Monday, October 6, 2008

சில கருத்துப் பிழைகள் - சில காரணங்கள்


நம்மில், பலரும், பள்ளிப் பருவம் வரை மட்டுமே, தமிழ்க் கல்வி பயின்றுள்ளோம். பின்னர், மேற்படிப்பு, தொழிற்கல்வி மற்றும் பணியிடங்களில் (சில சமயங்களில் வாழுமிடம் கூட) பெரும்பாலும், ஆங்கிலத்திலேயே வாழ்ந்து வருகிறோம்.

இதனால், பெரும்பாலான சிந்தனைகள் ஆங்கிலத்திலேயே உள்வாங்கும் (Conception) சூழல் ஏற்படுகிறது. அவ்வாறான சிந்தனைகளை தமிழில் மொழிப் பெயர்ப்பு செய்து வெளியிடும் (பதிவு) பட்சத்தில், அதனை தமிழில் படித்து, ஆங்கிலத்தில் புரிந்து கொண்டால் மட்டுமே, சரியான கருத்து பரிமாற்றம் ஏற்படுகிறது.

ஆனால், அக்கருத்துக்களை, தமிழில் படித்து தமிழிலேயே புரிந்து கொள்ள முயற்சிக்கும் போது, குழப்பங்கள் ஏற்பட்டு, சரியான கருத்து பரிமாற்றம் நிகழாமல் போய் விடுகிறது. இதன் காரணமாகவே, தமிழில் சட்டம், கணக்கியல், மருத்துவம், பொருளாதாரம் போன்ற தொழிற் துறைகளில் சிறந்த தமிழ் எழுத்தாளர்கள் அரிதாகவே காணப் படுகின்றனர்.

இதனை தவிர்க்க, தமிழ் எழுத்தாளர்கள் (குறிப்பாக தொழிற் துறை வல்லுனர்கள்) கூடுமானவரை, தமிழிலே சிந்தித்து, கருத்துக்களை உள்வாங்கி, பின்னர் தமிழில் எழுதும் போது சிறந்த படைப்புகள் உருவாகும். பெருமளவு தமிழரையும் தொழிற் கருத்துகள் சரியான முறையில் சென்றடையும்.

சுஜாதா, தாமோதரன் போன்ற எழுத்தாளர்கள் இவ்விஷயத்தில் முன்னோடிகளாவர்.


தமிழில் சிந்திப்போம்!


சிறந்த படைப்புகளை தமிழில் உருவாக்குவோம்!


தமிழரை சென்றடைவோம்!

1 comment:

Easwar said...

IDHU ORU NALLA MUYARCHI. VAZTHUKKAL.

Blog Widget by LinkWithin