Skip to main content

Posts

Showing posts from November, 2008

நாளை நமதே

சென்ற வார நிலவரம் கடந்த வாரம் சிட்டி பேங்க் மீட்டெடுப்பு மற்றும் சீனா வட்டி வீதக் குறைப்பு உலக சந்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்பட உதவின. இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் வர்த்தகர்களின் மனப் போக்கை சற்று பாதித்தாலும் சந்தையில் பெருமளவு வீழ்ச்சி ஏற்பட வில்லை. காரணம், இந்திய பொருளாதார வளர்ச்சி 7.60% சதவீதமாக இருந்ததும், பணவீக்கம் (8.84%) தொடர்ந்து குறைந்து வருவதுமே. இதனால், வட்டி வீதங்கள் மேலும் நமது தலைமை வங்கியினால் குறைக்கப் படும் என வர்த்தகர்கள் நம்புகிறார்கள். வாரக் கணக்குப் படி சென்செக்ஸ் மற்றும் நிபிட்டி குறியீடுகள் சிறிய அளவில் முன்னேற்றம் கண்டுள்ளன. ரியல் எஸ்டேட் பங்குகள் அதிகம் வீழ்ச்சி கண்டுள்ளன. வெளிநாட்டு நிறுவனங்கள் தொடர்ந்து இந்திய பங்குகளை விற்ற வண்ணம் இருக்கின்றன. இதன் காரணமாக டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு (50.12) சிறிய அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது. வரும் வார நிலவரம் டெக்னிகல் அனலிசிஸ் படி சென்செக்ஸ் குறியீடு 8900 புள்ளிகளுக்கு மேல் முடிவடைந்து இருப்பது சந்தைக்கு தெம்பை அளிக்கிறது. சந்தை மேலே செல்ல வாய்ப்புகள் அதிகம். முக்கிய சப்போர்ட் நிலைகள் 8650. முக்கிய எதிர்ப்பு நிலைக...

தீவிரவாதிகளை வென்ற கதை - இந்திய கமாண்டோவின் விளக்கம்

நேற்று ஒரு தீவிரவாதி பிடிப் பட்ட கதை பார்த்தோம். இன்று தாஜ் ஹோட்டலில் எவ்வாறு நான்கு தீவிரவாதிகள் ஒழிக்கப் பட்டனர் என்று விளக்கும் இந்திய கமாண்டோவின் விளக்கத்தை பார்ப்போம். முதலில் இந்தியா கமாண்டோக்கள் தாஜ் ஹோட்டல் வந்த கதை புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் மும்பையை பயங்கரவாதம் தாக்கியது. அப்போது கேரளாவில் இருந்த மகாராஷ்டிர முதல்வர் மும்பை வரவும் இந்த சூழ்நிலையின் பயங்கரத்தையும் முழுமையாக உணர்ந்துக் கொள்ளவும் 90 நிமிடம் பிடித்தது .பின்னர் 11.00 அளவில் மத்திய அரசிற்கு போன் பேசிய முதல்வர் கோரியது 200 கமாண்டோக்களை. உடனே அந்நேரத்தில் தூங்கி கொண்டிருந்த இந்திய கமாண்டோக்கள் எழுப்பப் பட்டனர். அவர்கள் மும்பை வரத் தயாரான போதுதான் புரிந்தது, அவ்வளவு பேரை மும்பை கொண்டுவர தேவையான சிறப்பு விமானம் சண்டிகரில் உள்ளது என்று. உடனே அந்த விமானியையும் தூக்கத்தில் இருந்து எழுப்பி தயார் படுத்தி டெல்லியிலிருந்து கமாண்டோக்கள் மும்பை வந்த போது நேரம் காலை 5.25 மணி. அவர்கள் தாஜ் ஹோட்டலுக்கு கொண்டு வரப்பட்டு திட்டம் தயாரிக்கப் பட்டு அவர்கள் தாஜ் ஹோட்டலுக்குள் நுழைந்த போது நேரம் காலை 7.00 மணி. அதாவது மும்பை தாக்கப் ப...

மும்பையை உலுக்கிய தீவிரவாதியின் வாக்குமூலம்

மும்பையை தாக்கிய தீவிரவாதிகளில் ஒருவனைத் தவிர அனைவரும் கொல்லப் பட்டு விட்டனர். ஒருவன் மட்டும் போலீஸ் கையில் அகப்பட்டுக் கொண்டான். அவனது பெயர் ஆஜாம் அமீர் கசாவ். வயது 21. பிறப்பிடம் பரிட்கொத், பாகிஸ்தான். மும்பை தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளில் இவனுடைய புகைப்படம்தான் முதலில் எடுக்கப் பட்டது என்பது குறிப்பிடத் தக்கது. அவனை மும்பை போலீசார் பிடித்த விவரம் மற்றும் அவனுடைய அவன் தந்த தகவல்கள் இங்கே. புதன் கிழமை இரவு , மும்பை சி.எஸ்.டி ரயில் நிலையத்தை தாக்கிய இவனும் இவன் கூட்டாளியும் காமா மருத்துவமனைக்கு சென்றனர். அங்கே வந்த மும்பை தீவிரவாதி தடுப்பு தலைவர் மற்றும் இதர போலீஸ் அதிகாரிகளை சுட்டுக் கொன்ற இவர்கள், அந்த காரை கடத்தி கொண்டு மெட்ரோ பகுதிக்கு சென்றனர். அங்கேயும் துப்பாக்கி சூடு இவர்கள் நடத்த பதிலுக்கு போலீசும் திருப்பிச் சுட்டனர். காரின் டயர் பஞ்சர் ஆகி விட, அந்த வழியே வந்த ஒரு காரை வழி மறித்து அதில் ஏறிக் கொண்ட இவர்கள் மும்பையின் மிகப் பெரிய பணக்காரர்கள், அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் மகாராஷ்டிரா கவர்னர் வாழும் பகுதியை நோக்கி காரை செலுத்தினர். கிரகாம் பீச் அருகே வழி மறித்த ப...

