Skip to main content

கடன் வாங்கலாமா?



கடன் பொருளாதாரம், ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படையான ஒன்றாகும். ஆனால், அதே சமயத்தில், சில தவறான கடன் கொள்கைகளால், இன்றைய தேதியில்உலகமே தத்தளித்து கொண்டு இருக்கிறது.





இந்த சூழ்நிலையில் நம்மைப் போன்ற சாமான்யர்கள் கடன் வாங்கலாமா என்பதை பற்றியும் வாங்குவதற்கு முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள் யாவை என்பதைப் பற்றியும் இங்கு ஆராயலாம்.




பொதுவாக, கடன் வாங்குவதற்கு கீழ்க்கண்ட காரணங்கள் இருக்கக் முடியும் .




தொழில் மற்றும் வியாபார தேவைகள் . சுய தேவைகள் , மேற்படிப்பு தேவைகள் மற்றும் இதர முதலீடுகள் (Speculative nature)





1. தொழில் மற்றும் வியாபார தேவைகள்




பொதுவாக ஒரு நாட்டின் அனைத்து துறைகளின் சராசரி வளர்ச்சி, அந்நாட்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தி (GDP) மற்றும் பண வீக்கத்தின் (Inflation) கூட்டு தொகையாக இருக்கும். உதாரணமாக, இந்திய வளர்ச்சி 8% மற்றும் பண வீக்கம் 12% எனும் பட்சத்தில் சராசரி துறை வளர்ச்சி (12+8) 20% ஆக இருக்கும்.




இதன் அடிப்படையில், ஒவ்வொரு துறைக்குமான, வருங்கால தனிப் பட்ட வளர்ச்சியினை, அந்தந்த துறையின் ஆராய்ச்சி கட்டுரைகள் மற்றும் நூல்கள்(Reseach Reports and Journals) மூலம் அறிய முடியும்.






மேற்கண்ட விஷயங்களின், அடிப்படையில், தொழில் மற்றும் வியாபாரத்தில் கடன் மூலம் செய்யக் கூடிய முதலீட்டினால் பெறக் கூடிய லாப அளவினை தோராயமாக (Estimates) முதலில் மதிப்பிட வேண்டும். அந்த தொகை, கடனுக்கான வட்டி மற்றும் திருப்ப வேண்டிய முதல் (Principal + Interest) ஆகியவற்றை விட அதிகமாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே கடன் வாங்க வேண்டும்.




2. சுய தேவைகள்




சுய தேவைகளை இரண்டாக பிரித்து கொள்ள முடியும்.




அத்தியாவசிய தேவைகள் மற்றும் அத்தியாவசியமற்ற தேவைகள்.




அத்தியாவசிய தேவைகளுக்காக (உதாரணமாக வீடு மற்றும் வாகனம்) கடன் வாங்கும் பட்சத்தில், அத்தேவைகளை பூர்த்தி செய்வதினால் ஏற்படும் பலன்கள் (Tangible and Intangible) , திருப்பி செலுத்த வேண்டிய கடன் தொகை மற்றும் வட்டியினை விட அதிகமாக இருக்க வேண்டும்.




அத்தியாவசியமற்ற பொருட்களுக்காக (உதாரணமாக ஆடம்பர பொருட்கள்) (கூடுமான வரை) கடன் வாங்குவதைத் தவிர்த்து, சுய சேமிப்பில் வாங்குவது நல்லது. அப்படி வாங்கும் பட்சத்தில், மொத்த செலவில் , சொந்த பங்கு (Margin) அதிகமாக இருப்பது நல்லது.




3. மேற்படிப்பு




மேற்படிப்பு, ஒரு சிறந்த முதலீடு. மேற்படிப்பின் மூலமாக, புதிய பணி வாய்ப்பு, பணி மேன்மை மற்றும் இதர நன்மைகள் இருக்கும் பட்சத்தில், கடன் வாங்கலாம். அதே சமயத்தில், திரும்ப கட்ட வேண்டிய தொகை அளவு குறித்து கவனமாக இருக்க வேண்டும்.




4. இதர முதலீடுகள் (Speculative Nature)




இரண்டாவது வீடு (வாடகை அல்லது குறைந்த கால லாபத்திற்காக), மனை நிலம், பங்கு சந்தை முதலீடுகள் இவற்றுள் அடக்கம். பொதுவாக, பொருளாதார வல்லுனர்கள் இவற்றிற்காக கடன் வாங்குவதை ஏற்பதில்லை. அப்படி வாங்கும் பட்சத்தில், சிறந்த நிபுணர்கள் உதவி பெற்றிருப்பதும், தனது சொந்த நஷ்டம் தாங்கக் கூடிய சக்தி (Risk Appetite) குறித்து தெளிவாக அறிந்திருப்பதும் அவசியம்.




கடன் வாங்கும் முன்னர் கவனிக்க வேண்டிய இதர விஷயங்கள்.




1 வங்கியின் நம்பகத் தன்மை (Integrity of the Bank)


2. திருப்ப செலுத்தக் கூடிய திறன் (Solvency and Liquidity)


3. வட்டி மாறாக் கடன் அல்லது மாறக் கூடிய கடன் (Fixed Rate or Floating Rate)


4. மறைமுக கட்டணங்கள் (Hidden Charges)


5. தேசிய அளவினாலான பொருளாதார மாற்றங்கள் (Macro Economic changes)


6.திருப்பி செலுத்த வேண்டிய கால அவகாசம் மற்றும் மாதந்திர தவணை முறை.


