Skip to main content

தமிழ் இலக்கியத்தில் சந்தை நிலவரம்

தமிழ் பதிவுலகில் (எழுத்துலகில்) நுழைந்து சுமார் 50 நாட்களே ஆகிருக்கும் பட்சத்தில், எனது எழுத்துக்களை மேம்படுத்த என் பதிவுலக நண்பர் ஒருவரிடம் கோரிய போது அவர் கூறிய யோசனை. மற்ற பதிவுகளையும் படித்து புரிந்து கொண்டு பின்னூட்டம் அளிக்க முயற்சி செய்வது. சரிதான், நம் பதிவுகளுக்கு பின்னூட்டம் இட்ட நண்பர்களின் பதிவு பூக்களிலிருந்து ஆரம்பிப்போம் என்ற எனது முடிவின் முடிவு என்னைக் கொஞ்சம் மிரளச் செய்து விட்டது.


புகைப் படங்களால் மயக்கும் ஒருவர், கவிதைகளால் வேறு உலகம் காணச் செய்யும் ஒருவர், கவிதைகளையும் கவிதையான புகைப்படங்களையும் ஒருங்கே கொடுத்து மிரட்டும் ஒருவர், காந்தி தேசத்தின் மறுபக்கம் கண்ட ஒருவர், கட்டுரையினையே கவிதையாக்கிய ஒருவர், ஜெர்மானிய ரஷ்ய இலக்கியம் பேசும் ஒருவர், ஜெயகாந்தன் முதல் ஜெயமோகன் வரை அலசும் ஒருவர், வெளி வராத புத்தகங்களுக்கு கூட விமர்சனம் எழுதும் ஒருவர் மற்றும் பதிவினையே தலை கீழாக இட்டு Irreversible Technique கண்ட ஒருவர்.


இவர்கள் எழுத்துக்களை இரு மாதங்கள் முன்னரே கண்டிருப்பேன் என்றால் நான் எழுத தைரியமாக முன்வந்திருப்பேனா என்பதே சந்தேகம்தான்.


என்னை பொறுத்த வரை (தமிழ் மற்றும் ஆங்கில) இலக்கிய அறிவு சற்று குறைவுதான். என்னுடைய தமிழ் பள்ளிப் பாட நூல்களில் உள்ளது போல இருக்கிறது என்று எனது மனைவியே கூறினார். அதில் தவறில்லை. நான் தமிழ் மற்றும் ஆங்கிலம் பயின்றது எனது பள்ளிப் பருவம் வரை மட்டுமே. அதன் பின்னர் பயின்றது தொழிற்கல்வி மற்றும் துறை சார்ந்த கல்வி மட்டுமே.


மேலும் சமூக பொருளாதார காரணங்களினால், சிறு வயதினிலேயே பணிக்கு சேர்ந்த எனது மேற்படிப்பு முழுவதும் பெரும்பாலும் தொலைதூர கல்வி மூலமே. எனவே நேரமின்மை காரணமாக கல்வி நீங்கலான மற்ற புத்தகங்கள் படிக்க அதிக வாய்ப்பு அமைய வில்லை. அதே சமயத்தில் கல்வி மற்றும் துறை சார்ந்த புத்தகங்களில் (Mechanical Engineering to Financial Engineering) எனக்கு எப்போதுமே தீராத காதல் இருந்து வந்திருக்கிறது.


நான் அறிந்த சிறிய அளவிலான தமிழ் இலக்கியம் மற்றும் இலக்கணம் கூட, இந்திய ஆட்சிப் பணிகளுக்கான முதன்மை தேர்வுக்காக தயார் படுத்த மட்டுமே. நான் படித்த சில பொது (ஆங்கில) இலக்கியங்கள் கூட சில நேர்முக தேர்வுகளை மனதில் கொண்டுதான்.


இளைய வயதினிலேயே முற்றிலும் மாறுபட்ட துறைகளில் பணியாற்றும் வாய்ப்பும் பல்வேறு ஊர்களில் வசிக்கும் வாய்ப்பும், மிகவும் வேறுபட்ட நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பும் பெற்றிருந்ததால் கிடைத்த (சிறிதளவே ஆயினும்) அறிவினையும் அனுபவத்தினையும் சிந்தனைகளையும் பகிர்ந்து கொள்ளவே சந்தை நிலவரம் என்ற இந்த பதிவு வலை. இதற்கு தமிழ் இலக்கியத்தில் எந்த இடம் என்பதே எனது இன்றைய சிந்தனை.


இரண்டாம் பத்தியில் குறிப்பிட்டுள்ளவை போன்ற பதிவுப் பூக்கள் தமிழ்த் தாயை அலங்கரிக்கும் மணம் வீசும் மலர்களாக இருக்கும் வேளையில் இந்த சந்தை நிலவரம் தமிழ்த் தாயின் கோயிலின் வெளிப்பகுதிகளை அலங்கரிக்கும் காகித பூக்களாகவாவது இருக்க வேண்டும் என்பது எனது இலக்கிய அவா.