ஜெய பேரிகை கொட்டடா!

மும்பையை உலுக்கிய தீவிரவாதிகளின் தாக்குதல் சுமார் 59 மணி நேரங்களுக்கு பின்னர் ஒரு முடிவுக்கு கொண்டு வரப் பட்டுள்ளது. ஒபேராய் ஹோட்டல் மற்றும் நரிமன் ஹௌஸ் ஆகிய இடங்களில் தீவிரவாதிகள் நேற்றே கொல்லப் பட்டனர். தாஜ் ஹோட்டலில் மற்றும் நீடித்து வந்த சண்டை இன்று காலை முடிவுக்கு வந்துள்ளது. ஒரு தீவிரவாதி மட்டும் உயிருடன் பிடிக்கப் பட்டதாக சில தகவல்கள் சொல்லுகின்றன. இந்த வெற்றிக்கு காரணமாக இருந்த இந்திய ராணுவத்தினருக்கும் கமாண்டோ படையினருக்கும் வாழ்த்துகளும் நன்றிகளும் தெரிவித்து கொள்வோம். இதற்காக இன்னுயிர் நீத்த வீரர்களுக்கு அஞ்சலியும் அவர்கள் குடும்பத்துக்கு நன்றியும் ஆறுதலும் சொல்வோம். அரசு அவர்களுக்கு சிறந்த வாழ்வு அமைத்து தர வேண்டிக் கேட்டுக் கொள்வோம். இந்திய மக்கள் தற்போதைக்கு நிம்மதி பெருமூச்சு விட்டாலும், ஏராளமான கேள்விகள் மனதில் எழுகின்றன. எத்தனை நாளைக்கு இந்த நிம்மதி? எவ்வளவு நாட்கள் ராணுவத்தினரும் கமாண்டோ படையினரும் மும்பையில் நிலை கொண்டிருப்பார்கள்? அரசியல் வாதிகளை பாதுகாக்க அவர்கள் மீண்டும் டெல்லிக்கே திரும்ப வேண்டுமல்லவா? இது போன்ற தாக்குதல்களின் போது ஒவ்வொரு முறையும் கமாண்டோக்கள்...

சீனா வகுப்பறையில் "சிங்கூர்" பாடம்

இதென்ன மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்குமான முடிச்சு என்கிறீர்களா? இது ஒரு கதை அல்ல நிஜம். சென்ற வாரம், சீனாவில் பீஜிங் நகரில் வணிக செய்தி துறை மாணவர்களுக்காக எடுக்கப் பட்ட பாடம் இது. பாடத்தின் பெயர் வெற்றியாளர்களும் தோற்று போனவர்களும் - டாட்டா மோடோர்ஸ் மற்றும் மேற்கு வங்காளம். இந்த பாடத்தை எடுத்துக் கொண்டதற்கு, வகுப்பை நடத்தியவர் (Martin Mulligan of the Financial Times, லண்டன்) கூறும் காரணங்கள் என்ன தெரியுமா? "உலகின் கவனம் இன்றைக்கு இருப்பது நானோ காரின் மேல். நானோ கார் ஒரு சரித்திரம். ஒரு ஆடம்பர மெர்சிடிஸ் காரின் ச்டீரியோவின் (Stereo System) செலவில் ஒரு நானோ கார் வாங்க முடியும். இது ஒரு மிகப் பெரிய சாதனை. அதே சமயத்தில் இந்த பிரச்சினை குறித்து வெவ்வேறு கருத்துகள் உலா வருகின்றன. மேலும் ஒரு காரணம். 8 கோடி மக்கள் தொகை கொண்ட ஒரு விவசாயத்தை அதிகம் நம்பியுள்ள மாநிலத்தில் இந்த பிரச்சினை நடந்து இருப்பது. இதன் மூலம் அதிக மக்கள் தொகை மற்றும் ஏழ்மை பகுதிகளில் தொழிற்சாலைமயமாக்குவதில் உள்ள சிரமங்கள் குறித்து ஆராய முடியும்" மேலும் வேகமாக வளர்ந்து வரும் சீனாவின் வாகனத்துறை (Automobile Indust...

