Skip to main content

இந்திய ரியல் எஸ்டேட் துறை சந்திக்கும் சவால்கள்


அமெரிக்கா பொருளாதாரத்தின் வீழ்ச்சிக்கு அவர்களின் ரியல் எஸ்டேட் துறையின் சரிவே முக்கிய காரணமாகும். அதன் தாக்கம் இந்தியாவிலும் வெளிப்பட ஆரம்பித்துள்ளது. தற்போது, இந்திய ரியல் எஸ்டேட் துறையில் தேவைகள் குறைந்து போனதற்கு முக்கிய காரணங்கள் கீழே.

1. பொருளாதார தேக்கத்தின் காரணமாக புதிய தொழில்களும் வியாபாரங்களும் தொடங்கப் படுவது இந்தியாவிலும் இப்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப் பட்டுள்ளன. இதன் காரணமாக புதிய அலுவலங்களுக்கான கட்டிடங்களின் தேவை மிகவும் குறைந்து காணப் படுகிறது.

2. மேலும், சொந்த வீடு வாங்க விரும்புவோரில் சிலர் , வருங்காலத்தில் விலை குறையும் என்ற நம்பிக்கையால் தமது வீடு வாங்கும் முடிவை தள்ளிப் போடுகின்றனர். வேறு சிலர், தனது பணி, தொழில் மற்றும் வியாபாரங்களின் வருங்காலம் தெளிவாக கணிக்க முடியாத காரணத்தினால், இது போன்ற முதலீட்டு முடிவுகளை எடுக்க தயங்குகின்றனர். ரியல் எஸ்டேட் வாங்கி விற்கும் வியாபாரிகள் இத்துறை சந்திக்க இருக்கும் கடும் நெருக்கடிகளை முன்கூட்டியே அறிந்திருப்பதால், இதில் பணம் போட முன் வருவதில்லை.

வெளிநாட்டு நிறுவனங்கள் அவர்களது நாட்டில் ஏற்பட்ட நிதி நெருக்கடி சமயத்தில் வளரும் நாடுகளில் உள்ள அதிக அபாயம் கொண்ட இத்துறையில் முதலீடு செய்ய தயங்குகின்றன. இந்திய மற்றும் மேல் நாட்டு பங்குத் துறைகள் மிகப் பெரும் வீழ்ச்சி அடைத்திருப்பதால், ரியல் எஸ்டேட் துறையினர் புதிய (பங்கு) முதல் திரட்ட வழி இல்லாமல் போய் விட்டது.

இந்தியாவில் மனைவிலைகள் இதுவரை பெரிய அளவில் வீழ்ச்சி அடைய வில்லையென்றாலும் கூட, அந்த விலைகளை அதிக உயரத்திலேயே நிலை நிறுத்துவதற்காக ரியல் எஸ்டேட் துறையினர் கொடுத்திருக்கும் விலை (கடன்களுக்கான வட்டி) மிகப் பெரியது. அதுவும் ரியல் எஸ்டேட் துறைக்கு கடன் கொடுக்க வங்கிகள் பெருமளவு முன் வராத காரணத்தினால், தற்போது இந்த துறை கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றது. இவர்கள் இது வரை பெற்றுள்ள கடனுக்கான வட்டியினை திருப்பி செலுத்தவே தடுமாறும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த சூழலிருந்து இத்துறை மீள ஒரே வழி, மனைநிலம் மற்றும் கட்டிடங்களுக்கான விலைகளை மத்தியதர வர்க்கத்தினரும் வாங்கும் அளவிற்கு குறைப்பதுதான் ஆகும். ஒரு தடவை விலையை இறக்கி விட்டால் மேலும் மேலும் விலை குறைக்கப் படலாம் என்ற மக்கள் எதிர்பார்ப்பார்கள் என்ற தயக்கத்தின் காரணமாகவும் விலையை குறைத்தால் நஷ்டங்களை சந்திக்க வேண்டி இருக்கும் என்ற அச்சத்தின் ரியல் எஸ்டேட் துறையினர் விலைகளை குறைக்க மறுக்கின்றனர். இந்த அச்சம் தேவை அற்றது. மாறி வரும் வாழ்வியலின் (Demography) காரணமாக, மேற்சொன்ன வகை மக்களிடையே வீட்டுக்கான தேவைகள் அதிகமாகவும் தொடர்ச்சியாகவும் இருந்து வருகிறது மேலும் கட்டிடங்கள் கட்ட தேவையான மூலப் பொருட்களான இரும்பு மற்றும் சிமெண்ட் ஆகியவற்றின் விலைகளும் குறைய இப்போது வாய்ப்பு இருப்பதால், கட்டிடங்களின் விலையை குறைப்பது ஓரளவு சாத்தியமே.

