Skip to main content

வெளிநாட்டில் பணிபுரியும் நண்பர்களுக்கு ஒரு தகவல்

சமீபத்தில், வெளிநாட்டில் பணிபுரிந்து தாயகம் திரும்பிய நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்த பொழுது, டாலர் நாணய சந்தையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களினால் அவருக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து பேச்சு இருந்தது.





அதாவது, வெளிநாட்டில் அவர்தம் சம்பளம் டாலர் மதிப்பில், ஒரே அளவில் இருந்தாலும் கூட, அந்த டாலர் தொகை ரூபாயில் மாற்றம் பெறும் போது, பெருத்த மாற்றங்களை சந்திக்கிறது. இதனால் இந்தியாவில் உள்ள அவர் குடும்பத்தின் மாதாந்திர பட்ஜெட் இடுவது மிகவும் சிரமமாக இருக்கிறது.





உதாரணமாக, ரூ.49 ஆக இருந்த டாலர் காலப் போக்கில் ரூ.39 ஆக குறைந்து, பின்னர் மீண்டும் ரூ.49 அளவிற்கு உயர்ந்துள்ளது. இதனால்,1500 டாலர் சம்பளம் பெற்று சுமார் 1000 டாலர் தனது குடும்பத்திற்கு அனுப்பினால், ஒரு மாதம் 49000 ரூபாயும் சில காலம் கழித்து இன்னொரு மாதம் 39000 ரூபாயும் என மாறி மாறி வருகிறது. அந்த நண்பர் வேடிக்கையாக கூறினார். அவர் குடும்பத்தினர் அவர் மீதே சந்தேகப் படுகின்றனர் என்று.





இந்த ஏற்ற இறக்கங்களில் இருந்து அவர் போன்றவர்கள் தம்மை பாதுகாத்துக் கொள்ள இப்போது ஒரு புதிய வழிமுறை உள்ளது. அதாவது "எதிர்கால நாணய விலை ஒப்பந்தங்கள்" (Currency Futures) என்ற வணிக முறை தற்போது இந்தியாவில் (NSE &MCX) அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.





இதன் படி, ஒரு தனி நபர் (Resident Indian) டாலர் சந்தையில் "எதிர்கால நாணய விலை ஒப்பந்தங்கள்" ஒரு வருடம் வரை வாங்க விற்க முடியும். இந்த முறையினை வெளிநாட்டில் பணி புரியும் நண்பர்கள் (இந்தியாவில் உள்ள தம் குடும்பத்தினர் பெயரில்) உபயோகப் படுத்தி டாலர் ஏற்ற இறக்கங்களில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். இந்த முறையில், வெளிநாட்டில் தங்கள் பிள்ளைகள் படிப்பதற்காக பணம் அனுப்புபவர்கள் கூட பயன் பெறலாம். இந்த வணிகத்திற்காக, தங்கள் சொந்த ஊரில் உள்ள பங்குத் தரகரிடம் அல்லது பொருள் தரகரிடம் (Commodity Broker) இந்தியாவில் உள்ள தம் குடும்பத்தினர் பெயரில் ஒரு கணக்கு தொடங்கி கொள்ளலாம்.





நண்பர்களுக்கு ஒரு எச்சரிக்கை. இந்த வணிகம் நாணய சந்தையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக மட்டுமே . குறுகிய கால லாபம் பெறுவதற்காக அல்ல. இந்த விஷயங்களில் மேலும் விபரம் பெற விரும்புபவர்கள் http://www.nseindia.com/ வலைப் பதிவில் பார்க்கலாம் அல்லது maximumindia@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.





நன்றி.

Comments

நல்ல ஒரு விசயம் நன்றி
இதை செய்வதால் எப்படி டாலர் மதிப்பின் வேறுப்பாட்டில் இருந்து தப்பிக்கலாம் என்பதை விரிவாகச் சொல்லியிருக்கலாம்.
தகவலுக்கு நன்றி.ஆனால் இடைத்தரகர்ன்னு இடையில் யாரோ வருகிறாரே!அவர் எதுக்குன்னு புரியலீங்க!!
Maximum India said…
Dear Friends

I will give details of trading in Currency Futures soon.

