Monday, October 27, 2008

தீபாவளி சிந்தனைகள்



தீபாவளி நமக்குத் தரும் மறைபொருள் விளக்கம்.

உலகத்தில் மட்டுமல்ல ஒட்டுமொத்த பிரபஞ்சத்திலும் உள்ள அத்தனை இருட்டும் ஒன்று சேர்ந்தாலும் கூட, ஒரு சிறிய தீபத்தின் ஒளியை அழித்து விட முடியாது. அதே போல, இன்றைய உலகில் எவ்வளவோ தீமைகள் சேர்ந்து வந்தாலும் கூட ஒரு சிறிய இதயத்தின் நல்ல சிந்தனைகளை மாற்றிவிட முடியாது.

புத்தாடை அணிந்து இனிப்புகளுடன் பட்டாசுகளுடன் இன்றைக்கு தீபாவளி கொண்டாடும் நாம், இந்த வாய்ப்பினை பல வருடங்களாக இழந்திருக்கும் ஈழ தமிழர்களும், அடுத்தவர்களின் கொண்டாட்டங்களை ஏக்கத்துடன் பார்க்க மட்டுமே முடிகின்ற எளியவர்களும், நம்முடன் சேர்ந்து அடுத்த தீபாவளியை அனைவருக்குமான தீபாவளியாக கொண்டாட இருளிலும் ஒளியாய் நமக்கு வழி காட்டும் அந்த எல்லாம் வல்ல இறைவனை இந்த தீப ஒளித் திருநாளில் வேண்டிக்கொள்வோம்.

தீபாவளி நல்வாழ்த்துகள்

No comments:

Blog Widget by LinkWithin