Skip to main content

நாளை நமதே

சென்ற வார நிலவரம்

கடந்த வாரம் சிட்டி பேங்க் மீட்டெடுப்பு மற்றும் சீனா வட்டி வீதக் குறைப்பு உலக சந்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்பட உதவின. இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் வர்த்தகர்களின் மனப் போக்கை சற்று பாதித்தாலும் சந்தையில் பெருமளவு வீழ்ச்சி ஏற்பட வில்லை. காரணம், இந்திய பொருளாதார வளர்ச்சி 7.60% சதவீதமாக இருந்ததும், பணவீக்கம் (8.84%) தொடர்ந்து குறைந்து வருவதுமே. இதனால், வட்டி வீதங்கள் மேலும் நமது தலைமை வங்கியினால் குறைக்கப் படும் என வர்த்தகர்கள் நம்புகிறார்கள். வாரக் கணக்குப் படி சென்செக்ஸ் மற்றும் நிபிட்டி குறியீடுகள் சிறிய அளவில் முன்னேற்றம் கண்டுள்ளன. ரியல் எஸ்டேட் பங்குகள் அதிகம் வீழ்ச்சி கண்டுள்ளன. வெளிநாட்டு நிறுவனங்கள் தொடர்ந்து இந்திய பங்குகளை விற்ற வண்ணம் இருக்கின்றன. இதன் காரணமாக டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு (50.12) சிறிய அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது.

வரும் வார நிலவரம்

டெக்னிகல் அனலிசிஸ் படி சென்செக்ஸ் குறியீடு 8900 புள்ளிகளுக்கு மேல் முடிவடைந்து இருப்பது சந்தைக்கு தெம்பை அளிக்கிறது. சந்தை மேலே செல்ல வாய்ப்புகள் அதிகம். முக்கிய சப்போர்ட் நிலைகள் 8650. முக்கிய எதிர்ப்பு நிலைகள் 9350, 9650 மற்றும் 10200. மேலும் உலக சந்தைகளில் ஏற்படும் மற்றம் மற்றும் இந்திய வங்கியின் வட்டிவீத நிலைப் பாடு நம் சந்தைகளின் ஏற்றதாழ்வுகளை பாதிக்கும். டாலர் மதிப்பு 50 இன் அருகிலேயே இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. பங்குசந்தைகளின் நிலை மற்றும் NDF சந்தையின் நிலை பொருத்து இது மாறும்

Comments

Maximum India said…
Raghavan commented on your story 'நாளை நமதே'

'நம்பிக்கைதான் வாழ்க்கை.. நம்புவோம்.. நல்லது நடக்கும் என்று.'

Here is the link to the story: http://www.tamilish.com/story/15957

Thank your for using Tamilish!

- The Tamilish Team
Maximum India said…
Thank you Raghavan for the comments
DG said…
சந்தை பற்றி எழுதியதிற்கு நன்றி சார்
Maximum India said…
அன்புள்ள dg

பின்னூட்டத்திற்கு நன்றி. இந்த பதிவு உங்களின் சந்தை பற்றிய ஆர்வத்திற்கு சமர்ப்பணம்.

மேலும் இது முதல் முயற்சி மட்டுமே. இதை விட விரிவான சந்தை நிலவரம் குறித்த தமிழ் பதிவுகளை இட முயற்சி செய்வேன்.

உங்களுக்கும், ஏதேனும் குறிப்பிட்ட நிறுவனம் அல்லது துறை பற்றிய விளக்கங்கள் தேவைப் பட்டால் தெரிவியுங்கள். கண்டிப்பாக அது குறித்து விளக்கம் தர முயற்சி செய்வேன்.