அதற்கு உங்கள் ஊக்கமூட்டும் வாழ்த்துக்களை பணிவன்புடன் கோருகிறேன்.

Comments

MCX Gold Silver said…
sir nanraaka ealudiullirkal
MCX Gold Silver said…
sir nanraaka ealudiullirkal
வனம் said…
வணக்கம்

ஏன் நீங்கள்
Mechanical Engineering to Financial Engineering

சார்ந்த பதிவுகள் போட்டால் நிச்சையம் படிக்க தயாராக இருக்கிறேன்

துறை சார்ந்த பதிவுகள் தமிழில் மிக குறைவு

நானும் கருவியியல் படித்தவன்தான்

நன்றி
உங்களுடன் ஆன ரயில் சினேகத்தை பற்றி அடிக்கடி சொல்லுவார் நண்பர் கார்த்திக், உங்களுடய துறை சார்ந்த பதிவுகள் பெருமளவில் எனக்கு உதவியிருக்கிறது.

பின்னூட்டங்கள் தமிழில் இட்டால் மகிழ்வேன்.
Maximum India said…
அன்புள்ள வால்பையன்

பின்னூட்டதிற்கு நன்றி.

இன்னும் கூட, தமிழில் சிந்தித்து எழுத சற்று சிரமமாக இருப்பதுடன் சற்று அதிக நேரமும் ஆகிறது . அதனால்தான், பெரிய அளவிலான பின்னூட்டங்கள் ஆங்கிலத்தில் எழுதி வந்திருக்கிறேன் . (சிறிய அளவிலான பின்னூட்டங்கள் தமிழே எழுதி வருகிறேன் ) . வரும் காலங்களில் கண்டிப்பாக தமிழிலேயே அனைத்து பின்னோட்டங்களும் எழுத முயற்சிப்பேன் .
Maximum India said…
அன்புள்ள வால்பையன்

பின்னூட்டதிற்கு நன்றி.

இன்னும் கூட, தமிழில் சிந்தித்து எழுத சற்று சிரமமாக இருப்பதுடன் சற்று அதிக நேரமும் ஆகிறது . அதனால்தான், பெரிய அளவிலான பின்னூட்டங்கள் ஆங்கிலத்தில் எழுதி வந்திருக்கிறேன் . (சிறிய அளவிலான பின்னூட்டங்கள் தமிழிலேயே எழுதி வருகிறேன் ) . வரும் காலங்களில் கண்டிப்பாக தமிழிலேயே அனைத்து பின்னூட்டங்களும் எழுத முயற்சிப்பேன் .
KARTHIK said…
// என்னை பொறுத்த வரை (தமிழ் மற்றும் ஆங்கில) இலக்கிய அறிவு சற்று குறைவுதான். என்னுடைய தமிழ் பள்ளிப் பாட நூல்களில் உள்ளது போல இருக்கிறது.//

அப்படியெல்லாம் இல்லை அண்ணா அருமையா இருக்கு.பல தமிழ் புத்தகங்கலை வாசித்தாலும் ஏனோ எனக்கு எழுத்து மட்டும் வருவதே இல்லை.

உங்களுக்கு மட்டும் இல்லாமல் மற்றவருக்கும் பயன் படும்படியாக இருக்கு உங்க எழுத்து.

தொடருங்கள் வாழ்த்துக்கள்.
Maximum India said…
அன்புள்ள கார்த்திக்

பின்னூட்டதிற்கு நன்றி.

//பல தமிழ் புத்தகங்கலை வாசித்தாலும் ஏனோ எனக்கு எழுத்து மட்டும் வருவதே இல்லை.//

சில மணி நேரமே நாம் பேசி இருந்தாலும் என்னால் சொல்ல முடியும். உங்களிடம் சரக்கு உண்டு. லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவிங்கன்னு நம்பறேன்.


//உங்களுக்கு மட்டும் இல்லாமல் மற்றவருக்கும் பயன் படும்படியாக இருக்கு உங்க எழுத்து.//


தான் அறிந்ததை பிறருக்கும் சொல்ல வேண்டும் என்ற உந்துதல் எனக்கு எப்போதும் உண்டு. இது வரை சிறு நண்பர் வட்டத்திலேயே சுற்றி வந்த என் கருத்துகள் இன்று ஊரறிய செய்ததில் உங்களுக்கும் பங்கு உண்டு.

