Skip to main content

மும்பைக்கரும் கோவனும் விசுவநாதன் ஆனந்தும்

சில நாட்களுக்கு முன்னர், மும்பைக்கரும் கோவனும் என்ற சிறு கருத்துக் கதையை படித்தேன். அதன்படி, மும்பையைச் சேர்ந்த ஒரு தொழில் அதிபர் கோவாவில் வாழும் ஒரு மீனவரைச் சந்திக்கிறார். அவர்களிடையே நடைபெறும் உரையாடல் கீழே.

மும்பைக்கர்: நீங்கள் என்ன தொழில் செய்கிறீர்கள்?

மீனவர்: கடலில் மீன் பிடிக்கிறேன்.

மும்பைக்கர்: எவ்வளவு நேரம் மீன் பிடிக்கிறீர்கள்?

மீனவர்: சுமார் 5 மணி நேரம் கடலில் இருப்பேன். அந்த நேரத்தில் கிடைக்கும் மீன்களைப் பிடிப்பேன். மீதம் உள்ள நேரத்தில் மனைவி மக்களுடன் சந்தோசமாக இருப்பேன். மற்றும் நன்றாக தூங்குவேன் .

மும்பைக்கர்: நான் ஒரு அகமதாபாத் IIM பட்டதாரி. என்னால் உங்கள் வாழ்வு மேம்பட சில யோசனைகள் சொல்ல முடியும். அதாவது, நீங்கள் முதலில் உங்களது உழைக்கும் நேரத்தை அதிகரிக்க வேண்டும். வங்கியில் கடன் பெற்று புதிய படகுகள் வாங்கி அவற்றில் அதிக மீனவர்களை வேலைக்கு அமர்த்த வேண்டும். மேலாண்மை விதிகளை உபயோகப் படுத்தி, தொழிலினை விரிவு படுத்த வேண்டும். ஒரு பெரிய நிறுவனம் ஆன பின்னே, பங்கு சந்தையில் உங்கள் நிறுவனத்தின் பங்குகளை வெளியிட வேண்டும். அதன் மூலம் மிகப் பெரும் பொருள் ஈட்ட முடியும்.

மீனவர்: இவ்வாறு செய்ய எத்தனை காலம் பிடிக்கும் ? அந்த பணத்தில் என்ன செய்ய முடியும்?

மும்பைக்கர்: இதை எல்லாம் செய்ய குறைந்தது 25 ஆண்டுகள் ஆகும். நீங்கள் ஈட்டிய பணத்தில் கோவாவில் கடல் ஓரம் ஒரு பெரிய வீடு வாங்க முடியும். பிறகு உங்கள் மனைவி குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருக்க முடியும். பொழுது போகாத நேரங்களில் மீன் பிடிக்க கடலுக்கு சென்று வரலாம்.

மீனவர்: நான் அதைத்தானே இப்போதும் செய்து வருகிறேன். இதற்கு ஏன் 25 வருடங்கள் காத்திருக்க வேண்டும்?

கண்ணை விற்று ஓவியம் வாங்க வேண்டுமா என்ற தமிழ் வழக்கினை ஒத்த இந்த கதை எனக்கு பிடித்திருந்தாலும் வாழ்வின் முன்னேற்றம் தேவை இல்லை என்ற பிற்பட்ட (Regressive) கொள்கையாகவும் இது எடுத்து கொள்ளப்படலாம் என்பதால் இதனை என் பதிவில் இட தயங்கினேன்.

அதே சமயம், இன்றைக்கு இந்தியாவின் ஒரே உலக சாம்பியன் விசுவநாதன் ஆனந்த் அவர்களைப் பற்றி படிக்கும் போது இந்த கதைக்கு வேறொரு விளக்கம் எனக்கு தோன்றியது.

மன அழுத்தம் மிகுந்த ஒரு விளையாட்டு போட்டியின் அனைத்து வடிவங்களிலும் தனது முத்திரை படைத்த விசுவநாதன் ஆனந்த் அவர்களால் ஸ்பெயின் நாட்டில் சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்து மத்தாப்புகளுடன் தீபாவளி கொண்டாட முடிகிறது. மார்கழி மாத விழாக்களில் தமிழ் நாடு வர முடிகிறது. அங்கு குழந்தைகளுடன் செஸ் விளையாட முடிகிறது . ஒரு பக்கம் சூப்பர் ஹீரோவாக வெற்றிகளைக் குவிக்கும் ஒருவரால் இன்னொரு பக்கம் குழந்தை சிரிப்புடன் தன் வாழ்வின் மறுபக்கத்திலும் மகிழ்ச்சியாக வாழ முடிகிறது.