இந்தியர்கள் மீது அறிவிக்கப்பட்டுள்ள யுத்தம் - மும்பையிலிருந்து ஒரு ரிப்போர்ட்

இதுவரை இந்தியா மீது தீவிரவாதிகள் நடத்தி வந்தது அறிவிக்கப் படாத மறைமுக யுத்தம் (குண்டுகளை பதுக்கி வைத்திருந்து வெடிக்கச் செய்வது). இந்த யுத்தத்தில் அதிகம் பாதிக்கப் பட்டவர்கள் அப்பாவி பொது மக்கள் மட்டுமே. ஆனால் இந்த முறை நடந்திருப்பது அறிவிக்கப்பட்ட நேரடி யுத்தம். இதில் பாதிக்கப் பட்டுள்ளவர்கள் பொது மக்கள் மட்டும் அல்ல. போலீஸ் அதிகாரிகள், வெளி நாட்டினர் (சில பாராளுமன்ற உறுப்பினர்களும் கூட உண்டு) , பெரும் செல்வந்தர்கள், உள்நாட்டு அதிகாரிகள் மற்றும் முக்கிய புள்ளிகள். இது பற்றி மும்பையிலிருந்து ஒரு நேரடி ரிப்போர்ட் இங்கே. "வந்தார்கள் வென்றார்கள்" புத்தகத்தை உங்களில் பலர் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அதில் சில ஆயிரம் வீரர்களை கொண்டு இந்தியாவிற்குள் நுழைந்த பாபர் போன்றவர்கள் லட்சக் கணக்கான வீரர்களை கொண்ட அப்போதைய இந்திய மன்னர்களை தோற்கடித்தார்கள் என்று படித்த போது நம்புவது கடினமாக இருந்தது. ஆனால் நேற்று மும்பையில் நடந்தேறியிருக்கும் இந்த தீவிரவாதிகளின் தாக்குதலைப் பார்க்கும் போது சிலரால் பலரை வெல்ல முடியும் என்று இன்னமும் நம்பும் பாகிஸ்தான் மக்கள் நம்பிக்கை சரிதானோ என்...

ஒரே இரவில் குண்டாகிப் போன ஏழு கோடி இந்தியர்கள்?

நீங்கள் குண்டா ஒல்லியா? (நாயகன் ஸ்டைலில் எனக்கே தெரியலேயப்பா என்று சொல்லி விடாதீர்கள்). குண்டு என்று நினைத்திருந்தால் ஓகே. ஆனால் நேற்று வரை ஒல்லி அல்லது சரியான எடை என்று நினைத்திருப்பவர்கள், இன்று தங்கள் எண்ணத்தை உடனடியாக மறு பரிசீலனை செய்ய வேண்டியிருக்கும். ஏனென்றால், நேற்று வரை இப்படித்தான் தம்மை ஒல்லிபிச்சான்களாக நினைத்து கொண்டிருந்த சுமார் ஏழு கோடி இந்தியர்கள் ஒரே நாளில் இன்றைக்கு குண்டர்கள் (obese) ஆகி விட்டார்கள் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன. விவரங்கள் கீழே. உலக நல அமைப்பு (WHO), ஒருவரின் உயரம், உடல் எடை மற்றும் இடுப்பளவு ஆகியவற்றின் அடிப்படையில் அவர் குண்டா ஒல்லியா அல்லது சரியான எடை கொண்டவரா என்பதை நிர்ணயிக்க சில தரக் கட்டுப்பாடுகள் வகுத்திருந்தது. அதன் படி உடல் எடைக் குறியீடு (Body Mass Index - BMI) மற்றும் இடுப்பு சுற்றளவு முறையே 30 மற்றும் 102 செண்டி மீட்டர் அளவுக்கு மேல் இருந்தால் குண்டர்கள் எனவும் BMI 25 க்கு மேல் இருந்தால் அதிகப் படியான எடை கொண்டவர் எனவும் நிர்ணயம் செய்திருந்தது. நேற்று வரை இந்த தர நிர்ணயங்கள் நடைமுறையில் இருந்தன. ஆனால், வெவ்வேறு நாடுகளை சார்ந்த மருத்த...

எனது பொருளகராதியில் சில தலைவர்கள்

என்னை ஈர்த்த சில தலைவர்களின் பட்டியல் இங்கே காந்தி அடிகள்: நினைத்ததை முடித்தவர். வல்லவனுக்கும் (பிரிட்டிஷ் சாம்ராஜ்யம்) வல்லவர். அஹிம்சையால் ஹிம்சித்து அவர்களை வென்றவர். நேருஜி: இந்தியாவை கண்டுபிடித்தவர் (Discovery of India). பெரும் செல்வந்தராகப் பிறந்தும் சோசலிசம் பேசியவர். கர்மவீரர் காமராஜர்: படிப்பின் அருமை தெரிந்த படிக்காத மேதை. பதவி பணத்துக்காக அல்ல என்று நிருபித்து அரசியல்வாதிகள் தினமும் படிக்க வேண்டிய பாடமாக இருப்பவர். பெரியார்: தமிழகத்தின் விடி வெள்ளி. தமிழனை ஏன் என்று கேட்க வைத்தவர். அவரது சமூக புரடசியே இன்றைய தமிழகம் கண்டுள்ள சமூக முன்னேற்றத்திற்கு அடிப்படை ஆகும். டாக்டர் அம்பேத்கர்: பிறக்கும் சூழ்நிலை மட்டுமே ஒரு மனிதனின் வெற்றிக்கு ஆதாரம் ஆகாது என்று மீண்டும் ஒரு முறை நிரூபித்தவர். உயர உயர பறந்தால் ஊர்குருவியால் பருந்தாக முடியும் என்று இந்த உலகுக்கு காட்டியவர். அறிஞர் அண்ணாதுரை: கட்சியை குடும்பமாக நினைத்தவர். சொந்த குடும்பத்தை மறந்தவர். இந்திரா காந்தி அம்மையார்: போக்ரானையும் பங்களாதேஷையும் உலகுக்கு காட்டியவர். அவர் இன்றைக்கு இருந்திருந்தால், இலங்கை பிரச்சினைக்கு வேறு விதமான...

