தமிழ் பதிவுலகில் (எழுத்துலகில்) நுழைந்து சுமார் 50 நாட்களே ஆகிருக்கும் பட்சத்தில், எனது எழுத்துக்களை மேம்படுத்த என் பதிவுலக நண்பர் ஒருவரிடம் கோரிய போது அவர் கூறிய யோசனை. மற்ற பதிவுகளையும் படித்து புரிந்து கொண்டு பின்னூட்டம் அளிக்க முயற்சி செய்வது. சரிதான், நம் பதிவுகளுக்கு பின்னூட்டம் இட்ட நண்பர்களின் பதிவு பூக்களிலிருந்து ஆரம்பிப்போம் என்ற எனது முடிவின் முடிவு என்னைக் கொஞ்சம் மிரளச் செய்து விட்டது.
புகைப் படங்களால் மயக்கும் ஒருவர், கவிதைகளால் வேறு உலகம் காணச் செய்யும் ஒருவர், கவிதைகளையும் கவிதையான புகைப்படங்களையும் ஒருங்கே கொடுத்து மிரட்டும் ஒருவர், காந்தி தேசத்தின் மறுபக்கம் கண்ட ஒருவர், கட்டுரையினையே கவிதையாக்கிய ஒருவர், ஜெர்மானிய ரஷ்ய இலக்கியம் பேசும் ஒருவர், ஜெயகாந்தன் முதல் ஜெயமோகன் வரை அலசும் ஒருவர், வெளி வராத புத்தகங்களுக்கு கூட விமர்சனம் எழுதும் ஒருவர் மற்றும் பதிவினையே தலை கீழாக இட்டு Irreversible Technique கண்ட ஒருவர்.
இவர்கள் எழுத்துக்களை இரு மாதங்கள் முன்னரே கண்டிருப்பேன் என்றால் நான் எழுத தைரியமாக முன்வந்திருப்பேனா என்பதே சந்தேகம்தான்.
என்னை பொறுத்த வரை (தமிழ் மற்றும் ஆங்கில) இலக்கிய அறிவு சற்று குறைவுதான். என்னுடைய தமிழ் பள்ளிப் பாட நூல்களில் உள்ளது போல இருக்கிறது என்று எனது மனைவியே கூறினார். அதில் தவறில்லை. நான் தமிழ் மற்றும் ஆங்கிலம் பயின்றது எனது பள்ளிப் பருவம் வரை மட்டுமே. அதன் பின்னர் பயின்றது தொழிற்கல்வி மற்றும் துறை சார்ந்த கல்வி மட்டுமே.
மேலும் சமூக பொருளாதார காரணங்களினால், சிறு வயதினிலேயே பணிக்கு சேர்ந்த எனது மேற்படிப்பு முழுவதும் பெரும்பாலும் தொலைதூர கல்வி மூலமே. எனவே நேரமின்மை காரணமாக கல்வி நீங்கலான மற்ற புத்தகங்கள் படிக்க அதிக வாய்ப்பு அமைய வில்லை. அதே சமயத்தில் கல்வி மற்றும் துறை சார்ந்த புத்தகங்களில் (Mechanical Engineering to Financial Engineering) எனக்கு எப்போதுமே தீராத காதல் இருந்து வந்திருக்கிறது.
நான் அறிந்த சிறிய அளவிலான தமிழ் இலக்கியம் மற்றும் இலக்கணம் கூட, இந்திய ஆட்சிப் பணிகளுக்கான முதன்மை தேர்வுக்காக தயார் படுத்த மட்டுமே. நான் படித்த சில பொது (ஆங்கில) இலக்கியங்கள் கூட சில நேர்முக தேர்வுகளை மனதில் கொண்டுதான்.
இளைய வயதினிலேயே முற்றிலும் மாறுபட்ட துறைகளில் பணியாற்றும் வாய்ப்பும் பல்வேறு ஊர்களில் வசிக்கும் வாய்ப்பும், மிகவும் வேறுபட்ட நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பும் பெற்றிருந்ததால் கிடைத்த (சிறிதளவே ஆயினும்) அறிவினையும் அனுபவத்தினையும் சிந்தனைகளையும் பகிர்ந்து கொள்ளவே சந்தை நிலவரம் என்ற இந்த பதிவு வலை. இதற்கு தமிழ் இலக்கியத்தில் எந்த இடம் என்பதே எனது இன்றைய சிந்தனை.
