பழமை வாதத்தினையும் சாடுவது.






மற்ற மதங்களில் உள்ள மூட நம்பிக்கைகளையும் பழமை வாதத்தினையும் கண்டு கொள்ளாமல் இருப்பது. முடிந்தால் ஆதரிப்பது. இன்னும் கூட முடிந்தால், இந்த விஷயங்களில் நீதி மன்றங்கள் தலையிடக் கூடாதென்று சட்டம் இயற்றச் சொல்வது.






ஒரு குறிப்பிட்ட மதத்தின் விழாக்களையும் கடவுளர்களையும் இழிவு படுத்துவது.




மற்ற மதங்களின் விழாக்களில் கலந்துக் கொள்வது. முடிந்தால், அவர்களின் இறையாளர்களைப் பற்றி புகழ்ந்து பேசுவது.






ஒரு குறிப்பிட்ட மதத்தின் கடவுளர்களை பற்றி இழிவாக எழுதுபவர்களையும் படம் வரைபவர்களையும் கண்டித்தால் மதவாதம் என்பது. .






மற்ற மதங்களின் இறையாளர்களைப் பற்றி சாதாரணமாகக் கூட பேசவோ படம் வரையவோ கூடாதென்று மிரட்டினால் கண்டுக் கொள்ளாமல் இருப்பது.






ஒரு குறிப்பிட்ட மதத்தின் பாதுகாவலர் என்று சொல்லிக் கொள்ளும் ஒரு கட்சியினை மதவாதக் கட்சி என்பது. அந்த கட்சி ஆட்சிக்கு வராமல் தடுப்பதற்காக மற்ற மதங்களின் பிரதிநிதிகள் என்று கூறிக் கொள்ளும் கட்சிகளுடன் கூட்டணி வைப்பது.






இன்னும் கூட ஒரு வேடிக்கையான விஷயம்.






மதச் சார்பற்றவர் என்று தம்மை சொல்லிக் கொள்பவர்கள் கூட (சில சமயங்களில் நாத்திகர் என்று சொல்லிக் கொள்பவர்கள் கூட) ஒரு விஷயத்தில் மதத்தினை சார்ந்து இருக்க வேண்டி இருக்கிறது.






ஒரு குறிப்பிட்ட மதத்தினைப் பற்றி தவறாக பேசுவதற்கு அதே மதத்தினை சேர்ந்தவராகப் பிறந்திருப்பது ஒரு கேடயமாக உபயோகப் படுகிறது. ஏனெனில், வேறு மதத்தினராகப் பிறந்து இருந்தாலோ அல்லது பின்னர், வேறு மதத்திற்கு மாறி இருந்தாலோ, அந்த குறிப்பிட்ட மதத்தினைப் பற்றி எந்த உரிமையில் தவறாகப் பேச முடியும்?






ஒரு வேளை, ஒருவர் தனது சொந்த மதம் என்ற உரிமையின் பேரிலோ அல்லது சொந்த மதத்தினர் மீது உள்ள அக்கறையினாலோ, அதிலுள்ள தவறுகளை களைய எண்ணி இருந்தால் , அவர் ஒரு மதச் சீர்திருத்த வாதி ஆகி விடுவாரே அன்றி மதச் சார்பற்றவாதி ஆக முடியுமா ?






இந்த நிலையில், உண்மையான மதச் சார்பின்மை என்பது என்னவாக இருக்க முடியும்?






மதம் என்பது ஒருவரின் தனிப் பட்ட விஷயம்.






தனிப் பட்ட உணர்வுகளை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.






மதம் என்பது அரசியலுக்கு சம்பந்தம் இல்லாத விஷயம்.






இந்தியர் அனைவரும் மதிக்க வேண்டியது இந்நாட்டின் அரசியல் சட்டம்.






அனைத்து மதத்தினைச் சேர்ந்தவரும் அரசியல் சட்டத்தின் முன் சமம்.






யாரையும் மதத்தின் பேரில் பிரித்துப் பார்க்க கூடாது.






மதக் கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகள் பொது நலனுக்கும் நாட்டிற்கும் விரோதமாக இருக்கக் கூடாது.






எந்த மதத்தினைச் சேர்ந்தவர் நாட்டிற்கு (பொது நலத்திற்கு ) விரோதமாக ஈடுபட்டாலும், மதத்தின் அடிப்படையில் நோக்காமல், அரசும், அரசியல் கட்சிகளும், மக்களும் நாட்டின் நலன் என்ற ஒரே குறிக்கோளுடன் செயல் பட வேண்டும்.






இப்படி இருந்தால் போதும், எந்த மதத்தினைச் சேர்ந்தவராக இருந்தாலும், ஆத்திகராகவோ நாத்திகராகவோ இருந்தாலும் கூட ஒருவரால் மதச் சார்பற்றவராக இருக்க முடியும்.






என் கருத்து இது. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?








நன்றி

Comments

Unknown said…
உங்கள் பதிப்பு வந்து ஒரு வாரம் ஆகி விட்டாலும் கமெண்ட் ஒன்றும் வரவில்லை: ஒருவேளை, தங்கள் வாசகர்களும் அரசியல்வதிகளைப்போல் மத சார்பின்மை போன்ற விஷயங்களைப் பற்றி தங்கள் கருத்துகளை தர விரும்பவில்லை போலும்.

