Thursday, October 2, 2008

கடவுளும் இப்போது குழப்பத்தில்!


கடவுள் உண்டு. அவர் ஒருவரே என்று சொன்னவரையும் (இரண்டாவது மற்றும் நிஜ கடவுளை விட பெரிய) கடவுளாக்கி விட்டார்கள்.

கடவுள் (வெளியில்) இல்லை. உனக்குள்ளே இருக்கிறார் என்றவரைக் கூட (வெளி) கடவுளாக்கி விட்டனர்.

கடவுள் உண்டு. அவரை அடைய வழிக் காட்டுவோம் என்றவர்களையும் கடவுளர்கள் ஆக்கி விட்டனர்.

கடவுள் பற்றி பேசாமல் அன்பைப் பற்றி மட்டுமே பேசியவரைக் கூட ஒரு கடவுளாக்கி விட்டனர்.

கடவுள் ஒருவர் மட்டுமே. நாங்கள் அவரது இறை தூதர் (மட்டுமே) என்றவர்கள் மட்டுமல்ல. அவர்கள் குடும்பத்தினர் அனைவரையும் கூட கடவுள்கள் ஆக்கி விட்டனர்.

இன்றைய தேதியில், கடவுளின் பெயரால் வியாபாரம் நடத்துபவர்கள் கூட கடவுளர்கள் ஆகி விட்டனர்.

குழப்பம் தீர்க்க வந்தவர்களின் பெயரைச் சொல்லியே பல குழப்பங்கள் நடக்கின்றன.

காற்று வாக்கில் வந்த சேதி.

(நிஜ) கடவுள் கூட இப்போது குழப்பத்தில் இருக்கிறார்.

அவரது மனக் கேள்வி.

யாரை அனுப்பி இந்த குழப்பத்தைத் தீர்க்க?

யாரையாவது அனுப்பினால், அவரையும் ஒரு கடவுளாக்கி, புதிய (அதிக) குழப்பத்தை உருவாக்கி விடுவார்களே?

சிந்திப்போமாக. அவரது கேள்விக்கு என்ன பதிலென்று?

நன்றி.

8 comments:

kama said...

இன்றைய தேதியில், கடவுளின் பெயரால் வியாபாரம் நடத்துபவர்கள் கூட கடவுளர்கள் ஆகி விட்டனர்.

இவர்களையெல்லாம் போட்டு தாக்கினால் சரியாக வரும்

KARTHIK said...

இப்படி சிந்திச்சவங்களும்,பேசுனவங்களும் தான் நாளடைவில் கடவுளாக மாறினாங்க.

நீங்க எப்போ மாறப்போரிங்க :-))

plz remove this word verification

krjtwrites said...

பிறந்தோம், வளர்ந்தோம், வாழுகிறோம் - எதற்காக?

கடவுள் கொள்கை என்பது மனிதனைப் பக்குவப்படுத்துவதற்க்காக ஏற்படுத்தப்பட்டதுதான். ஆனால் இன்று என்ன நடக்கிறது என்பதை நாடே அறியும்.

குடுகுடுப்பை said...

லேபில்: கடவுள், நையாண்டி, மதம்

உங்க வீட்டுக்கு ஆட்டோ உறுதி

Thamizhan said...

இருந்தா எப்போவே வந்திருப்பேனே!

நான் இல்லேங்கிற தைரியத்திலே தானே
ஏம்பேரே சொல்லி சொல்லி எல்லா அநியாயம்,அக்கிரமம்,ஏமாற்று எல்லாம் நடக்குது.

நான் இருக்கேன்னு உண்மையான பயம் இருந்தா இதெல்லாம் நடக்குமா?ஏம் பேரைச் சொல்றவனே தயவு செய்து நம்பாதீங்க!முடிஞ்சா ஜெயில்லே போடுங்க!எல்லாம் சரியாயிடும்.

வால்பையன் said...

அருமையான பதிவு

கபீஷ் said...

what to say , i ll write a post on this

Maximum India said...

Dear kabeesh

please inform me when you write about it. I would like to see your views also. I have a lot of thoughts about it. But no time to write.

Blog Widget by LinkWithin