Skip to main content

சோதனை மேல் சோதனை!


சந்தைகள் சென்ற வாரம் ஒரு மிகப் பெரிய சரிவை சந்தித்தது. பங்கு சந்தையின் முக்கியக் குறியீடான நிபிட்டியின் வலுவான அரணாக கருதப் பட்ட 2700 புள்ளிகள் அளவு முற்றிலுமாக முறியடிக்கப் பட்டுள்ளது. அடுத்த வலுவான அரண் நிலை இன்னும் வெகு தொலைவு (2300) இருக்கும் நிலையில், தற்போதைக்கு சந்தைகளின் நம்பிக்கைகள் முறிந்து போன நிலையிலேயே உள்ளன. இருந்தாலும் எதிர்கால வர்த்தகப் பிரிவில் (F&O Segment) விற்று பின் வாங்கும் நிலை (Short Position) சமன் (Short Covering) செய்யப் படும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதாலும் அடுத்த வாரம், இரண்டு நாட்கள் சந்தை விடுமுறை இருப்பதாலும், சந்தையின் சரிவு இப்போதைக்கு தணிந்து காணப் படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

சென்ற வாரம் அமெரிக்க மற்றும் முக்கிய உலக சந்தைகள், உலகப் பொருளாதார பின்னடைவின் எதிரொலியாக, பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தன. இதில் சில முக்கிய குறியீடுகள் பல வருடங்களுக்கான தாழ்ந்த நிலையை சந்தித்தன. இந்தியாவிலும் கூட சென்செக்ஸ் மற்றும் நிபிட்டி குறியீடுகள் மூன்று வருடத்தில் கண்டிராத வீழ்ச்சியை சந்தித்தன. இந்தியாவின் தரவரிசை சரிந்து போனதும் அதன் எதிரொலியாக டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ந்து வந்ததும் சென்ற வார வீழ்ச்சிக்கு முக்கிய காரணங்கள்.

ரிலையன்ஸ் மற்றும் ரிலையன்ஸ் பெட்ரோலியம் நிறுவனங்களின் இணைப்பு (எதிர்பார்த்ததற்கு மாறாக) சந்தையில் வரவேற்பு பெற வில்லை. இந்திய தலைமை வங்கி தனது வட்டி வீதத்தை அரை சதவீதம் குறைத்ததும் பணவீக்கம் எழு வருடங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்ததும் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த வில்லை. மாறாக, வங்கிகளின் வாராக் கடன் பற்றிய அச்சத்தினால் வங்கிகளின் பங்குகள் பெருமளவுக்கு வீழ்ந்தன. நுகர்வோரின் வாங்கும் திறன் பற்றிய அச்சத்தினால், நுகர்வோர் பொருட்கள் துறை பங்குகள் கூட சரிந்தன. தொடர்ந்து பல வாரங்களாக தக்க வைத்துக் கொண்டிருந்த நிபிட்டி அரண் நிலையான 2700 புள்ளிகள் இந்த வாரம் முறியடிக்கப் பட்டது. சிறிய மற்றும் இடைநிலை பங்குகள் பெருத்த இழப்பை சந்தித்தன. ஆக மொத்தத்தில், சென்ற வாரம் முதலீட்டாளர்கள் மிகுந்த வேதனைப் படும் வாரமாகவே அமைந்தது.

வரும் வாரம், மிலாடி நபி மற்றும் ஹோலி பண்டிகையை முன்னிட்டு இரண்டு நாட்கள் சந்தை விடுப்பில் இருப்பதால், சந்தை வர்த்தகம் சற்று குறைந்தே காணப் படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. மேலும், ஏற்கனவே சொன்னபடி எதிர்கால வர்த்தகப் பிரிவில் (F&O Segment) விற்று பின் வாங்கும் நிலை (Short Position) சமன் (Short Covering) செய்யப் படும் என்று எதிர்பார்க்கப் படுவதால் வரும் வாரம் சந்தைகள் சற்று தணிந்து காணப் படும் என்று கருதப் படுகிறது.

நிபிட்டியில் இப்போது 2700-2720 புள்ளிகள் அளவு பெரும் எதிர்ப்பு நிலையாக இருக்கக் கூடும். அதே போல 2480-2500 அளவு நல்ல அரண் நிலையாக இருக்கும். 2250-2300 புள்ளிகள் வலுவான அரண் நிலையாக இருக்கக் கூடும். வர்த்தகர்கள் சற்று எச்சரிக்கையுடன் செயல் படுவது நல்லது. கண்டிப்பான இழப்பு நிறுத்தத்தை (Strict Stop Loss Limits)வைத்துக் கொண்டே சந்தை வர்த்தகம் செய்யவும்.

நாம் முன்னரே எதிர்பார்த்த படி ரூபாய் மேலும் இழப்பை சந்தித்துள்ளது. இந்த வாரம், பங்கு சந்தைகள் மற்றும் உலக நாணய சந்தைகளின் போக்கின் அடிப்படையில் ரூபாய் ஏற்றத் தாழ்வுகளை சந்திக்கும்.

வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

நன்றி.

Comments

KARTHIK said…
நல்ல தகவல்

sugar stocks:sakthi sugar இப்போ உள்ள இடத்தில் வாங்கலாமா அது போலவே suzlon வாங்கலாம.இல்ல இன்னும் கொஞ்சம் பாத்துட்டு வாங்களாமா
Maximum India said…
சர்க்கரை விலை ஏறுவது அந்த துறைக்கு நல்ல விஷயம்தான் என்றாலும், அளவுக்கு அதிகமான அரசு கட்டுப்பாடு மற்றும் (கச்சா எண்ணெய் விலை குறைவால்) எத்தனால் விலை சரிவு ஆகியவை அந்த துறைக்கு பாதகமான விஷயங்கள்.

