Skip to main content

நான் ஓகே. நீங்கள் ஒகேவா?

மனவியல் மேதை, ஹாரிஸ் அவர்களது ஒரு எளிய தத்துவம் இது.


ஒவ்வொரு மனிதர்க்கும், தன்னைப் பற்றியும், தனது சுற்றமிருப்பவர் பற்றியும் ஒரு மதிப்பீடு இருக்கும். அவற்றை நான்கு வகைகளாக பிரிக்கலாம்.



நான் ஓகே. நீங்கள் ஓகே இல்லை.


இவ்வகையினர் உயர்வு மனப்பான்மை கொண்டிருப்பர். மற்றவர் மீது குறை மட்டுமே கண்டு பிடிப்பர்.


நான் ஓகே இல்லை நீங்கள் ஓகே.


இவ்வகையினர் தாழ்வு மனப்பான்மை கொண்டிருப்பர். மற்றவர்களைக் கண்டால், அச்சம், தயக்கம் கொண்டு விலகி இருக்க முயற்சி செய்வர்.


நான் ஓகே இல்லை. நீங்கள் ஓகே இல்லை.


இவ்வகையினர் ஆபத்தானவர்கள். விரக்தி மிகுந்து தற்கொலைக்கு கூட முயற்சி செய்பவர். சமூகத்தால் உடனடியாக கவனிக்கப் பட வேண்டியவர்கள்.


நான் ஓகே நீங்களும் ஓகே.


இந்த வகை மனிதர்கள் மன முதிர்ச்சி அடைந்தவர்கள். நானும் ஒரு வகையில் சிறந்தவன். அதே போல மற்றவர்களும் ஒவ்வொரு வகையில் சிறந்தவர்கள் என்ற சிந்தனை கொண்டவர்கள். இந்த சிந்தனை பெரும்பாலோர்க்கு வரும் போது பிரச்சனைகள் குறைந்து காணப்படும்.


இப்போது சொல்லுங்கள். நான் ஓகே. நீங்களும் ஓகே தானே?


மேலும், என்னுடைய நண்பர் ஒருவர், எப்போதும் சந்தோசமாகவும், புன்சிரிப்பு மாறாத முகத்துடனும் இருப்பவர். அவரிடம் எவ்வாறு அப்படி இருக்க முடிகிறது என்று கேட்டதற்கு அவர் கூறிய பதில் இங்கே.


அவர் தனது பெரும்பாலான சுய தேவைகளை தானே பூர்த்தி செய்து கொள்கிறார். உதாரணமாக, வீட்டு பராமரிப்பு, வாகனச் சுத்தம், துணி சுத்தம் போன்றவை. இவ்வாறு செய்யும் போது (உடல் தொடர்ந்து உழைக்கும் போது) மனம் அதிகம் சிந்திப்பதில்லை. இதனால் பெரும்பாலான கவலைகள் மனதில் தொடர்ந்து தங்குவதில்லை. பொதுவாக, உடல் உழைப்பாளிகள், வசதி குறைந்திருந்தால் கூட, மனக் கவலைகள் குறைந்து காணப் படுவதற்கு இதுவே காரணமாக இருக்க முடியும்.


எனக்கு, இது நல்ல கருத்தாகப் பட்டது. உங்களுக்கு?


நாளை உலக மன நாள்.


உறுதி கொள்வோம்.


உடல் உழைப்பை (பயிற்சி) அதிகம் கொள்வோம். மன உளைச்சலை தவிர்ப்போம்.



சிந்திப்போம்.

"The more tranquil a man becomes, the greater is his success, his influence, his power for good. Calmness of mind is one of the beautiful jewels of wisdom. "

~James Allen



மீண்டும் சந்திப்போம்.


பின் குறிப்பு. "நான் ஓகே நீங்கள் ஓகே" என்ற மனவியல் கருத்தை எளிய முறையில் எனக்கு விளக்கிய, எனது மரியாதைக்கும் அன்புக்கும் உரிய அந்த நண்பர், தற்போது ஒரு மிக உயரிய பதவிக்கு மத்திய அரசினால் தேர்வு செய்யப் பட்டுள்ளார். அவருக்கு எனது மேலான வாழ்த்துக்களை இங்கு உரித்தாக்குகிறேன்.

Comments

இப்ப நான் ஓகெ...