வெற்றிகளை ஈட்ட மன அழுத்தம் தேவையில்லை. உழைப்பு மட்டுமே போதுமானது. சொந்த வாழ்வில் மகிழ்ச்சியோடு வாழ்ந்தும் ஒருவரால் தனது உழைப்பின் உதவியால் சிகரங்களை அடைய முடியும் என்பதை நமக்கு காட்டிய விசுவநாதன் ஆனந்துக்கு வாழ்த்துகளுடன் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்வோம்.


நன்றி.

Comments

d_ram said…
i agree with you
Maximum India said…
Thank you for your commments ram!
KARTHIK said…
ஒப்பீடு அருமை
அந்தக் கதையை நீங்க சொன்ன விதம் நல்லாருந்துது
Maximum India said…
பின்னூடத்திற்கு நன்றி கார்த்திக்

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

நரேந்திர மோடி நாடாளலாமா?

சமீபத்தில் நடைபெற்ற குஜராத் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கார்பொரட் கனவான்களான அனில் அம்பானி மற்றும் சுனில் மிட்டல் ஆகியோர் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர். காரியம் ஆக வேண்டும் என்றால் என்ன வேண்டுமானாலும் பேசக் கூடியவர்கள் நமது தொழில் அதிபர்கள் என்பதனால் அவர்களின் பேச்சுக்கு அவ்வளவு மரியாதை கொடுக்க வேண்டியதில்லை. இவர்களைப் போன்றவர்களால் ஏற்கனவே நாடாள தகுதி பெற்றவர் என்று கூறப் பட்ட சந்திர பாபு நாயுடு அடுத்த சட்ட மன்ற தேர்தலில் தனது முதலமைச்சர் பதவியினையே இழந்தது குறிப்பிடத் தக்கது. தொழில் அதிபர்கள் பேச்சினை பா.ஜ.கவே ஏற்றுக் கொள்ளாத பட்சத்திலும் கூட, தீவிரவாதத்தை ஒடுக்கி குஜராத் மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்து சென்றவர் நரேந்திர மோடி என்றும் அவர் இந்தியாவின் பிரதமர் ஆவது நாட்டுக்கு நல்லது என்றும் பலராலும் கருதப் படுவதால், நரேந்திர மோடியின் செயல்பாடு பற்றியும் அவர் பிரதமர் ஆகலாமா என்பது பற்றியும் பிரதமராக அவர் ஏற்றுக் கொள்ளப் படுவாரா என்பதைப் பற்றியும் இங்கு பார்ப்போம். இன்றைய தேதியில் இந்தியாவிலேயே மிகுந்த முன்னேற்றம் அடைந்த ஒரு மாநிலமாக குஜரா...

நேர்ந்து விடப் பட்டவர்கள் - இவர்களும் இந்தியர்களே!

எனது வங்கியில் புதியதாக கணக்கு துவக்க விண்ணப்பித்த ஒரு நடுத்தர வயது பெண்மணி, தனது விண்ணப்பத்தில் தந்தை/கணவர் பெயரை நிரப்ப வில்லை. ஏன் நிரப்ப வில்லை என்ற என் கேள்விக்கு அந்த பெண்ணிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. பொதுவாகவே கல்வியறிவு மிகவும் குறைந்த வட கர்நாடக பகுதி என்பதால், அவரது விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய உதவி செய்த நபரை அழைத்து, கணவர் பெயரை நிரப்பும் படி அறிவுறுத்தினேன், . அந்த பெண்ணிற்கு இன்னும் திருமணமாக வில்லை என்று அந்த நபர் கூறினார். அதனால் என்ன, அவரது தந்தை பெயரை நிரப்புங்கள் என்று சற்று எரிச்சலுடன் கூறினேன். அவருக்கு தந்தையும் இல்லை என்றார் அவர். மேலும் எரிச்சலான நான் தந்தையை கேட்க வில்லை, தந்தையின் பெயரைத்தான் கேட்கிறேன் என்று கூறினேன். அதற்கு அவர், அந்த பெண்மணியின் பட்டப் பெயரை கவனிக்க வில்லையா என்று கேட்டார். அதற்கென்ன என்று நான் திருப்பிக் கேட்ட போது, அந்த (தேவதாசி) இனத்தை சேர்ந்தவர்கள் கடவுளுக்கு நேர்ந்து விடப் பட்டவர்கள் என்றும் அவர்களுக்கு தந்தையோ கணவரோ கிடையாது என்று கூறினார். இந்த காலத்திலும் இப்படியா என்று ஒரு நிமிடம் திகைப்பின் உச்சிக்கு சென்ற நான் அந்த பெண்ணைப் ப...