ஒன்று , தமிழ் இலக்கண ஆராய்ச்சியின் நடுவே மத சார்பின்மை போன்ற கனமான சமூக விஷயங்களை விவாதிக்க இயலாது .
இரண்டு, மத சார்பின்மை மிக உயர்ந்த நோக்கம் தான் என்றாலும் பெரும்பான்மை மதத்தின் சாயல் நிச்சயம் இருக்கும்; அதை சிறுபான்மை மதத்தை சேர்ந்தவர்கள் யதார்த்தமாக எடுத்துக்கொண்டால் எந்த பிரச்னையும் இல்லை; ஆனால், ஆட்சியில் இருப்பவர்களும், ஊடகங்களும் தூக்கி வைத்து கொள்ளும் 'நடுநிலைவாதி' களும் பெரும்பான்மை மதத்தின் சிறு தவறுகளையும் பொறுத்து கொள்ளாமலும்
சிறுபான்மைவாதிகளின் வெளிப்படையான மதச் சார்பு மேலூன்றி இருக்கும் செயல்களை சகித்துக்கொண்டும் இருந்தாலும் அவ்வப்போது இந்த பிரச்னை தலை தூக்கத்தான் செய்யும். நம் நாட்டில் நடப்பது இது தான்.
'திருடனாக பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது' என எம்ஜீஆர் பாட்டு ஒன்று உண்டு; அதே போல் சிறுபான்மையினரும் பெரும்பான்மையினரும் தாமாக உணர்ந்து சேர்ந்து வாழாவிட்டால் இதை ஒன்றும் செய்ய முடியாது எனத் தோன்றுகிறது.
கபீஷ் said…
Excellent Post! Kudos to u

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

தீவிரவாதிகளை வென்ற கதை - இந்திய கமாண்டோவின் விளக்கம்

நேற்று ஒரு தீவிரவாதி பிடிப் பட்ட கதை பார்த்தோம். இன்று தாஜ் ஹோட்டலில் எவ்வாறு நான்கு தீவிரவாதிகள் ஒழிக்கப் பட்டனர் என்று விளக்கும் இந்திய கமாண்டோவின் விளக்கத்தை பார்ப்போம். முதலில் இந்தியா கமாண்டோக்கள் தாஜ் ஹோட்டல் வந்த கதை புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் மும்பையை பயங்கரவாதம் தாக்கியது. அப்போது கேரளாவில் இருந்த மகாராஷ்டிர முதல்வர் மும்பை வரவும் இந்த சூழ்நிலையின் பயங்கரத்தையும் முழுமையாக உணர்ந்துக் கொள்ளவும் 90 நிமிடம் பிடித்தது .பின்னர் 11.00 அளவில் மத்திய அரசிற்கு போன் பேசிய முதல்வர் கோரியது 200 கமாண்டோக்களை. உடனே அந்நேரத்தில் தூங்கி கொண்டிருந்த இந்திய கமாண்டோக்கள் எழுப்பப் பட்டனர். அவர்கள் மும்பை வரத் தயாரான போதுதான் புரிந்தது, அவ்வளவு பேரை மும்பை கொண்டுவர தேவையான சிறப்பு விமானம் சண்டிகரில் உள்ளது என்று. உடனே அந்த விமானியையும் தூக்கத்தில் இருந்து எழுப்பி தயார் படுத்தி டெல்லியிலிருந்து கமாண்டோக்கள் மும்பை வந்த போது நேரம் காலை 5.25 மணி. அவர்கள் தாஜ் ஹோட்டலுக்கு கொண்டு வரப்பட்டு திட்டம் தயாரிக்கப் பட்டு அவர்கள் தாஜ் ஹோட்டலுக்குள் நுழைந்த போது நேரம் காலை 7.00 மணி. அதாவது மும்பை தாக்கப் ப...

கம்ப்யூட்டர் கட்சியும் கால்குலேட்டர் கட்சியும்!

மத்திய கல்வி அமைச்சர் கபில் சிபல் இந்தியா முழுவதும் அனைவரும் தாய்மொழியுடன் ஹிந்தியும் படிக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்துள்ளார். இவ்வாறு அனைவரும் ஹிந்தி படிப்பதன் மூலம் நாட்டில் ஒருமைப்பாடு ஏற்படுவதுடன் ஹிந்தியை ஆங்கிலம் போன்று ஒரு "அறிவு மொழியாக (lingua franca)" மாற்ற முடியும் என்றும் கூறியுள்ளார். இந்த கருத்தின் மீது பதிவுலகில் ஏராளமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆங்கிலம் மட்டுமே போதும் என்று ஒரு கட்சியும், ஆங்கிலம் வாசலாக இருக்கும் போது ஹிந்தி ஒரு சன்னலாக இருந்து விட்டு போகட்டுமே என்று இன்னொரு கட்சியும் விவாதித்து வருகின்றன. ஹிந்தி எதிர்ப்பு என்பது எப்போதுமே ஒரு உணர்வு பூர்வமான விஷயமாகவே பலராலும் கருதப் பட்டாலும், அதற்கு அறிவு பூர்வமான, சரித்திர பூர்வமான சில அடிப்படைகள் உண்டு. ஹிந்தி திணிப்பு மற்றும் ஹிந்தி எதிர்ப்பு பற்றி எனக்கு தெரிந்த சில கருத்துக்களை இங்கு ஒரு புனைவு வடிவில் அளிக்க முயற்சிக்கிறேன். இப்போது புனைவு ! ஒரு காலத்தில் பரதம்பட்டி என்ற ஒரு கிராமம் இருந்ததாம். அங்கு பல ஆண்டுகள் வரை ஆட்சி செய்து வந்த துரை மகாராஜா ஒரு காலத்தில், அந்த கிராமத்தை ஜனநாயக ...