Skip to main content

நாளை நமதே

சென்ற வார நிலவரம்

கடந்த வாரம் சிட்டி பேங்க் மீட்டெடுப்பு மற்றும் சீனா வட்டி வீதக் குறைப்பு உலக சந்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்பட உதவின. இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் வர்த்தகர்களின் மனப் போக்கை சற்று பாதித்தாலும் சந்தையில் பெருமளவு வீழ்ச்சி ஏற்பட வில்லை. காரணம், இந்திய பொருளாதார வளர்ச்சி 7.60% சதவீதமாக இருந்ததும், பணவீக்கம் (8.84%) தொடர்ந்து குறைந்து வருவதுமே. இதனால், வட்டி வீதங்கள் மேலும் நமது தலைமை வங்கியினால் குறைக்கப் படும் என வர்த்தகர்கள் நம்புகிறார்கள். வாரக் கணக்குப் படி சென்செக்ஸ் மற்றும் நிபிட்டி குறியீடுகள் சிறிய அளவில் முன்னேற்றம் கண்டுள்ளன. ரியல் எஸ்டேட் பங்குகள் அதிகம் வீழ்ச்சி கண்டுள்ளன. வெளிநாட்டு நிறுவனங்கள் தொடர்ந்து இந்திய பங்குகளை விற்ற வண்ணம் இருக்கின்றன. இதன் காரணமாக டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு (50.12) சிறிய அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது.

வரும் வார நிலவரம்

டெக்னிகல் அனலிசிஸ் படி சென்செக்ஸ் குறியீடு 8900 புள்ளிகளுக்கு மேல் முடிவடைந்து இருப்பது சந்தைக்கு தெம்பை அளிக்கிறது. சந்தை மேலே செல்ல வாய்ப்புகள் அதிகம். முக்கிய சப்போர்ட் நிலைகள் 8650. முக்கிய எதிர்ப்பு நிலைகள் 9350, 9650 மற்றும் 10200. மேலும் உலக சந்தைகளில் ஏற்படும் மற்றம் மற்றும் இந்திய வங்கியின் வட்டிவீத நிலைப் பாடு நம் சந்தைகளின் ஏற்றதாழ்வுகளை பாதிக்கும். டாலர் மதிப்பு 50 இன் அருகிலேயே இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. பங்குசந்தைகளின் நிலை மற்றும் NDF சந்தையின் நிலை பொருத்து இது மாறும்

Comments

Maximum India said…
Raghavan commented on your story 'நாளை நமதே'

'நம்பிக்கைதான் வாழ்க்கை.. நம்புவோம்.. நல்லது நடக்கும் என்று.'

Here is the link to the story: http://www.tamilish.com/story/15957

Thank your for using Tamilish!

- The Tamilish Team
Maximum India said…
Thank you Raghavan for the comments
DG said…
சந்தை பற்றி எழுதியதிற்கு நன்றி சார்
Maximum India said…
அன்புள்ள dg

பின்னூட்டத்திற்கு நன்றி. இந்த பதிவு உங்களின் சந்தை பற்றிய ஆர்வத்திற்கு சமர்ப்பணம்.

மேலும் இது முதல் முயற்சி மட்டுமே. இதை விட விரிவான சந்தை நிலவரம் குறித்த தமிழ் பதிவுகளை இட முயற்சி செய்வேன்.

உங்களுக்கும், ஏதேனும் குறிப்பிட்ட நிறுவனம் அல்லது துறை பற்றிய விளக்கங்கள் தேவைப் பட்டால் தெரிவியுங்கள். கண்டிப்பாக அது குறித்து விளக்கம் தர முயற்சி செய்வேன்.

நன்றி

Popular posts from this blog

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...

நரேந்திர மோடி நாடாளலாமா?

சமீபத்தில் நடைபெற்ற குஜராத் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கார்பொரட் கனவான்களான அனில் அம்பானி மற்றும் சுனில் மிட்டல் ஆகியோர் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர். காரியம் ஆக வேண்டும் என்றால் என்ன வேண்டுமானாலும் பேசக் கூடியவர்கள் நமது தொழில் அதிபர்கள் என்பதனால் அவர்களின் பேச்சுக்கு அவ்வளவு மரியாதை கொடுக்க வேண்டியதில்லை. இவர்களைப் போன்றவர்களால் ஏற்கனவே நாடாள தகுதி பெற்றவர் என்று கூறப் பட்ட சந்திர பாபு நாயுடு அடுத்த சட்ட மன்ற தேர்தலில் தனது முதலமைச்சர் பதவியினையே இழந்தது குறிப்பிடத் தக்கது. தொழில் அதிபர்கள் பேச்சினை பா.ஜ.கவே ஏற்றுக் கொள்ளாத பட்சத்திலும் கூட, தீவிரவாதத்தை ஒடுக்கி குஜராத் மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்து சென்றவர் நரேந்திர மோடி என்றும் அவர் இந்தியாவின் பிரதமர் ஆவது நாட்டுக்கு நல்லது என்றும் பலராலும் கருதப் படுவதால், நரேந்திர மோடியின் செயல்பாடு பற்றியும் அவர் பிரதமர் ஆகலாமா என்பது பற்றியும் பிரதமராக அவர் ஏற்றுக் கொள்ளப் படுவாரா என்பதைப் பற்றியும் இங்கு பார்ப்போம். இன்றைய தேதியில் இந்தியாவிலேயே மிகுந்த முன்னேற்றம் அடைந்த ஒரு மாநிலமாக குஜரா...

இங்கும் அங்கும் பாதை உண்டு. இதில் நீ எந்த பக்கம்?

சென்ற வாரம் 8350 என்ற எதிர்ப்பு நிலையை தாண்டிய போதும், நிப்டியால் முழுமையான வெற்றியை பெற முடிய வில்லை. 8350 என்ற நிலையின் அருகிலேயே இன்னும் நிலை பெற்றுள்ளது. உலக சந்தைகளின் போக்கினையொட்டி இந்த வாரம் 8350 என்ற எதிர்ப்பு நிலையை முழுமையாக முறியடிக்கின்றதா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும். வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். நன்றி.