சரியான விலை மற்றும் அளவான லாபம் என்பது நோக்கமாக இருக்கும் பட்சத்தில் எந்த நெருக்கடியான பொருளாதார சூழ்நிலையிலும் இந்திய ரியல் எஸ்டேட் துறையினரால் நிலைத்து நிற்க முடியும்.

Comments

அதெப்படிங்க
உங்களால மட்டும் எல்லா துறையிலும் பூந்து விளையாட முடியுது!

கலக்கலா இருக்கு பதிவு!
ரியலெஸ்டேட் விலை குறைந்தால் தான் மீண்டும் பணப்புழக்கம் ஏற்ப்படும் என்பது தான் என் கருத்தும்
//சரியான விலை மற்றும் அளவான லாபம் என்பது நோக்கமாக இருக்கும் பட்சத்தில் எந்த நெருக்கடியான பொருளாதார சூழ்நிலையிலும் இந்திய ரியல் எஸ்டேட் துறையினரால் நிலைத்து நிற்க முடியும்//

இதைக் கடைபிடிச்சா எந்த சூழ்நிலையிலயும் சமாளிச்சிகிட்டு இருக்க முடியும்! தவிர வீழ்ச்சி என்பதே இருக்காதே!

டிமாண்ட் அதிகமா இருக்குதேன்னு ஒண்ணுக்கு பத்தா விலையை ஏத்தினா வாங்க ஆளில்லாத நிலைமைல தலைல துண்டு போட்டுக்க வேண்டியதுதான்!

இப்பவெல்லாம் பெரும்பாலான மக்கள் இப்ப இருக்குற விலை வாசில அளவுக்கு அதிகமா கடனை வாங்கி சொந்த வீடெல்லாம் எதுக்கு? அதுக்கு பதிலா கையில இருக்குற பணத்தை ஃபிக்செட் டெபாடிச்லே போட்டு வெச்சிருக்கலாம்னு முடிவுக்கு வந்துடறாங்க!
இங்கும் இந்த பிரச்சனை சில தலைக்காட்ட ஆரம்பித்துள்ளதை காணமுடிகிறது.ஒரு சில வேலைகள் தற்காலமாக நிறுத்தப்பட்டுள்ளது.
Maximum India said…
பின்னூட்டங்களுக்கு நன்றி
MCX Gold Silver said…
கலக்கலா இருக்கு பதிவு!
ரியலெஸ்டேட் விலை குறைந்தால் தான் மீண்டும் பணப்புழக்கம் ஏற்ப்படும் என்பது தான் என் கருத்தும்
ATLEAST, IN TAMIL NADU WE ARE BETTER COMPARED TO BANGALORE AND OTHER COSMOPOLITAN CITIES, WHERE, LOT OF CONSTRUCTED HOUSES ARE STAND STILL....BECAUSE OF THIS INFLATION...CRUDE OIL PRICE REDUCTION...STOCK MARKET UNCERTAINITY...IT INDUSTRIES...EVEN INFRASTRUCTURE....BANKING...IT GOES ON...I THINK NO COMMENTS REQUIRED.
Maximum India said…
Dear Ramasubramania Sharma

You are correct. There are reasons for the "not falling much" in Tamil Nadu.