இரண்டாம் பத்தியில் குறிப்பிட்டுள்ளவை போன்ற பதிவுப் பூக்கள் தமிழ்த் தாயை அலங்கரிக்கும் மணம் வீசும் மலர்களாக இருக்கும் வேளையில் இந்த சந்தை நிலவரம் தமிழ்த் தாயின் கோயிலின் வெளிப்பகுதிகளை அலங்கரிக்கும் காகித பூக்களாகவாவது இருக்க வேண்டும் என்பது எனது இலக்கிய அவா.
அதற்கு உங்கள் ஊக்கமூட்டும் வாழ்த்துக்களை பணிவன்புடன் கோருகிறேன்.
புகைப் படங்களால் மயக்கும் ஒருவர், கவிதைகளால் வேறு உலகம் காணச் செய்யும் ஒருவர், கவிதைகளையும் கவிதையான புகைப்படங்களையும் ஒருங்கே கொடுத்து மிரட்டும் ஒருவர், காந்தி தேசத்தின் மறுபக்கம் கண்ட ஒருவர், கட்டுரையினையே கவிதையாக்கிய ஒருவர், ஜெர்மானிய ரஷ்ய இலக்கியம் பேசும் ஒருவர், ஜெயகாந்தன் முதல் ஜெயமோகன் வரை அலசும் ஒருவர், வெளி வராத புத்தகங்களுக்கு கூட விமர்சனம் எழுதும் ஒருவர் மற்றும் பதிவினையே தலை கீழாக இட்டு Irreversible Technique கண்ட ஒருவர்.
இவர்கள் எழுத்துக்களை இரு மாதங்கள் முன்னரே கண்டிருப்பேன் என்றால் நான் எழுத தைரியமாக முன்வந்திருப்பேனா என்பதே சந்தேகம்தான்.
என்னை பொறுத்த வரை (தமிழ் மற்றும் ஆங்கில) இலக்கிய அறிவு சற்று குறைவுதான். என்னுடைய தமிழ் பள்ளிப் பாட நூல்களில் உள்ளது போல இருக்கிறது என்று எனது மனைவியே கூறினார். அதில் தவறில்லை. நான் தமிழ் மற்றும் ஆங்கிலம் பயின்றது எனது பள்ளிப் பருவம் வரை மட்டுமே. அதன் பின்னர் பயின்றது தொழிற்கல்வி மற்றும் துறை சார்ந்த கல்வி மட்டுமே.
மேலும் சமூக பொருளாதார காரணங்களினால், சிறு வயதினிலேயே பணிக்கு சேர்ந்த எனது மேற்படிப்பு முழுவதும் பெரும்பாலும் தொலைதூர கல்வி மூலமே. எனவே நேரமின்மை காரணமாக கல்வி நீங்கலான மற்ற புத்தகங்கள் படிக்க அதிக வாய்ப்பு அமைய வில்லை. அதே சமயத்தில் கல்வி மற்றும் துறை சார்ந்த புத்தகங்களில் (Mechanical Engineering to Financial Engineering) எனக்கு எப்போதுமே தீராத காதல் இருந்து வந்திருக்கிறது.
நான் அறிந்த சிறிய அளவிலான தமிழ் இலக்கியம் மற்றும் இலக்கணம் கூட, இந்திய ஆட்சிப் பணிகளுக்கான முதன்மை தேர்வுக்காக தயார் படுத்த மட்டுமே. நான் படித்த சில பொது (ஆங்கில) இலக்கியங்கள் கூட சில நேர்முக தேர்வுகளை மனதில் கொண்டுதான்.
இளைய வயதினிலேயே முற்றிலும் மாறுபட்ட துறைகளில் பணியாற்றும் வாய்ப்பும் பல்வேறு ஊர்களில் வசிக்கும் வாய்ப்பும், மிகவும் வேறுபட்ட நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பும் பெற்றிருந்ததால் கிடைத்த (சிறிதளவே ஆயினும்) அறிவினையும் அனுபவத்தினையும் சிந்தனைகளையும் பகிர்ந்து கொள்ளவே சந்தை நிலவரம் என்ற இந்த பதிவு வலை. இதற்கு தமிழ் இலக்கியத்தில் எந்த இடம் என்பதே எனது இன்றைய சிந்தனை.
இரண்டாம் பத்தியில் குறிப்பிட்டுள்ளவை போன்ற பதிவுப் பூக்கள் தமிழ்த் தாயை அலங்கரிக்கும் மணம் வீசும் மலர்களாக இருக்கும் வேளையில் இந்த சந்தை நிலவரம் தமிழ்த் தாயின் கோயிலின் வெளிப்பகுதிகளை அலங்கரிக்கும் காகித பூக்களாகவாவது இருக்க வேண்டும் என்பது எனது இலக்கிய அவா.