Thank You

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

தீவிரவாதிகளை வென்ற கதை - இந்திய கமாண்டோவின் விளக்கம்

நேற்று ஒரு தீவிரவாதி பிடிப் பட்ட கதை பார்த்தோம். இன்று தாஜ் ஹோட்டலில் எவ்வாறு நான்கு தீவிரவாதிகள் ஒழிக்கப் பட்டனர் என்று விளக்கும் இந்திய கமாண்டோவின் விளக்கத்தை பார்ப்போம். முதலில் இந்தியா கமாண்டோக்கள் தாஜ் ஹோட்டல் வந்த கதை புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் மும்பையை பயங்கரவாதம் தாக்கியது. அப்போது கேரளாவில் இருந்த மகாராஷ்டிர முதல்வர் மும்பை வரவும் இந்த சூழ்நிலையின் பயங்கரத்தையும் முழுமையாக உணர்ந்துக் கொள்ளவும் 90 நிமிடம் பிடித்தது .பின்னர் 11.00 அளவில் மத்திய அரசிற்கு போன் பேசிய முதல்வர் கோரியது 200 கமாண்டோக்களை. உடனே அந்நேரத்தில் தூங்கி கொண்டிருந்த இந்திய கமாண்டோக்கள் எழுப்பப் பட்டனர். அவர்கள் மும்பை வரத் தயாரான போதுதான் புரிந்தது, அவ்வளவு பேரை மும்பை கொண்டுவர தேவையான சிறப்பு விமானம் சண்டிகரில் உள்ளது என்று. உடனே அந்த விமானியையும் தூக்கத்தில் இருந்து எழுப்பி தயார் படுத்தி டெல்லியிலிருந்து கமாண்டோக்கள் மும்பை வந்த போது நேரம் காலை 5.25 மணி. அவர்கள் தாஜ் ஹோட்டலுக்கு கொண்டு வரப்பட்டு திட்டம் தயாரிக்கப் பட்டு அவர்கள் தாஜ் ஹோட்டலுக்குள் நுழைந்த போது நேரம் காலை 7.00 மணி. அதாவது மும்பை தாக்கப் ப...

கம்ப்யூட்டர் கட்சியும் கால்குலேட்டர் கட்சியும்!

மத்திய கல்வி அமைச்சர் கபில் சிபல் இந்தியா முழுவதும் அனைவரும் தாய்மொழியுடன் ஹிந்தியும் படிக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்துள்ளார். இவ்வாறு அனைவரும் ஹிந்தி படிப்பதன் மூலம் நாட்டில் ஒருமைப்பாடு ஏற்படுவதுடன் ஹிந்தியை ஆங்கிலம் போன்று ஒரு "அறிவு மொழியாக (lingua franca)" மாற்ற முடியும் என்றும் கூறியுள்ளார். இந்த கருத்தின் மீது பதிவுலகில் ஏராளமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆங்கிலம் மட்டுமே போதும் என்று ஒரு கட்சியும், ஆங்கிலம் வாசலாக இருக்கும் போது ஹிந்தி ஒரு சன்னலாக இருந்து விட்டு போகட்டுமே என்று இன்னொரு கட்சியும் விவாதித்து வருகின்றன. ஹிந்தி எதிர்ப்பு என்பது எப்போதுமே ஒரு உணர்வு பூர்வமான விஷயமாகவே பலராலும் கருதப் பட்டாலும், அதற்கு அறிவு பூர்வமான, சரித்திர பூர்வமான சில அடிப்படைகள் உண்டு. ஹிந்தி திணிப்பு மற்றும் ஹிந்தி எதிர்ப்பு பற்றி எனக்கு தெரிந்த சில கருத்துக்களை இங்கு ஒரு புனைவு வடிவில் அளிக்க முயற்சிக்கிறேன். இப்போது புனைவு ! ஒரு காலத்தில் பரதம்பட்டி என்ற ஒரு கிராமம் இருந்ததாம். அங்கு பல ஆண்டுகள் வரை ஆட்சி செய்து வந்த துரை மகாராஜா ஒரு காலத்தில், அந்த கிராமத்தை ஜனநாயக ...