Thank you for the comments

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

தீவிரவாதிகளை வென்ற கதை - இந்திய கமாண்டோவின் விளக்கம்

நேற்று ஒரு தீவிரவாதி பிடிப் பட்ட கதை பார்த்தோம். இன்று தாஜ் ஹோட்டலில் எவ்வாறு நான்கு தீவிரவாதிகள் ஒழிக்கப் பட்டனர் என்று விளக்கும் இந்திய கமாண்டோவின் விளக்கத்தை பார்ப்போம். முதலில் இந்தியா கமாண்டோக்கள் தாஜ் ஹோட்டல் வந்த கதை புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் மும்பையை பயங்கரவாதம் தாக்கியது. அப்போது கேரளாவில் இருந்த மகாராஷ்டிர முதல்வர் மும்பை வரவும் இந்த சூழ்நிலையின் பயங்கரத்தையும் முழுமையாக உணர்ந்துக் கொள்ளவும் 90 நிமிடம் பிடித்தது .பின்னர் 11.00 அளவில் மத்திய அரசிற்கு போன் பேசிய முதல்வர் கோரியது 200 கமாண்டோக்களை. உடனே அந்நேரத்தில் தூங்கி கொண்டிருந்த இந்திய கமாண்டோக்கள் எழுப்பப் பட்டனர். அவர்கள் மும்பை வரத் தயாரான போதுதான் புரிந்தது, அவ்வளவு பேரை மும்பை கொண்டுவர தேவையான சிறப்பு விமானம் சண்டிகரில் உள்ளது என்று. உடனே அந்த விமானியையும் தூக்கத்தில் இருந்து எழுப்பி தயார் படுத்தி டெல்லியிலிருந்து கமாண்டோக்கள் மும்பை வந்த போது நேரம் காலை 5.25 மணி. அவர்கள் தாஜ் ஹோட்டலுக்கு கொண்டு வரப்பட்டு திட்டம் தயாரிக்கப் பட்டு அவர்கள் தாஜ் ஹோட்டலுக்குள் நுழைந்த போது நேரம் காலை 7.00 மணி. அதாவது மும்பை தாக்கப் ப...

கம்ப்யூட்டர் கட்சியும் கால்குலேட்டர் கட்சியும்!

மத்திய கல்வி அமைச்சர் கபில் சிபல் இந்தியா முழுவதும் அனைவரும் தாய்மொழியுடன் ஹிந்தியும் படிக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்துள்ளார். இவ்வாறு அனைவரும் ஹிந்தி படிப்பதன் மூலம் நாட்டில் ஒருமைப்பாடு ஏற்படுவதுடன் ஹிந்தியை ஆங்கிலம் போன்று ஒரு "அறிவு மொழியாக (lingua franca)" மாற்ற முடியும் என்றும் கூறியுள்ளார். இந்த கருத்தின் மீது பதிவுலகில் ஏராளமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆங்கிலம் மட்டுமே போதும் என்று ஒரு கட்சியும், ஆங்கிலம் வாசலாக இருக்கும் போது ஹிந்தி ஒரு சன்னலாக இருந்து விட்டு போகட்டுமே என்று இன்னொரு கட்சியும் விவாதித்து வருகின்றன. ஹிந்தி எதிர்ப்பு என்பது எப்போதுமே ஒரு உணர்வு பூர்வமான விஷயமாகவே பலராலும் கருதப் பட்டாலும், அதற்கு அறிவு பூர்வமான, சரித்திர பூர்வமான சில அடிப்படைகள் உண்டு. ஹிந்தி திணிப்பு மற்றும் ஹிந்தி எதிர்ப்பு பற்றி எனக்கு தெரிந்த சில கருத்துக்களை இங்கு ஒரு புனைவு வடிவில் அளிக்க முயற்சிக்கிறேன். இப்போது புனைவு ! ஒரு காலத்தில் பரதம்பட்டி என்ற ஒரு கிராமம் இருந்ததாம். அங்கு பல ஆண்டுகள் வரை ஆட்சி செய்து வந்த துரை மகாராஜா ஒரு காலத்தில், அந்த கிராமத்தை ஜனநாயக ...