Skip to main content

சிறந்த பின்னூட்டம் இடுவது எப்படி?

சிறந்த பின்னூட்டங்கள் பதிவினை மேலும் அழகுப்படுத்தும் அணிகலன்கள். அவை புதிய சிந்தனைகளை உருவாகவும் சில சமயங்களில் பதிவருக்கே சில சந்தேகங்களை தீர்க்கவும் உதவி செய்யும்.

எனது குறுகிய கால பதிவு உலக அனுபவத்தில், சிறந்த பின்னூட்டம் இடுவது எப்படி என்பது பற்றிய எனது சில சிந்தனைகளை தங்கள் முன் வைக்கிறேன். சிறந்த பின்னூட்டம் இடுவதற்கான அடிப்படை விஷயங்கள் கீழே.

முதலில் பதிவின் நோக்கத்தினை முழுமையாக புரிந்து கொள்வது.

அதன் மீது தனது உண்மையான உணர்வுகளை தெரிவிப்பது. எதிர் கருத்துகள் எதிரியின் கருத்துகள் அல்ல. சிறந்த நண்பர்களால், ஒத்துப் போகாமல் இருக்க ஒத்துப் போக முடியும். (Agree to Disagree)

புரியாதவற்றை பற்றி தயங்காமல் சந்தேகங்கள் கேட்பது (பின்னூட்டம் இடுவது). ஏற்கனவே மற்றவர்கள் கேட்ட கேள்விகளைத் தவிர்ப்பது. புதிய சிந்தனைகளை பதிவுக்கு துணை சேர்ப்பது.

நாகரிகமான நகைச்சுவை நல்லது.

தனி மனித தாக்குதல்களை அல்லது புகழ்ச்சிகளை தவிர்ப்பது.

மேலோட்டமான கருத்துகளை தவிர்ப்பது. (To the Point).

பின்னூட்டங்கள் பதிவரின் மேல் உள்ள அக்கறையின் பேரிலேயே என்பதை தெளிவு படுத்துங்கள்.

இந்த பதிவின் மீது கூட சிறந்த பின்னூட்டங்கள் (மேலும் சில யோசனைகள்) வரவேற்க படுகின்றன.

நன்றி.

Comments

எனக்கேல்லாம் மொக்கையா தான் பின்னூட்டம் போடத் தெரியும்
தப்பா நினச்சிக்காதிங்க தலைவா
மறுக்க விரும்பினால், தக்க அடிப்படைகளோடும் சான்றுகளோடும்
பக்குவமாய் எழுதுவது - என்பதையும் சேர்த்துக்கொள்ளலாம்.
Maximum India said…
அன்புள்ள வால்பையன்

மொக்கையும் கூட ஒருவகை இலக்கியம்தான் நண்பரே!
Maximum India said…
அன்புள்ள சிக்கிமுக்கி

நல்ல கருத்து. நன்றி
Maximum India said…
அன்புள்ள சிக்கிமுக்கி

நல்ல கருத்து. நன்றி

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

நரேந்திர மோடி நாடாளலாமா?

சமீபத்தில் நடைபெற்ற குஜராத் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கார்பொரட் கனவான்களான அனில் அம்பானி மற்றும் சுனில் மிட்டல் ஆகியோர் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர். காரியம் ஆக வேண்டும் என்றால் என்ன வேண்டுமானாலும் பேசக் கூடியவர்கள் நமது தொழில் அதிபர்கள் என்பதனால் அவர்களின் பேச்சுக்கு அவ்வளவு மரியாதை கொடுக்க வேண்டியதில்லை. இவர்களைப் போன்றவர்களால் ஏற்கனவே நாடாள தகுதி பெற்றவர் என்று கூறப் பட்ட சந்திர பாபு நாயுடு அடுத்த சட்ட மன்ற தேர்தலில் தனது முதலமைச்சர் பதவியினையே இழந்தது குறிப்பிடத் தக்கது. தொழில் அதிபர்கள் பேச்சினை பா.ஜ.கவே ஏற்றுக் கொள்ளாத பட்சத்திலும் கூட, தீவிரவாதத்தை ஒடுக்கி குஜராத் மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்து சென்றவர் நரேந்திர மோடி என்றும் அவர் இந்தியாவின் பிரதமர் ஆவது நாட்டுக்கு நல்லது என்றும் பலராலும் கருதப் படுவதால், நரேந்திர மோடியின் செயல்பாடு பற்றியும் அவர் பிரதமர் ஆகலாமா என்பது பற்றியும் பிரதமராக அவர் ஏற்றுக் கொள்ளப் படுவாரா என்பதைப் பற்றியும் இங்கு பார்ப்போம். இன்றைய தேதியில் இந்தியாவிலேயே மிகுந்த முன்னேற்றம் அடைந்த ஒரு மாநிலமாக குஜரா...

இந்தியா தாக்குப் பிடிக்குமா?

இன்றைய உலகப் பொருளாதாரத் தேக்க நிலையில், இந்தியாவால் தாக்குப் பிடிக்க முடியுமா என்பது பற்றி பார்ப்போம். சமீபத்தில் வெளியிடப் பட்ட மத்திய புள்ளியல் (மத்திய அரசு) நிறுவனத்தின் மதிப்பீட்டின் படி இந்தியப் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 7.1 சதவீதம் வளர்ச்சியுறும் என்று தெரிகிறது. இது சரியாக இருக்கும் பட்சத்தில் உலகிலேயே இரண்டாவதாக வேகமாக வளர்ச்சியுறும் நாடு இந்தியாவாகத்தான் இருக்கும் (சீனா முதலாவது). சென்ற ஆண்டில் ஒன்பது சதவீதம் வளர்ச்சி பெற்றிருந்த இந்தியப் பொருளாதாரம் செப்டம்பர் 2008 வரையிலான முதல் அரையாண்டில் 7.80% வளர்ச்சிப் பெற்றிருந்தது. பொதுவாகவே பண்டிகைக் காலமாக கருதப் படுகிற இரண்டாவது அரையாண்டே தொழிற் துறையில் அதிக வளர்ச்சியைக் காட்டும் என்றாலும் இந்த முறை இந்தியத் தொழில் துறை பெரும் தேக்க நிலையில் இருந்து வந்திருக்கிறது என்பது கவனிக்கத் தக்கது. இந்திய தொழிற் வளர்ச்சி கடந்த இரு மாதங்களாக மிகவும் குறைந்து காணப் படுவதாலும் ஏற்றுமதியோ இறங்குமுகத்தில் இருப்பதாலும் இந்திய அரசாங்கம், மார்ச் 2009 வரையிலான நிதி ஆண்டின் இரண்டாவது அரையாண்டில் நமது பொருளாதாரம் குறைந்த வளர்ச்சியே (6.30%) இரு...