Skip to main content

கருத்துச் சுதந்திரம் இங்கே கொஞ்சம் வித்தியாசம்!

இன்போசிஸ் நிறுவனர் திரு.நாராயண மூர்த்தி, ஒரு முறை பல்கேரியாவில் ரயில் பயணம் மேற்கொண்ட பொழுது, ஒரு சக பயணியிடம், அந்நாட்டு அரசியல் பேசிய காரணத்தினால், 72 மணி நேரம் உணவின்றி சிறையில் வைக்கப் பட்டார்.

(வலை தளம்: தடம்">http://www.rediff.com/money/2007/may/28bspec.தடம்)

திரு.தருண் கண்ணா (Billion of Entrepreneurs), ஒரு முறை, சீனாவில், வலை தளங்களைப் பார்க்கும் போது, ஜிங் மற்றும் ச்சா என்ற இரு வலை காவல் கார்ட்டூன்கள், ஒவ்வொரு வலைப் பக்கத்திலும் தெரிய வருவதைப் பார்த்தப் பின் தனது நண்பர்களிடம் விசாரித்துள்ளார். அவர்கள் கூறியதாவது. அந்த கார்ட்டூன்கள், அரசு தங்களின் (netizens) ஒவ்வொரு நடவடிக்கையையும் கவனித்து வருகிறது என்பதைக் குறிப்பதானவை ஆகும்.


மேலும் சீனாவில் பெயரளவிற்கு, கருத்து சுதந்திரம் இருந்தாலும் கூட, பெரும்பாலான, பத்திரிக்கை மற்றும் தொலைக் காட்சி அமைப்புகள் அரசாலேயே நடத்தப் படுகின்றன.


(வலை தளம்: ௨௯" href="http://en.wikipedia.org/wiki/Freedom_of_speech_by_country#People.27s_Republic_of_China_.28mainland.)

அதே சமயத்தில், பல மேலை நாடுகளில், கருத்துச் சுதந்திரம் பெரும்பாலும் அதிகமாகவேக் காணப் படுகிறது. அங்கேயும் கூட, நவீன யுகத்தின் கண்டுபிடிப்புகளான, தீவிர வாதம், பிரிவினை வாதம் ஆகியவற்றைக் கட்டுபடுத்துவதற்க்காக, இப்போது, சில கட்டுப் பாடுகள் விதிக்கப் பட்டு வருகின்றன.


இதெல்லாம் சரி.


இந்தியாவின் நிலை?


இந்திய அரசியல் சட்டம், தனது குடிமகன்களுக்கு, சற்று நிபந்தனைகளுடன் கூடிய கருத்துச் சுதந்திரத்தை அனுமதித்துள்ளது.


அதே சமயத்தில் நடைமுறையில்?


மகாத்மா காந்தி முதல் மன்மோகன் சிங் வரை பெரும் தலைவர்கள் அனைவரும், கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் விமர்சிக்கப் படுகின்றனர்.


மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் ஒரு புதிய கோணத்தில் காரணங்கள் கண்டு பிடிக்கப் படுகின்றன.


பத்திரிக்கைகள் மற்றும் தொ(ல்)லைக் காட்சிகள், சில தலைவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை முறையைக் கூட, கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் விமர்சிக்கின்றன.


ஆளுபவர்களை மட்டுமல்ல, ஆண்டவனைக் கூட நாம் விட்டு வைப்பதில்லை.


மற்றொரு பக்கம்.


நிழல் தலைவர்கள், நிழல் உலக தாதாக்கள், நாடாள ஆசைப் படும் சில நடிகர்கள், சில தொழிலதிபர்கள், இன, மொழி மற்றும் மதங்களின் அடிப்படையில் அரசியல் பண்ணுபவர்கள், சமயங்களில், இறந்து போன சில தலைவர்களப் பற்றிக் கூட, சில மடாதிபதிகள் ஆகியோரின் செயல்களைப் பற்றி, கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில், பொதுவாக யாராலும் விமர்சனம் செய்ய முடிவதில்லை.

அப்படி விமர்சனம் செய்த சிலரின் நிலை என்ன ஆனது என்று நான் ஒன்றும் கூறப் போவதில்லை.


அதுதான் உங்களுக்கே தெரியுமே?



நன்றி.


மீண்டும் (சி)சந்திப்போம் .