சுஸ்லான் நிறுவனத்தின் பங்குகளின் விலை மிகவும் சரிந்துள்ளது அந்த பங்கின் மீது ஒருவித ஈர்ப்பை ஏற்படுத்தினாலும், அந்த நிறுவனம் சந்தித்து வரும் தொழிற் நுட்ப ரீதியான குறைபாடுகள் மற்றும் எரிசக்தி விலை வீழ்ச்சி ஆகியவை பாதகமான அம்சங்கள்.

மொத்தத்தில், இப்போதைக்கு முதலீடு செய்ய எண்ணுபவர்கள், நிறுவனங்களைப் பற்றியும் துறையை பற்றியும் ஓரளவுக்கு நன்றாக தெரிந்து கொண்டு முதலீடு செய்வதே நல்லது என்று கருதுகிறேன்.
maharaja said…
வாழ்த்துக்கள்
Maximum India said…
மஹாராஜாவின் வாழ்த்துக்களுக்கு நன்றி :)

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

இந்தியா தாக்குப் பிடிக்குமா?

இன்றைய உலகப் பொருளாதாரத் தேக்க நிலையில், இந்தியாவால் தாக்குப் பிடிக்க முடியுமா என்பது பற்றி பார்ப்போம். சமீபத்தில் வெளியிடப் பட்ட மத்திய புள்ளியல் (மத்திய அரசு) நிறுவனத்தின் மதிப்பீட்டின் படி இந்தியப் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 7.1 சதவீதம் வளர்ச்சியுறும் என்று தெரிகிறது. இது சரியாக இருக்கும் பட்சத்தில் உலகிலேயே இரண்டாவதாக வேகமாக வளர்ச்சியுறும் நாடு இந்தியாவாகத்தான் இருக்கும் (சீனா முதலாவது). சென்ற ஆண்டில் ஒன்பது சதவீதம் வளர்ச்சி பெற்றிருந்த இந்தியப் பொருளாதாரம் செப்டம்பர் 2008 வரையிலான முதல் அரையாண்டில் 7.80% வளர்ச்சிப் பெற்றிருந்தது. பொதுவாகவே பண்டிகைக் காலமாக கருதப் படுகிற இரண்டாவது அரையாண்டே தொழிற் துறையில் அதிக வளர்ச்சியைக் காட்டும் என்றாலும் இந்த முறை இந்தியத் தொழில் துறை பெரும் தேக்க நிலையில் இருந்து வந்திருக்கிறது என்பது கவனிக்கத் தக்கது. இந்திய தொழிற் வளர்ச்சி கடந்த இரு மாதங்களாக மிகவும் குறைந்து காணப் படுவதாலும் ஏற்றுமதியோ இறங்குமுகத்தில் இருப்பதாலும் இந்திய அரசாங்கம், மார்ச் 2009 வரையிலான நிதி ஆண்டின் இரண்டாவது அரையாண்டில் நமது பொருளாதாரம் குறைந்த வளர்ச்சியே (6.30%) இரு...

தீவிரவாதிகளை வென்ற கதை - இந்திய கமாண்டோவின் விளக்கம்

நேற்று ஒரு தீவிரவாதி பிடிப் பட்ட கதை பார்த்தோம். இன்று தாஜ் ஹோட்டலில் எவ்வாறு நான்கு தீவிரவாதிகள் ஒழிக்கப் பட்டனர் என்று விளக்கும் இந்திய கமாண்டோவின் விளக்கத்தை பார்ப்போம். முதலில் இந்தியா கமாண்டோக்கள் தாஜ் ஹோட்டல் வந்த கதை புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் மும்பையை பயங்கரவாதம் தாக்கியது. அப்போது கேரளாவில் இருந்த மகாராஷ்டிர முதல்வர் மும்பை வரவும் இந்த சூழ்நிலையின் பயங்கரத்தையும் முழுமையாக உணர்ந்துக் கொள்ளவும் 90 நிமிடம் பிடித்தது .பின்னர் 11.00 அளவில் மத்திய அரசிற்கு போன் பேசிய முதல்வர் கோரியது 200 கமாண்டோக்களை. உடனே அந்நேரத்தில் தூங்கி கொண்டிருந்த இந்திய கமாண்டோக்கள் எழுப்பப் பட்டனர். அவர்கள் மும்பை வரத் தயாரான போதுதான் புரிந்தது, அவ்வளவு பேரை மும்பை கொண்டுவர தேவையான சிறப்பு விமானம் சண்டிகரில் உள்ளது என்று. உடனே அந்த விமானியையும் தூக்கத்தில் இருந்து எழுப்பி தயார் படுத்தி டெல்லியிலிருந்து கமாண்டோக்கள் மும்பை வந்த போது நேரம் காலை 5.25 மணி. அவர்கள் தாஜ் ஹோட்டலுக்கு கொண்டு வரப்பட்டு திட்டம் தயாரிக்கப் பட்டு அவர்கள் தாஜ் ஹோட்டலுக்குள் நுழைந்த போது நேரம் காலை 7.00 மணி. அதாவது மும்பை தாக்கப் ப...