என்னுடைய ஒரே சிரமம் பல தொழிற்நுட்ப வார்த்தைகளுக்கு தமிழ் சொல் கண்டுபிடிப்பது மற்றும் தமிழில் டைப் அடிப்பது. உதாரணமாக, பலருக்கும் புதிராக இருக்கும் Derivatives பற்றி நான் சில எளிய விளக்கங்கள் அளிக்க விரும்புகிறேன். ஆனால், Derivatives என்ற சொல்லுக்கு ஏற்றுக் கொள்ளும் வகையில் என்னால் தமிழ் சொல் கண்டுபிடிக்க முடிய வில்லை. எனவே ஆரம்பமே இடிக்கிறது. இதில் உங்களாலோ அல்லது தமிழ் புலமை உள்ள வேறு நண்பராலோ உதவ முடியும் என்றால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

தீவிரவாதிகளை வென்ற கதை - இந்திய கமாண்டோவின் விளக்கம்

நேற்று ஒரு தீவிரவாதி பிடிப் பட்ட கதை பார்த்தோம். இன்று தாஜ் ஹோட்டலில் எவ்வாறு நான்கு தீவிரவாதிகள் ஒழிக்கப் பட்டனர் என்று விளக்கும் இந்திய கமாண்டோவின் விளக்கத்தை பார்ப்போம். முதலில் இந்தியா கமாண்டோக்கள் தாஜ் ஹோட்டல் வந்த கதை புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் மும்பையை பயங்கரவாதம் தாக்கியது. அப்போது கேரளாவில் இருந்த மகாராஷ்டிர முதல்வர் மும்பை வரவும் இந்த சூழ்நிலையின் பயங்கரத்தையும் முழுமையாக உணர்ந்துக் கொள்ளவும் 90 நிமிடம் பிடித்தது .பின்னர் 11.00 அளவில் மத்திய அரசிற்கு போன் பேசிய முதல்வர் கோரியது 200 கமாண்டோக்களை. உடனே அந்நேரத்தில் தூங்கி கொண்டிருந்த இந்திய கமாண்டோக்கள் எழுப்பப் பட்டனர். அவர்கள் மும்பை வரத் தயாரான போதுதான் புரிந்தது, அவ்வளவு பேரை மும்பை கொண்டுவர தேவையான சிறப்பு விமானம் சண்டிகரில் உள்ளது என்று. உடனே அந்த விமானியையும் தூக்கத்தில் இருந்து எழுப்பி தயார் படுத்தி டெல்லியிலிருந்து கமாண்டோக்கள் மும்பை வந்த போது நேரம் காலை 5.25 மணி. அவர்கள் தாஜ் ஹோட்டலுக்கு கொண்டு வரப்பட்டு திட்டம் தயாரிக்கப் பட்டு அவர்கள் தாஜ் ஹோட்டலுக்குள் நுழைந்த போது நேரம் காலை 7.00 மணி. அதாவது மும்பை தாக்கப் ப...

கம்ப்யூட்டர் கட்சியும் கால்குலேட்டர் கட்சியும்!

மத்திய கல்வி அமைச்சர் கபில் சிபல் இந்தியா முழுவதும் அனைவரும் தாய்மொழியுடன் ஹிந்தியும் படிக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்துள்ளார். இவ்வாறு அனைவரும் ஹிந்தி படிப்பதன் மூலம் நாட்டில் ஒருமைப்பாடு ஏற்படுவதுடன் ஹிந்தியை ஆங்கிலம் போன்று ஒரு "அறிவு மொழியாக (lingua franca)" மாற்ற முடியும் என்றும் கூறியுள்ளார். இந்த கருத்தின் மீது பதிவுலகில் ஏராளமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆங்கிலம் மட்டுமே போதும் என்று ஒரு கட்சியும், ஆங்கிலம் வாசலாக இருக்கும் போது ஹிந்தி ஒரு சன்னலாக இருந்து விட்டு போகட்டுமே என்று இன்னொரு கட்சியும் விவாதித்து வருகின்றன. ஹிந்தி எதிர்ப்பு என்பது எப்போதுமே ஒரு உணர்வு பூர்வமான விஷயமாகவே பலராலும் கருதப் பட்டாலும், அதற்கு அறிவு பூர்வமான, சரித்திர பூர்வமான சில அடிப்படைகள் உண்டு. ஹிந்தி திணிப்பு மற்றும் ஹிந்தி எதிர்ப்பு பற்றி எனக்கு தெரிந்த சில கருத்துக்களை இங்கு ஒரு புனைவு வடிவில் அளிக்க முயற்சிக்கிறேன். இப்போது புனைவு ! ஒரு காலத்தில் பரதம்பட்டி என்ற ஒரு கிராமம் இருந்ததாம். அங்கு பல ஆண்டுகள் வரை ஆட்சி செய்து வந்த துரை மகாராஜா ஒரு காலத்தில், அந்த கிராமத்தை ஜனநாயக ...