Skip to main content

வாழ்க்கை பிரச்சினைகளால் மனம் தளர்ந்து போகிறீர்களா?

கவலைப் படாதீர்கள். நம்பிக்கைகளால் மன தளர்ச்சிகளை வெல்ல முடியும். சொல்பவர் யார் தெரியுமா? பிறவியிலேயே கை கால்களை முழுமையாக இழந்தும் வாழ்வில் வெற்றிபெற்ற திரு.நிக். இந்த நம்பிக்கை நட்சத்திரத்தைப் பற்றி சில விஷயங்கள் உங்களுடன் பகிர்ந்து கொள்ள நான் விரும்புகிறேன்.

ஆஸ்திரேலியாவில் பிறந்த இந்த நிக் தனது இயலா நிலையை எண்ணி மனம் நொந்து எட்டு வயதில் தற்கொலைக்கு முயன்றார். பெற்றோரின் அன்பையும் அவர்களுக்கு தனது தற்கொலை முடிவால் நேரிடக் கூடிய மன வருத்ததையும் எண்ணி அந்த முடிவை அப்போது கை விட்டார் நிக்.
(நிக் பற்றிய வீடியோ படம் )

பின்னர், தன்னை போலவே பிறவியிலேயே ஊனமுற்றவர்கள் சிலரை சந்திக்கும் வாய்ப்பு பெற்றார் இவர். அதில் ஒருவரை இறக்கும் தருவாயில் நிக் சந்திக்க, அந்த கடினமான சூழ்நிலையிலும் புன்னகைத்த அந்த புதிய நண்பரின் தன்மை இவருடைய மன நிலையை பெரிதும் பாதித்தது. இறக்கின்ற தருவாயில் கூட ஒருவரால் புன்னகைக்க முடிகிற போது தன்னால் ஏன் உற்சாகமாக வாழ முடியாது என்ற கேள்வி அவரது மனதுக்குள் எழுந்தது.

அன்றிலிருந்து இன்று வரை அவர் பெற்ற வெற்றிகள் ஏராளம். கணக்கியலில் பட்டம் பெற்ற இவர் சொந்தமாக ஆரம்பித்தது இரு நிறுவனங்கள். (Attitude is Attitude and Life without limbs). உலகெங்கும் பயணம் செய்துள்ள இவர் தனது 25 வயதிற்குள்ளே இது வரை 23 நாடுகளில் 20 லட்சம் பேருக்கு உற்சாக உரை (Motivational Speech) நிகழ்த்தி உள்ளார். (இதுவே ஒரு மிகப் பெரிய சாதனை அல்லவா?) இப்போது இந்தியா வந்திருக்கும் இவர் மேலும் பல நாடுகள் செல்லும் உத்தேசத்தில் உள்ளார்.

பொருளாதார சிக்கல் நிறைந்த இன்றைய சூழ் நிலையில் நம் இளைஞர்களுக்கு அவர் கூறும் சில யோசனைகள் கீழே.

"பயம் என்பது உண்மை போல தோன்றும் பொய் (FEAR = False Evidence Appearing to be Real)

அதை நம்பிக்கை கொண்டு வென்றிடுங்கள். நம்பிக்கை என்பது உள்ளத்தின் மீது வைக்கும் முழு உறுதிப்பாடு (FAITH = Full Assurance In The Heart).

இது வரை வாழ்வில் எடுத்த தவறான முடிவுகளுக்காக கவலைப்படாதீர்கள். ஏனென்றால் எப்படி எடிசன் தனது தவறான ஆராய்ச்சிகளின் உதவியை கொண்டு பல புதிய கண்டுபிடிப்புகளை கண்டறிந்தாரோ அது போல உங்கள் தவறான முடிவுகள் சரியான முடிவுகளை எடுப்பதற்கு உதவி செய்யும்.

