Skip to main content

கருத்துச் சுதந்திரம் இங்கே கொஞ்சம் வித்தியாசம்!

இன்போசிஸ் நிறுவனர் திரு.நாராயண மூர்த்தி, ஒரு முறை பல்கேரியாவில் ரயில் பயணம் மேற்கொண்ட பொழுது, ஒரு சக பயணியிடம், அந்நாட்டு அரசியல் பேசிய காரணத்தினால், 72 மணி நேரம் உணவின்றி சிறையில் வைக்கப் பட்டார்.

(வலை தளம்: தடம்">http://www.rediff.com/money/2007/may/28bspec.தடம்)

திரு.தருண் கண்ணா (Billion of Entrepreneurs), ஒரு முறை, சீனாவில், வலை தளங்களைப் பார்க்கும் போது, ஜிங் மற்றும் ச்சா என்ற இரு வலை காவல் கார்ட்டூன்கள், ஒவ்வொரு வலைப் பக்கத்திலும் தெரிய வருவதைப் பார்த்தப் பின் தனது நண்பர்களிடம் விசாரித்துள்ளார். அவர்கள் கூறியதாவது. அந்த கார்ட்டூன்கள், அரசு தங்களின் (netizens) ஒவ்வொரு நடவடிக்கையையும் கவனித்து வருகிறது என்பதைக் குறிப்பதானவை ஆகும்.


மேலும் சீனாவில் பெயரளவிற்கு, கருத்து சுதந்திரம் இருந்தாலும் கூட, பெரும்பாலான, பத்திரிக்கை மற்றும் தொலைக் காட்சி அமைப்புகள் அரசாலேயே நடத்தப் படுகின்றன.


(வலை தளம்: ௨௯" href="http://en.wikipedia.org/wiki/Freedom_of_speech_by_country#People.27s_Republic_of_China_.28mainland.)

அதே சமயத்தில், பல மேலை நாடுகளில், கருத்துச் சுதந்திரம் பெரும்பாலும் அதிகமாகவேக் காணப் படுகிறது. அங்கேயும் கூட, நவீன யுகத்தின் கண்டுபிடிப்புகளான, தீவிர வாதம், பிரிவினை வாதம் ஆகியவற்றைக் கட்டுபடுத்துவதற்க்காக, இப்போது, சில கட்டுப் பாடுகள் விதிக்கப் பட்டு வருகின்றன.


இதெல்லாம் சரி.


இந்தியாவின் நிலை?


இந்திய அரசியல் சட்டம், தனது குடிமகன்களுக்கு, சற்று நிபந்தனைகளுடன் கூடிய கருத்துச் சுதந்திரத்தை அனுமதித்துள்ளது.


அதே சமயத்தில் நடைமுறையில்?


மகாத்மா காந்தி முதல் மன்மோகன் சிங் வரை பெரும் தலைவர்கள் அனைவரும், கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் விமர்சிக்கப் படுகின்றனர்.


மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் ஒரு புதிய கோணத்தில் காரணங்கள் கண்டு பிடிக்கப் படுகின்றன.


பத்திரிக்கைகள் மற்றும் தொ(ல்)லைக் காட்சிகள், சில தலைவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை முறையைக் கூட, கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் விமர்சிக்கின்றன.


ஆளுபவர்களை மட்டுமல்ல, ஆண்டவனைக் கூட நாம் விட்டு வைப்பதில்லை.


மற்றொரு பக்கம்.


நிழல் தலைவர்கள், நிழல் உலக தாதாக்கள், நாடாள ஆசைப் படும் சில நடிகர்கள், சில தொழிலதிபர்கள், இன, மொழி மற்றும் மதங்களின் அடிப்படையில் அரசியல் பண்ணுபவர்கள், சமயங்களில், இறந்து போன சில தலைவர்களப் பற்றிக் கூட, சில மடாதிபதிகள் ஆகியோரின் செயல்களைப் பற்றி, கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில், பொதுவாக யாராலும் விமர்சனம் செய்ய முடிவதில்லை.

அப்படி விமர்சனம் செய்த சிலரின் நிலை என்ன ஆனது என்று நான் ஒன்றும் கூறப் போவதில்லை.


அதுதான் உங்களுக்கே தெரியுமே?



நன்றி.


மீண்டும் (சி)சந்திப்போம் .

"Freedom is not worth having if it does not connote freedom to err.

It passes my comprehension how human beings, be they ever so experienced and able, can delight in depriving other human beings of that precious right"



- Mahatma Gandhi



Comments

Popular posts from this blog

NHPC நிறுவன பங்கு வெளியீடு (IPO) - முதலீடு செய்யலாமா?

வெகு நாட்களுக்கு பிறகு ஒரு அரசு நிறுவனத்தின் அதுவும் ஒரு மினி-ரத்னா தகுதி கொண்ட ஒரு பெரிய நிறுவனத்தின் பங்குகள் சந்தையில் புதிதாக வெளியிடப் பட உள்ளன. இந்த நிறுவனத்தைப் பற்றியும் ]பங்கின் விலை நிர்ணயம் பற்றியும் சில தகவல்கள் பகிர்தலுக்காக இங்கே. NHPC அதாவது தேசிய நீர்மின் உற்பத்தி நிறுவனம் 1975 ஆம் ஆண்டு நாட்டின் நீர்சக்தியை திறம்பட உபயோகிப்பதற்கான நோக்கத்துடன் உருவாக்கப் பட்டது. இந்த நிறுவனம் இது வரை 13 மின் உற்பத்தி நிலையங்களை அமைத்து சுமார் 5100 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி திறன் பெற்றுள்ளது. தற்போது 11 மின் உற்பத்தி நிலையங்களை புதிதாக அமைத்து வருவதன் மூலம் இந்த நிறுவனம் இன்னும் சில ஆண்டுகளில் சுமார் 4600 மெகாவாட் அளவுக்கு கூடுதலாக மின் உற்பத்தி திறனை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்க படுகிறது. இந்த பதினொரு மின் நிலையங்களில் ஏழு நிலையங்களின் மூலம் மட்டும் சுமார் 3240 மெகாவாட் அளவுக்கான மின்சாரம் பெப்ரவரி 2011 ஆம் ஆண்டுக்குள் உற்பத்தி செய்ய முடியும் என்றும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிறுவனம் இப்போது சுமார் 168 கோடி பங்குகளை ஏலக்கணக்கில் (BOOK BUILDING) சந்தையில் வெளியிடுகி...

இங்கும் அங்கும் பாதை உண்டு. இதில் நீ எந்த பக்கம்?

சென்ற வாரம் 8350 என்ற எதிர்ப்பு நிலையை தாண்டிய போதும், நிப்டியால் முழுமையான வெற்றியை பெற முடிய வில்லை. 8350 என்ற நிலையின் அருகிலேயே இன்னும் நிலை பெற்றுள்ளது. உலக சந்தைகளின் போக்கினையொட்டி இந்த வாரம் 8350 என்ற எதிர்ப்பு நிலையை முழுமையாக முறியடிக்கின்றதா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும். வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். நன்றி.

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...