இந்திய வணிக நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு?

ஒரு வணிக நிறுவனத்தை இந்திய கம்பெனி சட்டம் (உருவாக்கப் பட்ட) ஒரு செயற்கையான மனிதனாகவே கருதுகிறது. ஒரு சாதாரண இந்திய குடிமகனுக்கு உரித்தான அனைத்து சமூக கடமைகளும் பொறுப்புகளும் இந்திய வணிக நிறுவனங்களுக்கும் உண்டு. ஆனால் இந்திய (தனியார்) வணிக நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்ச்சி எப்போதுமே ஒரு மிகப் பெரிய கேள்விக் குறியாகவே இருந்து வருகிறது. மேலும், இந்த நிறுவனங்களை பின்னின்று இயக்கும் இவற்றின் நிறுவனர்களை (எப்போதுமே) லாப நோக்கில் மட்டுமே இயங்கும் சுய நல சுரண்டல் கும்பலாகவே பலர் கருதி வருகின்றனர். இதற்கு காரணமில்லாமல் இல்லை. இந்திய வணிக நிறுவனங்களின் மீது பொதுவாக சுமத்தப் படும் குற்றச் சாட்டுகள் கீழே. 1.சரியான விலை அளவான லாபம் என்ற காந்திய கொள்கை எப்போதுமே இந்திய வணிக நிறுவனங்களுக்கு இருந்ததில்லை. பல சமயங்களில், சந்தைகளில் ஒரு கூட்டாதிக்கத்தை (Oligopoly) ஏற்படுத்திக் கொண்டு நுகர்வோரை ஏய்ப்பது வழக்கமாகிப் போன ஒன்று. விற்பனை விலையில் உற்பத்தி செலவு 10-20 சதவீதம் மட்டும் இருக்க லாபம் (margin) 80-90 சதவீதம் வரை கூட இருப்பதும் கூட உண்டு. 2. அதிக லாபம் பெற்றாலும் ஊழியர்களுக்கு மிகக் குறைவான ஊதியம...

முத்திரை பதித்த மூவர் கூட்டணி

சமீபத்தில் நடை பெற்ற G-20 மாநாட்டில் அனைவரின் கவனமும் சீனாவின் மீதுதான் இருந்தது. இந்த மாநாடு துவங்குவதிற்கு சற்று முன்னர்தான் சீனா 25 லட்ச கோடிகள் மதிப்புள்ள ஒரு மிக பெரிய பொருளாதார திட்டத்தை அறிவித்திருந்தது. அந்த திட்டம் மொத்த உலகினையே பொருளாதார தேக்கதிலிருந்து மீட்டெடுக்கும் வல்லமை படைத்ததாக இருக்கும் என்றும் பலர் நம்பினர். அதே சமயத்தில் அவ்வளவு பெரிய பண வலிமை இல்லாத நாடாக கருதப் படும் இந்தியாவிலிருந்து சென்ற மூவர் கூட்டணி, இந்தியாவின் நிலையை சிறப்பாக வெளிப்படுத்தியதுடன், உலகை பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீட்க இந்தியா தெரிவித்த யோசனைகளை அனைத்து நாடுகளும் ஏற்றுக் கொள்ளும்படியும் செய்துள்ளது குறிப்பிடத் தக்கது. விவரங்கள் கீழே. G-20 என்பது உலகின் முன்னேறிய நாடுகள் மற்றும் (முக்கிய) முன்னேறி வரும் நாடுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய முக்கிய கூட்டமைப்பு ஆகும். இன்றைய உலக பொருளாதார சிக்கலை எப்படி சமாளிப்பது என்று ஆலோசிப்பதற்காக, இந்த G-20 நாடுகளின் உச்சி மாநாடு அமெரிக்காவில் சமீபத்தில் நடை பெற்றது. இந்த பொருளாதார சிக்கலை முதலில் உருவாக்கிய நாடாகிய அமெரிக்காவின் தலைமை பொறுப்பிலிருக்கும் திரு. ...

சிட்டி பேங்க் இப்போது சிக்கலில் - ஓர் இந்திய பார்வை

சிட்டி பேங்க் உலகின் மிகப் பெரிய பன்னாட்டு வணிக வங்கிகளுள் ஒன்று. இந்தியா உட்பட உலகின் 100 நடுகளுக்கும் மேல் இந்த வங்கிக்கு கிளைகள் உண்டு. சுமார் 3,00,000 பேருக்கு மேல் இந்த வங்கியில் பணி புரிகின்றனர். இப்போதைக்கு இதனுடைய தலைவர் ஒரு இந்தியர் (விக்ரம் பண்டிட் ). இந்த வங்கி தொடங்கி (1812) கிட்டத்தட்ட 200 வருடங்கள் ஆகின்றன . இந்த வங்கியின் பாலன்ஸ் சீட் அளவு சுமார் 2 டிரில்லியன் டாலர். அதாவது இன்றைய இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 1 கோடியே கோடி ரூபாய். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை போல இரண்டு மடங்குக்கும் மேலே. அமெரிக்காவின் சப்ப்ரைம் பிரச்சினை (Subprime Crisis) இந்த வங்கியினையும் விட்டு வைக்க வில்லை. கடந்த வருடம் இந்த வங்கி சுமார் 20 பில்லியன் டாலர் (சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய்) இழப்பை சந்தித்துள்ளது. இந்த வங்கி திவால் ஆகும் சூழ்நிலை இப்போது ஏற்பட்டுள்ளது. மேலும் 52,000 பணியாளர்கள் (இந்தியாவில் மட்டும் 1,000 பேர்) வீட்டிற்கு அனுப்பப் படுவார்கள் என இந்த வங்கியின் நிர்வாகம் தெரிவித்துள்ளது . ஏற்கனவே 23,000 பேர் வீட்டுக்கு அனுப்ப பட்டனர் என்பது குறிப்பிடத் தக்கது. இதன் தலைவர் (விக...