7. வங்கியின் இதர நிபந்தனைகள் (Terms and conditions of the Loan and EMI)


8. கடன் அளவிற்கு ஆயுள் காப்பீடு செய்வது குடும்ப பாதுகாப்பிற்கு மிகவும் அவசியம்.


9.கையெழுத்து இடும் முன் ஒவ்வொரு பத்திர நகலையும் முழுமையாக படிப்பது அவசியம்.


10. கிரெடிட் கார்டுகள் மாதந்திர செலவினங்களை எளிதாக செய்வதற்கு மட்டுமே. அதனை கடன் பெறும் வழியாகக் கொள்ளும் பட்சத்தில் அபாயம் நிச்சயம். (இந்த வாரம் மும்பையில் ஒரு குடும்பமே தற்கொலை செய்து கொண்டதற்கு அதிகப் படியான கடன்களை கிரெடிட் கார்டு மூலம் பெற்றதே காரணம்).


11. மாதாந்திர கடன் தவணை, தனது வீட்டிற்கு கொண்டு செல்லும் சம்பளத் தொகையில் (Take Home Salary) 30% சதவீதத்திற்குள் இருப்பது நல்லது.




கடன் பெறுவதில் கவனமாக இருப்போம்.




கவலைகளை தவிர்ப்போம்.

Comments

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

தீவிரவாதிகளை வென்ற கதை - இந்திய கமாண்டோவின் விளக்கம்

நேற்று ஒரு தீவிரவாதி பிடிப் பட்ட கதை பார்த்தோம். இன்று தாஜ் ஹோட்டலில் எவ்வாறு நான்கு தீவிரவாதிகள் ஒழிக்கப் பட்டனர் என்று விளக்கும் இந்திய கமாண்டோவின் விளக்கத்தை பார்ப்போம். முதலில் இந்தியா கமாண்டோக்கள் தாஜ் ஹோட்டல் வந்த கதை புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் மும்பையை பயங்கரவாதம் தாக்கியது. அப்போது கேரளாவில் இருந்த மகாராஷ்டிர முதல்வர் மும்பை வரவும் இந்த சூழ்நிலையின் பயங்கரத்தையும் முழுமையாக உணர்ந்துக் கொள்ளவும் 90 நிமிடம் பிடித்தது .பின்னர் 11.00 அளவில் மத்திய அரசிற்கு போன் பேசிய முதல்வர் கோரியது 200 கமாண்டோக்களை. உடனே அந்நேரத்தில் தூங்கி கொண்டிருந்த இந்திய கமாண்டோக்கள் எழுப்பப் பட்டனர். அவர்கள் மும்பை வரத் தயாரான போதுதான் புரிந்தது, அவ்வளவு பேரை மும்பை கொண்டுவர தேவையான சிறப்பு விமானம் சண்டிகரில் உள்ளது என்று. உடனே அந்த விமானியையும் தூக்கத்தில் இருந்து எழுப்பி தயார் படுத்தி டெல்லியிலிருந்து கமாண்டோக்கள் மும்பை வந்த போது நேரம் காலை 5.25 மணி. அவர்கள் தாஜ் ஹோட்டலுக்கு கொண்டு வரப்பட்டு திட்டம் தயாரிக்கப் பட்டு அவர்கள் தாஜ் ஹோட்டலுக்குள் நுழைந்த போது நேரம் காலை 7.00 மணி. அதாவது மும்பை தாக்கப் ப...

கம்ப்யூட்டர் கட்சியும் கால்குலேட்டர் கட்சியும்!

மத்திய கல்வி அமைச்சர் கபில் சிபல் இந்தியா முழுவதும் அனைவரும் தாய்மொழியுடன் ஹிந்தியும் படிக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்துள்ளார். இவ்வாறு அனைவரும் ஹிந்தி படிப்பதன் மூலம் நாட்டில் ஒருமைப்பாடு ஏற்படுவதுடன் ஹிந்தியை ஆங்கிலம் போன்று ஒரு "அறிவு மொழியாக (lingua franca)" மாற்ற முடியும் என்றும் கூறியுள்ளார். இந்த கருத்தின் மீது பதிவுலகில் ஏராளமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆங்கிலம் மட்டுமே போதும் என்று ஒரு கட்சியும், ஆங்கிலம் வாசலாக இருக்கும் போது ஹிந்தி ஒரு சன்னலாக இருந்து விட்டு போகட்டுமே என்று இன்னொரு கட்சியும் விவாதித்து வருகின்றன. ஹிந்தி எதிர்ப்பு என்பது எப்போதுமே ஒரு உணர்வு பூர்வமான விஷயமாகவே பலராலும் கருதப் பட்டாலும், அதற்கு அறிவு பூர்வமான, சரித்திர பூர்வமான சில அடிப்படைகள் உண்டு. ஹிந்தி திணிப்பு மற்றும் ஹிந்தி எதிர்ப்பு பற்றி எனக்கு தெரிந்த சில கருத்துக்களை இங்கு ஒரு புனைவு வடிவில் அளிக்க முயற்சிக்கிறேன். இப்போது புனைவு ! ஒரு காலத்தில் பரதம்பட்டி என்ற ஒரு கிராமம் இருந்ததாம். அங்கு பல ஆண்டுகள் வரை ஆட்சி செய்து வந்த துரை மகாராஜா ஒரு காலத்தில், அந்த கிராமத்தை ஜனநாயக ...