இது எனது புதிய பதிவு...வருகைதாருங்கள்
http://paakeypa.blogspot.com/
கபீஷ் said…
I'm OK. You r OK.

VOC has translated one book of James Allen

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

தீவிரவாதிகளை வென்ற கதை - இந்திய கமாண்டோவின் விளக்கம்

நேற்று ஒரு தீவிரவாதி பிடிப் பட்ட கதை பார்த்தோம். இன்று தாஜ் ஹோட்டலில் எவ்வாறு நான்கு தீவிரவாதிகள் ஒழிக்கப் பட்டனர் என்று விளக்கும் இந்திய கமாண்டோவின் விளக்கத்தை பார்ப்போம். முதலில் இந்தியா கமாண்டோக்கள் தாஜ் ஹோட்டல் வந்த கதை புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் மும்பையை பயங்கரவாதம் தாக்கியது. அப்போது கேரளாவில் இருந்த மகாராஷ்டிர முதல்வர் மும்பை வரவும் இந்த சூழ்நிலையின் பயங்கரத்தையும் முழுமையாக உணர்ந்துக் கொள்ளவும் 90 நிமிடம் பிடித்தது .பின்னர் 11.00 அளவில் மத்திய அரசிற்கு போன் பேசிய முதல்வர் கோரியது 200 கமாண்டோக்களை. உடனே அந்நேரத்தில் தூங்கி கொண்டிருந்த இந்திய கமாண்டோக்கள் எழுப்பப் பட்டனர். அவர்கள் மும்பை வரத் தயாரான போதுதான் புரிந்தது, அவ்வளவு பேரை மும்பை கொண்டுவர தேவையான சிறப்பு விமானம் சண்டிகரில் உள்ளது என்று. உடனே அந்த விமானியையும் தூக்கத்தில் இருந்து எழுப்பி தயார் படுத்தி டெல்லியிலிருந்து கமாண்டோக்கள் மும்பை வந்த போது நேரம் காலை 5.25 மணி. அவர்கள் தாஜ் ஹோட்டலுக்கு கொண்டு வரப்பட்டு திட்டம் தயாரிக்கப் பட்டு அவர்கள் தாஜ் ஹோட்டலுக்குள் நுழைந்த போது நேரம் காலை 7.00 மணி. அதாவது மும்பை தாக்கப் ப...

கம்ப்யூட்டர் கட்சியும் கால்குலேட்டர் கட்சியும்!

மத்திய கல்வி அமைச்சர் கபில் சிபல் இந்தியா முழுவதும் அனைவரும் தாய்மொழியுடன் ஹிந்தியும் படிக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்துள்ளார். இவ்வாறு அனைவரும் ஹிந்தி படிப்பதன் மூலம் நாட்டில் ஒருமைப்பாடு ஏற்படுவதுடன் ஹிந்தியை ஆங்கிலம் போன்று ஒரு "அறிவு மொழியாக (lingua franca)" மாற்ற முடியும் என்றும் கூறியுள்ளார். இந்த கருத்தின் மீது பதிவுலகில் ஏராளமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆங்கிலம் மட்டுமே போதும் என்று ஒரு கட்சியும், ஆங்கிலம் வாசலாக இருக்கும் போது ஹிந்தி ஒரு சன்னலாக இருந்து விட்டு போகட்டுமே என்று இன்னொரு கட்சியும் விவாதித்து வருகின்றன. ஹிந்தி எதிர்ப்பு என்பது எப்போதுமே ஒரு உணர்வு பூர்வமான விஷயமாகவே பலராலும் கருதப் பட்டாலும், அதற்கு அறிவு பூர்வமான, சரித்திர பூர்வமான சில அடிப்படைகள் உண்டு. ஹிந்தி திணிப்பு மற்றும் ஹிந்தி எதிர்ப்பு பற்றி எனக்கு தெரிந்த சில கருத்துக்களை இங்கு ஒரு புனைவு வடிவில் அளிக்க முயற்சிக்கிறேன். இப்போது புனைவு ! ஒரு காலத்தில் பரதம்பட்டி என்ற ஒரு கிராமம் இருந்ததாம். அங்கு பல ஆண்டுகள் வரை ஆட்சி செய்து வந்த துரை மகாராஜா ஒரு காலத்தில், அந்த கிராமத்தை ஜனநாயக ...