இங்கே வாருங்கள்! இந்தியாவைக் கண்டுபிடியுங்கள்!

நீங்கள் சரித்திர ஆர்வம் கொண்டு மதனின் "வந்தார்கள் வென்றார்கள்" போன்ற வரலாற்றின் அடிப்படையிலான புத்தகங்களைப் படிப்பதில் ஈடுபாடு கொண்டவரா? சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை நேரில் சென்று பார்க்கும் ஆர்வம் கொண்டவரா? அந்த இடங்களில் நிற்கும் போது, காலத்தில் சற்றே பின்னோக்கி பயணம் செய்து "இங்கேதானே அக்பர் நின்றிருந்திருப்பார், அங்கேதானே ராஜ ராஜ சோழன் வாழ்ந்து இருப்பார் என்றெல்லாம் கற்பனை செய்து பார்ப்பவரா? நீங்கள் வந்து பார்க்க வேண்டிய இடம் இது. உலகின் பெரும்பாலான நாகரிகங்களுக்கும் இந்திய நாகரிகத்திற்கும் ஒரு முக்கிய வேறுபாடு உண்டு. அதாவது, மிக குறைந்த காலமே சரித்திரத்தை உள்ளடக்கிய, உலகின் பெரும்பாலான நாகரிகங்களின் வரலாற்றின் வேரை எளிதாக தேடி கண்டுபிடித்து விட முடியும். ஆனால் இந்தியா போன்று குறைந்த பட்சம் 50,000 ஆண்டு கால சரித்திரம் கொண்ட ஒரு நாட்டின் வரலாற்று வேரினை கண்டுபிடிப்பது மிகவும் கடினம். ஏனெனில், ஆலமரத்தின் பல்கி பெருகிய விழுதுகள் போன்று இந்தியாவில் பின்னர் வந்து கலந்த நாகரிகங்கள் ஏராளம். அந்த விழுதுகளும் ஒரு வேரினைப் போலவே இந்திய ஆலமரத்தினை இன்றைக்கு தாங்கிக...

நிஜ வாழ்வின் உண்மையான ஒரு ஹீரோ

என்னுடைய விவரம் புரியாத வயதில் பழைய படங்கள் பார்க்க செல்லும் போதேல்லாம் தூங்கி விடும் வழக்கம் கொண்ட நான், நம்பியார் வரும் காடசிகளில் மட்டும் (அப்போதுதானே சண்டை காட்சிகளை பார்க்க முடியும்) எழுப்பி விடுமாறு கேட்பேன் என்று என் அம்மா கூறுவார். மேலும் பிடித்த நடிகர் யார் என்று கேட்கும் போதெல்லாம் என் வயதொத்தவர்கள் கமல் ரஜினி என்று சொல்லும் போது நான் மட்டும் நம்பியார் என்று சொல்வேன் என்றும் கேலி செய்வார். எனக்கு ஓரளவு விவரம் தெரிந்த போது நம்பியார் அவர்கள் வயது முதிர்ந்த நகைச்சுவை மற்றும் குணசித்திர பாத்திரங்களிலேயே நடித்து வந்தார். அவருடைய நகைச்சுவை நடிப்பை மிகவும் விரும்பிய நான், அவர் (சினிமாவில்) கலங்கும் போது பாதிப்பும் அடைந்திருக்கிறேன். சினிமா என்ற நிழல் உலகம் வேறு நிஜ உலகம் வேறு என்று அறிந்த வயதிலும் கூட, மன சலனம் எளிதில் ஏற்படக் கூடிய ஒரு துறையில் அவர் பணியாற்றி வந்தாலும் தனி மனித வாழ்வில் ஒழுக்கம் பாராட்டியவர் என்று அறிந்த பின்னர் அவர் நான் விரும்பக் கூடிய ஒரு மனிதராகவே தொடர்ந்து இருந்திருக்கிறார் . மேலும் மனம் மற்றும் உடல் நலத்திற்கு தீங்கான பழக்க வழக்கங்களில் ஈடுபடாதவர் என்ற முறைய...

யார் இந்த கடற் கொள்ளைக்காரர்கள்?

