சமீபத்தில், வெளிநாட்டில் பணிபுரிந்து தாயகம் திரும்பிய நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்த பொழுது, டாலர் நாணய சந்தையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களினால் அவருக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து பேச்சு இருந்தது.
அதாவது, வெளிநாட்டில் அவர்தம் சம்பளம் டாலர் மதிப்பில், ஒரே அளவில் இருந்தாலும் கூட, அந்த டாலர் தொகை ரூபாயில் மாற்றம் பெறும் போது, பெருத்த மாற்றங்களை சந்திக்கிறது. இதனால் இந்தியாவில் உள்ள அவர் குடும்பத்தின் மாதாந்திர பட்ஜெட் இடுவது மிகவும் சிரமமாக இருக்கிறது.
உதாரணமாக, ரூ.49 ஆக இருந்த டாலர் காலப் போக்கில் ரூ.39 ஆக குறைந்து, பின்னர் மீண்டும் ரூ.49 அளவிற்கு உயர்ந்துள்ளது. இதனால்,1500 டாலர் சம்பளம் பெற்று சுமார் 1000 டாலர் தனது குடும்பத்திற்கு அனுப்பினால், ஒரு மாதம் 49000 ரூபாயும் சில காலம் கழித்து இன்னொரு மாதம் 39000 ரூபாயும் என மாறி மாறி வருகிறது. அந்த நண்பர் வேடிக்கையாக கூறினார். அவர் குடும்பத்தினர் அவர் மீதே சந்தேகப் படுகின்றனர் என்று.
இந்த ஏற்ற இறக்கங்களில் இருந்து அவர் போன்றவர்கள் தம்மை பாதுகாத்துக் கொள்ள இப்போது ஒரு புதிய வழிமுறை உள்ளது. அதாவது "எதிர்கால நாணய விலை ஒப்பந்தங்கள்" (Currency Futures) என்ற வணிக முறை தற்போது இந்தியாவில் (NSE &MCX) அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.
இதன் படி, ஒரு தனி நபர் (Resident Indian) டாலர் சந்தையில் "எதிர்கால நாணய விலை ஒப்பந்தங்கள்" ஒரு வருடம் வரை வாங்க விற்க முடியும். இந்த முறையினை வெளிநாட்டில் பணி புரியும் நண்பர்கள் (இந்தியாவில் உள்ள தம் குடும்பத்தினர் பெயரில்) உபயோகப் படுத்தி டாலர் ஏற்ற இறக்கங்களில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். இந்த முறையில், வெளிநாட்டில் தங்கள் பிள்ளைகள் படிப்பதற்காக பணம் அனுப்புபவர்கள் கூட பயன் பெறலாம். இந்த வணிகத்திற்காக, தங்கள் சொந்த ஊரில் உள்ள பங்குத் தரகரிடம் அல்லது பொருள் தரகரிடம் (Commodity Broker) இந்தியாவில் உள்ள தம் குடும்பத்தினர் பெயரில் ஒரு கணக்கு தொடங்கி கொள்ளலாம்.
நண்பர்களுக்கு ஒரு எச்சரிக்கை. இந்த வணிகம் நாணய சந்தையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக மட்டுமே . குறுகிய கால லாபம் பெறுவதற்காக அல்ல. இந்த விஷயங்களில் மேலும் விபரம் பெற விரும்புபவர்கள் http://www.nseindia.com/ வலைப் பதிவில் பார்க்கலாம் அல்லது maximumindia@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.
நன்றி.
அதாவது, வெளிநாட்டில் அவர்தம் சம்பளம் டாலர் மதிப்பில், ஒரே அளவில் இருந்தாலும் கூட, அந்த டாலர் தொகை ரூபாயில் மாற்றம் பெறும் போது, பெருத்த மாற்றங்களை சந்திக்கிறது. இதனால் இந்தியாவில் உள்ள அவர் குடும்பத்தின் மாதாந்திர பட்ஜெட் இடுவது மிகவும் சிரமமாக இருக்கிறது.
உதாரணமாக, ரூ.49 ஆக இருந்த டாலர் காலப் போக்கில் ரூ.39 ஆக குறைந்து, பின்னர் மீண்டும் ரூ.49 அளவிற்கு உயர்ந்துள்ளது. இதனால்,1500 டாலர் சம்பளம் பெற்று சுமார் 1000 டாலர் தனது குடும்பத்திற்கு அனுப்பினால், ஒரு மாதம் 49000 ரூபாயும் சில காலம் கழித்து இன்னொரு மாதம் 39000 ரூபாயும் என மாறி மாறி வருகிறது. அந்த நண்பர் வேடிக்கையாக கூறினார். அவர் குடும்பத்தினர் அவர் மீதே சந்தேகப் படுகின்றனர் என்று.
இந்த ஏற்ற இறக்கங்களில் இருந்து அவர் போன்றவர்கள் தம்மை பாதுகாத்துக் கொள்ள இப்போது ஒரு புதிய வழிமுறை உள்ளது. அதாவது "எதிர்கால நாணய விலை ஒப்பந்தங்கள்" (Currency Futures) என்ற வணிக முறை தற்போது இந்தியாவில் (NSE &MCX) அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.
இதன் படி, ஒரு தனி நபர் (Resident Indian) டாலர் சந்தையில் "எதிர்கால நாணய விலை ஒப்பந்தங்கள்" ஒரு வருடம் வரை வாங்க விற்க முடியும். இந்த முறையினை வெளிநாட்டில் பணி புரியும் நண்பர்கள் (இந்தியாவில் உள்ள தம் குடும்பத்தினர் பெயரில்) உபயோகப் படுத்தி டாலர் ஏற்ற இறக்கங்களில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். இந்த முறையில், வெளிநாட்டில் தங்கள் பிள்ளைகள் படிப்பதற்காக பணம் அனுப்புபவர்கள் கூட பயன் பெறலாம். இந்த வணிகத்திற்காக, தங்கள் சொந்த ஊரில் உள்ள பங்குத் தரகரிடம் அல்லது பொருள் தரகரிடம் (Commodity Broker) இந்தியாவில் உள்ள தம் குடும்பத்தினர் பெயரில் ஒரு கணக்கு தொடங்கி கொள்ளலாம்.
நண்பர்களுக்கு ஒரு எச்சரிக்கை. இந்த வணிகம் நாணய சந்தையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக மட்டுமே . குறுகிய கால லாபம் பெறுவதற்காக அல்ல. இந்த விஷயங்களில் மேலும் விபரம் பெற விரும்புபவர்கள் http://www.nseindia.com/ வலைப் பதிவில் பார்க்கலாம் அல்லது maximumindia@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.
நன்றி.
Comments
I will give details of trading in Currency Futures soon.
Thank You