எது வெற்றி என்பதில் தெளிவாக இருங்கள். சிலருக்கு பணம் வெற்றி, சிலருக்கு பதவி வெற்றி. சிலருக்கோ அமைதியான வாழ்வு வெற்றி. நான் பெற்ற வெற்றி என் வாழ்வின் நோக்கத்தை அடைந்தது (மற்றவருக்கு நம்பிக்கை அளிப்பதன் மூலம்). நான் சந்தித்த பல பணக்காரர்கள் என்னை விட குறைந்த அளவு மனநிறைவுடன் வாழ்வதாகவே அறிகிறேன். நரகத்தில் வாழ்ந்து சொர்கத்தை அடைவதை விட சொர்க்கத்தில் வாழ்ந்து நரகத்தை அடைய விரும்புகிறவன் நான். எனவே நண்பர்களே, எதை இழந்து எதை பெறுவது என்ற உங்களுடைய முடிவில் தெளிவாக இருங்கள்.

எதை இழந்தாலும் நம்பிக்கையை மட்டும் இழக்காதீர்கள்."

குண்டு வெடிப்புகளையும், கொலை கொள்ளை போன்ற விஷயங்களையுமே முதல் பக்கத்தில் போடும் நம் பத்திரிக்கைகள் இதை போன்ற நல்ல விஷயங்களையும் முதல் பக்கத்தில் போட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

நன்றி.

Comments

MCX Gold Silver said…
//எதை இழந்தாலும் நம்பிக்கையை மட்டும் இழக்காதீர்கள்."//


மிக சிறந்த வாக்கியம்

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

நரேந்திர மோடி நாடாளலாமா?

சமீபத்தில் நடைபெற்ற குஜராத் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கார்பொரட் கனவான்களான அனில் அம்பானி மற்றும் சுனில் மிட்டல் ஆகியோர் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர். காரியம் ஆக வேண்டும் என்றால் என்ன வேண்டுமானாலும் பேசக் கூடியவர்கள் நமது தொழில் அதிபர்கள் என்பதனால் அவர்களின் பேச்சுக்கு அவ்வளவு மரியாதை கொடுக்க வேண்டியதில்லை. இவர்களைப் போன்றவர்களால் ஏற்கனவே நாடாள தகுதி பெற்றவர் என்று கூறப் பட்ட சந்திர பாபு நாயுடு அடுத்த சட்ட மன்ற தேர்தலில் தனது முதலமைச்சர் பதவியினையே இழந்தது குறிப்பிடத் தக்கது. தொழில் அதிபர்கள் பேச்சினை பா.ஜ.கவே ஏற்றுக் கொள்ளாத பட்சத்திலும் கூட, தீவிரவாதத்தை ஒடுக்கி குஜராத் மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்து சென்றவர் நரேந்திர மோடி என்றும் அவர் இந்தியாவின் பிரதமர் ஆவது நாட்டுக்கு நல்லது என்றும் பலராலும் கருதப் படுவதால், நரேந்திர மோடியின் செயல்பாடு பற்றியும் அவர் பிரதமர் ஆகலாமா என்பது பற்றியும் பிரதமராக அவர் ஏற்றுக் கொள்ளப் படுவாரா என்பதைப் பற்றியும் இங்கு பார்ப்போம். இன்றைய தேதியில் இந்தியாவிலேயே மிகுந்த முன்னேற்றம் அடைந்த ஒரு மாநிலமாக குஜரா...

இங்கும் அங்கும் பாதை உண்டு. இதில் நீ எந்த பக்கம்?

சென்ற வாரம் 8350 என்ற எதிர்ப்பு நிலையை தாண்டிய போதும், நிப்டியால் முழுமையான வெற்றியை பெற முடிய வில்லை. 8350 என்ற நிலையின் அருகிலேயே இன்னும் நிலை பெற்றுள்ளது. உலக சந்தைகளின் போக்கினையொட்டி இந்த வாரம் 8350 என்ற எதிர்ப்பு நிலையை முழுமையாக முறியடிக்கின்றதா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும். வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். நன்றி.