உலகின் மேற்கு பகுதியையும் கிழக்கு பகுதியையும் இணைக்கும் மிக முக்கிய கடல் வழிப் பாதையான ஏடன் கடல் பகுதியில் சோமாலிய நாட்டைச் சேர்ந்த கடற் கொள்ளையர்கள் பல கப்பல்களை கொள்ளையடித்தும் கடத்தியும் பன்னாட்டு கப்பல் போக்குவரத்து கம்பெனிகளின் வயிற்றில் புளியைக் கரைத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள் இங்கே. மிகப் பழங்காலத்திலேயே அரேபியா கடல் பகுதியில் மிகப் பெரும் கொள்ளைகள் நடை பெற்றதாக சரித்திரக் குறிப்புகள் உள்ளன. பண்டைய சரித்திரத்தின் அடிப்படையில் எழுதப் பட்ட புகழ் பெற்ற நவீனமான கல்கியின் "பொன்னியின் செல்வன்" படித்திருக்கிறீர்களா? அதில் கூட இவர்களைப் பற்றி சில குறிப்புகள் (மூர்க்கமான புதிய வகை அரேபியா கடல் கொள்ளைக்காரர்கள்) உள்ளன. அருள்மொழி செல்வன் உத்தம சோழரை பதவியில் அமர்த்தி விட்டு இந்த கொள்ளை கும்பலை அடக்க செல்ல விரும்புவதாக ஒரு குறிப்பு கூட இருக்கும். இந்தியாவின் மேற்கு கடலோரம் இருக்கும் "வெல்ல முடியாத கடற் கோட்டையை" கட்டியவர்கள் கூட இந்த சொமாலியரே. கொள்ளை அடிக்கும் தொழில் இவர்கள் ஜீன்களிலேயே இருக்கும் போலிருக்கிறது. சோமாலியா வடகிழக்கு ஆ...

இந்திய ரியல் எஸ்டேட் துறை சந்திக்கும் சவால்கள்

அமெரிக்கா பொருளாதாரத்தின் வீழ்ச்சிக்கு அவர்களின் ரியல் எஸ்டேட் துறையின் சரிவே முக்கிய காரணமாகும். அதன் தாக்கம் இந்தியாவிலும் வெளிப்பட ஆரம்பித்துள்ளது. தற்போது, இந்திய ரியல் எஸ்டேட் துறையில் தேவைகள் குறைந்து போனதற்கு முக்கிய காரணங்கள் கீழே. 1. பொருளாதார தேக்கத்தின் காரணமாக புதிய தொழில்களும் வியாபாரங்களும் தொடங்கப் படுவது இந்தியாவிலும் இப்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப் பட்டுள்ளன. இதன் காரணமாக புதிய அலுவலங்களுக்கான கட்டிடங்களின் தேவை மிகவும் குறைந்து காணப் படுகிறது. 2. மேலும், சொந்த வீடு வாங்க விரும்புவோரில் சிலர் , வருங்காலத்தில் விலை குறையும் என்ற நம்பிக்கையால் தமது வீடு வாங்கும் முடிவை தள்ளிப் போடுகின்றனர். வேறு சிலர், தனது பணி, தொழில் மற்றும் வியாபாரங்களின் வருங்காலம் தெளிவாக கணிக்க முடியாத காரணத்தினால், இது போன்ற முதலீட்டு முடிவுகளை எடுக்க தயங்குகின்றனர். ரியல் எஸ்டேட் வாங்கி விற்கும் வியாபாரிகள் இத்துறை சந்திக்க இருக்கும் கடும் நெருக்கடிகளை முன்கூட்டியே அறிந்திருப்பதால், இதில் பணம் போட முன் வருவதில்லை. வெளிநாட்டு நிறுவனங்கள் அவர்களது நாட்டில் ஏற்பட்ட நிதி நெருக்கடி சமயத்தில் வளரு...

காஷ்மீர் தேர்தல் தரும் புதிய நம்பிக்கைகள்.

காஷ்மீர் தேர்தலின் முதல் கட்ட வாக்குப் பதிவு நேற்றைய தினம் நடைபெற்றுள்ளது. இந்த வாக்கு பதிவின் போது பொது மக்கள் திவிரவாதிகளின் அச்சுறுத்தல்களையும் மீறி கடும் பனி மற்றும் குளிரையும் (-11 c) பொருட்படுத்தாது பெருமளவில் திரண்டு வந்து வாக்களித்து உள்ளனர். சராசரி வாக்கு பதிவு சுமார் 55 சதவீதம் என்று முதல் கட்ட தகவல் அறிக்கை தெரிவிக்கின்றது . பிரிவினை வாதம் பேசப் படும் காஷ்மீரில் இவ்வளவு மக்கள் (இந்திய ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்து) வாக்கு அளித்து இருப்பது மன நிறைவை தருகிறது. இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது பண்டிபோரா (Bandipora) மாவட்டத்தில் உள்ள ஒரு தொகுதியில் 74 சதவீதம் வாக்கு பதிவு ஆகி இருப்பது. ஏனெனில், இந்த மாவட்டத்தை தீவிரவாதிகள் தமது பிரிவினை வாத முயற்சிகளுக்கு சோதனை களமாக (Test Case/ Pilot Project) பயன்படுத்தியது குறிப்பிடத் தக்கது. தீவிரவாதிகளின் கனவு மாவட்டமே அவர்களின் மிரட்டலுக்கு அடி பணியாது மிகுந்த மன மகிழ்ச்சியை தருகிறது. இந்த தேர்தலில் வாக்கு பதிவின் துவக்கத்திலேயே மூன்றாவது நபராக வந்து ஒரு (சரணடைந்த) முன்னாள் தீவிரவாதி வாக்கு அளித்திருப்பதும், பல வாக்காளர்கள், விடுதலைக்காக ...