அதற்கு உங்கள் ஊக்கமூட்டும் வாழ்த்துக்களை பணிவன்புடன் கோருகிறேன்.
Comments
ஏன் நீங்கள்
Mechanical Engineering to Financial Engineering
சார்ந்த பதிவுகள் போட்டால் நிச்சையம் படிக்க தயாராக இருக்கிறேன்
துறை சார்ந்த பதிவுகள் தமிழில் மிக குறைவு
நானும் கருவியியல் படித்தவன்தான்
நன்றி
பின்னூட்டங்கள் தமிழில் இட்டால் மகிழ்வேன்.
பின்னூட்டதிற்கு நன்றி.
இன்னும் கூட, தமிழில் சிந்தித்து எழுத சற்று சிரமமாக இருப்பதுடன் சற்று அதிக நேரமும் ஆகிறது . அதனால்தான், பெரிய அளவிலான பின்னூட்டங்கள் ஆங்கிலத்தில் எழுதி வந்திருக்கிறேன் . (சிறிய அளவிலான பின்னூட்டங்கள் தமிழே எழுதி வருகிறேன் ) . வரும் காலங்களில் கண்டிப்பாக தமிழிலேயே அனைத்து பின்னோட்டங்களும் எழுத முயற்சிப்பேன் .
பின்னூட்டதிற்கு நன்றி.
இன்னும் கூட, தமிழில் சிந்தித்து எழுத சற்று சிரமமாக இருப்பதுடன் சற்று அதிக நேரமும் ஆகிறது . அதனால்தான், பெரிய அளவிலான பின்னூட்டங்கள் ஆங்கிலத்தில் எழுதி வந்திருக்கிறேன் . (சிறிய அளவிலான பின்னூட்டங்கள் தமிழிலேயே எழுதி வருகிறேன் ) . வரும் காலங்களில் கண்டிப்பாக தமிழிலேயே அனைத்து பின்னூட்டங்களும் எழுத முயற்சிப்பேன் .
அப்படியெல்லாம் இல்லை அண்ணா அருமையா இருக்கு.பல தமிழ் புத்தகங்கலை வாசித்தாலும் ஏனோ எனக்கு எழுத்து மட்டும் வருவதே இல்லை.
உங்களுக்கு மட்டும் இல்லாமல் மற்றவருக்கும் பயன் படும்படியாக இருக்கு உங்க எழுத்து.
தொடருங்கள் வாழ்த்துக்கள்.
பின்னூட்டதிற்கு நன்றி.
//பல தமிழ் புத்தகங்கலை வாசித்தாலும் ஏனோ எனக்கு எழுத்து மட்டும் வருவதே இல்லை.//
சில மணி நேரமே நாம் பேசி இருந்தாலும் என்னால் சொல்ல முடியும். உங்களிடம் சரக்கு உண்டு. லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவிங்கன்னு நம்பறேன்.
//உங்களுக்கு மட்டும் இல்லாமல் மற்றவருக்கும் பயன் படும்படியாக இருக்கு உங்க எழுத்து.//
தான் அறிந்ததை பிறருக்கும் சொல்ல வேண்டும் என்ற உந்துதல் எனக்கு எப்போதும் உண்டு. இது வரை சிறு நண்பர் வட்டத்திலேயே சுற்றி வந்த என் கருத்துகள் இன்று ஊரறிய செய்ததில் உங்களுக்கும் பங்கு உண்டு.
என்னுடைய ஒரே சிரமம் பல தொழிற்நுட்ப வார்த்தைகளுக்கு தமிழ் சொல் கண்டுபிடிப்பது மற்றும் தமிழில் டைப் அடிப்பது. உதாரணமாக, பலருக்கும் புதிராக இருக்கும் Derivatives பற்றி நான் சில எளிய விளக்கங்கள் அளிக்க விரும்புகிறேன். ஆனால், Derivatives என்ற சொல்லுக்கு ஏற்றுக் கொள்ளும் வகையில் என்னால் தமிழ் சொல் கண்டுபிடிக்க முடிய வில்லை. எனவே ஆரம்பமே இடிக்கிறது. இதில் உங்களாலோ அல்லது தமிழ் புலமை உள்ள வேறு நண்பராலோ உதவ முடியும் என்றால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.