"Freedom is not worth having if it does not connote freedom to err.

It passes my comprehension how human beings, be they ever so experienced and able, can delight in depriving other human beings of that precious right"



- Mahatma Gandhi



Comments

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

தீவிரவாதிகளை வென்ற கதை - இந்திய கமாண்டோவின் விளக்கம்

நேற்று ஒரு தீவிரவாதி பிடிப் பட்ட கதை பார்த்தோம். இன்று தாஜ் ஹோட்டலில் எவ்வாறு நான்கு தீவிரவாதிகள் ஒழிக்கப் பட்டனர் என்று விளக்கும் இந்திய கமாண்டோவின் விளக்கத்தை பார்ப்போம். முதலில் இந்தியா கமாண்டோக்கள் தாஜ் ஹோட்டல் வந்த கதை புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் மும்பையை பயங்கரவாதம் தாக்கியது. அப்போது கேரளாவில் இருந்த மகாராஷ்டிர முதல்வர் மும்பை வரவும் இந்த சூழ்நிலையின் பயங்கரத்தையும் முழுமையாக உணர்ந்துக் கொள்ளவும் 90 நிமிடம் பிடித்தது .பின்னர் 11.00 அளவில் மத்திய அரசிற்கு போன் பேசிய முதல்வர் கோரியது 200 கமாண்டோக்களை. உடனே அந்நேரத்தில் தூங்கி கொண்டிருந்த இந்திய கமாண்டோக்கள் எழுப்பப் பட்டனர். அவர்கள் மும்பை வரத் தயாரான போதுதான் புரிந்தது, அவ்வளவு பேரை மும்பை கொண்டுவர தேவையான சிறப்பு விமானம் சண்டிகரில் உள்ளது என்று. உடனே அந்த விமானியையும் தூக்கத்தில் இருந்து எழுப்பி தயார் படுத்தி டெல்லியிலிருந்து கமாண்டோக்கள் மும்பை வந்த போது நேரம் காலை 5.25 மணி. அவர்கள் தாஜ் ஹோட்டலுக்கு கொண்டு வரப்பட்டு திட்டம் தயாரிக்கப் பட்டு அவர்கள் தாஜ் ஹோட்டலுக்குள் நுழைந்த போது நேரம் காலை 7.00 மணி. அதாவது மும்பை தாக்கப் ப...

கம்ப்யூட்டர் கட்சியும் கால்குலேட்டர் கட்சியும்!

மத்திய கல்வி அமைச்சர் கபில் சிபல் இந்தியா முழுவதும் அனைவரும் தாய்மொழியுடன் ஹிந்தியும் படிக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்துள்ளார். இவ்வாறு அனைவரும் ஹிந்தி படிப்பதன் மூலம் நாட்டில் ஒருமைப்பாடு ஏற்படுவதுடன் ஹிந்தியை ஆங்கிலம் போன்று ஒரு "அறிவு மொழியாக (lingua franca)" மாற்ற முடியும் என்றும் கூறியுள்ளார். இந்த கருத்தின் மீது பதிவுலகில் ஏராளமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆங்கிலம் மட்டுமே போதும் என்று ஒரு கட்சியும், ஆங்கிலம் வாசலாக இருக்கும் போது ஹிந்தி ஒரு சன்னலாக இருந்து விட்டு போகட்டுமே என்று இன்னொரு கட்சியும் விவாதித்து வருகின்றன. ஹிந்தி எதிர்ப்பு என்பது எப்போதுமே ஒரு உணர்வு பூர்வமான விஷயமாகவே பலராலும் கருதப் பட்டாலும், அதற்கு அறிவு பூர்வமான, சரித்திர பூர்வமான சில அடிப்படைகள் உண்டு. ஹிந்தி திணிப்பு மற்றும் ஹிந்தி எதிர்ப்பு பற்றி எனக்கு தெரிந்த சில கருத்துக்களை இங்கு ஒரு புனைவு வடிவில் அளிக்க முயற்சிக்கிறேன். இப்போது புனைவு ! ஒரு காலத்தில் பரதம்பட்டி என்ற ஒரு கிராமம் இருந்ததாம். அங்கு பல ஆண்டுகள் வரை ஆட்சி செய்து வந்த துரை மகாராஜா ஒரு காலத்தில், அந்த கிராமத்தை ஜனநாயக ...