வாழ்க்கை பிரச்சினைகளால் மனம் தளர்ந்து போகிறீர்களா?

கவலைப் படாதீர்கள். நம்பிக்கைகளால் மன தளர்ச்சிகளை வெல்ல முடியும். சொல்பவர் யார் தெரியுமா? பிறவியிலேயே கை கால்களை முழுமையாக இழந்தும் வாழ்வில் வெற்றிபெற்ற திரு.நிக். இந்த நம்பிக்கை நட்சத்திரத்தைப் பற்றி சில விஷயங்கள் உங்களுடன் பகிர்ந்து கொள்ள நான் விரும்புகிறேன். ஆஸ்திரேலியாவில் பிறந்த இந்த நிக் தனது இயலா நிலையை எண்ணி மனம் நொந்து எட்டு வயதில் தற்கொலைக்கு முயன்றார். பெற்றோரின் அன்பையும் அவர்களுக்கு தனது தற்கொலை முடிவால் நேரிடக் கூடிய மன வருத்ததையும் எண்ணி அந்த முடிவை அப்போது கை விட்டார் நிக். (நிக் பற்றிய வீடியோ படம் ) பின்னர், தன்னை போலவே பிறவியிலேயே ஊனமுற்றவர்கள் சிலரை சந்திக்கும் வாய்ப்பு பெற்றார் இவர். அதில் ஒருவரை இறக்கும் தருவாயில் நிக் சந்திக்க, அந்த கடினமான சூழ்நிலையிலும் புன்னகைத்த அந்த புதிய நண்பரின் தன்மை இவருடைய மன நிலையை பெரிதும் பாதித்தது. இறக்கின்ற தருவாயில் கூட ஒருவரால் புன்னகைக்க முடிகிற போது தன்னால் ஏன் உற்சாகமாக வாழ முடியாது என்ற கேள்வி அவரது மனதுக்குள் எழுந்தது. அன்றிலிருந்து இன்று வரை அவர் பெற்ற வெற்றிகள் ஏராளம். கணக்கியலில் பட்டம் பெற்ற இவர் சொந்தமாக ஆரம்பித்தது இரு ...

இந்தியா - சீனா முந்தப் போவது யார்?

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் பல ஒற்றுமைகள் உண்டு. இரண்டு நாடுகளும் உலகின் பழம் பெரும் நாகரிகங்களின் தொட்டில்களாகக் கருதப்படுபவன. மக்கள் தொகையிலும் நாட்டின் வளர்ச்சி விகிதத்திலும் உலகின் முதல் இரண்டு இடங்களைப் பிடித்தவை. ஆனால், நாட்டின் வளர்ச்சிக்கு இவ்விரண்டு நாடுகளும் தேர்ந்தெடுத்த வழிமுறைகள் வேறுவேறு. அந்த வழிமுறைகளைப் பற்றியும் இரண்டு நாடுகளில் முந்தப் போவது யார் என்பது பற்றியும் இங்கு அலசுவோம். தற்கால சுதந்திர இந்தியா தனது ஜனநாயக பயணத்தை துவக்கியது 1947 இல். தற்கால சீனா, மக்கள் சீனக் குடியரசாக (People's Republic of China) கம்யூனிச பயணத்தை துவக்கியது 1949 இல். சுதந்திரம் பெற்றவுடன் இந்தியா தேர்ந்தெடுத்த பாதை தனியாரும் அரசும் இணைந்து இயங்கும் (சோஷலிச உணர்வு கொண்ட) கலவை பொருளாதாரம் (Mixed Economy). சீனா தேர்ந்தெடுத்த பாதையோ அனைத்தும் அரசே என்ற கம்யூனிச பொருளாதாரம். இந்தியாவில் பொருளாதார சீர்திருத்தங்கள் துவங்கியது 1991 இல். இந்த விஷயத்தில் முந்திக் கொண்ட சீனா தனது பொருளாதார சீர்திருத்தங்களை 1981 லேயே துவங்கி விட்டது. இந்திய சீர்திருத்தங்கள் ஜனநாயக ரீதியானவை. ஒரு பெட்டிக் கடையை நக...

சரியும் நம்பிக்கைகள்.

ஒவ்வொரு வாரமும் சந்தைகளின் சரிவின் முடிவு பற்றிய புதுப்புது நம்பிக்கைகள் தகர்க்கப் படுகின்றன. இது தொடர்கதையா? வரும் வாரத்தின் நம்பிக்கைகள் G-20 மாநாட்டின் தீர்மானங்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. சென்ற வார சந்தை நிலவரம் மற்றும் வருகின்ற வாரத்திற்கான எதிர்பார்ப்புகள் குறித்து, இந்த பதிவரின், ஆங்கில பதிவு வலையில் குறிப்பிடப் பட்டுள்ளது. மேலும் விவரத்திற்கு பாருங்கள் Maximum India நன்றி