நன்றி

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

தீவிரவாதிகளை வென்ற கதை - இந்திய கமாண்டோவின் விளக்கம்

நேற்று ஒரு தீவிரவாதி பிடிப் பட்ட கதை பார்த்தோம். இன்று தாஜ் ஹோட்டலில் எவ்வாறு நான்கு தீவிரவாதிகள் ஒழிக்கப் பட்டனர் என்று விளக்கும் இந்திய கமாண்டோவின் விளக்கத்தை பார்ப்போம். முதலில் இந்தியா கமாண்டோக்கள் தாஜ் ஹோட்டல் வந்த கதை புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் மும்பையை பயங்கரவாதம் தாக்கியது. அப்போது கேரளாவில் இருந்த மகாராஷ்டிர முதல்வர் மும்பை வரவும் இந்த சூழ்நிலையின் பயங்கரத்தையும் முழுமையாக உணர்ந்துக் கொள்ளவும் 90 நிமிடம் பிடித்தது .பின்னர் 11.00 அளவில் மத்திய அரசிற்கு போன் பேசிய முதல்வர் கோரியது 200 கமாண்டோக்களை. உடனே அந்நேரத்தில் தூங்கி கொண்டிருந்த இந்திய கமாண்டோக்கள் எழுப்பப் பட்டனர். அவர்கள் மும்பை வரத் தயாரான போதுதான் புரிந்தது, அவ்வளவு பேரை மும்பை கொண்டுவர தேவையான சிறப்பு விமானம் சண்டிகரில் உள்ளது என்று. உடனே அந்த விமானியையும் தூக்கத்தில் இருந்து எழுப்பி தயார் படுத்தி டெல்லியிலிருந்து கமாண்டோக்கள் மும்பை வந்த போது நேரம் காலை 5.25 மணி. அவர்கள் தாஜ் ஹோட்டலுக்கு கொண்டு வரப்பட்டு திட்டம் தயாரிக்கப் பட்டு அவர்கள் தாஜ் ஹோட்டலுக்குள் நுழைந்த போது நேரம் காலை 7.00 மணி. அதாவது மும்பை தாக்கப் ப...

கம்ப்யூட்டர் கட்சியும் கால்குலேட்டர் கட்சியும்!

மத்திய கல்வி அமைச்சர் கபில் சிபல் இந்தியா முழுவதும் அனைவரும் தாய்மொழியுடன் ஹிந்தியும் படிக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்துள்ளார். இவ்வாறு அனைவரும் ஹிந்தி படிப்பதன் மூலம் நாட்டில் ஒருமைப்பாடு ஏற்படுவதுடன் ஹிந்தியை ஆங்கிலம் போன்று ஒரு "அறிவு மொழியாக (lingua franca)" மாற்ற முடியும் என்றும் கூறியுள்ளார். இந்த கருத்தின் மீது பதிவுலகில் ஏராளமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆங்கிலம் மட்டுமே போதும் என்று ஒரு கட்சியும், ஆங்கிலம் வாசலாக இருக்கும் போது ஹிந்தி ஒரு சன்னலாக இருந்து விட்டு போகட்டுமே என்று இன்னொரு கட்சியும் விவாதித்து வருகின்றன. ஹிந்தி எதிர்ப்பு என்பது எப்போதுமே ஒரு உணர்வு பூர்வமான விஷயமாகவே பலராலும் கருதப் பட்டாலும், அதற்கு அறிவு பூர்வமான, சரித்திர பூர்வமான சில அடிப்படைகள் உண்டு. ஹிந்தி திணிப்பு மற்றும் ஹிந்தி எதிர்ப்பு பற்றி எனக்கு தெரிந்த சில கருத்துக்களை இங்கு ஒரு புனைவு வடிவில் அளிக்க முயற்சிக்கிறேன். இப்போது புனைவு ! ஒரு காலத்தில் பரதம்பட்டி என்ற ஒரு கிராமம் இருந்ததாம். அங்கு பல ஆண்டுகள் வரை ஆட்சி செய்து வந்த துரை மகாராஜா ஒரு காலத்தில், அந்த கிராமத்தை ஜனநாயக ...