"பெயர்" அளவில் ஏற்பட்டுள்ள சமூக புரட்சி

சமீபத்தில் எனக்கும் ஒரு மராத்தியருக்கும் இடையே ஒரு சிறிய விவாதம் எனது பெயரிலிருந்து தொடங்கியது. என்னுடைய பெயரின் இரண்டாவது பகுதி, மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகத்தில் வாழும் ஒரு சமூகத்தினரின் பட்டப் பெயரை குறிப்பதாக இருப்பதால், அவர் (மிகவும் வயது முதிர்ந்த ஒரு மருத்துவர்) என்னை அந்த குறிப்பிட்ட சமூகத்தினை சேர்ந்தவரா என்று வினவினார். நானோ அதை மறுத்து, தமிழகத்தில் பெயருடன் சமூகப் பெயரை இணைத்து வழங்கும் பழக்கமில்லை என்றும் அது எனது முதல் பெயரின் விகுதியே என்றும் கூறினேன். பிறகு விவாதம் தமிழ் நாடு மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களின் தற்போதைய சமூக மற்றும் பொருளாதார சூழல் பற்றி திரும்பியது. அவர் கூறியது. மராத்திய மக்கள் பரந்த மனது கொண்டவர்கள். மொழியின் அடிப்படையில் வித்தியாசம் பார்க்காதவர்கள் அதனால்தான் மகாராஷ்டிரா மாநிலம் இந்தியாவின் முன்னணி மாநிலமாக திகழ்கிறது. ஆனால், இங்கு வாழும் பிற மொழி மக்கள் மராத்தியரின் பெருந்தன்மையை தவறாக உபயோகப் படுத்தி மராத்தி மொழியை மற்றும் மராத்திய கலாச்சாரத்தினை மதிக்க தவறுகிறார்கள். தமிழ் நாடு போன்று பிற்போக்கான மொழி மற்றும் சமூக கொள்கையை நாங்களும் பின்பற்றியிருக்க ...

உங்களுக்குளே ஒரு குழந்தை ஒளிந்து கொண்டிருக்கிறது

மனநிலை பரிசோதனை (Transactional Analysis) பற்றி கேள்விப் பட்டிருக்கிறீர்களா? இந்த தத்துவத்தின் படி வயது வித்தியாசம் இல்லாமல் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் மூன்று விதமான மனநிலைகள் (Ego States) உண்டு. அதாவது குழந்தை நிலை (Child Ego), பெற்றோரின் மனநிலை (Parent Ego) மற்றும் முதிர்ச்சியான மனநிலை (Adult Ego). உங்களுக்கு என்ன மனநிலை உள்ளது? இதை எப்படி கண்டுப் பிடிப்பது? ஒரு சிறிய பரிசோதனை முயற்சி இங்கே. முதல் பரிசோதனை . ஒரு கடற்கரைக்கு போகிறீர்கள். அப்போது அ. எதையும் யோசிக்காமல் ஓடிச் சென்று கடலில் பொத்தென குதிப்பீர்களா? ஆ. காய்ச்சல் வந்து விடுமா அல்லது துணி நனைந்து விடுமா அல்லது பெரிய அலையில் முழுகிப் போய் விடுமோ என்று பயப்படுவீர்களா? இ. இடம் பாதுகாப்பு ஆனது என்று உறுதி செய்து கொண்டு, நீச்சலுடை அணிந்து கொண்டு கடலில குதிப்பீர்களா? இரண்டாவது பரிசோதனை உங்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படம் உங்களூரில் ஓடுவது அன்றே கடைசி நாள். உங்கள் அலுவலகத்திலோ தணிக்கை நடக்கிறது. அ. உடல்நிலை சரியில்லை என்று அலுவலகத்திற்கு மட்டம் போட்டு விட்டு திரைப்படத்திற்கு போவீர்களா? ஆ.அலுவலகம் முக்கியம் என்று திரைப் படத்தை தியா...

இந்தியாவின் தேன்நிலவு

இந்திய படைப்பான சந்திராயன் 1 வெற்றிகரமாக சந்திரனின் 100 கி.மீ உள்வட்ட பாதையில் (Polar Range) இன்று நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது. இனி இந்த துணைக்கோள் சந்திரனை இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை சுற்றி வந்து தொலைப்படங்கள் (Mapping) எடுத்து அனுப்பும். இதன் மூலம் சந்திராயன் 1 ப்ராஜெக்ட் வெற்றிகரமாக நிறைவேற்றப் பட்டிருக்கிறது. (வீடியோ படம் பார்க்க) சந்திராயன் 1 பயணத்தின் குறிப்படத் தக்க சிறப்பம்சங்கள் கீழே. 1. இதன் மூலம் சந்திரனுக்கு ராக்கெட் அனுப்பிய ஐந்தாவது நாடு என்ற பெருமை இந்தியாவிற்கு. 2.இது வரை அனுப்பப்பட்ட ராக்கெட்டுகளிலேயே குறைந்த செலவில் அனுப்பப் பட்ட ராக்கெட் சந்திராயன்தான். 3. இது வரை உலகிலேயே இல்லாத அளவுக்கு மிக அதிக சாதனங்கள் இந்த ஒரே ராக்கெட்டின் வழியே அனுப்பப் பட்டுள்ளன. 4. முதல் முயற்சிலேயே சந்திரனுக்கான பயணத்தினை வெற்றிகரமாக முடித்த நாடு என்ற நாடு என்ற பெருமையும் இந்தியாவிற்கு கிடைத்திருக்கிறது. 5. நேரடியாக நிலவுக்கு ராக்கெட்டை அனுப்பாமல் பூமி மற்றும் சந்திரனின் நீள்வட்ட பாதைகளில் சந்திராயனை சுற்ற வைத்து இறுதியாக நிலவின் உள்வட்ட பாதையில் நிலை நிறுத்த மிக நுணுக்கமான தொழில் நு...